வல்லினம் கலை இலக்கிய விழா 9 : ஒரு பார்வை

கடந்த 17.9.2017 (ஞாயிறு) கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் வல்லினம் குழுவினரின் வருடாந்திர நிகழ்ச்சியான கலை இலக்கிய விழா ஒன்பதாவது ஆண்டாக நடைபெற்றது. சரியாகப் பிற்பகல் 2.00க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 280க்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கென தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரிந்த எழுத்தாளர் கோணங்கியுடன் சிங்கையிலிருந்தும் பல இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.…

வல்லினம் 100- மலேசிய சிங்கை எழுத்தியக்கத்தின் நவீனக் குரல்

வல்லினம் 100 நிகழ்ச்சிக்குப் போவதற்குத் தயாராகத்தான் இருந்தேன்.  ரயில் டிக்கெட்டை இன்னும் ஒரு வாரம் கழித்து எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். அதற்கு முன்னாலேயே  வல்லின நிகழ்ச்சி தேதியிலேயே என் நெருங்கிய உறவுப்பையனுக்குப் பதிவுத் திருமணம்  என் திட்டத்தைப் பாழாக்கிவிட்டது. ஒரு இலக்கிய மனம் அதனைத்  தவிர்த்திருக்கலாம். ஆனால் வீட்டில் பெரிய மனுஷன் தகுதி இது போன்ற…

வல்லினம் 100 சிறுகதைகள் – ஒரு பார்வை

“எனது கதைகள் விமர்சகர்களின் அளவுகோல்களுக்குள் அடங்காதவை. என் கதைகளின் அருகில் அளவுகோல்களை வைப்பதன் மூலம், அவர்கள் என் கதையை அளக்கவில்லை. அவர்களின் அளவுகோல்களை அளந்துகொள்கிறார்கள்.” சொன்னது புதுமைப்பித்தன். அவர் சொன்னது என்னுள் உண்டாக்கிய தயக்கத்துடன் வல்லினம் 100 தொகுப்பில் இடம்பெற்ற 11 சிறுகதைகளைப் பற்றி எழுதுகிறேன். வாழ்வில் பல தருணங்களை, பல விதமான மக்களை, இடங்களை,…

வல்லினம் 100 விமர்சனக் கட்டுரை – ஒரு பார்வை

வல்லினம் 100′ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆறு விமர்சனக் கட்டுரைகளுள் சீ.முத்துசாமியின் ‘இருளுள் அலையும் குரல்கள்’ குறுநாவல்கள் தொகுப்பைக் குறித்து நான் எழுதியுள்ள கட்டுரையும் ஒன்று. அக்கட்டுரையைத் தவிர்த்து மற்ற ஐந்து விமர்சனக் கட்டுரைகளைக் குறித்து என் கருத்துகளை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன். முதலாவது, முத்தம்மாள் பழனிசாமியின் ‘நாடு விட்டு நாடு வந்து‘ நூல் குறித்த அழகுநிலாவின் விமர்சனக் கட்டுரை. தற்காலத்தில்…

வல்லினம் 100 நேர்காணல்கள் – ஒரு பார்வை

ஒரு விழாவை இத்தனை ஒழுங்கோடு ஒரு குழப்பமும் இல்லாமல் நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.இதற்கான ஏற்பாடுகளை நான்கைந்து மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன்.மூன்று மாதமிருக்கும், மலேசிய எண்ணிலிருந்து அழைப்பு. “நான் நவீன் பேசறேன்” என்றார். வல்லினம் நூறாவது இதழ் வரப்போகிறது. சிறப்பிதழாக கொண்டு வரலாம் என்று நினைக்கிறோம். சிங்கப்பூரிலிருந்து உங்களது பங்களிப்பாக படைப்புகள் அனுப்புங்கள்…

வல்லினம் 100 ஆய்வுக்கட்டுரைகள் – ஒரு பார்வை

‘சொல் புதிது சுவை புதிது’ வல்லினம் 100-இல் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்தும்சமூகத்தில் மிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய கூறுகள். எங்கும் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் உள்ளதை உள்ளபடியே உணர்ச்சி மிகையில்லாமல் பதிவாக்கப்பட்டிருப்பது கட்டுரைகளின் பலம். மொழி, இனம், இலக்கியம், இதழியல், கல்வி, அரசியல் என பல்துறை சார்ந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்துமே…

