Category: கட்டுரை

மலேசியாவும் பழங்குடி கதைகளும்

“இந்தக் கதைகள்தான் எம்மக்களின் நூலகம் ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு முக்கியமான அல்லது ஈர்பான நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனதில் வளப்பமாகிய வரலாற்றை இலைகளின்மீது நினைவகமாக்கியுள்ளது. கதைகள் எங்கள் வாழ்க்கை, அவை இன்னும் வாழ்கின்றன.”   கதைக்கூறல் எனும் வாய்வழி மரபை உணர்த்தும் இவ்வாசகம், உலகில் வாழும் ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தின் ஒற்றைக் குரலாக வெளிபடுகிறது.…

கதைபோடுகிறாள் கனிப்பெண்

ஒரு சிறுகதையை எழுதி முடித்தவுடன் ஈராயிரம் ஆண்டுகளாய் தொலைந்து வரும் கதை இழையைக் கண்டுபிடித்துவிடுகிறது. புராதனக் கதை இழைகள் மறதியில் காணாமல் போய்த்தான் இருக்கும். ஒரு நகரம் பாழடைந்து ஜனங்கள் வெளியேறிச் செல்கிற கதைகள் உண்டு. எல்லா ஊரிலும் பஞ்சம் ஏற்பட்டு மாடுகளும் மனிதர்களைப்போல் எலும்பு துருத்திய காலத்தில் இந்தியாவைவிட்டு தமிழக கிராமங்களைவிட்டு வெளியேறிய ஜனங்களின்…

‘வல்லினம்’ தமிழ்ச் சொல்லினம்

எனது முதல் வெளிநாட்டுப் பயணமும் மலேசியச் செலவும் 2010 ஜனவரி  இருபத்தெட்டாம் நாள் அதிகாலை 12.05க்குச் சென்னையில் துவங்கியது. ஜெட் ஏர்வேஸ். திரும்பி நான் சென்னையில் இறங்கியது பிப்ரவரி  எட்டாம் நாள் காலை ஆறு மணிக்கு. இத்தனை துல்லியமாக ஏழாண்டுக்குப் பிறகும் நினைவிருக்குமா என்று கேட்பீர்களேயானால், எல்லாம் கடவுசீட்டில் இடப்பட்ட முத்திரிகைகள் காரணம். மொத்தம் பன்னிரெண்டு…

சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!

 மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் தனக்கான ஓர் அடையாளத்தைத் தேடி பயணித்தத் தொடக்கப்புள்ளியாக ‘இலக்கிய வட்டம்'(1970) முயற்சியையே என்னால் சுட்ட முடிகிறது. ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் சிற்றிதழ் வெளியிடப்பட்டதும், அதில் உள்ள படைப்புகள் விவாதிக்கப்பட்டதும், அவ்விவாவதங்களை மீண்டும் ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மூலமாகவே பதிவு செய்ததும் அக்குழுவினர்…

அறிவியல் கூடத்தில் சடங்கு எலிகள்

வீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி விட்டது. மாதத் தவணையில் பணம் கட்டி வாங்கிய பொருள் என்பதால் தூக்கிப் போட மனம் வராமல் அதை பழுது பார்த்து பயன்படுத்த முடியுமா என்று நண்பரிடம் கேட்டேன். நண்பர் ஒரு தொலைப்பேசி எண்ணைக் கொடுத்து தொடர்புகொண்டு கேட்கச் சொன்னார். பிறகு பேச்சின் ஊடே, குடிநீரை செம்பு பாத்திரத்தில் சேமித்து…

தோட்டப்புற வாழ்க்கைப் போராட்டங்களைப் பேசும் கதைகள்

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்து சன்னஞ் சன்னமாய் கங்காணி திட்டத்தின் மூலம் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டவர்களின் துயரங்கள் இன்னல்களை நம் எழுத்தாளர்கள் பல சிறுகதைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். மலாயாவின் முதல் சிறுகதை சிங்கப்பூரிலிருந்து சேது மகதூம் சாய்பு எழுதியதாக ஒரு பதிவு சொல்கிறது. அதனையே முதல் புள்ளியாக நாம் எடுத்துக் கொண்டாலும்,  1930 வெ.…

விருந்தினர் இலக்கியம்

மலேசியாவில் இலக்கியம் என்று சுட்டப்படுவது மரபு இலக்கியம், பக்தி இலக்கியம், கண்ணதாசன், வைரமுத்து, வாலி வரிசையில் பாடலாசிரியர்களை மையமாக கொண்ட கேளிக்கை நிகழ்ச்சிகள், நன்னெறி இலக்கியங்கள், நவீன இலக்கியம் போன்ற எல்லா தரப்பு இலக்கிய முயற்சிகளையும் சேர்த்ததுதான். வெகுஜன இலக்கியம் தீவிர இலக்கியம் என்ற அகவய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டுபுறவயமாக இவை அனைத்துமே இலக்கியம் என்ற…

கீழடி : சங்ககாலப் பண்பாட்டுப் படுகை (பெயர் வழி அறிதல்)

வரலாற்றின் பொருளைக் காண்பதில் இருவிதச் சிந்தனைப் போக்குகள் இருக்கின்றன. தற்காலத் தேவைகளை கடந்த காலத்தில் காண முயல்வதும், பழங்காலத்தின் படிமத்தைத் தற்காலத்தின்மீது பதிக்க முயல்வதும் அவ்விரு போக்குகளாகும். – ரொமீலா தாப்பர் கீழடி அகழாய்வு பற்றிய அறிமுகக் கட்டுரையினைக் கடந்த இதழில் எழுதியிருந்தேன். கீழடி அகழாய்வினை இந்திய அரசு தாமதப்படுத்துவதாகவும், புறக்கணிப்பதாகவும், உள்நோக்கத்துடன் அகழாய்வின் கண்காணிப்பாளர்…

நிகழ்காலத்தில் வாழ்வோம்!

