Category: சிறுகதை

‘டை’ அணிந்தவன் கணேசன் இல்லை.

என் கைப்பேசியின் பெயர் பட்டியலைத் திறந்து ‘ G ’ எழுத்தைத் தட்டினால் மூன்று கணேசன்கள் வந்து வரிசை பிடித்து நிற்கின்றனர். முதலாவது கணேசன் என் மகளின் டியூசன் ஆசிரியர். ‘வாவாசான் இன்டெலெக்’ டியூசன் சென்டரை நிர்வகிக்கிறார். இரண்டாவது கணேசன் என் பழைய தோழன். ஆரம்ப பள்ளியில் இருந்து பழக்கமானவன். மூன்றாவது கணேசன் யாரென்று தெரியவில்லை.…

கொசு

நான் ஒரு எம்.எல்.எம் வியாபார ஏஜேண்ட. அதனால் என் காருக்குள் ஒரு எளிய கொசு நுழையக்கூடாது என்றெல்லாம் இல்லைத்தான். யார் காரைத் திறந்து வைத்திருந்தாலும் இந்த எழவெடுத்த கொசு சட்டென நுழைந்துவிடும். நீங்கள் என்னை எங்காவது பார்த்திருக்கக்கூடும். தைப்பிங் நாலு ரோடு பக்கம் எந்த மூலையிலாவது என்னை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். கழுத்துப்பட்டை ஒன்றை இறுக்கமாகக் கட்டிக்…

சிறுகதை : இந்தக் கதைக்கு மூன்று தலைப்புகள்

 1. இது திவ்யாவின் கதை திவ்யா என்றதும், கொஞ்சகாலத்திற்கு முன்புவரை ஊடகங்களிலும் நீதிமன்றம் மற்றும் காவல்துறை வட்டாரங்களிலும், அரசியல் கட்சிகளின் மேடைகளிலும் பரபரப்பாக பேசப்பட்ட திவ்யாதான் என்று நீங்களாக நினைத்துக்கொண்டு, அவள் கதைதான் ஊர் உலகத்துக்கே தெரியுமே என்று படிக்காமல் கடக்கக்கூடும். ஆனால் இது அவளது கதையல்ல அவசரகுடுக்கைகளே. ஏனென்றால் அந்தத் திவ்யாவினுடையது கதையல்ல, நம்…

விண்மீன்களற்ற இரவு

மலாய் மொழிப்பெயர்ப்பு சிறுகதை (மூலம் : ஏ. சமாட் சைட்  |  தமிழில் : சல்மா தினேசுவரி) அன்றைய இரவு, வானத்தில் விண்மீன்களே இல்லை. கரு மேகங்கள் சூழ்ந்திருந்தன. தொட்டு வருடியும் மூர்க்கமாகவும் மோதிச் சென்ற காற்று நிச்சயம் கனத்த மழை பெய்யும் என்பதை அடையாளப்படுத்தியது. பகலின் வெயில் சுளீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. தகிக்கும் வெயிலால்…

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்

*இந்தச் சிறுகதை பொதுமக்களின் / மாணவர்களின் வாசிப்புக்கு அல்ல. உளவியல் அறிந்தவர்கள் மட்டும் இக்கதையை வாசிக்கலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஜீன்ஸிலேயே சிறுநீர் கழித்திருக்கிறேன். அதன் ஈரம்தான் என்னை எழுப்பியிருக்கவேண்டும். இல்லை நான் எழுந்திருக்கவில்லை. முனகுகிறேன். என்னால் அசைய முடியவில்லை. கண்களைக் கட்டியிருக்கிறார்கள். கை கால்களும் கட்டியிருக்கிறது. என்ன இது இப்படி ஒரு வாடை. குமட்டுகிறது. இது…

