இலக்கியம் நடந்து சென்ற பாதையில்தான் வாழ்க்கை இருக்கிறது

புதுச்சேரியில் பிறந்த ந.பாலபாஸ்கரன், சிறுவயதிலேயே பினாங்கு வந்து உயர்நிலைப் படிப்பை மலேசியாவில் முடித்தார். பின்னர் தமிழகத்தில் ஓராண்டு படித்துவிட்டு, 1963ல் கோலாலம்பூர் ரேடியோ மலாயாவில்  வேலைக்குச் சேர்ந்தார். மலாயாப் பல்கலைக்கழத்தில் பொருளியலில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து அதை முடிக்கவில்லை.பின்னர் மலாயாப் பல்கலையின் இந்திய இயல் புலத்தில் பி.ஏ.ஹானர்ஸ், எம்.ஏ கல்வியை முடித்தார். ‘மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள்’…

மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள்-1

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் நாளிதழ்களின் பங்களிப்பு முக்கியமானது. சிறுபான்மை இனமான இந்தியர்களின் எழுச்சிக்கும் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் நாளிதழ்களே ஒவ்வொரு காலத்திலும் பெரும் பங்காற்றியுள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக தமிழ்ப்பத்திரிகையை இயக்கியவர்கள் தமிழ் நாட்டிலிருந்து மலாயாவுக்கு வந்திருந்த படித்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இந்தியாவில் இருக்கும்போது பத்திரிகைத் துறையிலும் அரசியல் இயக்கங்களிலும் அனுபவம் பெற்றவர்களாக இருந்ததால்…

குண்டர் கும்பல் கலாச்சாரமும் தமிழ்ச் சமூக மெளனமும்

முன்னுரை மலேசியத் தமிழ்ச்சமூகம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் அவலங்களையும் சீர்கேடுகளையும், அதனால் ஏற்படும் வீழ்ச்சியையும் இந்த இயற்பியல்  விதியைச்சார்ந்தே ஒப்பிட முடிகிறது. அறிவியல், பொருளாதாரம், கல்வி, இலக்கியம் என எல்லாவற்றிலும் முன்னணி வகித்த தமிழர்களின் நிலையை இன்று  ஒரு வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாகத்தான் கணிக்க முடிகிறது. இந்த மாற்றத்தைச் சங்கத்தமிழ் மரபிலிருந்தெல்லாம் கணக்கெடுக்க வேண்டியதில்லை. கடந்த 200…

கா.பாக்கியம் முத்து: புனித பிம்பங்களின் முன் மண்டியிடும் பெண்ணியம்

வடக்கில் இருந்து மிகத் தீவிரமாக எழுதியதோடல்லாமல் இலக்கிய இயக்கங்களிலும் அதிக கவனம் செலுத்தியவர் க.பாக்கியம் முத்து. பெண்ணியக் கருத்துக்களை கதைகளில் மட்டும் முன்வைக்காமல் கலந்துரையாடல்களிலும் பேச்சுகளிலும் துணிச்சலாக முன்வைத்து அவ்வப்போது பல தரப்பு விமர்சனங்களை எதிர்கொண்டவர் இவர். தன் படைப்புகள் பற்றி இவர் “என்னுடைய கதைகள் பெரும்பாலும் பெண்ணியம் சார்ந்தே எழுதப்பட்டது. பெண்களின் அவலநிலை என்…

ஆங்கில மறுவுருவாக்கத்தில் மலேசியத் தமிழ்ப் படைப்புகள்

ஒரு பனுவல் அதன் மூல மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றல் ஆகும்போது அப்பனுவல் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இம்மொழியாக்கத்தில், மொழிபெயர்ப்பு (Translation) என்றொரு வகையும் மறுவுருவாக்கம் (Trancreation) என்றொரு வகையும் உள்ளன. இன்றைய மொழியாக்கத்தில் கதை, கவிதை, நாடகம் போன்ற இலக்கிய மொழியாக்கம் குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது. இலக்கியம் அல்லா மற்ற பனுவல்களின் மொழியாக்கம்தான் அதிக அளவில்…

