காலில் தப்பும் பந்துகள்

football-fiesta-salisburyநான் பிறந்து வளர்ந்ததெல்லாம் லுனாஸில் உள்ள  கம்பங்களில். பன்மையில் சொல்லக்காரணம் இரு கம்பங்கள் சார்ந்து வாழ்விருந்ததால்தான். முதல் கம்பமான கம்போங் லாமாவில் வெளியே செல்லவே அனுமதி இல்லை. மண்ணை மிதிக்கக் கட்டுப்பாடு. பக்கத்து வீட்டு எல்லைக்குச் சென்றுவிட்டால் அணு ஆயுதங்களைவிட பயங்கரமான ஆயுதங்களால் நான் தாக்கப்பட சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் செட்டிக்கம்பத்தில் நல்ல சுதந்திரம். விசாலமான கம்பம் அது. மிக அருகாமையில் திடல் கூட இருந்தது.

Continue reading

விஜயாவின் கடிதம்: படைப்பாளிகள் ஒழுங்கற்றவர்களா?

karthik 3நவீன்,

கலை வடிவங்களை எளிமையான சொற்களில் உங்கள் முன்னனுபவம், வாசிப்பனுபவம், பிற ஆளுமைகளின் கருத்து எனும் அடிப்படையில் வெறும் கலைசார், வாழ்வுசார் விமர்சனமாக முன் வைப்பது நல்ல புரிதலைக் கொடுக்கிறது. உங்கள் விமர்சன கட்டுரைகள் ஓரளவு ஆய்வுபூர்வமான ஒப்பீடுகள் இருப்பது கூடுதல் சிறப்பு. விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு நூலில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் முக்கியமானதாக உணர்கிறேன். கலைகள்பால் நுட்பமான ஆழமான புரிதலுக்கு இதுபோன்ற விமர்சனங்கள் அவசியம். தொடர்ந்து எழுதுங்கள்.//ஒழுங்குகளில் கலை வருவதில்லை. கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் கட்டுப்பாட்டை மீறாமையும் உழைப்பாளிகளை உருவாக்குமே தவிர படைப்பாளனை உருவாக்காது.// அப்படியென்றால் படைப்பாளிகள் ஒழுங்கற்றவர்களா? அல்லது எதை ஒழுங்கு ஒழுங்கின்மை என்றும் கூறுவது?

விஜயாலட்சுமி

Continue reading

காவியத்தலைவன் : கலையின் காத்திரம்

kaaviya-thalaivanநான் சினிமா விமர்சகன் இல்லை. இதை பலமுறை பல சூழலில் சொல்லியிருக்கிறேன். இதை இப்படி அழுத்தமாகச் சொல்லக்காரணம், அவ்வாறான போலி அடையாளம் எப்போதும் என்மீது விழக்கூடாது என்பதால்தான். சினிமா என்பது பல்வேறு கலைகளின் கூட்டு வடிவமைப்பு. இசை, ஒப்பனை, வசனம், ஒளி, ஒலி, பாடல், நடனம், நடிப்பு என பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ள அதில் ஏதாவது ஒன்றைப்பிடித்துக்கொண்டு சினிமா விமர்சனம் செய்கிறேன் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகபட்சம். அல்லது நூறு படங்களுக்கு மேல் ஒருவன் பார்த்துவிட்டால் அவன் செய்யும் விமர்சனங்கள் நம்பகத்தன்மையானவை என்பதெல்லாம் வேடிக்கை.

Continue reading

எழுத்தும் எதிர்பார்ப்பும்

Kuraiyondrumillai back(f)-1

பிரம்மானந்த சரஸ்வதி

அன்புமிக்க சுவாமி,

முதலில் நான் உங்கள் ரசிகன்.  சுமார் 20 வருடத்திற்கு முன்பிருந்தே.  அப்போதெல்லாம் எங்கள் பள்ளியில் சமய வகுப்பு நடக்கும்.  நான் எங்கள் வெல்லஸ்லி பள்ளியில் பிரதான பாடகர்களின் ஒருவன்.  தேவாரம், திருவாசகம், மந்திரங்கள் என ஒன்று விடாமல் நல்ல மனனம். மாதத்திற்கு ஒரு முறை எங்கள் பள்ளியிலிருந்து பேருந்து உங்கள் தியான ஆசிரமத்திற்கு புறப்படும்.  காலையில் எட்டு மணிக்கு அங்கு வந்தால் நான்கு மணிக்குத்தான் வகுப்பு முடியும்.

Continue reading

கலை இலக்கிய விழா 6 – சில நினைவுகள் – 4

0001அன்று இரவே கிராண்ட் பசிப்பிக் விடுதியில் 10க்கும் மேற்பட்ட திரைத்துறையைச் சார்ந்தவர்களோடு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. லீனா மணிமேகலையின் தேவதை மற்றும் செங்கடல் படம் ஒளிபரப்பாக பின்னர் விவாதங்கள் நடந்தன. லீனா நண்பர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தார். எல்லா கேள்விகளையும் சந்தேகங்களையும் விடவும் ஒரு படைப்பாளியின் நேர்மையான ஆக்கமே பல விடயங்களைப் பேசும் என நான் நம்புபவன். எனவே லீனாவின் ஆவணப்பட முயற்சி எதை பேச விரும்புகிறது என்ற பிரக்ஞையை உருவாக்கியிருக்கும்.

