Category: கட்டுரை

உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்.

தத்துவ நூல்கள் எனக்கு போதை தரக்கூடியவை. தத்துவக் கருத்துகள் மிக எளிமையாக புரிவது போல் ஆரம்பித்து  சற்றைக்கெல்லாம் எதுவுமே புரியாத நிலையில் என்னை விட்டுவிடக்கூடியவை. இருப்பவை இல்லாதவைகளாகி விடும்; இல்லாதவை இருப்பவைகளாகிவிடும். ஆயினும் அந்தப் புரிதலும் புரியாமையும் கலவையாகி ஒரு போதையாக மனதில் வியாபித்து நிற்கும். மாலை நேரத்து வெயிலில் மினுமினுக்கும் மழைத்துளி போல அவை…

மண்ட்டோ : இருளை வரைந்த ஓவியன்

மண்ட்டோவை நான் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மூலமே அறிந்தேன். ‘பாகிஸ்தான் சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் அவரது ‘திற’ எனும் சிறுகதை இடம்பெற்றிருந்தது. ஆதவன் தீட்சண்யா நல்ல கதைசொல்லி. அத்தொகுப்பில் முதல் சிறுகதையான ‘திற’ சிறுகதையை ஒரு கார் பயணத்தில் அவர் கூறியபோது முதலில் ஓர் மெல்லிய அதிர்ச்சி ஏற்பட்டது. பொதுவாக இதுபோன்ற அதிர்ச்சி தரக்கூடிய சிறுகதைகளை…

பத்தினிக் கோட்டம் (சில தடங்களும் தொன்மங்களும்)

பள்ளிப் பருவத்தினின்றே தமிழ்ப்பாடம் என்றால் அலாதிப் பிரியம்தான் எனக்கு. அதிலும் சிலப்பதிகாரம் குறித்த ஆர்வம் எனக்குள் அதிகரித்தது கல்லூரிப்பருவத்தில் தான். அதற்குக் காரணம், சிலப்பதிகாரக் காப்பியத்திற்கும் எங்கள் பகுதிக்கும் உள்ள தொடர்பைக் கேள்விப்பட்டதுதான்.  மேலும், பேராசிரியர் சி.கோவிந்தராசனார்  எழுதிய ‘கண்ணகி அடிச்சுவட்டில்’ என்ற நூலும், கண்ணகிக்கோட்டம் கண்டறியப்பட்டபோது அங்கு மண்டிக்கிடந்த புதர்களை அகற்றும் குழுவில் வேலைக்குச்…

விமர்சனங்களை விமர்சித்தல்

இலக்கிய விமர்சனம் என்று ஆரம்பித்தாலே அது சர்ச்சையிலும் சண்டையிலும் மனக்கசப்பிலும்தான் சென்று முடிகிறது. தேசம், மொழி போன்ற எல்லைகளைக் கடந்து இந்தநிலை கலை இலக்கியச் சூழலில் பொதுவானதாகவே இருக்கிறது. ஆனாலும் விமர்சனம் இல்லாத கலையும் இலக்கியமும் உயிர்ப்பற்றதாகிவிடும் என்பதனால் தொடர்ந்து விமர்சனங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. விமர்சனம் என்பது என்ன? அதை யார் செய்யவேண்டும்?…

கலை இலக்கிய விழாக்கள்: கடந்துவந்த பாதை

நேற்றுப்போல்  இருக்கிறது கலை இலக்கிய விழா கொண்டாடத்தொடங்கி. இது கொண்டாட்டமா என்றால்… ஆம்! கொண்டாட்டம்தான். 2009ல் நான் ‘கலை இலக்கிய நிகழ்ச்சி’ எனப் பெயரிட்டபோது மா.சண்முகசிவா சொன்னார், “இது நிகழ்ச்சி இல்லை. விழா. நாம் கொண்டாடப்போகிறோம்…” எனக்கு அப்போது ‘கொண்டாட்டம்’ என்ற சொல் அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஒரு தீவிர படைப்பாளிக்குள் எப்படிக் கொண்டாட்ட மனநிலை…

மகள் மறுத்தல்

‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற வரிகளுக்கேற்ப பூர்வீகத் தமிழ்க்குடிகள் தன்மான உணர்வுடன் கோலோச்சி வாழ்ந்த வரலாறு நாம் அறிந்த ஒன்றுதான். பொதுவாகச் சங்க இலக்கியங்களை நோக்குங்கால், சீறூர் மன்னர் பெருவேந்தர் என இரண்டு ஆளுமைகள் மக்களை வழிநடத்தியதைக் காண்கின்றோம். இவ்விரு ஆளுமைகளுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் இருப்பதும் அவரவர் செயல்களைக் கொண்டு அறியமுடிகின்றது.…

இணைய வளங்களை மதிப்பீடு செய்தல்

ஏன் இணையவளங்களை மதிப்பீடு செய்யவேண்டும் என்கிற கேள்வியை முன்வைப்பதன் வழி அதன் இன்றியமையாத் தேவையை புரிந்து கொள்ளலாம். நம்பகத்தன்மையற்ற தரவுகளும் தரவுத்தளங்களும் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் காட்டப்படும் தரவுகளைப்போல் இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் தரமானதாக (Quality) அல்லது துல்லியத்தன்மை (Accuracy) கொண்டதாக இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. அவை எந்தவொரு கட்டுப்பாடும் கண்காணிப்பும்…

கொங்கு தமிழர் மாநாடும் கொசுத்தொல்லையும்!