கனவு

“கனவ சொல்லவா சார்?” “ம்…சொல்லுமா.” “அம்மாவ பாக்கப்போறேன். அவங்க கால புடிச்சி அழறேன். அம்மா வந்துருமான்னு கெஞ்சிறேன். அப்போ மழ பேஞ்சிக்கிட்டு இருக்கு. காத்து வேகமா அடிக்குது. அம்மாவும் என்னைய கட்டிப்புடிச்சிக்கிட்டு அழறாங்க. அப்ப அந்த ஆளு வருது. அம்மாகிட்டேருந்து என்னைய புடிச்சி இழுக்குது. ஒரு அறையில போயி அடைச்சி வைக்குது. அம்மாவ போயி அடிக்குது.…

காவிக் கொடியும் கவிதை வரிகளும்

நான் முதன் முதலாக கோலாலம்பூருக்குப் பயணம் செய்தது ஒரு வரலாறு போல் இன்றைக்கும் நினைவுகூறத்தக்கதாக உள்ளது. என் முதல் கோலாலம்பூர் பயணமானது ஏதோ ஒருவகையில் மலேசிய அரசியல் போக்குடனும் சமூக சிந்தனை மாற்றத்துடனும் தொடர்புடையதாக இருப்பது எதிர்பாராதது. நானும் என் அண்ணனும் அடிப்படையில் திராவிடச் சிந்தனை தாக்கத்தால் வளர்ந்தவர்கள். எங்கள் அப்பா தீவிர பெரியார் பற்றாளராகவும்…

வைரத்தின் ஒளிபட்ட சிறு வளைவு: விஷ்ணுபுரம் விருது அனுபவம்

அப்போது ஜெயமோகன் அறிவித்தார். இவ்வாண்டிற்கான விஷ்ணுபுரம் விருதினை சீ.முத்துசாமிக்கு கொடுக்கவுள்ளோம். எனக்கு அது அதிர்ச்சியையும் கூடவே மகிழ்ச்சியையும் கொடுத்தது. அந்தக் கூட்டத்தில் நான் எதிர்ப்பார்த்த சலசலப்பு இருக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே சிலர் அவர்களுக்குள் முகபாவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். என் கண்கள் சீ.முத்துசாமியைத் தேடின. தூரத்தில் அவர் அமர்ந்திருந்தார். யாருக்கோ என்னவோ நடப்பது போல அங்கும் இங்கும்…

சரவாக் : கதைகளால் நிரம்பிய காற்றின் நிலம்

சரவாக். என்னை எனக்கு அறிமுகப்படுத்திய மாநிலம். இதை நான் மாநிலம் என குறிப்பிடுவதை விட இனம், மொழி, மதம், சீதோசன சூழல் என மாறுப்பட்ட இந்த நிலத்தை நாடு என்று சொல்வதுதான் சரியாகப் பொருந்தும். படிக்கும் காலங்களில் பாடப்புத்தகத்தில் சரவாக் பற்றி படித்ததோடு சரி. பின்னர் அதைப்பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. பல்கலைக்கழகத்தில் என்னோடு வேதியல் வகுப்பில்…

ஆணொருவன் அழுகிறான்

அலாவுதின் விளக்கில் அடைபட்டிருக்கும் பூதமொன்று அவனது அழுகை துளியின் சிறு துகள் பட்டு தூக்கம் கலைந்தது இது சாத்தியமே ஆகக்கூடாதென அசரீகள் முழுக்க பெண் குரல்களால் ஒலிக்கத்தொடங்கின   ஆயிரத்து இரண்டாவது நாளுக்கான கதையை அரேபியர்கள் தேடிப்போகலானார்கள் அதிலவன் தனது மார்புக்கூண்டிலிருந்து இதயத்தை கழற்றி அதற்கு தங்க முலாம் பூசியதன் தகுதியை உயர்த்திக்கொண்டிருந்தான் விபரம் தெரிந்தவிட்ட…

வல்லினத்தின் குறுநாவல் பதிப்புத்திட்டம் நாள் நீட்டிப்பு

மலேசிய நவீன இலக்கிய வளர்ச்சிக்குத் தனது பங்களிப்பைத் தொடர்ந்து ஆற்றிவரும் வல்லினம் இவ்வருடம் குறுநாவல் பதிப்புத்திட்டத்தில் காலக்கேடு 28 பிப்ரவரி 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இத்திட்டத்தின் மூலம்: பதிப்பிக்கப்பட்ட குறுநாவல்கள் உலகம் முழுதும் உள்ள தமிழ் வாசகர்கள் மத்தியில் சென்று சேரும். நூலாக்கப்பட்ட குறுநாவல்களை ஒட்டிய தொடர் கலந்துரையாடல்கள் நாடு முழுவதும்…

