கடிதம்/எதிர்வினை

யாக்கை சிறுகதை – கடிதங்கள் 2

விபச்சார விடுதியில் வண்ணக்காட்சிகளாகவும்,m கடலின் நடுவிலே வெள்ளை கருப்பு காட்சிகளாகவும், கதை இரண்டு தளத்திற்கும் மாறி மாறி நகர்வது சுவாரசியம்.

முதல் இரு வாசிப்புகளில் ‘ஈத்தன்’ மீதுதான் நிறைய குற்றச்சாட்டுகள் இருந்தன. அவன் மகளையே உடலால் உறவுக்கொள்ளும் ஒரு கொடூரன் என்றும், உடல் செயலிழந்து காம உறவை தொடர இயலாத நிலையில் தற்கொலை செய்து கொள்கிறான் என்றும் புரிதல் இருந்தது. பிறரின் கதையாக இது இருந்திருந்தால் அந்த புரிதலோடு….சரி கதை ஓகே இரகம் என கடந்திருப்பேன்.

Continue reading

யாக்கை சிறுகதை – கடிதங்கள் 1

வல்லினத்தில் வெளிவந்துள்ள எனது யாக்கைக் குறித்து நண்பர்களின் பார்வையும் விமர்சனமும். Hand-in-the-Water-500x337

சிறுகதையை வாசிக்க : யாக்கை

யாக்கை என்றால் உடல். யாக்கை என்றவுடனே யாக்கை நிலையாமையும் நினைவில் வருகிறது. இக்கதை உடல் மூலதனமாகும், பயனற்று போகும் இரு சரடுகளால் பின்னப்பட்டுள்ளது. கேத்தரினா, அவள் தந்தை என மாறி மாறி பயணிப்பது நல்ல வாசிப்பை அளிக்கிறது. கதையின் மிக முக்கியமான இடம், ஈத்தன் தன் மகள் துணையின்றியே இரண்டு மாதம் இருந்திருக்கிறாள். அதுவும் ஜொலிப்புடன் என்பதை உணரும் தருணம். அங்கிருந்து கேத்தரினா இன்று பார்க்கும் தொழிலுக்கு ஒரு நேர்கோட்டு இணைவை வாசகராக கற்பனை செய்து கொள்கிறேன்.

Continue reading

போயாக் : கடிதம் 5

kumang_gawai

குறிப்பு : இவை எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அனுப்பப்பட்டு இன்னும் பிரசுரமாகாத கடிதங்கள்.

எனக்கு இந்தக் கதையை படிக்கும் போது உளப்பகுப்பாய்வு கோட்பாட்டைத் தான் நினைத்துக்கொள்ள முடிகிறது. மேல் மனதிற்கும் அடி மனதிற்கும் இடையேயான இடியாப்பச் சிக்கலைப் பற்றியது அது. அடி மனம் பழங்குடிகளுக்கானது. உள்ளுணர்வையே நம்புவது, கட்டற்றது ஆனால் நாம் வாழும் சமூகம் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டது. மேல் மனம் அதற்க்கேற்றார் போல அடி மனதைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஒரு போராட்டம் அல்லது சிக்கல் உருவாகிறது. அந்தச் சிக்கல்தான் கதையின் நாயகனின் சிக்கலும் கூட.

Continue reading

போயாக் : கடிதம் 4

அன்புள்ள நவீன்,sarawak-cultural-village-iban-girls-dancing

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

முதன்மைப் பாத்திரமான கதைசொல்லிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துபவைகள்,  பாறைகள் போல ஆங்காங்கே எழுந்து, அதன் மீது மோதித் தெறித்துத், தேங்கிய பின் சுழித்து, வளைந்து பாயும் குறு ஓடையின் போக்கினைப்  போல  விவரிக்கப்பட்டிருந்தது.  தன் கல்விக்கு பொருளுதவி செய்த அதே அரசாங்கத்தால், கதைசொல்லியின் பணிச் சூழலின் விருப்பதேர்வு உரிமை  நசுக்கப்படுகிறது. விமானம்,டாக்சி, படகு என காற்று, நிலம், நீர்  என்ற மூன்று வழிகளில்  ரூமா பாஞ்சாங்கிற்கு வருகிறார் ஆங்கில ஆசிரியரான கதைசொல்லி.   அந்த புதிய சூழலின் ஈபான் ஆதிகுடியை சேர்ந்த மனிதர்களான சக ஆசிரியர் லயாவ், ஊர் தலைவர் ஜேத்தா, இளம் குமரி சீமா, எதிர்காலத்தில் சீமாவை விட அழகியாகப் போகும் அவளின் தங்கை சிம்பா ஆகியோரின் அறிமுகமும் அணுக்கமும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைக்கிறது.

Continue reading

போயாக் : கடிதம் 3

10-fakta-menarik-mengenai-buayaஅன்புள்ள நவீன், நலம்தானே? நேற்று காலை உணவின்போது Netflixஇல் “Black Mirror” என்ற தொடரின் Crocodile பாகத்தை பார்த்தேன். உடனடியாக போயாக் நினைவில் எழுந்தது. அக்கதையிலும் மைய பாத்திரங்களாக இரண்டு பெண்கள். அறிவியல் மிகுபுனைவுக் கதைகளை கொண்ட இத்தொடரின் இந்தக் கதையில் கண் சாட்சியற்ற ஒருநிகழ்வு உலகியல் தளத்தில் நடைபெற சாத்தியமேயில்லை என்பதை சொல்முறையின் புறவய தோற்றத்தில் நிறுவி விடுகிறது. மேலாக உட்குறிப்பில் எல்லைகளை மீறும் முதலைகளின் உலகில்சாட்சியாக நிற்க்கும் ஒன்றுமறியாத பரிசோதனைப் பன்றி குட்டிகளின் நிலை என்ன என்பதைப் பற்றியும் பேசுகிறது.

