Category: பத்தி

உரைவழி உணர்ந்த உண்மை

ம.நவீன் நவீன இலக்கிய முகாமில் இடம்பெற்ற  ஓர் உரைக்கு என்னுடைய புரிதலை எழுதி தர முடியுமா என வினவினார். நான் மறுத்தேன். திரும்பவும் இரண்டாவது முறையாக மதிய அமர்வுக்குக் கேட்கும் பொழுது, மறுக்க முடியாமல் அரை மனத்தோடு சம்மதித்தேன். சம்மதம் தெரிவிக்கும் பொழுது என்ன தலைப்பு? யார் பேச்சாளர்? என எவ்விவரமும் அறியவில்லை. மதிய உணவு…

சுருங்கிய வாசிப்பில் சுணங்கிய மனங்கள்

வல்லினத்தில் நான் சேர்ந்து உணர்வோடு உலா வந்து வாழ்ந்து சரியான ஓர் ஆண்டு. 31.03.2019 இவ்வாண்டு சிறுகதை பரிசளிப்பு விழா, 12.05.2019  சுனில் கிருண்ஷன் அவர்களின் சந்திப்புக் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டேன். ஞாயிற்றுக்கிழமை எனக்கு வேலை என்பதால் பகுதி நேர வேலையை முடித்து விட்டு, 1.30 மணிக்குள் விமானம் பிடித்து ஜொகூரில் இருந்து நிகழ்ச்சிக்குள்…

தேவதைகளின் குசு

எதேச்சையாக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. தனியார் அலைவரிசையில் பாடல் நிகழ்ச்சி ஒன்று ஒளியேறிக்கொண்டிருந்தது. வாண்டுகள் தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தனர். தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் சில கன்றாவிகளை செய்தனர். அதில் ஒன்று, பெண் தொகுப்பாளினி கீழே குனியும்போது குசு விடும் சத்தத்தை ஒலிக்கச் செய்து அரங்கில் பார்வையாளர்களை சிரிக்க…

சடக்கு வந்த வழி

ஆவணப்படங்களை இயக்கிக்கொண்டிருந்த சமயம் ஒரு பெரும் போதாமையை உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பில் பங்குபெறும் எழுத்தாளர்கள் தங்களுக்கு முந்தைய தலைமுறை ஆளுமைகள் குறித்து கூறும்போது அவ்வாளுமைகளின் படங்கள் கிடைக்காமல் திணறுவோம். ஆவணப்பட செறிவாக்கப்பணியில் அந்தக் குறிப்பிட்ட ஆளுமைகளின் படத்தை இணைக்காமல் மனம் நிறைவு கொள்ளாது. இது ஒரு ஊனமாக மனதில் உறுத்திக்கொண்டிருந்த சமயம்தான் கோ.சாரங்கபாணிக்கும் இதே…

காவிக் கொடியும் கவிதை வரிகளும்

நான் முதன் முதலாக கோலாலம்பூருக்குப் பயணம் செய்தது ஒரு வரலாறு போல் இன்றைக்கும் நினைவுகூறத்தக்கதாக உள்ளது. என் முதல் கோலாலம்பூர் பயணமானது ஏதோ ஒருவகையில் மலேசிய அரசியல் போக்குடனும் சமூக சிந்தனை மாற்றத்துடனும் தொடர்புடையதாக இருப்பது எதிர்பாராதது. நானும் என் அண்ணனும் அடிப்படையில் திராவிடச் சிந்தனை தாக்கத்தால் வளர்ந்தவர்கள். எங்கள் அப்பா தீவிர பெரியார் பற்றாளராகவும்…

வைரத்தின் ஒளிபட்ட சிறு வளைவு: விஷ்ணுபுரம் விருது அனுபவம்

அப்போது ஜெயமோகன் அறிவித்தார். இவ்வாண்டிற்கான விஷ்ணுபுரம் விருதினை சீ.முத்துசாமிக்கு கொடுக்கவுள்ளோம். எனக்கு அது அதிர்ச்சியையும் கூடவே மகிழ்ச்சியையும் கொடுத்தது. அந்தக் கூட்டத்தில் நான் எதிர்ப்பார்த்த சலசலப்பு இருக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே சிலர் அவர்களுக்குள் முகபாவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். என் கண்கள் சீ.முத்துசாமியைத் தேடின. தூரத்தில் அவர் அமர்ந்திருந்தார். யாருக்கோ என்னவோ நடப்பது போல அங்கும் இங்கும்…

தன்னுடன் பேசுதல்

ஆடம்பரத் தேவைகள் அத்தியாவசியத் தேவைகள் என இரு பகுதிகளாக பதில் சொல்லச்சொல்லி பள்ளிகளில் கேட்பார்கள். எது இருந்தாலும் இல்லையென்றாலும் நம்மால் உயிர் வாழ முடிகிறதோ அது ஆடம்பரத் தேவைகள்.  எது இல்லையென்றால் நம்மால் உயிர் வாழ முடியாதோ அது அத்தியாவசிய தேவைகள் என இலகுவாக ஆசிரியர் பாடம் நடத்தியிருந்தார். இப்போதுவரை அந்த எளிய கோட்பாடாக நினைவில்…

மண் விழுந்தது

நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் பொறியியல் மற்றும் பசுமை தொழில்நுட்பப் புலத்தின் அறை எண் E214-இல் வகுப்பு நடத்த இடமளிக்கப்பட்டிருந்தது. இம்முறை அங்கு சர்வதேச மாணவர்களுக்கு மலேசிய வரலாற்றையும் அரசியலையும் போதிக்கும் பாடம். அன்று அதுதான் முதல் வகுப்பு. வகுப்பில் பாடம் போதித்துக் கொண்டிருக்கும்போது மெசெஞ்சரில் தகவலொன்று வந்தது. அதையடுத்து எனக்குப் பாடம் நடத்த மனம்…

