Category: புத்தகப்பார்வை

மண்புழுக்கள் : மூதாதையர்களின் உயிரணுக்கள்

வழக்கமாக நம் நாட்டு படைப்பாளிகளால்  எழுதப்படும் படைப்புகளில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலக்கட்ட தமிழக தாக்கங்கள் ஓரளவேனும் இருந்துவிடுகிறது. திராவிட எழுத்தின் எழுச்சி மொழி, மு.வ மொழி என ஒப்பிட்டுப்பார்த்து இந்த நிலைப்பாட்டை அறிய முடியும். அதற்கான காரணம் வாசிப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு படைப்பாளி இயங்குவதாகவும் இருக்கலாம். ஒருபடைப்பு அதன் அசல் தன்மை குன்றாமல் இருக்க…

அரூப நெருப்பு: அன்றாடங்களில் படரும் கனல்

தீவிர இலக்கியப் படைப்புகள் எழுதப்படும் காலத்தில் பொதுச்சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கிவிடுவதில்லை. ஜெயகாந்தன் போன்ற ஒரு சில விதிவிலக்குகள் உண்டெனினும் அவரது படைப்புகள் கூட சரியான விதத்தில் உள்வாங்கப்பட்டது அவை எழுதப்பட்ட சமகால சலனங்கள் அடங்கியபிறகே. உதாரணமாக அவரது அக்கினிப்பிரவேசம் என்ற பிரபலமான கதையைப் பெரும்பான்மையானவர்கள் அறிந்திருந்தாலும் அதற்கு அன்று கிடைத்தது ஒரு சமூகப் பொது…

ஆங்கில மறுவுருவாக்கத்தில் மலேசியத் தமிழ்ப் படைப்புகள்

ஒரு பனுவல் அதன் மூல மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றல் ஆகும்போது அப்பனுவல் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இம்மொழியாக்கத்தில், மொழிபெயர்ப்பு (Translation) என்றொரு வகையும் மறுவுருவாக்கம் (Trancreation) என்றொரு வகையும் உள்ளன. இன்றைய மொழியாக்கத்தில் கதை, கவிதை, நாடகம் போன்ற இலக்கிய மொழியாக்கம் குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது. இலக்கியம் அல்லா மற்ற பனுவல்களின் மொழியாக்கம்தான் அதிக அளவில்…

திறவுகோல் 9: வைகறைப் பூக்கள்

சிங்கை எழுத்தாளர் மா.இளங்கண்ணன் அவர்களால் எழுதப்பட்டு, தேசியக் கலைகள் மன்றத்தின் ஆதரவில் பதிக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு வெளியாகி உள்ள இந்த வரலாற்றுப் புனைவு நாவல் 1941ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரையிலான சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் என்ற தன் இயற்பெயரை இளங்கண்ணன் என்று மாற்றிக் கொண்ட நூலாசிரியரின் தனித்தமிழ்ப்…

வல்லினம் 100- மலேசிய சிங்கை எழுத்தியக்கத்தின் நவீனக் குரல்

வல்லினம் 100 நிகழ்ச்சிக்குப் போவதற்குத் தயாராகத்தான் இருந்தேன்.  ரயில் டிக்கெட்டை இன்னும் ஒரு வாரம் கழித்து எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். அதற்கு முன்னாலேயே  வல்லின நிகழ்ச்சி தேதியிலேயே என் நெருங்கிய உறவுப்பையனுக்குப் பதிவுத் திருமணம்  என் திட்டத்தைப் பாழாக்கிவிட்டது. ஒரு இலக்கிய மனம் அதனைத்  தவிர்த்திருக்கலாம். ஆனால் வீட்டில் பெரிய மனுஷன் தகுதி இது போன்ற…

வல்லினம் 100 நேர்காணல்கள் – ஒரு பார்வை

ஒரு விழாவை இத்தனை ஒழுங்கோடு ஒரு குழப்பமும் இல்லாமல் நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.இதற்கான ஏற்பாடுகளை நான்கைந்து மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன்.மூன்று மாதமிருக்கும், மலேசிய எண்ணிலிருந்து அழைப்பு. “நான் நவீன் பேசறேன்” என்றார். வல்லினம் நூறாவது இதழ் வரப்போகிறது. சிறப்பிதழாக கொண்டு வரலாம் என்று நினைக்கிறோம். சிங்கப்பூரிலிருந்து உங்களது பங்களிப்பாக படைப்புகள் அனுப்புங்கள்…

திறவுகோல்8: சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை

இந்த தன்வரலாறு நூல் மலேசிய எழுத்தாளர்அ.ரெங்கசாமி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வல்லினம் விருது அ.ரெங்கசாமி அவர்களுக்கு கொடுக்கப்பட்டதை முன்னிட்டு இந்நூல் வல்லினம் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டி குறிச்சி என்ற கிராமத்திற்கு அருகே உள்ள உலகியூருணிப்பட்டி என்ற சிற்றூரிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிழைப்புத் தேடி…