விஷ்ணுபுரம் விருது 2017

2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது. கோவையில் டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது. 16 ஆம்தேதி காலை ஒன்பது மணிக்குச் சந்திப்புகள் தொடங்கும். இரவு பதினொரு மணிவரை எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் நிகழும். 17 ஆம்தேதி காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கி…

சீ.முத்துசாமி : ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்.

யு.பி தோட்டத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் பெரியாற்றின் மேல் பரப்பில் விரிந்திருக்கும் மரக்கிளையில் இருந்து குதித்து, எல்லா சிறுவர்களும் ‘சொரப்பான்’ பாய்ந்துகொண்டிருக்க கரை ஓரமாக நீந்தியபடியே பாய்ந்த வேகத்தில் தன் நண்பர்கள் ஆற்றின் ஆழம் சென்று மீள்வதை  ரசித்துக்கொண்டிருந்த சிறுவன்தான் முத்துசாமி. ஆற்றில் ஆழ நீந்துவதில் பயம் இருந்தாலும் அதில் கால்களை நனைக்காமல் அவரால் இருக்க முடிவதில்லை.…

தழலின் சமரசத்தில் தணிந்திருக்கும் காடு

மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் ‘கறாரான இலக்கிய விமர்சனம்’, ‘தீவிர இலக்கியம்’ ஒரு எல்லைக்கு மேல் வளராமல் போனதற்கு இதுவரையில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் ‘இந்நாட்டில் எங்களுக்கு எழுத்து சுதந்திரம் இல்லை,’ என்று எழும் குரல்களே அவற்றில் மேலதிகமானவை. இலக்கியம் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக எழுத்து துறைகள், கலைத்துறைகள், ஊடகத்துறை என கருத்து வெளிபாட்டை முன்வைக்கும்…

தன்னுடன் பேசுதல்

ஆடம்பரத் தேவைகள் அத்தியாவசியத் தேவைகள் என இரு பகுதிகளாக பதில் சொல்லச்சொல்லி பள்ளிகளில் கேட்பார்கள். எது இருந்தாலும் இல்லையென்றாலும் நம்மால் உயிர் வாழ முடிகிறதோ அது ஆடம்பரத் தேவைகள்.  எது இல்லையென்றால் நம்மால் உயிர் வாழ முடியாதோ அது அத்தியாவசிய தேவைகள் என இலகுவாக ஆசிரியர் பாடம் நடத்தியிருந்தார். இப்போதுவரை அந்த எளிய கோட்பாடாக நினைவில்…

மலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள் (இறுதிப் பகுதி)

கே. பாலமுருகன். (2013). இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள். மலேசியா: வல்லினம் பதிப்பகம். இத்தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள். அவற்றில் குறிப்பிடத்தக்க சிறுகதை, ‘தங்கவேலுவின் 10-ஆம் எண் மலக்கூடம்’, ‘இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள்’ மற்றும் ‘பறையர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீடு’ கதைகள்தான். மற்ற சிறுகதைகள் முன்கூறியபடி விரிவாகப் பேசவேண்டிய தேவையில்லாத கதைகள். தொகுப்பின் முதல் கதையான ‘தங்கவேலுவின்…

மண் விழுந்தது

நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் பொறியியல் மற்றும் பசுமை தொழில்நுட்பப் புலத்தின் அறை எண் E214-இல் வகுப்பு நடத்த இடமளிக்கப்பட்டிருந்தது. இம்முறை அங்கு சர்வதேச மாணவர்களுக்கு மலேசிய வரலாற்றையும் அரசியலையும் போதிக்கும் பாடம். அன்று அதுதான் முதல் வகுப்பு. வகுப்பில் பாடம் போதித்துக் கொண்டிருக்கும்போது மெசெஞ்சரில் தகவலொன்று வந்தது. அதையடுத்து எனக்குப் பாடம் நடத்த மனம்…