Author: அரவின் குமார்

விஷ்ணுபுரம் அரங்கில் எஸ். எம். ஷாகீருடன் உரையாடல்

தமிழ்ச்சூழலில் பிறமொழி இலக்கியங்கள் குறிப்பாகக் கிழக்கத்திய மொழி இலக்கியங்கள் குறித்த அறிமுகங்களும் விவாதங்களும் மிகக் குறைவாகவே நடைபெற்றிருக்கின்றன. தென்கிழக்காசிய மொழிகளில் ஒன்றான மலாய் மொழியின் இலக்கியமும் அவ்விதமே ஒப்பு நோக்க தமிழ்ச்சூழலில் குறைவாகவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மலாயை ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்த போதிலும் மலாய் மொழி இலக்கியங்கள்…

இழிந்த வீடு

தாமான் பாயு குடியிருப்பின் வயதைச், சாயம் மங்கிப்போன வீட்டுக்கூரையும் சுவருமே சொல்லும். அசல் வண்ணத்தைக் கண்டறியவே  முடியாத வகையில் கூரையிலும் சுவரிலும் பலமுறை சாயம் பூசப்பட்டுப்  பல நிறங்களில் திட்டுகள் காணப்படுகின்றன.  ஒவ்வொரு வீட்டுச் சாயமும் ஒருவிதமாக இருக்கின்றன. அவையும் சீராக இல்லாமல் மங்கியும் உதிர்ந்தும் கிடந்தன. கதிரொளியும் மழையும் பட்டு வீட்டுச் சுவர்களின் சாயம்…

திரையில் அசையும் காட்சிகள்

நேற்று மீண்டும் கியுசேப்பே தோர்னதோவின் ‘சினிமா பாரடைசோ’ படத்தை ஓடவிட்டு அதில் வரும் டோடோவுக்கும் அல்ப்ரெடோவுக்குமிடையிலான தனித்துவமான உறவைப் பார்த்தேன். கனவுகள் மிகுந்த தன் கைக்கெட்டாத பால்யத்தை நினைத்துக் கொள்ளும் வளர்ந்த ஆணின் நினைவேக்கக் கதை. அத்தகைய நினைவேக்கம் எல்லாருக்கும் உண்டு. எனக்கும் கூட அம்மாதிரியான நினைவேக்கம் உண்டு. பால்யத்தில் தங்களுக்கு எட்டாத வாழ்வைப் பெற…

ஸலாம் அலைக் : ஒரு கிளைக்கதை

2009 இல் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நிகழ்ந்த உச்சக்கட்டப் போர் காட்சிகளை நாள்தோறும் காலையில் ஒளிப்பரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதை போல, செய்தித்தாள்களிலும் போர் குறித்த செய்திகளை வாசித்துக் கொண்டிருப்பேன். இனம்புரியாத சோகமும், பீறிட்டு வரும் சினமும் எனக் கொஞ்ச நேரத்துக்கு மாறி வரும் உணர்வலைகளிலிருந்து மீண்டிருக்கிறேன். அந்த நேரத்து…

கோணம்

இரண்டு நாளில் வெவ்வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்ட இருவரைப் புகைப்படம் எடுக்கலாம் எனும் திட்டத்தைக் கவின்தான் சொன்னான். கோலாலம்பூரின் மையத்தில் இருந்த மஸ்ஜிட் ஜாமேக் எல்.ஆர்.டி நிலையத்தின் முன்னிருந்த சிமெண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டோம். சுளீரென்று அடிக்கும் வெய்யிலுக்கு மொத்த உடலையும் பரப்பி மல்லாந்து படுத்திருப்பவர்கள், பிச்சைக்காரர்கள், மனம் பிறழ்ந்தவர்கள் என எல்லாக் காட்சிகளுமே எங்கோ…

கேளாத ஒலி

(வல்லினம் நடத்திய அக்கினி அறிவியல் சிறுகதை போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை) பத்து நிமிடங்களைத் தாண்டியும் ஜானுடனான உரையாடல் நீண்டு கொண்டிருந்தது. கிஷன் பேசுவான் என்று ஜான் சொன்னப் பின்பும் மெளனமே நீடித்தது. ஜான் என்பது அவரின் உண்மையான பெயர்தானா என்பது கூட தெரியாது. பவுல் ,மோரீசன், என்று ஒவ்வொரு முறையும் ஒரு பெயரில்…

சந்தூரியின் மீட்டலும் முரண் பயணமும்

வாழும்நெறி, தத்துவம், உளவியல், எனப் பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைக்கும் குறுங்குறிப்புகள் தினமும் நம்மை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் அவற்றின் ஆக்கிரமிப்பு அதிகம். சில நிமிட காணொளிகளாகவும் குரல் பதிவுகளாகவும் அவை நம் கைக்குள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரே நேரத்தில் வாழ்க்கை பற்றிய அறிவுரைகளாகவும், நமது அன்றாட வாழ்வை விமர்சித்து அதிலிருந்து கடந்துவிட…

பி. கிருஷ்ணனின் நாடக வெளியில் உலக இலக்கியம்

அறிமுகம் எழுத்தாளர் பி. கிருஷ்ணனின் ‘சருகு’ நாடகத் தொகுப்பின் முன்னுரையில் சிங்கப்பூர் வானொலி கடந்து வந்திருக்கும் மாற்றங்களையும் கால அடிப்படையில்  இந்தியப்பகுதியில் பணியாற்றிய அறிவிப்பாளர்களையும் தலைவர்களையும் குறிப்பிட்டு மிக நீண்ட விரிவான வரலாற்றுக் குறிப்பொன்றை அளிக்கின்றார். இந்த வரலாற்றுக் குறிப்பு அளிக்கும் சில அவதானிப்புகள் மிக முக்கியமானவை. தொடக்கக்காலத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வில் வானொலியின் இடமென்பது…