அண்மையில் ஒரு வீடியோ, முகநூலில் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஜூலை 22 முதல் 24 வரை மலேசியாவில் நடைபெற்ற ‘கொங்கு தமிழர் மாநாட்டில்’ கலந்துகொண்ட ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை தனது சாதியப் பெருமையை அதில் பகிர்ந்துகொள்கிறார். தாங்கள் பிடிவாதமாக கொங்கு கவுண்டர் சாதியைக் கடைபிடிப்பதாகவும் தங்கள் குழந்தைகளை சாதிய உணர்வுடன் வளர்ப்பதாகவும் அவர் பகிரங்கமாகக்…

விலகுவது கடினம் ஆனால் …

திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வாழ்வு உடைந்து போகும் விளிம்பில் நிற்கும்போது அல்லது ஏற்கனவே உடைந்துகொண்டிருப்பதைக் கவனிக்கும்போது, அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் நீட்டிப்பதையே தங்கள் தேர்வாக வைத்திருக்கிறார்கள். சிலர் நிலையான பொருளாதார பலம் போன்ற சொகுசு வாழ்வு சார்ந்த காரணங்களாலும் மற்றும் சிலர் மணவிலக்கை சமூக மதிப்பீட்டில் வரும் களங்கமாகக் கருதுவதாலும் தொடர்ந்து…

பரிசு

நெடுநாட்களுக்கு முன் அறிமுகமான ஒரு பெண் ஒருநாள் திடீரென என்னிடமிருந்து பரிசு கேட்டாள். ஒரு நிமிடம் யோசித்தேன். அன்று அவளுக்குப் பிறந்தநாளும் இல்லை; மற்ற சிறப்பு நாளும் இல்லை; அல்லது ஏதாவது எனக்குத் தெரியாமல் எதையாவது சாதித்திருந்தாரோ; ஒருவேளை அவர் ஏதேனும் பரிசை எனக்காக வாங்கிவைத்துக்கொண்டு கொடுக்கல் வாங்கல் முறையில் கேட்கிறாரோ என்று சில கேள்விகள்…

புலம்பெயர்ந்தவர்களுடைய தன் வரலாற்றுக் கதைகள்

“மண்ணு வளமிருக்க மகத்தான நாடிருக்க – நாங்கள் நாடு விட்டு நாடு வந்து – மறு நாட்டான் சீமையிலே மரம் வெட்டிப் பால் சுமந்து மலை வெட்டி மண் சுமந்து காடு வெட்டிக் கல்லுடைத்து கையேந்தி கூலி வாங்கி பாடுபட்ட கதைகளையும் பட்ட துன்பம் அத்தனையும் பாட்டிலே சொல்லப்போனால் பலகாலம் ஆகுமென்று எண்ணாது எண்ணி எண்ணி…

தகவல் கற்றறிவு திறன்

விரைவான தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்றம் மற்றும் தகவல் வளங்களின் பெருக்கம் அதிகரித்திருக்கும் இச்சமகால சூழலில் தகவல் கற்றறிவு திறன் மிகவும் முக்கியமானதாகும். தகவல் கற்றறிவு திறன் தனியாக இயங்குவதில்லை. அது சில திறன்களின் தொகுப்பாகவே செயல்படுகிறது. படிக்கும் திறன், எழுதும் திறன், வாசிக்கும் திறன், கணினியை இயக்கும் திறன், டிஜிட்டல் பொருட்களை இயக்கும் திறன் என…

ஆசிரியர்களின் பணிச்சுமையும் அதன் அரசியலும்!

2016-ஆம் ஆண்டு பள்ளித்தவணை தொடங்கி நான்கு மாதங்கள் முடிந்துவிட்டன. ஆசிரியர்கள் ஓட்டப்பந்தய வீரர்கள் போல் சுறுசுறுப்பாக ஓடத் தொடங்கிவிட்டார்கள். ஒரு குறுகியதூர ஓட்டப்பந்தயம் போல் பரபரப்பான சூழலில் அவர்கள் வாழ்க்கை மின்னலாய் ஓடி மறைகிறது. அந்தப் பரபரப்பில் அவர்கள் பெறுவதும் இழப்பதும் கவனிக்கப்படாமல் மறைந்து போகிறது. அவற்றில், வாழ்க்கையின் பல அற்புதத் தருணங்களும் கரைந்துபோகின்றன. மீட்டெடுக்க…

Information Anxiety – தகவல்கள் தொடர்பான கலக்கம்

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இப்படியொரு சொல் வழக்கில் இருப்பது பற்றிய பிரக்ஞைகூட இல்லாமல் இருக்கலாம்; அல்லது பொதுவாக மன அழுத்தம், குழப்பம் என்ற சொற்களின் வழியாக இதனைக் கடந்து சென்றிருப்போம். ஆனால் இதனை வாழ்வில் ஒரு முறைகூட அனுபவிக்காத ஆய்வியலாளர்களும், மாணவர்களும் இருக்கவே முடியாது. தற்போதைய சூழலில் சிறு பிள்ளைகள்கூட தகவல்கள் தொடர்பான கலக்க நிலையினை எதிர்கொள்வதாக…

இலக்கிய வட்டம் : ஒரு பார்வை

பேராசிரியர் இரா. தண்டாயுதம் அவர்களின் ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு அவர்கள் முன்னின்று உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’ குழுவும் அதன் மூலம் உருவான ‘இலக்கிய வட்டம்’ எனும் காலாண்டு இதழ்களும் அண்மையில் பார்வைக்குக் கிடைத்தன. இதழ்கள் தட்டச்சின் மூலம் நேர்த்தியாக உருவாகியிருந்தன. 70களில் முனைவர் ரெ.கார்த்திகேசு வானொலியில் பணிபுரிந்ததால் எழுத்தாளர்களிடம் கேட்டுப்பெறப்படும் படைப்புகளை வானொலியில் தட்டச்சாளராகப் பணியாற்றியவரிடம் கொடுத்து,…