புனிதத்தை நகல் எடுக்கும் பாவையின் கதைகள்

ந.மகேஸ்வரி கதைகள் எழுதிய அதே காலகட்டத்தில் வடக்கில் இருந்து படைப்புகளை தந்துகொண்டிருந்தவர் பாவை. இவரின் சிறுகதை தொகுப்பு 1986-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஞானப்பூக்கள்’. இந்நூலை தனி ஒருவராக வெளியிட அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை முன்னுரையில் வாசிக்கும்போது பிரமிப்பாகத்தான் உள்ளது. இத்தொகுப்பில் உள்ள  12 சிறுகதைகளும் 1972 முதல் 1986 வரை அச்சு ஊடகங்களில் வெளிவந்தவை என்பதோடு …

ஆபீசிலிருந்து  தீம்பாருக்குள் நுழைந்து செம்மண் சாலையை அடைந்து, அரக்கப் பறக்க தார் சடக்குக்கு ஓடிவந்து சேர்வதற்குள்ளாகவே பத்து மணி பஸ் கண் பார்க்கக் கடந்து போய்க்கொண்டிருந்தது. எப்படியாவது நிறுத்திடவேண்டும் என்ற பதற்றத்தோடு கையசைத்து  ஓடி வந்தும்  பஸ் டிரைவர் சட்டை செய்யாமல் போய்விட்டிருந்தான். தன் கண்முன்னால் கடக்கும் பஸ்ஸை கரித்துக்கொட்டினான்  வேலைய்யா. தன்னை ஒரு புழுவென…

சக்கரம் சுழலும்

டான்ஶ்ரீ என்னைச் சந்திக்க குவாலா கிராய்க்கு வரும்படி அழைத்திருந்தார். அவருடைய தனி எலிகப்டரில் வந்து அன்றே திரும்பிவிடலாம் என்றார். நான் அதை அன்போடு மறுத்து நானே காரில் புறப்பட்டு வருவதாகச் சொன்னேன். அவர் தயங்கி, வேண்டுமானால் காரும் டிரைவரும் ஏற்பாடு செய்வதாக வற்புறுத்தியபோதும் நான் தனியாகவே புறப்பட்டு வருவதாகச் சொன்னேன். அவர் தயக்கத்தோடு சம்மதித்தார். பிற்பகல்…

லெஸ்பியன் கடவுள்

ஒவ்வொரு மதமும் தங்களின் கடவுளைத், தங்களின் மொழி வழியாகவும்  கலாச்சாரத்தின் வழியாகவும், நம்பிக்கை வழியாகவும் தொன்று தொட்டு கட்டிக்காத்து வருகிறது. இப்படி தாங்கள் காட்டும் கடவுளே உண்மையானவர் என்றும் தங்களுடைய வேதங்களே இறைவனின் வார்த்தைகள் என்றும் பிரச்சாரம் செய்தும் வருகின்றது. இவ்வுலகம் பாவம் நிறைந்ததாகவும், இந்தப்பாவம் நிறைந்த உலகத்தைக்காப்பற்ற மதபோதகர்களால் இயலும் என்றும் அடிப்படைவாதம் நம்புகிறது.…

உண்மைகளை மறைக்க என் புனைவுகளை நான் அனுமதிப்பதில்லை!

கேள்வி: உங்கள் தொடக்க கால வாழ்வைப் பற்றி கூறுங்கள். அ.ரெங்கசாமி: தந்தை தாயார் எல்லாம் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்கள் 1927-ல் இந்நாட்டிற்கு வந்தார்கள். அப்போது பெற்றோருடன் அண்ணனும் அக்காவும் வந்திருந்தார்கள். 1928இல் இன்னொரு அண்ணன் இங்கு பிறந்தார். 1930-ல் நான் பிறந்தேன். அதன் பிறகு என் தங்கை பிறந்தாள்.அப்பாவும் அம்மாவும் பால்மரம் சீவும் தொழிலாளிகளாக…

நழுவிக் கொண்டே இருக்கும் ந.மகேஸ்வரியின் கதைகள்

மலேசிய இலக்கியம் உருப்பெற்று வளர்ந்த அதே தடத்தில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சியும் அமைந்துள்ளதை நாம் அறிய முடிகிறது. மேற்கண்ட இலக்கிய ஈடுபாடும் வளர்ச்சியும் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மேலும் வளர்ந்தது. 1960கள் மலேசிய நவீன இலக்கியத்தில் நல்ல வளர்ச்சி படிகளைப் பதிவு செய்துள்ளது. பொதுவாகவே இன்று நாட்டில் சிறந்த முன்னோடி இலக்கியவாதிகளாக அறியப்படுவோர்…

மலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள் (முதல் பகுதி)

1990-களுக்குப் பிறகான உலகமயமாக்கல், நவகாலனியவாத எதிர்ப்பு சிந்தனைகள், அதைத்தொடர்ந்து உருவான நவீனத்துவம், 2000-க்குப் பிறகான, அமைப்புகளை எதிர்க்கும் பின்நவீனத்துவச் சிந்தனை போன்ற அடுத்தடுத்த சீரான நகர்வுகளைத் தமிழ்நாட்டு இலக்கியச் சூழலைப்போல மலேசிய இலக்கியத்தில் காணமுடியாது. இங்குள்ள நாளிதழ்களில் பிரசுரமாகும் பெரும்பகுதிப் படைப்புகளை வெகுஜன வாசிப்புக்கான படைப்புகளின்கீழ் வகைப்படுத்திவிட முடியும். அப்படைப்புகள் பொதுவாக நல்லறம் சார்ந்த அறிவுரைகள்,…

தோங் ஜியாவ் ஸோங் : மலேசிய சீனர்களின் வரலாற்றின் ஊடே ஓர் அறிமுகம்

மலேசியாவில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வரும் ‘தோங் ஜியாவ் ஸோங்’ என்பது மலேசிய சீனக் கல்வி இயக்கமாகும். இன்றும் இந்நாட்டில் நாம் தொடர்ந்து தாய்மொழிக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை நிலைநிறுத்திய அமைப்பு இதுவாகும். மலேசிய அரசியல் வரலாற்றில் மட்டுமின்றி மலேசியக் கல்வி வரலாற்றிலும் மிக முக்கியமானதோர் இயக்கமாக தோங் ஜியாவ் ஸோங் இயக்கம்…

நாகம்

பக்கிரி உள்ளே நுழைந்ததும் வீட்டிலிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். வந்து ஒருமாதம் ஆகவில்லை. அதற்குள் சாமியின் மனதில் இடம்பிடித்துவிட்ட பக்கிரியின்மேல் அவர்களுக்குக் கோபமும் பொறாமையும் ஏற்பட்டது. வெற்றிலை சிவப்பு உதடுவரை ஒழுகியிருந்தது. கால்களில் பலமிழந்தவனைப்போல சடாரென அமர்ந்தான். “நாகம் செத்துப்போனத சொல்லிட்டியா?” என்று கேட்கும்போது சாமியின் கைகள் படமெடுப்பதுபோல விரிந்து பின்னர் சுரத்தில்லாமல் விழுந்தது.…

மலேசியாவும் பழங்குடி கதைகளும்

“இந்தக் கதைகள்தான் எம்மக்களின் நூலகம் ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு முக்கியமான அல்லது ஈர்பான நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனதில் வளப்பமாகிய வரலாற்றை இலைகளின்மீது நினைவகமாக்கியுள்ளது. கதைகள் எங்கள் வாழ்க்கை, அவை இன்னும் வாழ்கின்றன.”   கதைக்கூறல் எனும் வாய்வழி மரபை உணர்த்தும் இவ்வாசகம், உலகில் வாழும் ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தின் ஒற்றைக் குரலாக வெளிபடுகிறது.…

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் : மழையாகாத நீராவி!

மலேசிய, சிங்கப்பூர் பெண் படைப்பாளிகளில் மிக அதிகமாக தொடர்ந்து படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபடுபவர் ஜெயந்தி சங்கர். மொழிபெயர்ப்புத் துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. அவரின் ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ நூலை முன்மாதிரியாகக்கொண்டு மலேசியாவில் ஒரு நூல் தொகுக்கப்பட வேண்டும் என நண்பர்களிடம் பரிந்துரைத்ததுண்டு. ஜெயமோகனின் ‘பொதுவழியில் பெரும்சலிப்பு’ எனும் அவரது சிறுகதைகள் குறித்த விமர்சனத்திற்குப்பின் தனது முக்கியமான…

