கடிதம்/எதிர்வினை

ராசன்: ஒரு வாசகர் பார்வை

சிறுகதை ராசன்

 

இந்த ஆண்டு தொடக்கத்தில், வல்லினம் பரிந்துரைக்கப்பட்ட நாவல்கள் ஐந்தையும் படித்து முடிக்கவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. எங்களுக்கு வழங்கப்பட்ட இடுப்பணியும் இதுவே. மார்ச் மாதத்திற்குள் ஐந்து புத்தகங்களைப் படித்து முடித்து விட வேண்டும் என தோழிகள் பவித்திரா, சுந்தரி, புஷ்பா, பாரதி அனைவரும் ஒரு மனதாக தீர்மானித்தோம். இடையில் திடீர் அறிவிப்பு, 31 மார்ச் மாதம் வரை பள்ளி விடுமுறை நீடிப்பு என்று நானும் தோழி பவித்திராவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டோம் ஒவ்வொரு நாளும் படித்ததைப் பகிர்ந்து கொண்டு கலந்துரையாடுவது என்று.

Continue reading

ராசன்: கடிதங்கள் (2)

சிறுகதை ராசன்

அண்ணா, உங்கள் சமீபத்திய சிறுகதைகளுள் அதன் வடிவம் சார்ந்த ஒரு கவனம் கூடியிருக்கிறது. அதன் crafting கலை சியர்ஸ், ராசன் இரண்டிலுமே நன்கு அமைந்துள்ளது. “உண்மையாகவே ரத்தினக்கல்லை எடுக்கதான் அமிர்கான் ராஜநாகத்தை வளர்த்தார் துவான்” சிறுகதையின் சொடுக்கான நடை கச்சிதமாக அமைந்த வரிகளுள் ராசன் சிறுகதையும் ஒன்று.

Continue reading

பேய்ச்சி: இடி போல் முழங்கும் தாய்மை – நலவேந்தன் அருச்சுணன் வேலு

சித்திரைப்புத்தாண்டில் முதல் பரிசாக வந்தது எழுத்தாளர் ம.நவின் அவர்களின் பேய்ச்சி நாவல். எழுத்தாளரின் முதல் நாவல். நம் நாட்டில் மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ம.நவீன் அவர்களின் படைப்பை நம்பிக்கையோடு வாசிக்கலாம். யதார்தமான சிறுகதை மற்றும் கவித்துவமான நவினக்கவிதைகளை படைக்கும் எழுத்தாளர் என அறிமுகமான இவரின் முதல் நாவலை வாசித்தே ஆக வேண்டும் என்று தோன்றியது. வாங்கினேன் வாசித்தேன். இதற்கிடையில் பலர் போற்றியும் சிலர் தூற்றியும் இந்நாவலை தொடர்ந்து விமர்சனம் செய்துக்கொண்டுயிருந்தனர். இதன் விளைவே இந்நாவலுக்கு நல்ல ஒரு விளம்பரமானது. இவ்வேளையில் அவர்களுக்கு எனது நன்றி

Continue reading

கடிதம்: ராசன்

சிறுகதை: ராசன்

மரியாதைக்குரிய ஆசிரியர் நவீன் அவர்களுக்கு. யாக்கை சிறுகதைக்குப் பிறகு நான் எழுதும் கடிதம். இரு மன்னர்கள் சந்திக்கும் கதை ராசன். ஒருவன் மன்னன் என்பவன் அதிகாரத்தின் ருசியை காண்பவன் என்கிறான். மற்றவர் மன்னர் என்பது தன் உடமையை பாதுகாப்பதும் பாதுகாக்க முடியாதபோது சரணடைவதும் என்கிறார். ஆனால் கீழ்மையை தவறி செய்தாலும் மரணத்தை தேடிச் செல்வது என்கிறார். அதுதான் தீபனுக்கு நடத்தப்படும் வைத்தியம் அல்லவா?

Continue reading

சியர்ஸ் : கடிதம் 3

சியர்ஸ் சிறுகதை

பிரியமுள்ள எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு,

சியர்ஸ் கதை வாசித்தேன். ‘சியர்ஸ்’ களித்திருக்கும் சந்திப்பு. இனிய சந்திப்பு ஒன்றின் முடிவு. இந்த இரண்டு தருணங்களிலும் அதை துவங்கி வைக்க முடித்து வைக்க கையாளப்பட்ட உவகைச் சொல். கதையின் உறவும் பிரிவுமான உணர்வுநிலைக்கு அதன் துவக்கத்துக்கும் முடிவுக்குமான சரியான சொல்லும் கூட சியர்ஸ்.