கடன்

அமைதி நிலவியது. நீள் கல்லிருக்கையில் படுத்ததும் சட்டெனத் தூங்கிப் போனேன். அவ்வப்போது முகத்தை மூடிய சிறு துண்டு நழுவிக் கீழே விழும்போது தன்னிச்சையாக என் இடதுகை அதனை எடுத்து மறுபடியும் முகத்தை மூடிற்று. அசதியில் உடல் படுத்திருந்தாலும் மூளை மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. அதிகாலை நெருங்கியிருக்கும். விசும்பல் சத்தம் கிணற்றடியிலிருந்து கேட்பது போலிருந்தது. விழித்துக்கொண்டேன். கண்ணிமைகளை இலேசாய்த்…

இழப்பு

படுத்தபடியே வயிற்றில் ஒருமுறை பந்தை வைத்து பார்த்தபோது சில்லென இருந்தது. அதிகாலை குளிர்  உடலைச் சிலிர்க்க வைத்தது. அணிந்திருந்த சட்டையைக் கொண்டு வயிறோடு ஒட்டியபடி இருந்த பந்தை மூடி கண்ணாடியில் பார்த்தேன்.  அம்மாவின் வயிறும் இரண்டு மாதங்களுக்கு முன்புவரை இப்படித்தான் இருந்தது. ஆனால் அவள் அப்போதெல்லாம் என்னைப்போல சுறுசுறுப்பாக இல்லை. அவசரத்துக்கு எழ மாட்டாள். தரையில்…

முத்துசாமி செட்டியாரும் ஜப்பான்காரியின் ஆவியும்

எதிரிலுள்ள கார்கள்கூட தெரியாமல்போன இருள் கவிழ்ந்த ஒரு மழைப்பொழுது. நீண்ட வாகன நெரிசல். அம்மோய் கடைக்கு உடனே சென்று அமலாவை ஏற்ற வேண்டும் என்கிற தவிப்பில் மணியம் கால்கள் நடுங்க காருக்குள் இருந்தார். அவள் பிரத்தியேக வகுப்பு முடிந்து இந்நேரம் மழைக்கு ஒதுங்கி அம்மோய் கடையோரம் நின்று கொண்டிருப்பாள். அமலா இந்த வருடம் ஆறாம் ஆண்டு.…

சண்டை

வியர்வை வழிந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு பெண் வெள்ளை நிற கராத்தே உடை அணிந்து குறி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது. அவளின் திடமான கரங்களும், தோளும் அவளை உறுதியுடையவளாகக் காட்டுகிறது என்றே நினைக்கின்றேன்.மேலும்,அந்தக் கராத்தே உடையில் அவள் இன்னும் கட்டுமஸ்தாகவே காட்சியளித்தாள். அந்த பெரிய உருவத்துடன் கராத்தே சண்டைப்போட பரிதாபமாக…

சாமி குத்தம்

‘நம்ம கோயில இடிச்சிட்டாங்க…’ வேகமாக ஓடிவந்த முருகன் இடுப்புக்குக் கீழாக இறங்கும் டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் கோயில் இருக்கும் திசையைக் காட்டி சொன்னபோது கூடவே ஓடிவந்த ஜிம்மியும் வால் வெட்டப்பட்டதால் தன் ஆசன வாயை அசைத்து ‘அது உண்மைதான்’ என்றது. “டேய் … என்னடா சொல்ற … நம்ம முனியாண்டி கோயிலையா…” ஆறுமுகத்திற்கு…

தேர்தலும் பாட்டியின் கலர் துண்டும்

பேருந்து பதற்றமான ஓர் இருளுக்குள் நுழைந்து மீண்டும் சாலை விளக்கின் வரிசை வெளிச்சத்திற்குள் வந்து சேர்ந்தது. எக்கிப் பார்த்தேன். அதுவொரு சுரங்கம். ஒவ்வொரு வருடமும் விடுமுறை காலங்களில் மட்டும் வந்துவிட்டுப் போகும் ஓர் அந்நியமான நகரம். அம்மாவிற்கு ஒவ்வாத இரைச்சல்கள். நாள் முழுக்க புலம்பியபடியே வருவார். பாட்டி இல்லாத ஒரு நகரம். தேர்தல் காலம் நெருங்கிவிட்டால்…