நல்ல புழுதியும் நலம்கெட்ட வீணைகளும்

மலேசிய முகநூலர்கள் மத்தியில் அதிகமாக ஒரு காணொளி பகிரப்பட்டது. காரில் இருந்து அக்காணொளியை ஒளிப்பதிவு செய்திருந்தார்கள். தெருவில் நைந்து, கிழிந்து, அழுக்குப் படிந்த ஆடையுடன் மெலிந்த, நீண்ட செம்பட்டை முடியுடன் தளர்ந்திருக்கும் வயோதிகரிடம் காரில் இருந்தபடியே இளைஞர் ஒருவர் ஏதோ விசாரிக்கிறார். “இன்னும் பாட்டுப் பாடறீங்களா ?” “ஆமா பாடிகிட்டுதான் இருக்கேன்…” “ஓ… எங்க பாடறீங்க?”…

திறவுகோல் 9: வைகறைப் பூக்கள்

சிங்கை எழுத்தாளர் மா.இளங்கண்ணன் அவர்களால் எழுதப்பட்டு, தேசியக் கலைகள் மன்றத்தின் ஆதரவில் பதிக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு வெளியாகி உள்ள இந்த வரலாற்றுப் புனைவு நாவல் 1941ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரையிலான சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் என்ற தன் இயற்பெயரை இளங்கண்ணன் என்று மாற்றிக் கொண்ட நூலாசிரியரின் தனித்தமிழ்ப்…

மிஸ்ட் கால்

நீண்டு பிளந்த மீன்னல் கதவுகளின் ஊடாக வாரிப்பொழிந்து கொண்டிருந்தது வானம். வெளிச்ச நரைகள் படிந்த இருளின் அமைதி அந்த விமான நிலையத்தை முழுமையாக ஆக்கிரமித்துக்கிடந்தது. மாறி மாறி வந்திறங்கிய விமானங்களுக்குள் பெருமூச்செறியும் பலநூற்றுக்கணக்கான உயிர்களின் நிம்மதியினாலோ என்னவோ அந்த பெருவிதானம் தொடர்ந்து காற்றோட்டம் நிறைந்ததாகவே காணப்பட்டது. வாழ்வின் சகல அழுக்குகளையும் அகத்தில் சுமந்த ஒருவனையும் மீதி…

கதைபோடுகிறாள் கனிப்பெண்

ஒரு சிறுகதையை எழுதி முடித்தவுடன் ஈராயிரம் ஆண்டுகளாய் தொலைந்து வரும் கதை இழையைக் கண்டுபிடித்துவிடுகிறது. புராதனக் கதை இழைகள் மறதியில் காணாமல் போய்த்தான் இருக்கும். ஒரு நகரம் பாழடைந்து ஜனங்கள் வெளியேறிச் செல்கிற கதைகள் உண்டு. எல்லா ஊரிலும் பஞ்சம் ஏற்பட்டு மாடுகளும் மனிதர்களைப்போல் எலும்பு துருத்திய காலத்தில் இந்தியாவைவிட்டு தமிழக கிராமங்களைவிட்டு வெளியேறிய ஜனங்களின்…

வடக்கு நோக்கி பறந்ததொரு மாயப்பறவை

வல்லினம் கலை இலக்கிய விழா முடிந்ததும் வழக்கம் போலவே நான் பரபரப்பானேன். எல்லாம் குறித்த நேரத்தில் ரயிலை பிடிக்க வேண்டுமே என்கிற பரபரப்புதான். இந்த முறை எழுத்தாளர் கோணங்கியையும் உடன் அழைத்துச் செல்வதால் படபடப்பு அதிகம் இருந்தது. இரண்டு நாட்கள் வடக்கு மாநிலங்களை அவருக்குச் சுற்றிக் காட்ட திட்டமிட்டிருந்தோம். ஆகவே நிகழ்ச்சி முடிந்ததும் கோணங்கியிடம் என்னை…

மேஜிக் பையுடன் சுண்ணாம்பு மலை திருடன்!

15.9.2017 – வெள்ளி வழக்கம்போல தயாஜியும் நானும்தான் விமான நிலையத்தில் எழுத்தாளர் கோணங்கிக்காகக் காத்திருந்தோம். முதல் சந்திப்புதான். ஆனால் எளிதாக அடையாளம் காண முடிந்தது. ஐந்து மணிக்குள் சாலை நெரிசலாகும் பகுதிகளைக் கடந்துவிட வேண்டுமென அவசர நல விசாரிப்புகளுடன் காரை அடைந்தோம். தயாஜி காரில் காந்திருந்தார். காரிலேயே ‘வல்லினம் 100’ புத்தகத்தைக் கொடுத்தேன். பொதுவாக ‘வல்லினம்’…