தமிழ்மாறன்: ஆளுமைகளை உருவாக்கும் ஆசான்

(தமிழ் மாறன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை ) மெய்யான கற்றல் என்பது அது வரையில் கற்று வந்த தடத்தைக் கேள்வியெழுப்பச் செய்து, அதை மறுத்தும் விவாதித்தும் வந்தடையும் ஒரு புள்ளி. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதலாண்டில் விரிவுரைஞர் தமிழ்மாறனின் வகுப்புகளில் அத்தகைய…

தாவாய்: இயற்கையுடனான ஒத்திசைவு

இயற்கையைச் சார்ந்து மட்டுமே வாழ்வை அமைத்துக் கொள்வதென்பது மாதிரியான கருத்துருவாக்கங்களைச் சமூக ஊடகத் தளத்தில் அதிகமாகக் காண முடிகிறது. விலங்கு ஊன்களைத் தவிர்ப்பது, தாவரங்களிலிருந்து பெறப்பட்ட உணவுகள், உடைகளை மட்டுமே பயன்படுத்துதல், தனிப்பயணம் மேற்கொள்ளுதல் என இயற்கையுடன் ஒன்றித்து வாழ முற்படும் வகையிலான முயற்சிகளை வாழ்க்கை முறையாகவே முன்வைக்கும் பதிவுகளுக்குப் பெருமளவிலான ஈர்ப்பு உருவாகியிருக்கிறது. அந்த…

எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புலகம்

நூற்றாண்டு வரலாறு கொண்ட நவீனத்தமிழிலக்கிய வரலாற்றில் எண்ணிக்கையாலும் தரத்தாலும் மேம்பட்ட பல படைப்புகளின் வாயிலாக மறுக்கமுடியாத இடத்தைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். எழுத்தாளர் ஜெயமோகனின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாக அவரின் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இந்திய ஞான மரபு கட்டுரைகள், சமூகக்கட்டுரைகள் ஆகியவற்றுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் வாயிலாக முன்னெடுத்து வரும் இலக்கிய,…

தருக்கத்தால் நிலைக்கொள்ளும் படைப்புலகம்

அ. பாண்டியனின் இலக்கியப் பங்களிப்பைப் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், சமூகம் சார்ந்த கட்டுரைகள் என மூன்று முக்கியமான புலத்திலிருந்து அணுகலாம். அவரது புனைவுகள் வரலாற்றின் நுணுக்கமான இடைவெளிகளை நிரப்புவதாலும்; அ-புனைவுகள் கொண்டுள்ள சீரான தருக்கப்பார்வையாலும் வலுவான தனித்த இடங்களை நிறுவிக்கொண்டவை. ஒரு குறுநாவல் சில சிறுகதைகதைகள் எழுதியுள்ள அ. பாண்டியனின் கட்டுரைகள் பலவும் மலேசிய…

நட்சத்திரவாசிகள்: நுண் அதிகார மையங்கள்

வரலாறு முழுவதும் மனிதர்கள் தங்கள் இயல்பைக் கல்வி, தொழில், அரசியல் போன்ற அமைப்புகளின் ஒழுங்குக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருந்து வந்திருக்கின்றது. அவ்வாறு குறிப்பிட்ட ஒழுங்கு முறைக்குள் பழகும்போது மனித இயல்புகள் அடையும் மாற்றங்களை இலக்கியங்கள் நிகர் வாழ்க்கையனுபவமாகப் பதிவு செய்து வந்திருக்கின்றன. கார்த்திக் பாலசுப்ரமணியனின் நட்சத்திரவாசிகள் நாவலும் ஒருவகையில் தொழில் சார்ந்த அமைப்பின்…

தைலம்

ஹசான் வந்த சில வாரத்தில் “அடுத்த ஆளுக்குத் தயாராயிட்டா போலிருக்கு… இவன வச்சு இங்கயே ஐ.சி எடுக்கலாம்னு நெனக்குறா… இவுங்களுக்கெல்லாம் ரொம்பத்தான் எடம் கொடுத்துட்டோம்…’’ என ஜேக் இரண்டு மூன்று கடைக்காரப் பையன்களிடம் பேசத் தொடங்கியிருந்தார். “அது அவளோட ரெசெக்கி பாக்சிக்… அவளுக்குன்னு இருந்தா நிச்சயம் கெடக்கும். நமக்கு நம்மோட” என ஜேக்கின் அருகில் வியாபாரம்…

சிகண்டி : திட்டமிடப்பட்ட விதியின் கதை

இலக்கியத்திலும் திரைப்படத்திலும் பால் புதுமையினர், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடிகள் என மையச் சமூகத்துக்கு வெளியே அதிகமும் அறியப்படாமல் இருக்கும் விளிம்பு நிலையினரை முன்வைத்துப் புனையப்படும் படைப்புகள், தாம் எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்காகவே சிறந்த படைப்பு எனும் தகுதியைப் பெறுவதைக் காண முடிகிறது. ஆனால், படைப்பின் கலை ரீதியிலான வெற்றி என்பது அந்தப் பிரதி முன்வைக்கும் களத்தையும்…