Continue reading

சியர்ஸ் : கடிதம் 2

சியர்ஸ் சிறுகதை

சியர்ஸ் சிறுகதையை வாசித்தேன். தாயைத் தேடிச் செல்லும் அலைவு மிகச் சிறப்பாக இருந்தது. இந்தத் தேடலை அலைவை எந்த விசை உந்தி தள்ளுகிறது எனும் கேள்வியை இச்சிறுகதை எழுப்புகிறது. தாய்மை என்கிற உணர்வு. தாயை இழந்து போகின்ற தருணத்தில் யாருமே அருகில் இல்லை என்ற உணர்வு மேலோங்கியிருக்கும்.

Continue reading

சியர்ஸ்: கடிதங்கள் 1

சியர்ஸ் சிறுகதை

சியர்ஸ் வாசித்தேன். மிகக் கச்சிதமாக சிறுகதை வடிவம் கை கூடி வந்த கதை. அந்தக் கனவில் வரும் முகம் ஒரு புகைப் படம் என அவிழும் இடம் துணுக்குற வைத்தது. விவரிப்பின் ஊடே ஒரு கேமராவின் நோக்கில் பர்மாவை காட்சிப்படுத்துவது ஒரு அபாரமான யுக்தி. இது craft மேம்பட்டு creation னை உரசும் இடம். புகைப் படத்தையும் ஒரு சொல்லையும் வைத்துக் கொண்டு துவங்கும் மூர்த்தியின் பர்மா பயணம் ஒரு துப்பறியும் கதை போல வளர்ந்தது.

Continue reading

பேய்ச்சி: காலம் கடந்து வாழ்வாள் – ப.விஜயலெட்சுமி

எழுத்துத் துறையில் இதுகாறும் நவீன் எனும் எழுத்தாளரின் பல முகங்களைக் கண்ட நான், ‘பேய்ச்சி’ நாவலின் வழி வேறுபட்டு காண்கிறேன். எழுத்தாளரின் புதிய பரிணாமத்தை என்னால் 283 பக்கங்களைக் கொண்ட பேய்ச்சியின் மூலம் காண இயல்கிறது. எப்பொழுது, இந்நாவலைக் கையில் ஏந்தினோம் என, எண்ணி பார்ப்பதற்குள் இதன் இறுதிப் பக்கத்தைக் கடந்து விட்டேன்.

Continue reading

உச்சை: கடிதங்கள் (4)

சிறுகதை: உச்சை

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மலேசியாவின் ரப்பர் தோட்டத்திற்கு ஒரு குதிரை வந்து சேர்வதும் அதன் பின் நிகழும் சம்பவங்களுமே கதை.

முத்தண்ணன் தீண்டத்தகாத ஜாதியை சேர்ந்தவன், மிக இள வயதிலேயே அனாதை யானவன், குதிரை மேல் கொண்ட பித்தின் காரணமாக, கிராமத்தில் கோவேறு கழுதையை குதிரை என்று நம்பி அது குட்டி போடும் தனக்கு ஒரு குதிரை கிடைக்கும் என்ற ஆசையில் ஆண்டுக்கணக்கில் கடுமையாக உழைக்கிறான்,அது இறந்துவிடுகிறது அவன் கையாலேயே அடக்கம் செய்துவிட்டு, ரப்பர் தோட்ட வேலைக்கு வந்து சேர்கிறான்.

Continue reading

உச்சை: கடிதங்கள் (3)

சிறுகதை: உச்சை

இந்திரனின் வாகனமான உச்சைசரவஸ் தொன்மத்தில் அதன் மேல் யாரமர்ந்தாலும் அவரே இந்திரன் எனக் கொள்ளப்படும். அத்தொன்மத்தை ஆட்சி அதிகாரத்துடன் இணைத்து புனைந்திருப்பது ஒரு தொன்மம் அரசியல் என புது வித வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறது. இந்திரனால் தன் உச்சைசர்வஸில் யாரையும் அனுமதிக்க முடியாதது போலவே துரையாலும் முத்தண்ணனிடம் அதனை குடுக்க இயலவில்லை ஆனால் அதனை விட்டுச் செல்லும் தருணத்திலும் அவரால் கொல்லவும் இயலவில்லை.

Continue reading