Category: மொழிப்பெயர்ப்பு

தெரியாதவை (சிங்கள மொழிப்பெயர்ப்புச் சிறுகதை)

சித்தாண்டி I “நாங்க திலீபவுக்கு சித்தாண்டியில கல்யாணம் முடிச்சுக் கொடுப்பமே.” “ஏனது?” “இஞ்ச பார்.  உன்னப் போலில்ல… சித்தாண்டிலதான் நல்ல வடிவான பொம்பளப்புள்ளகளக் கண்டிருக்குறன் நான்.” “அம்மா… இங்க பாருங்க… அப்பா சொல்றது கேட்குதா? சித்தாண்டித் திருவிழாக்களுக்கு மட்டும் அப்பாவை அனுப்பிட வேணாம்.” அப்பா திண்ணையில் அமர்ந்திருந்து வெற்றிலை பாக்கு இடிக்கும்போதுதான் இவ்வாறு என்னைக் கிண்டல்…

எம். பி. குடு குடு (மலாய் மொழிப்பெயர்ப்பு சிறுகதை )

எம். பி. குடுகுடு மூன்று தடவை கொட்டாவி விட்டுக் கொண்டே ஆக்ரோஷமாக நெளிந்தார். அவரது முரட்டு கைகளை மேலே உயர்த்தி அசைத்தபடி கொட்டாவி விட்டபோது, காற்றில் மெதுவாக அசைந்த தொலைபேசி கம்பிகளில் உல்லாசமாக குதித்துக்கொண்டிருந்த சில சிட்டுக்குருவிகள் பயந்தன. அந்தப் பறவைகள், அப்பாராளுமன்ற உறுப்பினர்  தங்கியிருந்த விடுதிக்கு எதிரில் உள்ள விடுதியின் கூரைக்கு விருட்டென பறப்பதைப்…

சுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)

இந்தத் தடவை பள்ளி விடுமுறையின்போது, நான் கட்டாயம் சுன்னத் (விருத்தசேதனம்) செய்துகொள்ள வேண்டும் என்று  அப்பா கட்டளையிட்டார். நானும் அதற்குத் தயாரானேன். அப்பாவின் முடிவைக் கேட்டு அம்மா அழுதார். இந்த  சின்னப் பையன் சுன்னத் செய்வதை அம்மாவின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அது அப்பா எடுத்த முடிவு, அம்மாவால் எதுவும் செய்ய இயலாது. எங்கள்…

கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)

அன்று நான் எனது தந்தையின் குடிசையைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனாக இருந்தேன். அப்போது எனக்கு எத்தனை வயது இருந்திருக்கும்? என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. மிகக் குறைந்த வயது. ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்திருக்கக்கூடும். எனது தாய், தந்தையோடு பட்டறையில் இருந்தாள். சுத்தியலால் அடிக்கும் ஓசையும், விதவிதமானவற்றை வாங்க வருபவர்களது குரல்களும் எப்போதுமே…

ஒரு தருணத்தில்

அவன் தனிமையில் முதுகை கடலுக்குக்  காட்டியபடி சாய்வுநாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான். கடுமையான காற்று. வானம் மிகப் பிரகாசமாக, மேகத்தின் தடயம் ஏதுமின்றி இருக்கிறது. கடல் நீரில் பிரதிபலிக்கும் மினுங்கும் சூரிய ஒளியில், அவனது முகம் தெளிவாகத் தெரியவில்லை. கிரீச்சிடும் துருவேறிய ஈரமான பெரிய இரும்புக் கதவுகள். எங்கோ அவற்றின் மேற்பகுதியிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. அந்தத் தடித்த கனத்த…

பூங்காவில்

“நான் நீண்ட காலமாக பூங்காவில் உலவியதில்லை. அதற்கென நேரம் ஒதுக்கவோ அல்லது அதில் ஆர்வமோ எனக்கில்லை.” “எல்லோருக்கும் அதே நிலைதான். வேலை முடிந்ததும் மக்கள் வீட்டிற்கு விரைகிறார்கள். வாழ்க்கையே அவசரகதியில் உள்ளது.” “சிறுவனாக இருந்தபோது, இங்கே வந்து இந்த புல்லில் விழுந்து புரள நான் உண்மையிலேயே விருப்பு கொண்டிருந்தேன்.” “நான் எனது தாய் தந்தையரோடு வந்ததுண்டு.”…

என் தாத்தாவுக்கு, மீன் தூண்டிலொன்று வாங்க…

மீன்பிடி உபகரணங்கள் விற்கும் புதிய கடையொன்றை கடந்து செல்கிறேன். காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகைப்பட்ட தூண்டில்கள், தாத்தாவை நினைவூட்ட, அவருக்கு ஒன்று வாங்க வேண்டுமென எண்ணுகிறேன். இறக்குமதி செய்யப்பட்டதென முத்திரை பொறித்த ஒரு பத்துப் பாகங்களைக் கொண்ட தூண்டிலொன்று. பத்துப் பகுதிகளும், ஒன்றின் மேல் மற்றொன்று படிந்து, அநேகமாய், இறுதியில் ஒரு துப்பாகியின் பிடி போன்றமைந்த,…

பிடிப்பு

தசைப்பிடிப்பு. அவனது வயிறு பிடிப்புக்கொள்ளத் தொடங்கியது. உண்மையில் அவன் தன்னால் நீண்ட தூரம் நீந்த முடியும் என்றுதான் எண்ணியிருந்தான். கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும்போதே அவனது வயிறு பிடிப்புக்கொள்ளத் தொடங்குகிறது. முதலில் அவன் அது வயிற்றுவலி என்று நினைத்தான் – தொடர்ந்து நீந்தினால் நீங்கிவிடலாம். ஆனால், வயிறு தொடர்ந்து இறுக, அவன் நீந்துவதை நிறுத்தி,…

