தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்ப்பள்ளி வீழ்ச்சியும்
வணக்கம். தமிழ் மொழி நம்பவர்களால் ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு மட்டும் என் கருத்துரையை எழுதுகிறேன்.
மொழியைக் குறித்து தாழ்வு மனப்பான்மை முதலாவது காரணம். இன்று ஏறக்குறைய தமிழில் உரையாடினால்/ எழுதினால் மதிப்பில்லை என்று தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மணிமன்றங்கள், திராவிடர் சங்கங்கள், இந்து சங்கங்கள் என்று எல்லா நிலையிலுமான தலைவர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். எனவே, மிக எளிதாக மலாய்/ ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். இதைக் குறித்து யாரும் கேள்வி கேட்டால், ‘தமிழ் எல்லாருக்கும் புரியாது’, என்ற அலட்சியமான பதிலைச் சொல்வார்கள். என்னைப் போன்றவர்கள் கேட்டால், ‘வெள்ளைக்கார பெயரைக் கொண்ட உனக்கு தமிழ் மீது என்ன அக்கறை?’ என்று கேட்பார்கள்.







