Category: கவிதை

மருந்தென்னும் மாயப்புள்ளி

மனப்பிணிக்கு மருந்துகொடுக்கக் கூடியவரிடம் வாங்கிவந்த மருந்துச்சீட்டுகள் அவை நோய்க்கூறுகளை துல்லியமாக உடல்புள்ளிகளில் கண்டறிந்தார்   ஒவ்வொரு புள்ளிகளிலும் ஒரு கதையை செருகச்சொல்லி தீவிரமாக வேறெதையோ தேடலானார்   உடன்பாடில்லையென்றாலும் கதைகளை கண்டறிந்துக்கொண்டிருந்தேன்   முதல்புள்ளி என் நெற்றிப்பொட்டில் இருப்பதாக எழுதிக்கொடுத்தார் சின்ன வயதில் யாரையோ கல்லெறிந்துவிட்டு ஓடிய கதையை அங்குச் செருகினேன் நெற்றிப் பொட்டு வலித்தது…

அடிவருடர்கள்

சிமெண்ட் மணல் நீர் கட்டிடத்தின் பிரகாசமான அலங்காரக் குவியல்களில் தாள்கள் சிலநூறு பரபரத்துக் கொண்டிருக்கின்றன இயந்திர விசிறிக் காற்றில் வரிகள் மாறாமல் சொற்கள் பிசகாமல் எழுத்துகள் தேயாமல் காயம்பட்ட நாரையின் அதிஅரூப வாதைமறந்த மகிழ் நொடிகளைப்போல் அவ்வப்போது அதனர்த்தங்கள் மாற்றப்பட்டதும் படுவதும் தற்காலிக ஏமாற்று தேவைக்கே பரபரத்திடா தாள்களும் ஒருசேர அடங்கிய அப்புத்தகங்களின் அட்டைப்பட தலைப்புகளூடாக…

காசி கவிதைகள்

அந்த இரவு இந்த இரவில் அவ்வளவு கறுமையில்லை எங்கிருந்தோ ஒரு மணியின் ஓசை கண்கள்வழி புகுந்து வெளிச்சம் கொடுக்கத்தொடங்கியது தோல்களை உரசிய காற்று இரவைக் கிழித்து காட்சிகளைப் படிமங்களாக்கியது இப்போதுதான் எரியத்தொடங்கிய பிணத்தின் சாம்பல்வாடை இரவுக்குள் கண்களை ஊர்ந்துசெல்ல வைக்கிறது நான் கங்கையைப் பருகியபோது கறுமை தனது ஆடைகளைக் களைந்து இந்த இரவை அத்தனை கருமை…

பறத்தலின் நிமித்தம்

பறக்க எத்தனிக்கும் பறவை ஒன்றினை வரைகிறாள் மாயா. நீல நிற பறவை அது. கண்களில் கானகத்தைச் சுமந்தபடி சிறகுகளை விரித்துக் காத்திருக்கிறது. தானியங்களையும் தடாகம் ஒன்றினையும் மரங்களையும் வரைந்து முடித்த அவள் களைத்துப் போய் உறங்கி விட்டாள். தான் பறந்து திரிய ஒரேயொரு வானத்தை வரைந்து விடு என காதருகில் வந்து கெஞ்சி எழுப்புகிறது அந்நீல…

நவீன் மனோகரன் கவிதைகள்

சராசரிகள்   காதலின் இறுதி விந்தும் தீர்ந்தபின் நாம் சராசரி விசயங்களைப் பேசத்தொடங்கினோம்   சராசரி திரைப்படங்கள் பற்றி சராசரி உணவுகள் பற்றி சராசரி நூல்கள் பற்றி சராசரி திட்டங்கள் பற்றி சராசரி பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றி சராசரி பாடல்கள் பற்றி சராசரி வாழ்க்கை பற்றி   காதல் தீர்ந்த இடத்தில் நாம் சராசரிகளை…

