
எனது இலக்கிய வாசிப்பை 2006க்கு முன் – பின் எனப் பிரிக்கலாம். என் பதினேழாவது வயதில் நான் பணியாற்றிய வீரா புத்தகக் கடை வழியாக சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா, சிவசங்கரி, தமிழ்வாணன், ராஜேஷ்குமார், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் என ஒரு ஜனரஞ்சக வாசிப்புப் பின்புலம் உருவாகியது. பௌத்தத்தில் ஆர்வம் ஏற்பட்ட காலகட்டத்தில் வாசிப்பு ஓஷோவை நோக்கி நகர்ந்தது. ஓஷோ என்னை ஜனரஞ்சக வாசிப்பில் இருந்து மீட்டார். அவர் உருவாக்கும் வினாக்கள் ஆழ்மனதைச் சீண்டுபவை. முன் முடிவுகளைக் களைத்துப் போடுபவை.
Continue reading