நல்ல புழுதியும் நலம்கெட்ட வீணைகளும்

மலேசிய முகநூலர்கள் மத்தியில் அதிகமாக ஒரு காணொளி பகிரப்பட்டது. காரில் இருந்து அக்காணொளியை ஒளிப்பதிவு செய்திருந்தார்கள். தெருவில் நைந்து, கிழிந்து, அழுக்குப் படிந்த ஆடையுடன் மெலிந்த, நீண்ட செம்பட்டை முடியுடன் தளர்ந்திருக்கும் வயோதிகரிடம் காரில் இருந்தபடியே இளைஞர் ஒருவர் ஏதோ விசாரிக்கிறார். “இன்னும் பாட்டுப் பாடறீங்களா ?” “ஆமா பாடிகிட்டுதான் இருக்கேன்…” “ஓ… எங்க பாடறீங்க?”…

வடக்கு நோக்கி பறந்ததொரு மாயப்பறவை

வல்லினம் கலை இலக்கிய விழா முடிந்ததும் வழக்கம் போலவே நான் பரபரப்பானேன். எல்லாம் குறித்த நேரத்தில் ரயிலை பிடிக்க வேண்டுமே என்கிற பரபரப்புதான். இந்த முறை எழுத்தாளர் கோணங்கியையும் உடன் அழைத்துச் செல்வதால் படபடப்பு அதிகம் இருந்தது. இரண்டு நாட்கள் வடக்கு மாநிலங்களை அவருக்குச் சுற்றிக் காட்ட திட்டமிட்டிருந்தோம். ஆகவே நிகழ்ச்சி முடிந்ததும் கோணங்கியிடம் என்னை…

மேஜிக் பையுடன் சுண்ணாம்பு மலை திருடன்!

15.9.2017 – வெள்ளி வழக்கம்போல தயாஜியும் நானும்தான் விமான நிலையத்தில் எழுத்தாளர் கோணங்கிக்காகக் காத்திருந்தோம். முதல் சந்திப்புதான். ஆனால் எளிதாக அடையாளம் காண முடிந்தது. ஐந்து மணிக்குள் சாலை நெரிசலாகும் பகுதிகளைக் கடந்துவிட வேண்டுமென அவசர நல விசாரிப்புகளுடன் காரை அடைந்தோம். தயாஜி காரில் காந்திருந்தார். காரிலேயே ‘வல்லினம் 100’ புத்தகத்தைக் கொடுத்தேன். பொதுவாக ‘வல்லினம்’…

நாரின் மணம் 2 : தோலிருக்க சொளா முழுங்கி

மாமிசத்துண்டுடன் ஆற்றைக் கடந்த நாய், நீரில் நிழலைப்பார்த்துக் குரைத்து மாமிசத்துண்டை இழந்ததோ, சின்னஞ்சிறிய சுண்டெலி சிங்கத்திடம் குறும்பு செய்து மாட்டிக்கொண்டு,  உயிர்ப்பிச்சைக் கேட்டு தப்பிச்சென்றப்பின் சிங்கத்தை வலையிலிருந்து தப்பிக்க வேறொரு சந்தர்ப்பத்தில் உதவியதோ, நண்பர்களாக இருந்த தவளையும் சுண்டெலியும்  குளத்துக்காகச் சண்டையிட்டு இறந்ததால் பருந்துக்கு இறையானதோ கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஈசாப் எழுதிய கதைகள் மூலம்…

எதைக் காவு கொடுப்பேன்

இலக்கியம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம் மலேசிய நவீன இலக்கியம் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் தீவிரத்தன்மையை அடையாமல் இருப்பது எதனால் என்கிற கேள்வி எழாமல் இருப்பதில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு கோணத்தில் இக்கேள்வி அணுகப்படுவது வழக்கம். வாசகர் இல்லாமை, பொருளாதாரம், கல்வித் தகுதி, அரசியல் கெடுபிடிகள், வெகுஜன இலக்கியங்களின் ஆதிக்கம், போலி இலக்கியவாதிகளின் அபத்தங்கள், அரசாங்க இன…

நாரின் மணம் 1: காக்க காக்க கதிர்வேல் காக்க

ஏதோ ஒரு காரணத்தினால் என்னை பாலர் பள்ளியில் இணைக்கவில்லை.  வறுமை ஒரு காரணமாக இருக்கலாம். சித்திதான் (அம்மாவின் தங்கை) எனக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். இரவானால் அம்மா சாமி அறையில் என்னையும் அக்காவையும் அமரவைத்து தேவாரம், திருவாசகம் பாடுவார். ஏழு வயதிலெல்லாம் கந்தர் சஷ்டி கவசமும் சிவபுராணமும் எனக்கு நன்கு மனனம். கந்தர் சஷ்டி கவசம் என்னை…

ஆட்டம்

அது என் தலை தைப்பூசம். முதல் முறையாகச் சுங்கை பட்டாணியில் என் மனைவியின் குடும்பத்தோட தண்ணீர் பந்தலில் நின்றுக்கொண்டிருந்தேன். கல்யாணத்துக்கு முன் தைப்பூசம் வேறு மாதிரி இருக்கும். அப்போதெல்லாம் தைப்பூசம் என்றால் அது ஈப்போவில் தான். வருசா வருசம் தெரிந்த யாராவது ஒருவன் காவடியெடுப்பான். நானும் சிவாவும் முன் கூட்டியே ஒப்பந்தமாவோம். நாங்கள் இருவரும் பயங்கர…