‘வல்லினம்’ தமிழ்ச் சொல்லினம்

எனது முதல் வெளிநாட்டுப் பயணமும் மலேசியச் செலவும் 2010 ஜனவரி  இருபத்தெட்டாம் நாள் அதிகாலை 12.05க்குச் சென்னையில் துவங்கியது. ஜெட் ஏர்வேஸ். திரும்பி நான் சென்னையில் இறங்கியது பிப்ரவரி  எட்டாம் நாள் காலை ஆறு மணிக்கு. இத்தனை துல்லியமாக ஏழாண்டுக்குப் பிறகும் நினைவிருக்குமா என்று கேட்பீர்களேயானால், எல்லாம் கடவுசீட்டில் இடப்பட்ட முத்திரிகைகள் காரணம். மொத்தம் பன்னிரெண்டு…

வல்லினம் 100 : சர்ச்சைகள், கேள்விகள், விவாதங்கள்

தமிழ் நூல்களைப் பதிப்பித்தல், அதனை விற்பனைக்குக் கொண்டு வருதல் போன்றவை மலேசிய இலக்கியச் சூழலில் ஆபத்தான காரியங்களாகவே பலகாலமாக வர்ணிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் ஒருவர் பெரும் நஷ்டங்களைச் சந்திக்க நேரும் எனவும் அதனை சரிகட்ட அரசியல்வாதிகள் அல்லது தனவந்தர்களை முன்னிலைப்படுத்துவதன் மூலமாகவே தமிழ் நூல் பதிப்புத்துறையில் இயங்குபவர்களும் எழுத்தாளர்களும் காக்கப்பட முடியும் எனவும்…

நூறாவது வல்லினத்தில்…

2007இல் வல்லினம் அச்சு இதழ் தொடங்கியது முதலே அதை நிறுத்தப்போகும் தினம் குறித்த பேச்சும் தொடங்கிவிட்டது. அதற்கு முன் தமிழகத்தில் சிற்றிதழ்கள் தோன்றுவதும் மறைவதும் சடங்கான ஒன்றாக இருந்ததால் அதன் நீட்சியில் வல்லினத்தின் ஆயுள் கால நிறைவு குறித்து ஆர்வமாகவே காத்திருந்தோம். நிதானம் என்ற பெயரில் சோம்பேறித்தனத்தையும், புத்திசாலித்தனம் எனும் அர்த்தத்தில் பின் வாங்குதலையும், இலக்கியவாதியின்…

இலக்கியத்தின் பல்லும் நகமும்

இரண்டாயிரத்தோடு சிற்றிதழ்களுக்கான வரலாற்றுத்தேவை முடிந்துவிட்டது என்பது என்னுடைய மனப்பதிவு. சிற்றிதழ்கள் என்பவை ஊடகம் மறுக்கப்பட்ட தரப்புகள் தங்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் அச்சு ஊடகம். அச்சு என்பது செலவேறிய ஒன்று. விநியோகம் அதைவிடச் செலவானது. அந்த முதலீட்டை நிகழ்த்த வாய்ப்பு கொண்ட தரப்புகளுக்கே சிந்தனை, பண்பாட்டுச்சூழலில் குரல் இருந்தது. அது எப்போதும் அரசியல், வணிக அதிகாரத்திற்கு ஆதரவான குரல்தான்.…

தான்தோன்றி

பத்து வருடங்களுக்கு முந்தைய ஓர் இரவில் இலண்டனிலிருந்து தொலைபேசியில் அழைத்துத் தன்னை அறிமுகப்படுத்திக்ககொண்ட நவீன், மறுநாள் காலை விமானத்தில் என்னைச் சந்திப்பதற்காக பிரான்ஸ் வருவதாகச் சொன்னார். மலேசியாவில் ‘வல்லினம்’ என ஓர் இதழைத்  நடத்துவதாகவும் சொன்னார். அதுவரை வல்லினம் எனக்கு அறிமுகமில்லை. அதுவரை மலேசியா இலக்கிய உலகோடு எனக்கு எந்தத் தொடர்பும் இருந்ததுமில்லை. வாலிபக் கரும்புலி…

