
குமாரி தேவிகளைச் சந்தித்து திரும்பும்போது சிறிய சலசலப்பு ஏற்பட்டது. எங்களுடன் வந்த கோமளவள்ளி, சிவலட்சுமி, தேவஜித்தா ஆகியோரைக் காணவில்லை. அவர்கள் மூவரும் குமாரிகளைக் காணும் திட்டத்தில் இணைந்திருக்கவில்லை. அப்பகுதியில் ஷாப்பிங் செய்ய விரும்புவதாக அவர்கள் சொல்லியிருந்ததால் மீண்டும் சந்திக்கும் நேரத்தையும் இடத்தையும் நிர்ணயம் செய்துவிட்டுதான் பிரிந்தோம். திரும்பி வந்தபோதுதான் அவர்கள் அங்கு இல்லாததும் அவர்களைத் தொடர்புகொள்ள வேறு வழிகள் இல்லாததும் எங்களுக்கே உறைத்தது.
Continue reading