மூன்று கவிதைகள்

imagesஅதற்குமுன்
பிணங்கள் மட்டுமே புதைக்கப்பட்ட
உனது நிலத்திற்கு
செம்மஞ்சள் ரோஜாக்கள் பூக்கும்
செடி ஒன்றை எடுத்துவந்தேன்

மணல் சூழ்ந்துவிட்ட அந்நிலத்தில்
இனி உயிர்கள் துளிர்க்காது என்றாய்

நிலம் பிளந்து வெளிபடும் அசைவு
மண்புழுக்களல்ல
விஷப்பாம்பின் நாக்குகள் என்றாய் Continue reading

மலேசிய ‘டான் குயிக்ஸாட்’

don.1மதியழகன் வல்லினம் குறித்து கூறியுள்ள அவதூறுகள் என் பார்வைக்கு வந்தன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே அவரது அறிவின் வளத்தை படம்பிடித்துக்காட்டியபின்னர் (http://vallinam.com.my/navin/?cat=32) மீண்டும் தன் வெற்றுக்கூச்சலைத் தொடங்கியுள்ளார் என நினைக்கிறேன். அவற்றை முழுமையாக வாசித்தேன். அவற்றில் பாதி அவதூறுகள் வல்லினத்தின் மீதும், மீதி என் மீதும் என் நண்பர்கள் மீதும் சுமத்தப்பட்டிருந்தன.

Continue reading

இமையம் சிறுகதைகள்: அறியப்பட்டதை ஆவணமாக்கும் கலை

(1)

imayam cover“தலித்தியம் என்றால் என்ன? எனக்குத் தெரியாது. பெண்ணியம் என்றால் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்பது குறித்தெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லை. கோட்பாடுகள் என்னை எழுதத் தூண்டவில்லை. நிஜ வாழ்க்கைதான் எழுதத் தூண்டியது.”

இது ஒரு நேர்காணலில் வெளிப்பட்ட எழுத்தாளர் இமையத்தின் குரல். அவருடன் தொடர்ந்து உரையாடலில் இருப்பவன் என்ற முறையில் இந்தக் குரல்தான் அவரது படைப்பு மனதின் மையமும் என அறிவேன்.

Continue reading

விருது உரை

nigaz-06-600

கனடா இலக்கியத் தோட்ட விருது வழங்கும் நிகழ்ச்சிக்குச் செல்ல முடியவில்லை. விசா முதன் விண்ணப்பத்தில் நிராகரிக்கப்பட்டிருந்தது. சில கூடுதல் தகவல்களை இணைத்து மீண்டும் முயன்றால் கிடைக்கும் என்றார்கள். ஆனால் நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் செல்ல முடியும். 10ஆம் திகதியுடன் பள்ளி தவணை விடுமுறையும் முடிவதால் கூடுதல் விடுப்பெடுப்பதில் சிக்கல்.  எனவே எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கி உரையை மட்டும் அனுப்பினேன். அது அங்கு வாசிக்கப்பட்டதை வீடியோவில் பார்த்தேன். அது கீழே.

Continue reading

“அவதூறுகள் தரமான ஒரு விருதின் மூலம் பொடிப்பொடியாகின்றன” – ம.நவீன்

04மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9 இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள Grand Cinnamon Convention Centre -இல் இந்தச் சிறப்பு விருது (1000 கனடியன் டாலர்) அளிக்கப்படவுள்ளதாக இலக்கியத் தோட்டத்தின் அறிவிப்பு தெரிவித்தது. தமிழ் உலகின் மதிப்புமிக்க இயல் விருதை வழங்கி வரும் கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இந்தச் சிறப்பு விருது இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை முதன் முறையாக மலேசியாவிலிருந்து பெரும் ம.நவீனை தமிழ் மலர் நாளிதழுக்காக நேர்காணல் செய்தோம்.

Continue reading

கலையும் கடமாவும்: ஊட்டி முகாம் அனுபவம்

16‘வல்லினம் விமர்சனப் போட்டி’ நடத்த வேண்டும் எனத் தோன்றியபோது வெற்றியாளர்களை ஊட்டி முகாமில் பங்கெடுக்கச் செய்வதே தகுந்த பரிசாக இருக்கும் என முடிவெடுத்தேன். ஊட்டி முகாம் வாசிப்பு முறையை நெறிப்படுத்தக்கூடியது. ஒரு படைப்பை அணுகும் விதத்தை போதிக்கக்கூடியது. ஒரு படைப்பாளிக்கு அதுவே சரியான பரிசாக இருக்க முடியும். அண்ணன் அரங்கசாமியிடம் கேட்டபோது உடனடியாகச் சம்மதித்தார். நிகழ்ச்சி முடிந்து வெற்றியாளர்கள் கூடுதலாக இரு நாட்கள் தங்கினாலும் விஷ்ணுபுரம் குழு அப்பொறுப்பை ஏற்கும்படி திட்டமிடலாம் என்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரளத்தில் இருந்தபடியே போட்டிக்கான வரையறைகளை நண்பர்களுடன் தீர்மானித்தேன்.

