Category: புத்தகப்பார்வை

மலையும் மனிதர்களும்

[ 1 ] எண்ணி எண்ணிக் குழி வெட்டி இடுப்பொடிஞ்ச பின்னாலும் இன்னும் வெட்டு  என்கிறானே வேலையத்த கங்காணி. உதையும் பட்டோம் மிதியும் பட்டோம் இங்க வந்து மானம் கெட்டோம் முட்ட முழிச் சாமி கையால் மூங்கில் கழி அடியும் பட்டோம்… [மலையகக் கூலித்தொழிலாளர்கள் நாட்டுப் பாடலொன்றின் சில வரிகள்.] பாரத நிலத்தை ஆண்டு சுரண்டிச்…

ஆறுமுகம் : ஒழுக்கவிதிகளுக்கு வெளியில்

சமூகம் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் அறிந்த, பழகும், சந்திக்கும் மனிதர்களால் மட்டும் ஆனதல்ல. அல்லது வரலாறு பதிவு செய்துள்ள உன்னத மனிதர்களையும் லட்சியப் புருஷர்களையும் மட்டும் கொண்டதல்ல. நாம் கண்டுகொள்ளாத அல்லது திட்டமிட்டே அறிய விரும்பாத மனிதர்களும் சமூகத்தின் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அருவருப்போடு நாம் ஒதுக்கிவைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வாழ்க்கை…

செடல்: கைவிடப்படுதலின் துயர்

இயல்புவாதப் படைப்புகளைச் சுருக்கமாகக் கடவுள்கள் இல்லாத படைப்புகள் என்று வகைப்படுத்தலாம். கதைகளில் அற்புதத் தன்மையையும்  யதார்த்தம் கடந்த தன்மையையும் கழித்துவிட்டு எழுதப்படும் கதைகளை இயல்பு மற்றும் யதார்த்தவாதப் படைப்புகளாக அடையாளப்படுத்தலாம். செடல் அப்படியானதொரு இயல்புவாதப்படைப்பு. ஆனால் செடல் இப்படித் தொடங்குவது ஒரு நகைமுரண். ‘சாமி என்னிக்குமே சாவப்போறதில்லெ’ சரியாகச் சொல்வதானால் இந்த நாவல் முழுக்கவே கடவுள்…

பெத்தவன்: நிகழ்த்தப்படும் ஆவணம்

‘பெத்தவன்’ நெடுங்கதை வெறும் நாற்பது பக்கங்கள் மட்டுமே. அந்த நாற்பது பக்கங்களை வாசித்து முடித்தபோது சில மணி நேரம் எந்த வேலையும் செய்ய முடியாமல் தடுமாறிப் போயிருந்தேன். மனித குலத்தில் வேரூன்றியிருக்கும் சாதியத்தையும் அதன் குரூரங்களையும் கதை முழுக்க நிரம்பியிருக்க அதை வாசிக்கும் வாசகன் நிச்சயம் பதைபதைப்புக்கு உள்ளாவான். எழுத்தாளர் இமையம் அவர்களை வல்லினம் மூலமாக…

எங் கதெ: ஆணின் அகவெளி

“என்னெ மாரியே ஒரு பொம்பள பொலம்புனா கற்புக்கரசி, கண்ணகி, உத்தமி, பத்தினின்னு பட்டம் கொடுப்பாங்க. ஆம்பள பொலம்புனா பொட்டப் பயம்பாங்க. பொழக்க தெரியாதவன்னு சொல்லுவாங்க”, இப்படியாக சமூகத்தின் பார்வையில் பொழக்க தெரியாதவனாகவும் நமது பொதுப்புத்திக்குப் பொட்டப் பயலாகவும் தெரிகிற விநாயகம் என்ற ஆண்மகனின் பத்து வருடத்துக் கதைதான் எங் கதெ. ஓர் ஆணின் கதை என்பது…

