Category: கவிதை

பூங்குழலி வீரன் கவிதைகள்

  1. ஒரு தவித்த பொழுதில் தனித்திருக்கையில் என் காலத்தைத் தின்று தீர்ப்பதைப் போல் பிறந்தேவிட்டது என் கவிதை… எப்போதும் ஒரு வலியென அது வெடித்து வெளியேறும் ஒரு பஞ்சு விதை வெடிப்பதைப் போல… ஒரு மென்கோது கொண்ட முட்டை சட்டென கைத்தவறி விழுவதைப் போல… என் கவிதை ஒரு போதும் என்னைத் தவிர வேறொன்றைப்…

லூய் யோக் தோ சீனக்கவிதைகள்

தமிழில் : கி.இ.உதயகுமார் , பூங்குழலி வீரன் பிரியாவிடை ‘சி’ என் இருப்பு இங்குதான் என முடிவெடுத்திருக்கிறேன் நம்பிக்கைகள் மக்கிப்போகும் பொழுதுகளில் மீதி வாழ்வின் எதிர்ப்பார்ப்புகள் தகுதியற்றுப் போகின்றன… புலப்படாத ஏக்கங்களின் மையமிது “பார்… தூரங்கள் மெதுவாக மறைந்து போகின்றன…” ஆனால் இந்தக் கிரகத்தை விட்டுச்செல்ல அடம் பிடிக்கிறேன் படிப்பது, எழுதுவது, இசையமைப்பது, வரைவது, நேரத்துடன்…

எம்.கே. குமார் கவிதைகள்

கிணற்றைத் தாண்டி கரையில் ஏறுகிறது நிலவு தொடந்துண்டு கொழுத்த தவளை இயலாமையில் நகர்கிறது.     ஒற்றைக்குரலில் ஓங்கிக் கதருகையில் செவியிழந்தவனின் விழிபோல விதிர்ச்சியாய்க் கிடக்கிறது இரவு.     அண்மையில் உதித்திருந்த உண்மை பழைய பொய்களின் எஞ்சியிருக்கும் சாம்பல்களுக்கிடையில் படாதபாடு படுகிறது. சாம்பலிலும் நழுவி ஓடுகிறது ஒரு துளி.     விஷத்தில் இறங்குதல்…

எஞ்சிய ரத்தம்

அறியாமையின் அடையாளமாய் நிற்கும் சிலுவையை   தன்னை நோக்கி தானே கேட்டுக்கொண்ட வார்த்தையை   எழப்போகும் மூன்றாம் நாளை   உணர்ந்தபடி உறைந்திருந்தது சிலுவையில் எஞ்சிய ரத்தம்    பா.பூபதி

கே.பாலமுருகன் கவிதை

 தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்   இதற்கு முன் இங்கே தூக்கிலிடப்பட்டவர்களின் கதைகள் இவை. குற்றங்களை விலைக்கு வாங்கத் தெரியாமல் தூக்கில் தொங்கியவர்களின் எளிய மக்களின் வசனங்கள் இவை.   கயிற்றில் தொங்கியவனின் தடித்த நாக்கிலிருந்து வடியும் எச்சிலில் ஊறிக்கிடக்கின்றன வாழமுடியாத ஆயிரம் ஏக்கங்களின் வரைப்படங்கள். ஆண்டான் எத்தி உதைத்த விலை உயர்ந்த காலணிகளின் அச்சு கரையாத நாக்குகள்…

நவீன் மனோகரன் கவிதை

 வெறி நாய்களுடன் விளையாடுதல்   வெறி நாயுடன் விளையாட முடிவெடுத்தான் வாசகனின்றி திரிந்த ஒரு நகரத்து கவிஞன்   வெறிநாய்கள் எதையாவது பார்த்து குரைத்துக்கொண்டே இருக்கும் இடபேதம் தெரியாமல் கால்தூக்கி நனைக்கும் நகரத்து இரைச்சல் எல்லாம் தனக்கான வசையென்று தறிகெட்டு ஓடும் தாய் மகள் தெரியாமல் கடிக்கும் கலவி கொள்ளும்   வாசகர்களில்லாதவர்கள் வாழும் நகரத்தில்…

கருணாகரன் கவிதைகள்

நம் வீதியில் ஆயிற்று இன்னொரு காலம் என்ற போதும் நாம் உணரவில்லை இன்னோர் காலம் இதுவென்று குருதியில்லை, குண்டுச் சத்தங்கள் இல்லை அகதி இடப்பெயர்வுகளும் இல்லை என்றாலும் யுத்தம் ஒயவில்லை இன்னும் குண்டும் குருதியும் தீயும் புகையும் காயமும் இன்றிய யுத்தம் போரின் பிறிதொரு ரூபமே. நான் தோற்கடிக்கப்படும் கணந்தோறும் நிகழ்வது யுத்தமன்றி வேறென்ன? என்னுடைய…

தினகரன் கவிதைகள்

தனிமையில் எழுதி முடித்ததும் எழுதி கொண்டிருப்பதும் இனி எழுத போவதும் இன்னொரு தனிமையை பற்றி தான். • ஒருவர் கனவை மற்றொருவர் மற்றொருவர் கனவை இனொருவர் திருடித்தான் வாழ வேண்டியிள்ளது நாளை உங்கள் கனவை நானும் என் கனவை நீங்களும் திருட வேண்டிய நிர்பந்தத்தில் தான் வாழ்க்கை இருப்பு கொள்கிறது. • வலிமை இழந்த வார்த்தைகளோடும்…

