கடைசி முத்தமும் கடைசி கண்ணீரும்

நான் வேலைக்குச் சென்று வாங்கிய முதல் மாத சம்பளத்தில் அப்பாவிற்கு 50 ரிங்கிட் கொடுத்திருந்தேன். அதை அவர் 8 வருடங்கள் செலவு செய்யாமல் பத்திரமாகவே வைத்திருந்தார் என்பதே அவர் மரணத்திற்குப் பிறகே தெரிந்தது. என்னுடைய அப்பா திரு.கேசவன் அவர்கள் கடந்த 20ஆம் திகதி முதல் இரண்டு நாள் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார்.…

ஆண்குறி சுடும் போட்டி

எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவு வசதி உண்டு. அத்தனை நீளமும் கைப்பிடியளவு அமைந்திருக்கவேண்டும். இல்லையேல் விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்காது. விளையாட்டு என்பதே சுவாரஸ்யம் மிகுந்ததுதானே. இப்போது உடம்பை குறைக்கவும் வயதை மறைக்கவும் ஓடிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நினைவுகளில் சூழ்ந்திருப்பது அந்த போட்டி விளையாட்டுதான். இது குழு முறை விளையாட்டு. குழுவாக செயல்படவேண்டும். ஆண்களும் பெண்களும்…

உஸ்தாத் சொன்னது தப்புதான்… ஆனா…

வர வர ஒன்னுமே புரிய மாட்டேங்குது நைனா. எல்லாமே முன்னுக்குப் பின்ன முரணா கெடக்குது. அண்மையில உஸ்தாத் ஷாகுல் ஹமிட் (Uztaz Shahul Hamid) இஸ்லாமியர்களோட கட்டுப்பாடுகள் பற்றி பேசியிருக்காப்படி. அதுல ஹலால் உணவுகள் என இஸ்லாமியர்கள் சொல்லிக்கொண்டு அழகப்பாஸ் மற்றும் பாபாஸ் மசாலாத்தூள்களை வாங்குவதை விமர்சித்து ஏன் அவர்கள் இஸ்லாமியர்கள் தயாரிக்கும் மசாலா தூள்களை வாங்குவதில்லை…

லீனா மணிமேகலை மலேசிய வருகை

2.11.2014ல் நடைபெற உள்ள கலை இலக்கிய விழாவில் கவிஞர் / இயக்குனர் லீனா மணிமேகலை கலந்துகொள்கிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளில் கலை ஊடகச் செயற்பாட்டாளராகவும் இயக்குனராகவும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. மஹாராஜபுரம் எனும் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் தமிழாசிரியர்  இரகுபதி அவர்களுக்குப் பிறந்தவர்தான் லீனா. அவர் மிகச் சிறந்த  ஆவணப்படங்களையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தமிழின் மிக முக்கியமான…

கலை இலக்கிய விழா 6 (2.11.2014)

வருடம்தோறும் வல்லினம் இலக்கியக்குழு முன்னெடுத்து நடத்தும் ‘கலை, இலக்கிய விழா’ ஆறாம் ஆண்டாக இவ்வருடம் 2.11.2014ல் நடைபெறுகிறது. பல புதிய அங்கங்களுடன் இவ்வருடம் கலை இலக்கிய விழாவின் வேலைகள் துவங்கியுள்ளது. வல்லினம் விருது வல்லினம் முதல் ஆண்டாக இவ்வருடம் ‘வல்லினம் விருதை’ ஏற்பாடு செய்துள்ளது. இம்முறை வல்லினம் விருது எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதளிப்பு…

வல்லினத்தின் குறும்படப் பட்டறை

26.7.2014ல் வல்லினம் ஏற்பாட்டில் குறும்படப்பட்டறை ஒன்று கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைப்பெற்றது. இந்தப் பட்டறையை இயக்குனர் சஞ்சை குமார் பெருமாள் மற்றும் செந்தில் குமார் முனியாண்டி ஆகியோர் வழிநடத்தினர். நாட்டில் குறும்படப்போட்டிகள்  அதிகமாக நடந்துகொண்டிருக்கும் சூழலில் , குறும்படத்துக்கான அடிப்படை தேவை குறித்து இப்பட்டறை விவாதித்தது. கருவிகளும், அதன் பயன்பாடு மட்டுமே கலையாவதில்லை என்பதை…

