இன்னும் இறந்து போகாத நீ… கவிதையும் கவித்துவமும்…

எப்படி எழுத வேண்டும் என்று நான் கூறவில்லை உங்கள் வரிகளில் எந்த விபரீதமும் நிகழ்வதில்லை வெற்று வெளிகளில் உலவும் மோனப் புத்தர்கள் உலகம் எக்கேடாவது போகட்டும் காலத்தின் இழுவையில் ரீங்காரிக்கிறேன் எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள் உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின் தொலைதூர எதிரொலி கூட கேட்கவில்லை வார்த்தைகளின் சப்தங்கள் அதற்குள்ளேயே மடிந்து விடுகின்றன. எழுதுங்கள்…

ஆலின் வேரும் அருணின் அரை ஆய்வும்!

நான் ஒரு வரலாற்று ஆய்வாளன் இல்லை. வரலாற்றை விரும்பி வாசிக்கும் ஓர் எழுத்தாளன் மட்டுமே. எழுத்தாளன் என்பதே என் முதல் அடையாளம். எனக்குள் நான் ஆழத்தின் உணரும் அடையாளம் அது. அவ்வடையாளத்துக்கான உழைப்பாக நான் கருதுவது வாசிப்பை. ஒரு புனைவு எழுத்தாளனுக்கு ஓரளவு வரலாற்று அறிவும் இருக்க வேண்டும் என்பதில் பிடிப்பு உள்ளவன் நான். வரலாற்றின்…

கார்த்திகேசுவின் வெடிகுண்டும் ராஜேந்திரனின் அக்குள் பந்தும்!

வர வர நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரிய மாட்டுது நைனா. எப்பப் பாரு யாராவது ஏதாவது புக்கு போடுறாய்ங்க. அதை வெளியிடுறேன்னு சொல்றாங்க. வெளிய வுடுறதுன்னா என்னான்னு போய் மண்டபத்துக்கு வெளியவே நின்னு பார்த்தா புக்க மண்டபத்து வெளியவே வுடமா உள்ளுக்குள்ளயே ஆளாலுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுத்து படிச்சிக்கிறாய்ங்க சிரிச்சிக்கிறாய்ங்க… ஒன்னுமே புரியல நைனா. சரி…

இதான் மனநோயா அடேங்கப்படிங்கப்பா

நெடுஞ்சாலையில் நண்பருடன் காரில் போய்க்கொண்டிருந்தேன். தூரத்தில் மேம்பாலம் தெரிந்தது. நடந்து சாலையை கடக்க போடப்பட்டிருந்த மேம்பாலத்தில் மோட்டார்களில் பலர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள். இதனை கண்ட நண்பருக்கு கடுங்கோபம். “எதை எதுக்கு பயன்படுத்தனுமோ அதை அதுக்குத்தான் பயன்படுத்தனும். மனுசனுங்க நடக்கறதுக்கு மேம்பாலம் கட்டினா இதுங்களை பாரேன். இந்த பன்றிங்க மேம்பாலத்துல போய் மோட்டார்ல போகுதுங்க” என…

பறை 2 – வெளியீடும் அறிமுகமும்

கடந்த ஜீலை திங்கள் 6ஆம் நாள், பறை 2 பாயா பெசார் தியான மன்றத்தில் வெளியீடு கண்டது.  வாசகர்கள், எழுத்தாளர்கள், கல்லூரி மாணவர்கள் என இந்நிகழ்வில் சுமார் 60 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு நவீன இலக்கிய களத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வை தயாஜி சிறப்பாக வழிநடத்தினார். ‘பறை’ இதழ் உருவான விதத்தை அதன் ஆசிரியர்…

இளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள் – உண்மை அறியும் குழு அறிக்கை

சென்னை. ஜூலை 9, 2014 இந்த உண்மை அறியும் குழுவில் பங்குபெற்றோர்: 1.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (Peoples UNion for Human RIghts), சென்னை, 2.வி.சீனிவாசன், சமூக மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை, 3.பேரா ஜி.கே.ராமசாமி, மக்கள் ஜனநாயக முன்னணி (Peoples Democratic Front), பெங்களூரு, 4.பேரா. சிவலிங்கம், ஸ்வாபிமான தலித்…

படைப்பு சுதந்திரம் உள்ளவனே கலைஞன் – ஜேம்ஸ் லீ

சுதந்திரத்திற்கு எல்லா நேரங்களிலும் சுதந்திரம் இருப்பதில்லை. எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரத்தின் வரையறையை ஆளும் அதிகாரங்களே நிர்ணயிக்கின்றன. அதிகாரங்களையும் அதன் வரையறைகளையும் கடந்து தனது கருத்துகளை படைப்பின் வாயிலாக வெளியிடவே ஒவ்வொரு கலைஞனும் முயல்கிறான். ஆனால் பல நேரங்களில் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டு தன்னை சமரசரம் செய்துகொள்வது பெரும்பாலான கலைஞர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்கு அவர்களது…

பதிப்புரிமை: சில கேள்விகள் சில விளக்கங்கள்

Copyright – தமிழில் பதிப்புரிமை என்று அழைக்கப்படும் சொல் பரவலாக அனைவராலும் குறிப்பாக பதிப்புத்துறையை சார்ந்தவர்களால் அதிகம் உச்சரிக்கபடும் சொல்லாக இருக்கிறது. பெரும்பாலும் copyright தொடர்பான சர்ச்சைகளும் விவாதங்களும் அவ்வப்போது நாடு தழுவிய அளவிலும் உலக அரங்கிலும் நடந்த வண்ணமாகவே இருந்தாலும்கூட இது தொடர்பான புரிதல் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். உதாரணமாக, பெரும்பான்மையானோர் பதிப்புரிமையை…

தாயகம் பெயர்தல் : வாழ்வும் வலியும்

(மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அதன் பதிவுகள்) 20,21,22 தாயகம் கடந்த தமிழ் அனைத்துலக கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை   ‘இடப் பெயர்வு’ என்பது பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவானதாக இருந்த போதிலும்கூட அதில் பறவைகளுக்குச் சுதந்திரம் இருந்தது. ஏனெனில் வானம் பறவைகளுக்குப் பொதுவானதாக இருந்தது. ஆனால், நிலம் மனிதர்களுக்குப் பொதுவானதாக இருந்ததில்லை. இருந்திருந்தால் அவர்கள் ஏன் கடல்…

கருவில் வளரும் அணு ஆயுதம்

மலேசிய மலாய் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் அனுவார் ரிட்வான் ( Anwar Ridhwan). 1949 ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்த இவர், 1970 களில் இருந்து சிறுகதை இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சிறுகதை தவிர சில நாவல்கள், கட்டுரை நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் நவீன மேடை நாடகங்களில் இவரது பணி…

யஸ்மின் அமாட் : அழகியலும் தீவிரமும் (1958 – 2009)

யஸ்மின் அமாட் மலேசிய இஸ்லாமிய அமைப்புகளுக்குப் பெரும் சவாலாக இருந்து, அவர்களின் மனத்தில் வெறுப்பையும் அதே சமயம் புதிய இரசனையையும் கொண்டு சேர்த்த திரைப்பட இயக்குனர். ‘தீவிர மதச் சார்புடைய மக்களால் அவர் வெறுக்கப்பட்டாலும் மலேசிய மக்களின் மனத்தை ஆழமாகத் தொட்டவர்’ என ஸ்டார் நாளிதழ் ஒருமுறை செய்தி வெளியிட்டிருந்தது. மத அடிப்படைவாதிகள் யஸ்மின் அமாட்டுக்கு…