Continue reading

ம.நவீனுக்கு கனடா இலக்கியத் தோட்ட விருது

imagesமலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புனைவு மற்றும் இலக்கியச்செயல்பாடுகளில் அவரது பங்களிப்புக்காக இந்தச் சிறப்பு விருது வழக்கப்படுவதாக தமிழ் இலக்கியத் தோட்டம் அறிவித்துள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9 இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள Grand Cinnamon Convention Centre -இல் இந்தச் சிறப்பு விருது (1000 கனடியன் டாலர்) அளிக்கப்படவுள்ளதாக இலக்கியத் தோட்டத்தின் அறிவிப்பு தெரிவித்தது.

Continue reading

நாரின் மணம்: சிதறடிக்கப்படும் அழகு

cover-10எழுத்து என்பது எனக்கு மிக பிடித்தக் கலைதான். எனினும், அதை எழுத முயன்ற அளவுக்கு வாசிக்க முயன்றதில்லை. அதன் காரணமாகவே எனது முயற்சிகள் பல தோல்வியில் முடிந்திருப்பது இப்போதுதான் புரிகிறது. வாசிப்பது நமக்கான அசல் தன்மையை இழக்கச் செய்யும். நம்மை அறியாமல் நம் எழுத்துகளில் பிறரின் சாயல் வந்தமரும் என நம்பியிருந்தேன். இந்த உச்சநிலை அறியாமையைத் திருத்திக் கொண்ட தளம் வல்லினத்தின் பத்தாவது கலை இலக்கிய விழாதான். இங்கிருந்துதான் எனக்குப் பத்திகளும் அறிமுகமாயின. கட்டுரைகள் பத்திகளில் இருந்து வேறுபடுவதே எனக்குப் புதிய தகவல்தான்.

Continue reading

பூங்கோதையை யாருக்காவது தெரியுமா?

பூங்கோதை படம்பூங்கோதை என்பவரை அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்காது. நானும் அவரை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அழைத்து கலை இலக்கிய விழாவுக்கு வருவதாகச் சொன்னார். அப்படி நிறைய பேர் அழைத்து முன்பதிவு செய்வதுண்டு. மறுநாளும் அவர் அழைப்பு வந்தது. நிகழ்ச்சிக்கு வருவதில் சிக்கல் இருப்பதாகவும் தனது தம்பி சம்மதித்தால் மட்டுமே அவரும் இணைந்து வர முடியும் என்றார். நிகழ்ச்சிக்கு முன்பு அவரது அழைப்புகள் பலமுறை வந்தன. அனைத்துமே தன்னால் வர முடியுமோ முடியாதோ என்ற தவிப்புகள் அடங்கியவை. நான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் இருக்கும்போது அவசியமற்ற அழைப்புகளில் எரிச்சல் அடைவதுண்டு. அழைப்பை எடுக்க தவிர்த்தபோது வட்சப்பில் குரல் பதிவு அனுப்பினார். ‘அன்புள்ள நவீன் சார்’ என தொடங்கியது அந்தக் குரல் பதிவு. தொடர்ந்து அதுபோன்ற பதிவுகள் வந்தன. நிறுத்தி நிதானமாகப் பேசுபவராக இருந்தார். நீளமான குரல் பதிவுகளாக இருந்தன. எனக்கு அதை முழுமையாகக் கேட்பதில் பொறுமை இருக்காது.

Continue reading

தலைமையாசிரியர் மன்றம்: கோஷமும் கொதிப்பும்

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்

indexவணக்கம் சார். உங்கள் கட்டுரையைப் படித்தேன். என் பள்ளிக் குழுமத்தில் பகிர்ந்தேன். கண்டிக்கப்பட்டேன். என் தோழிகள் பலருக்கும் இது நிகழ்ந்துள்ளது. இப்படித் தனித்தனியாக பேசும்போது பள்ளியில் முடக்கப்படுவோம். ஒன்றாக இணைந்து இப்போட்டியை நிராகரித்தால் என்ன? கடந்த ஆண்டும் இதே போன்ற அறிக்கையே வந்தது. வயிறு எரிகிறது. நிகழ்ச்சி அன்று அனைத்து ஆசிரியர்களும் ஒற்றுமையாக கோஷமிட்டு நிராகரித்தால் உண்டு. முன் வருவார்களா?

மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

Continue reading