காலத்தை மூன்று வகையாகப் பிரித்தனர் நம் முன்னோர். நாம் வாழ்ந்து முடித்ததைக் கடந்தகாலமென்றும், வாழ்ந்துகொண்டிருப்பதை நிகழ்காலமாகவும் இனி  வாழப்போவதை எதிர்காலமென்றும் வகைபடுத்தினர். இதிலென்ன எனக்கு சந்தேகம் வந்ததென்று நீங்களும் கேட்கலாம். இன்றைய உலகில் நிகழ்காலத்தில்  ‘வாழ்பவர்களின்’ எண்ணிக்கை குறைந்து வருவதே என் ஆதங்கத்திற்குக்  காரணமாகிறது. கடந்த காலமென்பது காலத்தின் கட்டாயமானது. அது மனிதனின் கைமீறியச் செயல்,…

அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் ஒரு சாபக்கேடு கோ.புண்ணியவான்

முதல் முறை குடும்பத்தோடு தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் முனைப்பில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சில்  இனமறியா பதற்றம் ஏறியிருந்தது. அந்நிய நாட்டுப் பயணம் என்பதால் புது இடத்தை, புதிய மனிதர்களை, புதிய கலாச்சாரத்தை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தப் பதற்றம் அது. சென்னையில் யாரும் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தபோது தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வந்த…

கீழடி : சங்ககாலப் பண்பாட்டுப் படுகை (சில குறிப்புகள்)

மதுரையிலிருந்து தென்கிழக்கில் 13 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கீழடி. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அவ்வூரானது வைகையாற்றின் தென்கரையிலிருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் அமையப்பெற்றுள்ளது. கீழடியில் உள்ள  ‘பள்ளிச்சந்தை திடல்’ என்னும் பகுதியில் இந்தியத்தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவின் ஆறாவது கிளை 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக மேற்கொண்ட அகழாய்வானது வரலாற்று முக்கியத்துவம்…

ஆக்கத்தின் அசல்தன்மையும் அது தொடர்பான கட்டுக் கதைகளும் (Originality preference & myth)

இணையப் பயன்பாடு கடந்த பத்தாண்டுகளில் தகவல் மூலங்களைக் கண்டறியும் வழிகளையும், பயன்பாட்டையும் மாற்றிவிட்டிருக்கின்றது. தகவல்களை எளிதாக பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லுதல், எளிதாகக் கண்டடைந்து பயன்படுத்துதல் என, அடிப்படையில் இவ்விணையப் பயன்பாடு நன்மைகளைக் கொண்டு வருவதாக இருந்தாலும்கூட கற்றலைத் தாமதப்படுத்துதல், ஆய்வுகளில் நேர்மையற்ற தன்மையை உருவாக்குதல் என சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதையும் காண…

வை.கோவிந்தன் : மறக்கப்பட்ட ஆளுமை

தஞ்சாவூரில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனக் கிளை மேலாளர் சரவணனிடம் பேசிக்கொண்டிருந்த போது “சக்தி கோவிந்தனைத் தெரியுமா?” என்றார். “ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னேன். “புதுக்கோட்டை அருகில் உள்ள ராயவரம்தான் அவரது சொந்த ஊர்.   அங்கே நடக்கின்ற ஒரு விழாவிற்காக அவரது மனைவியும் மகனும் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்களாம். சந்திக்கிறீர்களா…” உச்சி வெயில். எதிர் அனல் காற்று.…

‘உணவும் பண்பாட்டு மெருகேற்றலும்’

முன்னுரை மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதலிடம் வகிப்பது உணவு. மனித நாகரிகம் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்த சூழலில் உணவுப் பண்பாடும் ஓசையின்றி உடன் வளர்ந்ததை மானிடவியல் ஆய்வுமுடிவுகளின் வாயிலாக அறிகின்றோம். தமிழர்களது முற்கால வரலாற்றை ஆராயும்போது, உணவு உள்ளிட்ட அடிப்படைக்காரணிகள் குறித்தும் உடன் விவரிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு உணவிற்கான இருப்பு மனித வரலாற்றில் நீக்கமற…

ஒளியும் ஒலியும்

மின்னணு ஊடகம் மங்கள இசை இசைத்து மதுரமழை கொட்டிய காலங்களில்  உண்டான வானவில் ஒளியும் ஒலியும்; சித்ரஹாரையும் சிந்தனையில் இணைத்து மக்கள் ஊடக உலகத்திற்குத் தயாராகியிருந்த தொடக்க காலம்; வெள்ளிக்கிழமையும் ஒளியும் ஒலியும் இணைபிரியாத நண்பர்கள்; மக்களின் குறைகளைக் கேட்பதற்குக் கூடாத கூட்டங்கள் பஞ்சாயத்து டெலிவிஷன் முன் குழுமியிருந்த காலம்; தமிழ்த் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக் குழந்தைகளின்…