Continue reading

கலை இலக்கிய விழா 6 – சில நினைவுகள் – 3

malaysia-trafficjam1லீனா மணிமேகலை மலேசியாவுக்கு வருகிறார் என அறிந்தப்பின் பல்வேறு விதமான ஆலோசனைகளும் எதிர்ப்புகளும் முணகல்களும் காதுகளுக்கு எட்டவே செய்தன. இது எனக்கு பழக்கமானதுதான். என்னளவில் நான் ஒருவரை அழைக்க தனிப்பட்ட காரணங்கள் இருப்பதில்லை. மலேசிய கலை இலக்கிய உலகுக்கு அவர்களின் வருகை ஏதோ ஒருவகை மாற்றத்தை உருவாக்கும் என்றே இப்பணியைத் தொடர்ந்து செய்கிறோம். ஆனால், அப்படி அழைக்கப்படுபவர் அனைவருமே அன்புக்குறியவர்கள்.

Continue reading

கலை இலக்கிய விழா 6 – சில நினைவுகள் – 2

லீனா மணிமேகலை

லீனா மணிமேகலை

சிங்கையிலிருந்து புறப்பட்ட அன்றுதான் லீனாவும் அந்த தவறை கவனித்தார். சூழல் பரபரப்பானது. அவர் சிங்கை வந்து சேரும் நேரம் மாலை ஆறு. எனவே அதற்குப்பின்பே விமான டிக்கெட் போட வேண்டும். ஒரு உணவகத்தில் அமர்ந்தேன். மீண்டும் டிக்கெட் போட்டபோதுதான் நிம்மதி. முதலில் இரவு 11 மணிக்குப் போடலாமா என யோசித்தோம். மூன்று மணி நேரம் காத்திருப்பதா என யோசித்து ஒன்பது மணிக்கு போட்டேன்.

Continue reading

கலை இலக்கிய விழா 6 – சில நினைவுகள்

001

கடந்த ஆண்டு தாஜ் கார்டனில்

கடந்த ஆண்டு இறுதியில் வல்லினம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டோம். தாஜ் கார்ட்னில் அந்தக் கூட்டம் நடந்தது. அதில் முக்கியமாக மாற்று சினிமா அல்லது ஆவணப்படம் தொடர்பான சிந்தனைகளை இளம் தலைமுறை இயக்குனர்களிடம் விதைப்பதாய் எங்கள் திட்டம் இருந்தது. லீனா மணிமேகலை அடுத்த ஆண்டு வந்துகலந்துகொள்வார் என நான் முடிவெடுத்துக்கூறியபோது நண்பர்கள் அனைவரும் சம்மதித்தனர். ஆனால் அதுவரை லீனாவிடம் முன் அனுமதியோ அவரது கால அட்டவணையையோ கொஞ்சமும் சோதிக்கவில்லை.

Continue reading

“விருதுகள், வாங்குபவரின் தகுதியைவிட கொடுப்பவரின் தகுதியையே காட்டுகிறது “

பல்வேறு சர்ச்சைகளிலும் விவாதங்களிலும் அவ்வப்போது ஈடுபட்டிருந்தாலும் வல்லினம்இயக்கத்தின் செயல்பாடுகள் அத்தனை எளிதாய் மலேசியத் தமிழ்ச்சூழலில் மறுக்கப்படக்கூடியதல்ல. மலேசியத் தமிழ்ச்சூழலில் பதிப்புரிமை குறித்தும் ராயல்டி குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு அதை முறையாகக் கடைப்பிடித்தும் வருபவர்கள். முற்றிலும் இளம் தலைமுறையினரின் இணைவால் உருவாகியுள்ள வல்லினம்தமிழக , இலங்கை போன்ற நடுகளில் இயங்கும் தீவிர இலக்கிய இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதோடு , உலக இலக்கியத்தோடு ஒப்பிடுகையில் இருக்கும் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் இடைவெளியை குறைக்கவும் செயல்படுகின்றனர். இவ்வருடம் பறைஎனும் காலாண்டு அச்சு இதழை மலேசிய இலக்கிய உலகுக்கும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வருடம் தொறும் வல்லினம் நடத்தும் கலை இலக்கிய விழாகுறித்து அறிய வல்லினம் மற்றும் பறை இதழின் ஆசிரியர் .நவீனைச் சந்தித்தோம்.

Continue reading

நாத்திகம்; பொதுவுடமை; மற்றும் போலிகள்

இன்று காலையில் ஒருவர் வீட்டுக்கு மணிமொழியுடன் சென்றிருந்தேன். பறை இதழ் கேட்டிருந்தார். 50 வயதைக் கடந்த பெண்மணி. “எனக்குத் தெரியும் தம்பி. நீங்க தீபாவளியெல்லாம் கொண்டாட மாட்டீங்க. எம்பையன்தான் சொல்வான். கம்ப்யூட்டர்ல உங்கள படிப்பான். ஆனா பாருங்க நம்மால அது முடியாது. பெருநாள் வந்தாதான் சொந்தங்களையெல்லாம் பார்க்க முடியுது. அப்புறம் நான் நல்லா சாமியெல்லாம் கூம்பிடுவேன்” என்றார் .

Continue reading