“தமிழ்ப் பாரம்பரியம் பேசுபவர்கள் கடைசியில் சாதியெனும் கழனிப்பானையில் கையை விடுவதைத்தான் நாம் பார்க்கமுடிகிறது”

சந்திரசேகர் என்ற இயற்பெயரைக் கொண்டவர், பிரளயனாக அறியப்பட்டது வானம்பாடி இயக்கத்தின் தொடர்பறாத நீட்சியினால்தான். மை ஸ்கீல் அறவாரியமும் வல்லினமும் இணைந்து மலேசியாவில் முதன் முதலாக ஏற்பாடு செய்திருந்த வீதி நாடக முயற்சிக்குப் பயிற்சி வழங்கவே தமிழகத்திலிருந்து குறுகியகால வருகையளித்திருந்தார் பிரளயன். அந்தக் குறுகியகால நட்பில் அவரது தத்துவக்கூர்மையையும் வரலாற்று அறிவையும் ஆய்வுத்தெளிவையும் அறிய முடிந்தது. பத்தாண்டு…

பெண் எழுத்து

இலக்கியச் சர்சைகள் பொதுவாகவே இரண்டு தளங்களில் நிகழ்கின்றன. ஒன்றாவது சர்ச்சையின் சாரம் உள்ளடக்கியுள்ள மையத்தை நோக்கியதாக விவாதங்களைத் தொடர்வது. மற்றது, சர்ச்சையில் ஆங்காங்கு நீண்டிருக்கும் வெகுசன கயிறுகளைப் பிடித்துக்கொண்டு, மையத்தை விட்டு மற்றவற்றையெல்லாம் சர்ச்சைப் பொருளாக்கி கோஷம் எழுப்புவது. பொதுவாகவே தமிழ்ச்சூழலில் இரண்டாவது நிலைக்குதான் கிராக்கி அதிகம். காரணம் அப்போது போடும் கோஷம் ஒரு கூட்டத்தின்…

விவாகரத்து (திரைப்படம்): குடும்ப அமைப்பின் ஒற்றை குரல்

‘வெண்ணிற இரவுகள்’ படத்திற்கு முன்பு மலேசியத் தமிழ் சினிமாவின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்ததில்லை. அதற்கு மூன்று முக்கியமான காரணங்களை என்னால் கூற முடியும். ஒன்று, மலேசியத்தன்மை குறைந்து தமிழ்நாட்டு சாயல் அதிகமாகப் படிந்திருக்கும் நிலையில் அது மலேசிய சினிமா என்கிற அடையாளத்தை இழக்க நேர்ந்துவிடும். இரண்டாவது, போதுமான இயக்கப் பயிற்சியும் சினிமாவிற்கான நுட்பமான தேடலுமின்றி…

எஸ்.எம்.ஆறுமுகத்தின் ‘உயிர்த்துடிப்பின் இதய ஒலி’ – முதிரா கதைகளின் தொகுப்பு

மலேசிய நாளிதழ்களிலும் வார மாத சஞ்சிகைகளிலும் அச்சிடப்படும் சிறுகதைகள் பெரும்பாளும் எந்த சுவாரசியமும் இன்றி தட்டையாக இருப்பது இலக்கிய ஆர்வளர்கள் பலரும் அறிந்ததே. விதிவிலக்காக சில சமயங்களில் நல்ல சில படைப்புகளையும் நாம் பார்க்க நேர்கிறது. அச்சு இதழ் கதைகளின் வெத்துப் போக்கை நாம் எந்த விமர்சனமும் இன்றி கடந்து போய்விடுவது வாடிக்கை. காரணம் மீண்டும்…

இன்னும் இறந்து போகாத நீ… கவிதையும் கவித்துவமும்…

எப்படி எழுத வேண்டும் என்று நான் கூறவில்லை உங்கள் வரிகளில் எந்த விபரீதமும் நிகழ்வதில்லை வெற்று வெளிகளில் உலவும் மோனப் புத்தர்கள் உலகம் எக்கேடாவது போகட்டும் காலத்தின் இழுவையில் ரீங்காரிக்கிறேன் எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள் உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின் தொலைதூர எதிரொலி கூட கேட்கவில்லை வார்த்தைகளின் சப்தங்கள் அதற்குள்ளேயே மடிந்து விடுகின்றன. எழுதுங்கள்…

ஆலின் வேரும் அருணின் அரை ஆய்வும்!

