
மலேசிய வரலாற்றில் சுதந்திர காலப்போராட்டங்களையும்,அதற்குப் பிந்திய வாழ்க்கையையும் பலர் நாவலாக புனைந்துள்ளார்கள். அவ்வகை புனைவுகள் பெரும்பாலும் இந்தியர்களை மையப்படுத்திய கதைகளாகவும், கற்பனை அதிகம் கலக்கப்பட்ட மேலோட்டமான கதைகளாகவும் மட்டுமே அமைந்திருக்கின்றன. மலேசிய மக்களின் வாழ்வு என்றால் ஜப்பானிய, ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நடந்த கொடுமைகள், தோட்டப்பாட்டாளிகளின் கதைகள் என்ற கதைக்களத்திலேயே நான் வாசித்த பெரும்பான்மை நூல்கள் இருந்தன.…