மனஊக்கமும் செயலூக்கமும்

‘பறை’ என்ற ஆய்விதழின் மூலம் ‘வல்லினம்’ என்ற அமைப்பை 2014ல் அறிந்தேன். இதழின் உள்ளடக்கம் முக்கியமானதாக தோன்றியது. அவ்விதழுடன் மாணவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட ‘யாழ்’ என்ற ஓர் இதழும் இலவசமாக இணைக்கப்பட்டிருந்தது. ஏன் தமிழ்நாட்டில் இதுபோன்ற முயற்சிகள் வரவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. தமிழ்நாட்டிலுள்ளவர்கள் கல்வி குறித்து வைத்திருக்கும் கற்பிதம் ஆபத்தானது. மலேசியாவிலுள்ள இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், கல்வி…

வல்லினம்: காத்திரமும் வெகுஜனத்தன்மையும்

வல்லினம் நூறாவது இதழ் 472 பக்கங்களில் வெளிவருகிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சிறு பத்திரிகைக்கு இது ஒரு மிகப் பெரிய சாதனைதான். தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் முக்கிய தடம் பத்தித்த முதல் சிறு பத்திரிகை என இலக்கிய வரலாறு எழுதுபவர்களால் கணிக்கப்படும் எங்களின் ‘நிறப்பிரிகை’ சுமார் நான்காண்டுகளில் மொத்தம் 12 இதழ்கள்தான் வெளிவந்தன. 2007-ல் தொடங்கப்பட்ட…

வல்லினம்: இன்றும் நாளையும்

வல்லினம் நூறாவது இதழ் வெளிவருவது கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வுதான். மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு உலகத் தமிழர் மத்தியில் ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த இதழ் அது. பத்து ஆண்டுகளுக்கு முன் வல்லினம் முதலாவது இதழ் வெளிவந்திருந்த சமயம் நான் மலேசியாவில் இருந்தேன். 2007 ஜுலை முதலாம் திகதிமுதல் ஓராண்டு காலத்துக்கு மலாயாப் பல்கலைக் கழகத்தின்…

வல்லினங்களின் மெல்லிதயம்

இப்போது நான் வசிப்பது இடைகால் என்னும் கிராமம். இது தனிமையும்  அமைதியுமான அழகிய ஒன்று. ஒரு வகையில், வாசிப்பதற்கும் எழுதுவதற்கும்  அது மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் இங்கே இலக்கியம் பேசவோ படித்ததைப் பகிர்ந்து கொள்ளவோ நண்பர்கள் கிடையாது. அதனாலேயே இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு  வெளியூர் சென்று  விட்டு ஊர் திரும்பும் போது, எதையோ இழந்தது மாதிரி…

மலேசிய தமிழ்மரபின் ஒற்றை அடையாளம்

நான் இரண்டுமுறை மலேசியாவுக்கும் – ஒருமுறை சிங்கப்பூரில் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டதன் பேரிலும் இரண்டாம் முறை நவீனும் நண்பர்களும் அமைப்பியல் பற்றிப் பேசக் கேட்டுக்கொண்டதன் பேரிலும் – சென்று முடிந்த அளவு இலக்கியம் மலேசியாவில் உருவாக்கம்பெறும் முறை, மலேசிய தமிழர்களின் இன்றைய வாழ்வுமுறை போன்றவற்றைக் கிரகித்துக் கொண்டேன். ஓரளவு மலேசியத் தமிழர்கள் பற்றிய அமெரிக்கப் பேராசிரியர் ஆண்ட்ரு…

மலேசிய இலக்கிய வரலாற்றில் வல்லினம்

கருவில் உதித்ததில் இருந்து வல்லினத்தை நான் பார்த்து வருகின்றேன். அதன் வளர்ச்சி மிக்க மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வல்லினம் குறித்து எப்போது பேசினாலும் எனக்குள் ஒரு நிறைவும் சந்தோஷமும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் தெரிகிறது. நானும் கடந்த 40 ஆண்டுகளாக இந்த நாட்டில் இலக்கியம் குறித்து பேசிவருகிறேன். நான் பார்த்துப்பேசி பழகக்கூடிய மனிதர்கள் எல்லாம்…