சிட்னியின் மீதான காதல்

எனக்கு ஆங்கில நாவல்கள் மேல் ஒரு  காதல் உண்டு. பல நாள்கள் கண் விழித்து படிக்கிற நிலையிலான ஒரு காதல். அந்தக் காதல் ஏன் வந்தது என பலமுறை யோசித்திருக்கிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட காதல் அது என சரியாகக் கணக்கிடலாம். மிக முக்கியமாக அதை சிட்னியின் மீதான காதலாக நான் கருதுகிறேன். யார்…

திறவுகோல் 7: திரிந்தலையும் திணைகள்

இந்தக் குறுநாவல் சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கரால் எழுதப்பட்டு, சந்தியா பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் இந்நூலூக்காக நூலாசிரியர் கரிகாலன் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடங்கள் பள்ளியில் ஒன்றாகப் படித்து, திருமணமான பிறகு வெவ்வேறு நாடுகளில் வாழ நேரிடும் இரண்டு பெண்களின் வாழ்க்கைப் போராட்டம்தான்…

இனி நட்பாய் தொடரட்டும் : ஒரு வாசகப் பார்வை

என் வாசிப்பனுபவத்தில் படைப்பிலக்கியத்தை இரு கூறுகளாகப் பகுத்துப் பார்க்கிறேன். ஒன்று, படிப்பவர்கள் விரும்புவதைப் படைப்பது. மற்றது, படைப்பு படிப்பவர்களை விரும்ப வைப்பது. இவ்விரண்டில் முதலாவது எளிது; இரண்டாவது சற்றே கடினம். இனி ‘நட்பாய் தொடரட்டும்’ எனும் முதல் சிறுகதை நூலின்வழி தனது சிறுகதைகள் அனைத்தும் மிகவும் எளிய முறையில் வாசிப்பவர்களுக்கு எந்தவொரு சிக்கலுமின்றி புரிந்து கொள்ளும்…

கொஞ்சம் வெளிச்சமும் நிறைய மின்மினிகளும்

பத்து வருடங்களுக்கும் மேலாக மலேசிய இலக்கிய உலகில் இயங்கி கொண்டிருக்கிறேன் என்றுதான் பெயர். இதுவரை என்னிடம் யாரும் நூலுக்கான முன்னுரையையோ நூல் குறித்தப் பார்வையையோ அச்சாகும் முன் நூலில் பிரசுரிக்கக் கேட்டதே இல்லை. எனக்கு 24 வயது இருக்கும். நண்பர் அகிலன் அவரது ‘மீட்பு’ கவிதை தொகுப்பு வெளியீட்டில் என்னை விமர்சனம் செய்யக் கூறினர். அத்தொகுப்பில்…

திறவுகோல் 6: ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்

மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனால் எழுதப்பட்டு சுடர் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். ‘ஆப்பே கடையில் நடந்த 236-ஆவது மேசை உரையாடல்’, ‘மலை உச்சியில் உறைகிற மௌனங்கள்’ என இரண்டு குறு நாவல்கள் இந்நூலில் இடம் பெற்றிருந்தாலும் ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ என்ற நாவல்தான் என்னை…

கவிஞர் சக்திஜோதியின் கவிதையுலகம்

பொதுவாக எந்தக் கவிஞரையும் யாரும் நிராகரித்துவிட முடியாது. ஏதாவது ஒரு சமயத்தில் அசாத்தியமான கவிதையை எழுதியவர்களாக, எழுதக்கூடியவர்களாகவே எல்லாக் கவிஞர்களும் இருக்கிறார்கள். ஏகப்பட்ட தொகுப்புகள் ஆண்டுதோறும் வெளிவந்தபடி இருக்கின்றன. அவற்றுக்கு தவறாமல் முன்னுரைகளும் மதிப்புரைகளும் தாராளமாகக் கிடைத்து விடுகின்றன. கவிதைகளை விமர்சிக்கத்தான் ஆளைக் காணமுடிவதில்லை. இன்றைய கவிதை இயக்கச் சூழலில் இது மிகப்பெரிய குறையாக இருக்கிறது.…

திறவுகோல் 5: வேர்கள்

சிங்கப்பூரில் பெண்கள் எழுதியுள்ள நாவல்கள் பக்கம் என் பார்வையை  சற்றுத் திருப்பலாம் என்ற எண்ணம் எழுந்தபோது என் கைக்குக் கிடைத்தது திருமதி.நூர்ஜஹான் சுலைமான் எழுதியுள்ள ‘வேர்கள்’ என்ற நூலாகும். தங்கமீன் பதிப்பகத்தால் பதிக்கப்பட்டு 2012-ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்தக் குறுநாவல் இருபத்து மூன்று அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் முஸ்லீம்களின் புலம்பெயர்தல் தொடங்கிவிட்டது.…

திறவுகோல் 4: வானத்து வேலிகள்

மறைந்த மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசுவால் எழுதப்பட்டுள்ளது இந்நூல். திரு.ரெ.கார்த்திகேசுவை ஒருமுறைதான் நான் சந்தித்திருக்கிறேன். அதுதான் முதலும் கடைசியுமான சந்திப்பு. 2015-ஆம் ஆண்டு, நண்பர் ஷாநவாஸிற்கு கரிகாற்சோழன் விருது வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்ள கோலாலம்பூர் சென்றிருந்தபோது அவரைப் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டவுடன், அவர் கனிவான குரலில் உங்கள் கதைகளைப் படித்திருக்கிறேன் என்று கூறி…