ஞா.தியாகராஜன் கவிதைகள்

1.மாமிச ருசி   பித்தமேறிய பட்டாம்பூச்சிகள் வேண்டியவன் மணிக்கட்டை கீறி தற்கொலை செய்கிறான் தூரத்து மாதா கோவிலின் மணியொலிக்கும் இசை பின்னனியில் விஷமருந்துகிறான் இவன்   கஞ்சா குடித்த இரவுகள் இவன் பிணத்தை அறுக்கின்றன சாம்பல் மேனியில் ருத்ரம் ஆடியவன் குட்கா வேண்டி ஓரம் சாய்கிறான்   சித்தம் கலங்குகிறது இழுத்துவிடும் புகையில் சொர்க்கமில்லை நரகமில்லை…

லாகிரி தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

                                                           ~  நான்  ~   இடது தட்டினடியில் புளி ஒட்டப்பட்ட துலாக்கோல். இயேசுவின் இடது கன்னத்து முத்தம். தேயிலையில் கலக்கப்பட்ட மரத்தூள் கவனத்தைத் திசைதிருப்ப சாலையில் 10ரூபாயை வீசுபவன் கள்ளகாதலியை  விழாக்களில் தங்கையென அறிமுகம் செய்பவன் நிறைய பஞ்சடைக்கப்பட்ட பெண் மேல்ஆடை. கொத்தப் பாயும் நீர்பாம்பு. நிலப்பத்திரங்களின் கள்ளக் கையெழுத்து…….     ~…

போகன் சங்கர் கவிதைகள்

1 மனப்பதற்றத்தின் பழுப்பு தேவதைகள் மரங்களின் மேல் தயக்கமின்றி பறக்கின்றன மலைமேல் இரவுகளில் தெரியும் ஏக்கத்தின் வனத் தீ இனிப்புப்பெட்டிகளைத் திறக்க மறுக்கும் விரல்களோடு நீங்கள் எழுதும் கசப்புக் கவிதைகள் உடல்கள், உடல்களின்  சிறிய வாசல்களுடன் தேவாலயங்கள், கல்லறைகளின் தழும்பு மாறாத வரிசையுடன் நீங்கள் உங்கள் ஆரஞ்சுச் சாறுகளை  வெப்ப காலத்துக்காக வைத்திருங்கள் குளிர்காலங்களில் நான்…

வே.நி.சூர்யா கவிதைகள்

நடந்தேறுகிறது எதிர்பாராத இவையெல்லாம் ஒரு கோடு கடல் ஆகுமென நினைத்திருக்கவில்லை ஓர் இசை வாழ்க்கை ஆகுமென நினைத்திருக்கவில்லை ஒரு குண்டூசி இரவு ஆகுமென என்று கூட நினைத்திருக்கவில்லை இன்னும் எத்தனையோ நினைத்திருக்கவில்லைகள் இவையெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை குண்டூசி துளையிடும் இசை நீள்கிறது காகிதத்தில் நீளும் பெருங்கோடென பழமொழிகளுக்கு எதிராக மொழியை கோர்க்காதவர்கள் தோன்றிக்கொண்டே செல்கின்றனர் வீட்டின் கூரைகளை தாண்டிப்…

நெருங்கப்பூத்த மோமதி மலர்களை முத்தமிட்டதுண்டு

மனப் பிணியாளர்களுக்கு காதில் மருந்திடும் சிகிச்சையை மேற்கொள்ளும் குடும்பத்தில் தனியாகப் பிறந்தேன் மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் இப்போது அந்த ஊர் இல்லையென எனக்குத் தெரியும் ஆரம்பக் கல்விச்சாலையில் உடனிருந்தவளோடு சேர்ந்து திருட்டைப் பழகினேன் பதிமூன்று வயதில் புகைப்படங்களுக்கு சட்டகமிடும் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டேன் விளையாட்டு மைதானத்தின் கண்களுக்கு நானொரு முடவன் வேலைகேட்டு அதற்கான கட்டடங்களின்முன் நின்றதில்லை இளம் அவயங்களின்…