அந்த விபத்து

சின்வுவா புத்தகக் கடைக்கு எதிரில், சாலைக்கு மறுபுறம் நடைபெற்றுக்கொண்டிருந்த சாலைப் பராமரிப்பு வேலையிடத்தில் விசுக்கென புகுந்த காற்றொன்று குப்பைகளைச் சுழற்றி வளைத்து அள்ளி எடுத்துக்கொண்டு போய் எங்கும் இறைக்கின்றது. அதன்  புழுதிப் படலம் அடங்கிக்கொண்டிருக்க, டெஸ்ஹெங் அவின்யுவிலிருந்த வானொலி பழுது பார்க்கும் கடையிலிருந்த வானொலியிலிருந்து நான்காவது ஒலிக்கூறு (beep) கேட்டதைத் தொடர்ந்து, இப்போது பிற்பகல் மணி…

மலேசிய எழுத்தாளர்களின் வாழ்க்கை

[2006ஆம் ஆண்டு Nou Hach மாநாட்டில் எழுத்தாளர் கே.எஸ். மணியம்  வழங்கிய சொற்பொழிவு] வணக்கம்! சக எழுத்தாளர்களிடமும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களிடமும் பேசுவதற்கான இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். நான் பேசப்போவதில் உங்களுக்குத் தேவையான சில கருத்துகள் இருக்கும் என்று நம்புகிறேன். தொடக்கமாக, மலேசியாவின் இலக்கியம் குறித்த காட்சியை உங்கள் முன் வைக்கிறேன். இந்த…

“அடையாளத் தேடலில் பல நேர்மறையான அம்சங்களும் சாத்தியமே.” – கே.எஸ்.மணியம்

90களில் கே.எஸ்.மணியம் அவர்களிடம் எடுக்கப்பட்ட இந்த நேர்காணல்  அவரது புனைவுலகம் மட்டுமல்லாது கருத்துலகையும் வாசகனின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய சமூக, அரசியல் அவதானிப்புகளை அவரது சொற்கள் மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாக உள்ளது. தமிழ் வாசகர்களுக்காக மொழிப்பெயர்க்கப்பட்ட இந்த நேர்காணல் வழி அவரது புனைவுலகை மேலும் ஆழமாக உணர முடியும்…

ஒரு கற்பனையின் வழித்தடம் : கே.எஸ். மணியத்துடன் ஓர் உரையாடல்

கே.எஸ். மணியத்தின் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என அனைத்தும்  மலாயா/மலேசியாவின் புலம்பெயர் சமூகம் இதுவரை கடந்துவந்திருக்கும் பாதையையும் இனி செல்ல வேண்டிய இலக்கையும் அதற்கான வழிகளையும் அலுக்காமல் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அனைத்து சமூக உறுப்பினர்களும் தங்களுடைய மரபுவழி அடையாளங்களையும் வாழும் நாட்டின் அடையாளங்களையும் ஒருங்கே அணைத்துக் கொள்வதன்வழி  பன்முகத் தன்மைகொண்ட ஒன்றைச் சமூகமாக உருவெடுக்க முடியும்…

புலி வேட்டை – கே.எஸ்.மணியம்

கிழவன் மரணத்தை எதிர்கொள்ள போராடிக் கொண்டிருந்தான். அவன் எதிர்ப்பார்த்த அமைதியைக் கனவுகள் வந்து தொல்லைபடுத்தி குலைத்தன. அவற்றுள் சில கொடுங்கனவுகளின் கூர்மையான எல்லைவரை கொண்டுபோய் தூக்கத்தை அவனிடமிருந்து பறித்துக் கொண்டிருந்தன. அவனது சிந்தனையைச் சிதைத்துகொண்டேயிருந்த கனவுகள் அவனை விரக்தியாலும் எரிச்சாலாலும் முணுமுணுக்க வைத்தன. “எதைப்பற்றியும் அக்கறையில்லாமல் இருந்தாதான் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும்.” அவன் அப்போது சன்னல்வழி…

அந்தக் கோயில்

நாங்கள் தத்தளிப்பு மிகுந்த பரவசத்திலிருந்தோம். தேனிலவுடன் வரும் எதிர்ப்பார்ப்பு, விடலைக்காதல், மென்மை, வெம்மை ஆகியவற்றுடன் நெகிழ்ந்திருந்தோம். அரை மாதமே விடுமுறை என்றாலும் வங்வங்கும் நானும் பயணத்தைப் பலமுறை திட்டமிட்டிருந்தோம்; பத்து நாட்கள் திருமண விடுப்பு,மேலும் ஒரு வார கூடுதல் வேலை விடுப்பு. திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு. எங்களுக்கு அதைவிடவும் வேறெதுவும் அத்தனை…

மாயமான் – கே.எஸ்.மணியம்

சில வருடங்களுக்கு முன்,  பாசீர் பஞ்சாங்கின் புறநகர்ப்பகுதியில், தாமான் பஹாகியா புதிய வீடமைப்பு திட்டம் உருவானபின் அதுவரையிலும் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழிடங்களைப் பெயர்த்தெடுக்க வேண்டியதாகியது. அத்திட்டத்தில் உருவான நவீன, தனித்த, ஆடம்பர இரட்டைமாடி வீட்டு வரிசைகளின் குடியிருப்பைக் கடந்து, காடும் அதை ஒட்டிய மலை முகடுகளுக்கும் நெருக்கமான, ஓர் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அவர்கள்…