பெத்தவன்: வஞ்சிக்கப்படும் அன்பு

அழ வைத்தாலும் என்னுள் ஆழப் பதிந்த கதை, உயிர் வலி உணர்த்திய  கதை. ஓர் உயிர் இன்னோர் உயிரை வதைக்கும் சமத்துவமற்ற நிலையின் உச்சம் இந்தப் பெத்தவன் குறுநாவல். சாதித் தீண்டாமையை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் ஒரு கிராமத்தில் கதை தொடங்கி அங்கேயே முடிகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆணை (காவல் அதிகாரியை) மூன்று வருடங்களாகக் காதலிக்கிறாள்…

செல்லாத பணம் : அலைந்து எரிந்த நிலம்

பார்த்த இடமெங்கும் கண்குளிரும் பொன்மணல் என் பாதம் பதித்து நடக்கும் இடத்தில் மட்டும் நிழல் தேடி என்னோடு அலைந்து எரிகிறது ஒரு பிடி நிலம். பாலை – பிரமிள் பொன்மணல் விரித்த பாலைவெளி. கண் தீண்டக் குளிர்ச்சி. கால் பதிக்க, தழல்த்தீண்டல். எல்லா உறவுகளும், அதைக் கட்டி வைக்கும் உணர்ச்சிகளும், அது வெளிக்காட்டும் உணர்வுகளும் இந்தப்…

சாளரங்களைத் திறந்து வைக்கும் கலைஞன்

நவீனின் முதல் சிறுகதை தொகுப்பான ‘மண்டை ஓடி’ கதைகளைப் படித்ததும் அவரின் முதன் முதல் எழுதப்பட்ட இரண்டு மூன்று கதைகள் எவை என்றுதான் பார்த்தேன். இலக்கியம் குறித்த பெரிய புரிதல் இல்லாமல், வாசிப்பும் இல்லாமல், ஆசையின் பாற்பட்டோ, சொல்லவேண்டும் என்ற உந்திப்பினாலோ அல்லது எழுத்தின் மீதான ஆர்வத்தாலோ எழுதப்பட்ட கதைகள் எனக்கு முக்கியமானவை. அதிலே சுயம்புவான…

அரூப முதலையின் கால் தடங்கள்

தமிழில், வேறெந்த இலக்கிய வடிவையும்விட உயரிய இடத்தை சிறுகதைகள் அடைந்திருக்கின்றன எனலாம். நூற்றாண்டு கால தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் பேசப்படாத பொருளோ, சோதிக்கப்படாத வடிவமோ இல்லை என்று சொல்லும் அளவுக்கு முக்கியமான பரிச்சார்த்த முயற்சிகள் பலவும் இங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சிறுகதைகளில் அழுந்தத் தடம் பதித்த முன்னோடிகள் பலரும் இயங்கிய களத்தில் நாமும் இருக்கிறோம் என்பதே, அதீத பொறுப்பையும்,…

சு.வேணுகோபால்: கூழாங்கற்களின் நாயகன்

தொண்ணூறுகளுக்குப் பிறகான காலகட்டத்தில் பொதுவாக நவீன இலக்கியப் படைப்பின் வடிவம்,வெளிப்பாட்டு முறை சார்ந்து ஒரு தவறான புரிதல் சூழலில் உண்டாயிற்று. மொழியை அதன் இயல்புத்தன்மையினின்றும் வல்லந்தமாக திருகியும், செயற்கையான பூடகத்தன்மையை அதற்களித்தும் வெளிவரும் படைப்புகளே மிக நல்ல இலக்கியப் படைப்புகள் என்ற ஒரு தோற்றப்பிழை உண்டானது. பின்நவீனத்துவப் படைப்பை உருவாக்குவதாக எண்ணிக்கொண்டு நேர்க்கோடற்ற துண்டாடப்பட்ட விவரணையை…