Continue reading

போயாக்: கடிதங்கள் 2

அன்பு அண்ணா ,suasana-kehidupan-rumah-panjang3

பொதுவாக சொல்லிவிட்ட எதையும் என்னால் எழுத இயலாது. சொல்லியது கடந்து இன்னும் சொல்லாமல் விட்டவை இருந்தால் மட்டுமே பேசியதை எழுத முடியும். போயாக் கதை குறித்து உங்களிடம் உரையாடி விட்டேன்  உரையாடலில்  .விடுபட்டது ஏதேனும் இருப்பின் அதை  எழுதலாம் என எண்ணினேன். இதோ அந்த விடுபடலை எழுது முன்  உங்களுடன் உரையாடியவற்றின் மையத்தை தொகுத்து முன் வைத்து அதன் பின்  விடுபடலை தொடர்கிறேன் .

Continue reading

போயாக்: கடிதங்கள்

கதை சொல்லும் நவீன் இம்முறையும் நம்மை ஏமாற்றவில்லை. இது அவரின் சுய அனுபவமாக இருக்க முடியாது, ஏனெனில் நவீன் எனக்குத் தெரிந்தவரை பணியிட வேலை மாறி சரவாக் மாநிலத்துக்குப் போனதில்லை. எனவே யாரோ ஆசிரியர் சொல்லக் கேட்டு எழுதியிருக்கலாம். இது என் அனுமானம். இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவனால் மட்டுமே தான் செவிமடுத்த ஒன்றை புனைகதையாக்க முடியும். நீட்டல் மழித்தல் இருக்கலாம். அப்படி இதிலும் உண்டு என்று நம்புகிறேன்.

Continue reading

தர வரிசை – சீனு

imagesன்பு அண்ணா ,

உங்களுடன் நிகழ்த்திய உரையாடல் பல அலகுகளில் என்னை தொகுத்துக்கொள்ள உதவியது.  ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு எதிராக ஆன்மசுத்தியுடன் போராடிக்கொண்டிருக்கும் ஒரு ஆளுமையுடன்  உரையாடி இருக்கிறேன். அதில்  உரையாடல் என்பதையும் கடந்த பொறுப்புணர்வு  உண்டு. அந்த பொறுப்புடன்தான் அந்த உரையாடலில் ஈடுபட்டிருக்கிறேன் என அதை மறுவாசிப்பு செய்த்து அறிந்து கொண்டேன் .

Continue reading

இறுதியாக – சீனு

jb34ehஅன்பு அண்ணா ,

முதலில் இரண்டு விஷயங்களை திட்டவட்டமாக சொல்லி விடுகிறேன் .  ஒன்று    உரையாடலின் புரிதலின் பொருட்டு மட்டுமே  ”இங்கு ”  ”அங்கு ” எனும் பதத்தை பயன்படுத்துகிறேனே அன்றி , அது பிரிவினையை சுட்டுவதற்கு அல்ல . [நீங்கள் அதை அறிவீர்கள் ].

இரண்டு  தீவிர இலக்கியம் , இலக்கிய செயல்பாடுகள்  கைக்கொள்ளும் ஆளுமைகள் மீதான மாளாத காதல் கொண்ட வாசகனாக மட்டுமே நின்று உரையாடுகிறேன் .  நிற்க .

Continue reading

அந்தரங்கத்தீயும் அணையா சருகும் – கடலூர் சீனு

அன்பு அண்ணா ,

உங்கள் எதிர்வினையை தொடர்ந்து மேலும் என் சிந்தனையை தொகுத்துக்கொள்ள முயல்கிறேன் .

MV5BZmQzMmMyOTEtZmQ5ZC00ODRkLWI0ZTMtODU3YmY1NDEzNDI5XkEyXkFqcGdeQXVyMjYwMDk5NjE@._V1_UY317_CR16,0,214,317_AL_முதல் அலகாக நீங்கள் குறிப்பிட்ட தமிழ் நிலத்தின் சூழலை  பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம் .  இலக்கியம் என்றால் என்னவென்றே அறியாதோருக்காக  வைரமுத்து அவர்கள் உருவாக்கி அளிக்கும் மேடைகள், அவர் தனக்கான ஆதரவு வட்டத்தைத் தமிழ் புழங்கும் எல்லா நிலங்களிலும் உருவாக்கிக்கொள்ளும் முயற்சிகளில்   ஒன்றே.  தீவிர இலக்கியத்துடன்  எவ்வகையிலும் சம்பத்தம் அற்ற வைரமுத்து ஜெயகாந்தன் எனும் ஆசானுக்கு அளிக்கப்பட  ஞான பீடம்  விருதை குறி வைத்து  கணக்குகள் போட்டுக்கொண்டிருப்பது  தமிழ் நிலம் அறிந்த ஒன்றே. அகிலனுக்கு அளிக்கப்பட்டு எய்திய இழிவை,ஜெயகாந்தனுக்கு அளிக்கப்பட்டத்தின் வழியே சமன் செய்து கொண்டது அவ் விருது. இதோ மீண்டும் அவ்விருதின் பாதையில்   மற்றொரு புதைகுழி . Continue reading