எம்.ராஜா கவிதைகள்

அப்புக்குட்டியும் குட்டித்தங்கமும் புதுமணத் தம்பதி கதை தலைமுனை இழுத்தால் காலைக் கடிக்கிறது. காலைக் காப்பாற்றினால் கடிபடுது என்காது. கொசுக்கள் களவாடிய தூக்கம் தொலைந்துபோன நடுநிசியில் குட்டைப்போர்வையை சுருட்டியெறிந்து சுறுசுறுப்பாய் உட்கார்ந்தபடி புதுமணத் தம்பதிபற்றி சுடச்சுடக் கதைசொல்கிறேன். கவனமாய்க் கேளுங்கள் கனவான்களே கனவாட்டிகளே! கடவுள் வாழ்த்து வீதிநடுவே கொலு வைத்தார்களா கோவிலில் வைத்தபின்னே சுற்றிலும் வீதிசமைத்தார்களா எனக்…

ஸதி கவிதைகள்

அன்பினாலானது… நேசிப்பது எப்படியென்பதை அறிந்துகொண்ட பொழுதில் காற்றும் அறியாது முகிழ்த்தன வார்த்தைகள் இந்த வார்த்தைகளல்ல எனது நேசம் இந்தக் கணத்திலும் அதிகமான எனது நேசத்தினால் நிறைகிறது பிரபஞ்ச வெளி இப்பெரும் வெளியை கோர்த்திருக்கும் நம் கைகளுக்குள் அடக்கத் துடித்தோம் நிறமற்று விரிந்திருக்கும் கடலுள் அமிழ்ந்தோம் மணலில் கரையாத கடலென உணர்வுகளில் அழியாது ஒளிரும் அன்பை நாம்…

யோகி கவிதைகள்

1 வீதியில் புணர்ந்து கொண்டிருக்கும் நாயைப் பார்க்கிறாள் தந்தையின் கைவிரலைப்பற்றி சாலையை கடக்கும் சிறுமி அப்பா நாய் என்ன செய்கிறது? மௌனமான அப்பா… அதைப் பார்க்க கூடாது தலைவலி வரும் என்றார் சிறுமிக்கு தலை வலிக்க ஆரம்பித்தது நாயை திரும்பி பார்க்காமலே அவள் நாயைப் பார்த்துக்கொண்டிருந்தாள்… 2 ஒரு கவிதைக்காக பல மாதமாக முயற்சித்து வருகிறேன்……

புறப்பாட்டின் துயரப்பாடு

பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டது பணியிடத்தில் விடுப்பு சொல்லியாகிவிட்டது துணிமணி இத்யாதிகளையும் எடுத்துவைத்தாயிற்று புறப்படும் பொழுதில் எந்த முகாந்தரமுமின்றி மனதைப் பிசைகிறது ஒருசோகம்   ஒரு பிரயாணத்திற்குத் தயாராகிப் புறப்படும் வேளைகளில் பெருஞ்சோகச்சுமை நெஞ்சை அழுத்துகிறது புறப்படும் ஊர் சொந்த ஊராகவே இருந்ததில்லை பெரும்பாலும் சேரும் ஊர்கூட தூரதேசப் பிரதேசத்தில் இல்லை இரவு கிளம்பினால் விடியலில் அடைந்துவிடும்…

கோடைகால மதியப் பொழுதுகள்

மதியம் உறங்கி எழுந்தால் பெரும்பாரத்தொடு  மனம் கனத்துவிடுகிறது.   விடுமுறை நாளில் வெறிச்சோடி நீண்டுகிடக்கிறது வீதி. கதவுஜன்னல் சாத்திய வீடு படுத்துக்கிடக்கும் தெருநாய் நகராது நிற்கும் வாகனம் என அசைவற்றது எதைக்கண்டாலும் கூடிவிடுகிறது விசனம்.   கிளைகள் அசையக் குலுங்குகிறது பட்டுபோய்விட்ட மரம். ஏதொயிரு கிளைகள் நடுவே குடியிருந்ததற்கு சாட்சியாய் கட்டிய கூட்டை விட்டுப்போன பறவை…

போர்வைக்குள்

மேற்புறத்து மேடுபள்ளங்களைக் கொண்டு யூகிக்கமுடியவில்லை. கட்டில்மீது குவிந்துகிடக்கும் போர்வைக்குள் பதுங்கியிருக்கிறது ஏதோ ஒரு ஜந்து.   விளிம்புதாண்டியும் நீண்டிருக்கின்றன கால்கள். நகங்களில்லை. போர்வையின் நுனிபற்றி உயர்த்திப் பிடிக்கிறேன். கால்களை உள்ளிழுத்துக்கொள்கிறது.   கரம் நுழைத்துத் துழாவியும் அகப்படவில்லை.கடிக்கவுமில்லை. இன்னமும் உயர்த்துகிறேன். உள்ளோடி ஒளிந்துகொள்கிறது.   சரிதான்.வெளிச்சம்கண்டு பயப்படுகிறது போலும். விளக்கை அணைத்தால் வெளிவரக்கூடும்.   சுவிட்சைத்…

முதுமையின் குளியலறை

இளமைக்காலங்களின் அழுக்குகளை துவைத்தெடுப்பதற்கு முதுமைக்குக் கிடைத்த “புனித நதி” குளியலறைகள்.. மீண்டும் மீண்டும் வந்துப் போகுது இந்தக் குளியலறைக்கு பகிரங்கப் படுத்தாமலேயே  கழுவி எழுக்கமுடியாத அழுக்குகளை சுமந்துகொண்டு நதியும் முதுமையும் இதுவரையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது யாரோ பேச்சைகேட்டு