
ம. நவீன் சார் அவர்களுக்கு,
‘மிருகம்’ சிறுகதையைப் படித்து முடிக்கும் பொழுது இடதுபுற கண்களில் கொஞ்சமாய் துளிக் கண்ணீர் தேங்கியிருந்ததைத் துடைத்துக் கொண்டேன். மிக மிகக் கொஞ்சமாய் தேங்கியிருந்தது.
Continue readingம. நவீன் சார் அவர்களுக்கு,
‘மிருகம்’ சிறுகதையைப் படித்து முடிக்கும் பொழுது இடதுபுற கண்களில் கொஞ்சமாய் துளிக் கண்ணீர் தேங்கியிருந்ததைத் துடைத்துக் கொண்டேன். மிக மிகக் கொஞ்சமாய் தேங்கியிருந்தது.
Continue readingகச்சிதமாக எழுதப்பட்டுள்ள கதை. நவீனின் சிறந்த கதைகளில் ஒன்று.
மனித உணர்வுகள், அதன் ஆதி குணத்தைத் தீண்டும்போது, தான், தனது என்றே நினைக்கிறது. பாசாங்குகள் அறுபட்டுப் போகின்றன.
ஆதி குணத்திலேயே பாசாங்கற்று வாழும் மிருங்களின் தூய அன்பும் வேதனையும் தற்காப்பும் குற்றவுணர்வும் சமரசமற்றதாக உள்ளன. அவை சமாதானங்களைக் கோருவதில்லை. வினைக்கான எதிர்வினைகளை கேள்விகளற்று ஏற்றுக்கொள்கின்றன.
அன்பு நவீன். நான் உங்களின் வாசகனென தைரியமாகச் சொல்லிக்கொள்ள தகுதி படைத்துள்ளதாகவே நம்புகிறேன். உங்களின் அத்தனை சிறுகதைகளையும் வாசித்துவிட்டேன் எனும் துணிவில் இதைச் சொல்வேன். (மண்டை ஓடியை மறுபதிப்பு போட்டால் என்ன?)
Continue readingநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்தவாரம் இந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையை எனது தளத்தில் பதிவேற்றியப் பிறகு வாசகர்களிடமிருந்தும் சக நண்பர்களிடமிருந்தும் பல்வேறுவகையான கேள்விகளை எதிர்க்கொண்டேன். அதில் முதன்மையான கேள்வி ‘ஏன் இந்த அங்கத்திற்குச் சிறுகதைகளின் ஆன்மாவை அறிதல் எனத் தலைப்பிட்டிருக்கிறீர்கள்? சிறுகதையின் நுட்பங்களை அறிதல் என்றுதானே சொல்ல வேண்டும்’ என்பதாக இருந்தது.
Continue readingஅனைவருக்கும் வணக்கம். க்யோரா.
2021இல் சிறுகதை ஓர் எளிய அறிமுகம் எனும் தலைப்பில் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் பட்டறை ஒன்றை வழிநடத்தினேன். நண்பர் மெய்யப்பன் அவர்கள் மூலமாக அப்படி ஒரு முயற்சி சாத்தியமானது. எந்த ஒரு முயற்சிக்கும் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் இல்லை என்றால் அவை சடங்குகளாக ஓரிடத்தில் தேங்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன். அவ்வகையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி ஒரு முன்னெடுப்பை அவர் மீண்டும் கையிலெடுத்திருப்பதை ஆரோக்கியமான நகர்ச்சியாகக் கருதுகிறேன். அவருக்கும் அவரது குழுவினருக்கும் மற்றும் இங்கு இணைந்துள்ள நண்பர்களுக்கும் என் வணக்கத்தையும் அன்பையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
Continue readingஅன்புள்ள நவீன்,
உங்களது ‘தாரா’ நாவலை வாசித்தேன். அண்மையில் என்னை தொந்தரவு செய்த படைப்பு தாரா. மலேசியாவில் பூழியனின் தலைமையில் வேலைக்கு வந்து அங்கேயே வேர்விட்ட தமிழ் வம்சாவளியினருக்கும் மிக அண்மையில் வேலைக்காக குடிபெயர்ந்த நேபாள நாட்டவர்களுக்கும் இடையில் நடக்கும் உரசல்களினூடாக நாவல் சொல்லப்பட்டிருந்தாலும் தங்கி வாழ எப்போதும் மனிதர்களுக்கிடையில் அல்லது மனித கூட்டங்களுக்கு இடையில் நடக்கும் பூசல்களில் உள்ள பல பரிணாமங்களை நாவல் தொட்டு செல்கிறதாக வாசிக்க முடிந்தது.
Continue readingThe short story “Shanmugapriya” by M. Navin revolves around the storyteller’s memories of a person named Shanmugapriya, whom they met during their school years at Wellesley Tamil School. The author reflects on how he had forgotten about Shanmugapriya until a visit to the beach with his three-year-old daughter triggered a memory of her.
Continue readingவனவிலகுங்களோ, வளர்ப்பு விலங்குகளோ, தங்கள் எல்லைகளை வகுப்பதை ஒரு மூர்க்கமான கலையாக தங்கள் மரபணுவில் கொண்டுள்ளது, நம் தெருவில் வாலாட்டிக்கிடக்கும் ‘சாந்தமான’ என நாம் பெயரிட்ட நாய் கூட, தன் குழுவில் இல்லாத நாயை தன் எல்லைக்குள் அனுமதிப்பதில்லை. கூர் பற்களைக்காட்டி வெறியுடன் மாற்றானை துரத்துவதும் மாற்றான் பின்னங்கால்களுக்கு நடுவே வாலை சுருட்டியபடி பயந்து ஓடுவதும் நாம் அன்றாடம் காணும் காட்சி. மனிதனோ வேறு சில கொடுக்கல் வாங்கல்களில் மூலமாக இந்த மூர்க்கக்கலையை, சமூகம் எனும் சட்டகத்திற்குள் வைத்து, நெறி படுத்திய பின்னரும், பூமி முழுவதும் அவனுடைய ‘மூர்க்கக்கலை ‘ வெளிப்பட்ட வண்ணமே இருக்கிறது.
அன்பு நவீன். 2024இல் முதல் கதையென நினைக்கிறேன். வழக்கமான உங்கள் பாணியில் இருந்து மாறுபட்ட கதை. நேரடியாக யதார்த்த பாணியில் எளிமையாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள். ஆனால் அது எளிமையல்ல. புனைவு கைவசம் வந்த கலைஞன் மொழியை கையாளும் லாவகம். தகிக்கும் இடங்களை அசால்டாக கடந்து செல்கிறீர்கள். ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை.
ராம்
Continue readingதாரா நாவல் 80களில் மலேசியாவின் கம்பப் பின்புலத்துடன் குகன் கொலையிலிருந்து தொடங்குகிறது. கம்பம் என்பது தமிழ் சொல்லானாலும் மலாய் மொழியில் கம்போங் என்றால் (கிராமம்) என்றே அறியப்படுகிறது. கூலி வேலைக்காக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட தென்னிந்தியர்கள் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட வரலாற்றில் மருவி கம்பத்தை அடைந்தவர்களின் படிமத்தை முன்வைக்கிறார் நாவலாசிரியர்.
Continue reading