நுண்வெளி கிரகணங்கள்: விலகும் இருள்

சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியர்களின் வாழ்வில் நிறைய பொதுத்தன்மைகள் ஏற்படத் தொடங்கின. நவீனக் கல்வியும் சந்தையும் ஒரு பொது மொழியையும் பொதுவான மனநிலையையும் மக்களிடையே உருவாக்கத் தொடங்கின. ஒரு வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிடம் அவர்கள் மாணவர்கள் ஒத்த வயதினர் ஒரே வகையான பாடங்களைப் பயில்கின்றனர் என்ற பொதுத்தன்மைகள் உருவாகின்றன. ஆனால் அவர்களின் நிறம், உயரம், ஜாதி, உணவுப்பழக்கங்கள்,…

மோகப்பெருந்தீயில் உதிரும் சிறுசாம்பல் : சு.வேணுகோபாலின் ஆட்டம்

“ஆடாதவர்களுக்கு வாழ்க்கையில்லை. வாழ்க்கையில் ஆடாதவர்கள் இல்லை. ஆட்டமே வாழ்க்கை. வாழ்க்கையே ஆட்டம். மானுட ஆட்டம்“ ( நாவலிலிருந்து ) மனிதன் எப்போதும் ஒரு சமூக விலங்கு. தனிமையை ரசிக்கலாம்; கொண்டாடலாம். ஆனால், அவனால் அதிலேயே நிலைபெற்று இருக்க முடியாது. அதனால்தான் இன்றும் கூட தனிமைச்சிறை என்பது கொடூர தண்டனைகளில் ஒன்றாக இருக்கிறது. உணவு, உடை, உறைவிடம்…

யுகசந்தியின் கலைஞன்: கூந்தப்பனையை முன்வைத்து

தேர்ந்த எழுத்தாளன் உலகை உன்னிப்பாக கவனிக்கிறான். நாம் அன்றாடம் புழங்கும் வெளியில் நாம் கவனிக்கத் தவறிய ஏதோ ஒன்றை புலனுக்கு உணர்த்தும்போது நம்முள் ஒரு சன்னமான வியப்பு மேலிடுகிறது.“இந்த உலகம் எனக்கும் நன்கு பரிச்சயமானதுதான்.இதை ஏன் நான் கவனிக்கவில்லை?” அறிந்த உலகில் அறியாத ஒன்றைக் காட்டுகிறான். இந்த நம்பகத்தன்மையும் அணுக்கமுமே வாசகன் எழுத்தாளனின் உலகில் நுழைவதற்கான…

திசையெல்லாம் நெருஞ்சி: உண்மைகளை பிரித்தறியும் கலைத்திறன்.

புனைவுக் கலையின் உடல் கற்பனையால் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் அதன் உயிர், வாழ்க்கையின் உண்மைகளைக் கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது. சிங்கப்பூரில் தொடக்க காலத்தில் வெளிவந்த சிறுகதை தொகுப்புக்கு கட்டுக்கதைகள் என்றே தலைப்பிட்டுள்ளனர். ஆகவே புனைவுகள் படைப்பாளனின் கற்பனை எல்லைக்கு ஏற்ப விரிந்தும் ஆழ்ந்தும் சென்றாலும் அதன் உள்ளீடாக சுய அனுபவங்களும் வாழ்வியல் உண்மைகளுமே நிரப்பப்பட்டிருக்கும். உண்மைக்கும் கற்பனைக்கும் இடையில்…

எங்கெங்கு காணினும் எண்களடா: ‘கணிதத்தின் கதை’ நூல் நோட்டம்

கொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கிடங்கில் நுழைந்ததும் எந்த நோக்கமும் இல்லாமல் கண்ணில் பட்ட நூல்களை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். வாசகர்களின் தேடலுக்கு வசதியாக எழுத்தாளர்கள் அடிப்படையிலும் இலக்கிய வகைகள் அடிப்படையிலும் நூல்கள் அடுக்கப்பட்டு இருந்தன. பிரபலமான நூல்களில் இருந்து சற்று விலகி மேல் மாடிக்குச் செல்லும் வழியில் மாணவர் பள்ளி நூல்கள் இருந்தன. இலங்கை தமிழ்ப்பள்ளிகளில்…