Author: ஜி.எஸ்.எஸ். வி நவின்

பேரருளாளனின் கருணை எனும் கிஸா

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முன் நானும், எழுத்தாளர் அஜிதனும் மத்திய ஆந்திரா நிலத்தில் நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டோம். அப்போது எங்கள் பயணத்தை முடித்து பேருந்துக்காகக் காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் எத்தேச்சையாகக் கடப்பா அமீன் பீர் தர்காவிற்கு சென்றோம். அன்று அஜிதனின் அடைந்த மனநிலை ஒரு புனைவு எழுச்சிக்கானது. அன்று என்னிடம் சூஃபி மெய்…

தாயே! வாழ்வு இத்தனை அற்பமானது ஏனோ?

ஜெயமோகன் சாருடன் மலை வாசஸ்தலத்தில் தங்கியிருந்த போது ஒரு மாலையில் கவி நாவலைப் பற்றிச் சொன்னார். வங்க எழுத்தாளர் தாராசங்கர் பந்தோபாத்யாய் எழுதிய முதல் நாவல் கவி. 1941ல் வெளிவந்தது. இருநூற்றைம்பது பக்கம் கொண்ட சிறிய நாவல். ஜெயமோகன் அந்நாவல் பற்றி எழுதிய ‘உமாகாளி’ கட்டுரை பற்றியும் குறிப்பிட்டார். அன்றிரவு உமாகாளி கட்டுரையைப் படித்ததும் உடனே…

பி. கிருஷ்ணன்: எல்லையைக் கடக்கும் கடல் பறவை

1 தமிழகத்தில் நாடகம் என்பது நவீன கலை மட்டுமல்ல. இங்கே குறைந்தது இருபது நாடக வகைகளுக்கு மேல் உள்ளன அல்லது நாடகத்தை போல் அமைப்புக் கொண்ட நிகழ்த்துக் கலைகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களும் அதற்கான தனி நாடக வகைமை/அமைப்புக் கொண்டிருப்பதைக் கரகாட்டத்தின் துணைக்கலைகள் வழி காணலாம். கரகாட்டத்தின் உட்பிரிவுகளான ராஜா ராணி ஆட்டம், கப்பல் பாட்டு,…

அருண்மொழி நங்கை : பயணிக்கும் பாதையை பதியமிட்டவர்

அருண்மொழி நங்கை என்ற பெயரை ஜெயமோகனுடன் இணைத்தே பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். அவரும்கூட அவ்வாறுதான் தன்னை அறிந்துவைத்திருக்கக் கூடும். அருண்மொழி நங்கை எழுத்தாளர் ஜெயமோகனை 1991 ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இருவரின் பிரதான ரசனையும் இலக்கியமாக இருந்தது. அருண்மொழிநங்கை தன் கல்லூரி நாட்களில் இருந்தே தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து வாசிப்பவர். கல்லூரி…

பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம்

1 “கொஞ்சம் சத்தமாகத் தான் பேச வேண்டியிருந்தது. அவள் மதிலுக்கு அந்தப் பக்கம். நான் இந்தப் பக்கம்.” சிறைசாலையில் ஒரு மதிலின் ஓரத்தில் உள்ள அறையில் கதாநாயகனை அடைக்கின்றனர். நாயகன் அறையும் மதிலும் தான் இருக்கின்றன. மதிலுக்கு அந்தப் பக்கம் பெண்களின் சிறை. நாயகன் ராஜ துரோகம் செய்ததால் சிறையில் வைக்கப்பட்டுள்ளான். ராஜியத்திற்கு எதிராக எழுதியது…

வௌவால் தேசம்: வீழ்ச்சியின் வரைவியல்

1 நம் வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்பட்டது /எழுதப்பட்டது 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு. ஜெ.ஹெக்.நெல்சனின் மதுரை கண்ட்ரி மானுவல் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் ஒரு தொடக்க சாதனை. ஜெ.ஹெக். நெல்சனில் இருந்து ஒரு வரலாற்று எழுத்து நிரை எழுந்தது. ராபர்ட் கால்டுவெல், டபிள்யூ. ப்ரான்சிஸ், ஹெக்.ஆர். பேட் என ஜெ.ஹெக். நெல்சன் வழி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பின்…

இசக்கி

1 “சார் உங்களுக்காச்சும் காசு வெட்டி போடுறதுல எல்லாம் நம்பிக்க இருக்கா?” என்று என் எதிரில் விசாரணைக் கைதியாக அமர்ந்திருந்த மெல்லிய உடல் இளைஞன் கேட்டான். அவன் பேசும் போதே குரலில் பரிதவிப்பு தென்பட்டது. நான் ”உண்டு” எனச் சொல்ல வேண்டும் என்பது போல் அவன் கண்கள் காத்திருந்தன. நான் எஸ்.ஐ. ராஜரத்தினத்தை திரும்பிப் பார்த்தேன்.…

தீர்வை

“தீர்வை கணக்க நாங்க இங்க தீர்மானிக்கிறதே வஸ்தாரி வரிசை வச்சி தான்” என்றார் ஊர்க்காடு ஜமீன் கோட்டியப்பத் தேவர். அவர் கைப்பிடிக் கொண்ட மர நாற்காலியில் பெருமிதத்துடன் அமர்ந்திருந்தார். அவரது இடது கை மீசையை நீவிக் கொண்டிருக்க, வலது கை ஜமீனுக்கான கோலை தாங்கி நின்றது.   அவர் சொல்லி முடித்ததும் தாமஸ் துரை பின்னால்…

