
புனைவுக் கலையின் உடல் கற்பனையால் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் அதன் உயிர், வாழ்க்கையின் உண்மைகளைக் கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது. சிங்கப்பூரில் தொடக்க காலத்தில் வெளிவந்த சிறுகதை தொகுப்புக்கு கட்டுக்கதைகள் என்றே தலைப்பிட்டுள்ளனர். ஆகவே புனைவுகள் படைப்பாளனின் கற்பனை எல்லைக்கு ஏற்ப விரிந்தும் ஆழ்ந்தும் சென்றாலும் அதன் உள்ளீடாக சுய அனுபவங்களும் வாழ்வியல் உண்மைகளுமே நிரப்பப்பட்டிருக்கும். உண்மைக்கும் கற்பனைக்கும் இடையில்…