பாவைக் கூத்து

அம்ம வாழிய தோழி, யார் அவன் என்று வினாக்குறியானாய் அறிந்திலையோடி?   வீட்டுக் காவல் மறந்து சந்து பொந்து மரங்களில் எல்லாம் காலைத் தூக்கி நின்றாடி பெட்டை நாய்களுக்கு மூத்திரக் குறுஞ்சேதி எழுதி அலையுமே அந்தச் சீமை நாயின் பேர் இல்லத்து வம்பனடி அவன். போயும் போயும் அவனையா கேட்டாய்?   பொம்மலாட்டப் பாவையைப்போல் ஒருவர்…

அன்புவேந்தன் கவிதைகள்

அன்பின் வழி அது   நமது அன்பின் பெரும்பொழுது எல்லையற்று விரியும் இப்பெருநிலத்தின் உயிர்க்கூட்டங்களின் மேல் பிரபைகளைப் பொழிந்தபடி நட்சத்திரங்களில் சிமிட்டிக்கொண்டிருக்க நாம் அப்போதுதான் ஒரு முத்தம் பகிரத் தொடங்கியிருந்தோம்.   தடங்களைத் தளர்த்தியபடி நெகிழ்ந்த புலன்கள் பாவி சிகரங்களையும் சமவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் சுழித்துத் திளைக்கும் நமது அன்பின் நீர்மத்தில் மிதந்தபடி ஒரு புணர்தலைத் தொடங்கியிருந்தோம்…

பாம்பாட்டி சித்தன் கவிதைகள்

                காதுகளின் கடல்   ”பொன்னுக்குவீங்கி” என்று தடித்த தங்கச்சங்கிலியை அம்மாஅணிவித்தபோது காதுகளினுள் சில்லென்றது   பஞ்சாலை சங்கின் பேரொலி பறவைகளின் பேச்சரவம் அம்மாவின் ஆற்றாமை எனப் படிப்படியாகக் குறைந்து எதுவும் கேட்காமல் போனது   அப்புறம் காதுகளில் தூண்டில் மாட்டி வயர்கள் பேட்டரி சகிதம்…

எனது ஞாபகக் கிண்ணங்களில்…

எனது ஞாபகக் கிண்ணங்களில் நிரம்பித் ததும்பும் உனது காதலை அள்ளிப் பருகியபடியே உயிர்த்திருக்கிறேன். நேசத்தின் கரங்களில் நாம் சிறு பிள்ளையாய் தவழ்ந்த காலம் ஒன்று இருந்தது.   அதீத அன்பினால் மெருகூட்டப்பட்ட நாட்களின் மீது வீசிய ஒளிக்கற்றைகள் ஒன்றுதிரண்டு முழுநிலவாய் வான் மீதேறிவிட்டதென சொல்லி இறுகத் தழுவிக் கொண்டாய்.   இதழ்களைச் சுவைத்துவிட்டு ‘நான் போதையேறிக்…

நேசமித்ரன் கவிதைகள்

ஒளியை முத்தமிடுதல் மந்திரவாதியின் தொப்பிக்குள் இருந்து மேலெழுகிற துயரநாளின் நிலவு வன்புணர்ந்து மனம்பிறழ்ந்தவள் மீண்டும் மீண்டும் சொல்லும் சொல்லாய் அலைமிதந்தேறுகிறது யாருமற்ற தீவில் பச்சோந்தி மரணநிலையில் கொள்ளும் நிறத்தில் உள்ள நிர்வாணத்துடன் உடன் பயணிக்கிறது தப்பிய விண்மீனின் கிரணம் அவ்வொளிக் கற்றை அத்துணை ஒளிஆண்டுகள் கடந்து பூமியைச் சேர்ந்த போது அந்த நட்சத்திரம் எரிந்து போயிருந்தது…