
இந்த ஆண்டு தொடக்கத்தில், வல்லினம் பரிந்துரைக்கப்பட்ட நாவல்கள் ஐந்தையும் படித்து முடிக்கவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. எங்களுக்கு வழங்கப்பட்ட இடுப்பணியும் இதுவே. மார்ச் மாதத்திற்குள் ஐந்து புத்தகங்களைப் படித்து முடித்து விட வேண்டும் என தோழிகள் பவித்திரா, சுந்தரி, புஷ்பா, பாரதி அனைவரும் ஒரு மனதாக தீர்மானித்தோம். இடையில் திடீர் அறிவிப்பு, 31 மார்ச் மாதம் வரை பள்ளி விடுமுறை நீடிப்பு என்று நானும் தோழி பவித்திராவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டோம் ஒவ்வொரு நாளும் படித்ததைப் பகிர்ந்து கொண்டு கலந்துரையாடுவது என்று.