ஊர்த்துவ தாண்டவம்

“சிவனோட அடிமுடியும்ம்ம்…அடிமுடியும்…” இராமசுப்பு பாட்டாவின் குரல் தனித்த சுருதியில் மேல் எழுந்தது. ஒரு மூலையில் சிறிய தும்மல் போல் எழுந்து மெல்ல மெல்ல காட்டை நிரப்பிச் செல்லும் சிம்மத்தின் குரல் அவை. என் அளவாச்சியை 1 அதற்கேற்றார் போல் இசைத்து பக்கப்பாட்டு பாட சிரமமாக இருந்தது. பின் பாட்டை நிறுத்திவிட்டு, அளவாச்சியை அவர் சுருதியோடு இணைக்க…

மரணக்குழி

1 உறக்கத்தின் நடுவே போரோலத்தின் கதறல் கேட்டு விழிப்பு தட்டியது. இமைகள் இரண்டும் ஒட்டிக், கண்கள் திறக்க மறுத்தன. குழிக்குள் நான்கைந்து நாட்களாக உட்கார்ந்துக் கொண்டே தூங்கியதால் வந்த அயர்ச்சி. கண்களை நன்றாகத் திறந்தபோது மொத்த காடும் இருளால் சூழ்ந்திருந்தது. மூக்கின் முதல் சுவாச உணர்வு வந்ததும் மழை நீரில் பட்டு அழுகிய உணவின் வாடை…

மோட்சம்

“என்ன டே, புது கெராமவாசி பொறச்சேரி பக்கமா வந்து நிக்க,” என்றார் மருத்துவரான முதுக்கடசர். அவர் பேச்சில் சிறிது ஏளனமும், காட்டமும் தெரிந்தது. அதையும் மீறி அவர் உடைந்து அழுது விடுவார் என்பதை அவர் உடல் மொழி உணர்த்தியது. மாரனின் கழு உறுதியானதால், புதுக்கிராம தெருவினுள் நுழைய எத்தனித்தபோது மருத்துவருக்கு நூறு சவுக்கடிகளே பரிசாகக் கிடைத்தது.…

எச்சம்

சன்னதி தெருவின் நான்காவது வீட்டை நெருங்கிய போது, “ஏட்டி, நாளான்னைக்கு பத்திர பதிவாக்கும். கேட்டிச்சா” என்ற சிவராமன் குரல் உள்ளிருந்து எழுந்தது. வேண்டுமென்றே உரத்து சொல்வது போல் செயற்கையாக இருந்தது அவன் குரல். அந்நேரத்தில் அவன் வீட்டிலிருப்பானென நான் ஊகித்திருக்கவில்லை. உள்ளே செல்லலாமா, வேண்டாமா என்ற இரட்டை மனதோடு வாசல் நடையை தாண்டினேன். உள்ளறையிலிருந்து வெளிபட்டவன்…

நிசப்தத்தின் அருகில்

“அவள் ஒரு மோகினி!” என்று மெழுகு தாளில் மை தொட்டு எழுதியிருந்த கையெழுத்துப் பிரதியின் முதல் வரியைப் படித்த பின்னர்தான் ராவ் மனதுள் துணுக்குறல் பிறந்தது. அந்த பங்களாவின் மேல் தளத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஹென்றியின் அறையிலுள்ள தனிப்பட்ட நூலகத்தில் அந்த கையெழுத்துப் பிரதியினை அவர் தேடிக் கண்டடைந்திருந்தார். நீளமான தாள்களை இரண்டாக வெட்டி எழுதி,…

கங்காபுரம்: வரலாற்றின் கலை

வரலாற்றை நாவலாகப் புனைவதில் ஒரு வசதியுள்ளது போலவே சிக்கலுமுள்ளது. இதில் வசதியென குறிப்பிடுவது நாவலுக்கான தகவல்கள். வரலாறு நமக்கு தகவல்களை நம் முன் அறுதியிட்டு தருகிறது. திரண்டு கிடக்கும் அந்த தகவல்களை நம் புனைவு யுக்தியின் மூலம் கேள்விகளை எழுப்பி மேல் சென்றால் போதுமானது. அந்த தகவல்களைப் புனைவாக்கும் தருணங்கள்தான் அதில் ஆசிரியன் எதிர்க்கொள்ளக்கூடிய சிக்கல்.…

ஜெயமோகனின் நூறு சிறுகதைகள்

1 ஒரு புதிய இலக்கியப் படைப்பென்பது சீட்டாட்டத்தில் வரும் புதிய சீட்டைப் போல, கையிலிருக்கும் சீட்டுகளைப் புதியதோடு சேர்த்து மறுவரிசைப்படுத்துவது. (உண்மையிலேயே) புதிதாக வரும் படைப்புகள், ஒழுங்காகச் சீரமைந்திருக்கும் கடந்தகால படைப்புகளோடு தன்னை இணைத்துக் கொண்டு மேற்சொன்ன மறுவரிசையைக் கோருவதே. இதனையே டி.எஸ்.எலியட், கடந்த படைப்பிற்கும், புதிய வரவிற்குமான ஒத்திசைவு (confirmity between the old…