நான் ஒரு வரலாற்று ஆய்வாளன் இல்லை. வரலாற்றை விரும்பி வாசிக்கும் ஓர் எழுத்தாளன் மட்டுமே. எழுத்தாளன் என்பதே என் முதல் அடையாளம். எனக்குள் நான் ஆழத்தின் உணரும் அடையாளம் அது. அவ்வடையாளத்துக்கான உழைப்பாக நான் கருதுவது வாசிப்பை. ஒரு புனைவு எழுத்தாளனுக்கு ஓரளவு வரலாற்று அறிவும் இருக்க வேண்டும் என்பதில் பிடிப்பு உள்ளவன் நான். வரலாற்றின்…

கார்த்திகேசுவின் வெடிகுண்டும் ராஜேந்திரனின் அக்குள் பந்தும்!

வர வர நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரிய மாட்டுது நைனா. எப்பப் பாரு யாராவது ஏதாவது புக்கு போடுறாய்ங்க. அதை வெளியிடுறேன்னு சொல்றாங்க. வெளிய வுடுறதுன்னா என்னான்னு போய் மண்டபத்துக்கு வெளியவே நின்னு பார்த்தா புக்க மண்டபத்து வெளியவே வுடமா உள்ளுக்குள்ளயே ஆளாலுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுத்து படிச்சிக்கிறாய்ங்க சிரிச்சிக்கிறாய்ங்க… ஒன்னுமே புரியல நைனா. சரி…

இதான் மனநோயா அடேங்கப்படிங்கப்பா

நெடுஞ்சாலையில் நண்பருடன் காரில் போய்க்கொண்டிருந்தேன். தூரத்தில் மேம்பாலம் தெரிந்தது. நடந்து சாலையை கடக்க போடப்பட்டிருந்த மேம்பாலத்தில் மோட்டார்களில் பலர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள். இதனை கண்ட நண்பருக்கு கடுங்கோபம். “எதை எதுக்கு பயன்படுத்தனுமோ அதை அதுக்குத்தான் பயன்படுத்தனும். மனுசனுங்க நடக்கறதுக்கு மேம்பாலம் கட்டினா இதுங்களை பாரேன். இந்த பன்றிங்க மேம்பாலத்துல போய் மோட்டார்ல போகுதுங்க” என…

பறை 2 – வெளியீடும் அறிமுகமும்

கடந்த ஜீலை திங்கள் 6ஆம் நாள், பறை 2 பாயா பெசார் தியான மன்றத்தில் வெளியீடு கண்டது.  வாசகர்கள், எழுத்தாளர்கள், கல்லூரி மாணவர்கள் என இந்நிகழ்வில் சுமார் 60 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு நவீன இலக்கிய களத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வை தயாஜி சிறப்பாக வழிநடத்தினார். ‘பறை’ இதழ் உருவான விதத்தை அதன் ஆசிரியர்…

இளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள் – உண்மை அறியும் குழு அறிக்கை

சென்னை. ஜூலை 9, 2014 இந்த உண்மை அறியும் குழுவில் பங்குபெற்றோர்: 1.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (Peoples UNion for Human RIghts), சென்னை, 2.வி.சீனிவாசன், சமூக மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை, 3.பேரா ஜி.கே.ராமசாமி, மக்கள் ஜனநாயக முன்னணி (Peoples Democratic Front), பெங்களூரு, 4.பேரா. சிவலிங்கம், ஸ்வாபிமான தலித்…

படைப்பு சுதந்திரம் உள்ளவனே கலைஞன் – ஜேம்ஸ் லீ

சுதந்திரத்திற்கு எல்லா நேரங்களிலும் சுதந்திரம் இருப்பதில்லை. எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரத்தின் வரையறையை ஆளும் அதிகாரங்களே நிர்ணயிக்கின்றன. அதிகாரங்களையும் அதன் வரையறைகளையும் கடந்து தனது கருத்துகளை படைப்பின் வாயிலாக வெளியிடவே ஒவ்வொரு கலைஞனும் முயல்கிறான். ஆனால் பல நேரங்களில் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டு தன்னை சமரசரம் செய்துகொள்வது பெரும்பாலான கலைஞர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்கு அவர்களது…