கடிதம்/எதிர்வினை

மலேசிய ‘டான் குயிக்ஸாட்’

don.1மதியழகன் வல்லினம் குறித்து கூறியுள்ள அவதூறுகள் என் பார்வைக்கு வந்தன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே அவரது அறிவின் வளத்தை படம்பிடித்துக்காட்டியபின்னர் (http://vallinam.com.my/navin/?cat=32) மீண்டும் தன் வெற்றுக்கூச்சலைத் தொடங்கியுள்ளார் என நினைக்கிறேன். அவற்றை முழுமையாக வாசித்தேன். அவற்றில் பாதி அவதூறுகள் வல்லினத்தின் மீதும், மீதி என் மீதும் என் நண்பர்கள் மீதும் சுமத்தப்பட்டிருந்தன.

Continue reading

நாரின் மணம்: சிதறடிக்கப்படும் அழகு

cover-10எழுத்து என்பது எனக்கு மிக பிடித்தக் கலைதான். எனினும், அதை எழுத முயன்ற அளவுக்கு வாசிக்க முயன்றதில்லை. அதன் காரணமாகவே எனது முயற்சிகள் பல தோல்வியில் முடிந்திருப்பது இப்போதுதான் புரிகிறது. வாசிப்பது நமக்கான அசல் தன்மையை இழக்கச் செய்யும். நம்மை அறியாமல் நம் எழுத்துகளில் பிறரின் சாயல் வந்தமரும் என நம்பியிருந்தேன். இந்த உச்சநிலை அறியாமையைத் திருத்திக் கொண்ட தளம் வல்லினத்தின் பத்தாவது கலை இலக்கிய விழாதான். இங்கிருந்துதான் எனக்குப் பத்திகளும் அறிமுகமாயின. கட்டுரைகள் பத்திகளில் இருந்து வேறுபடுவதே எனக்குப் புதிய தகவல்தான்.

Continue reading

தலைமையாசிரியர் மன்றம்: கோஷமும் கொதிப்பும்

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்

indexவணக்கம் சார். உங்கள் கட்டுரையைப் படித்தேன். என் பள்ளிக் குழுமத்தில் பகிர்ந்தேன். கண்டிக்கப்பட்டேன். என் தோழிகள் பலருக்கும் இது நிகழ்ந்துள்ளது. இப்படித் தனித்தனியாக பேசும்போது பள்ளியில் முடக்கப்படுவோம். ஒன்றாக இணைந்து இப்போட்டியை நிராகரித்தால் என்ன? கடந்த ஆண்டும் இதே போன்ற அறிக்கையே வந்தது. வயிறு எரிகிறது. நிகழ்ச்சி அன்று அனைத்து ஆசிரியர்களும் ஒற்றுமையாக கோஷமிட்டு நிராகரித்தால் உண்டு. முன் வருவார்களா?

மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

Continue reading

கடிதங்கள் 2: தலைமை ஆசிரியர் மன்றம்

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்

நியாயமான மனதின் மனசாட்சியில் உறுத்தலை ஏற்படுத்த வாய்ப்புள்ள கேள்விகள்! பிழைப்புக்கு mail-message-latter-260nw-1067634980முன்பு அனைத்தையும் சரணடைய வைத்துவிட்டஒரு தலைமுறை ஆசிரியர் கூட்டம் இதனையும் எவ்வித எதிர்வினையுமின்றி கள்ள மௌனத்துடன் கடந்து போகலாம். சமூகநலன் சார்ந்த நியாயமான கேள்விகள் என்பதால் பொதுவெளிக்கு கொண்டு போவதே   சரி என்பது எனது அபிப்பிராயம்! அதிலும் இது நாம் புழங்குகிற மொழி என்னும் தளம் என்பதால் பொதுவெளிக்கு கொண்டு செல்கிற பொறுப்பும் வல்லினத்திற்கு உண்டு என்றே சொல்லலாம்!

எழுத்தாளர் சீ.முத்துசாமி

Continue reading

கடிதம் 1: தலைமை ஆசிரியர் மன்றம்

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்ப்பள்ளி வீழ்ச்சியும்

imagesவணக்கம்.  தமிழ் மொழி நம்பவர்களால் ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு மட்டும் என் கருத்துரையை எழுதுகிறேன்.

மொழியைக் குறித்து தாழ்வு மனப்பான்மை முதலாவது காரணம். இன்று ஏறக்குறைய தமிழில் உரையாடினால்/ எழுதினால் மதிப்பில்லை என்று தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மணிமன்றங்கள், திராவிடர் சங்கங்கள், இந்து சங்கங்கள் என்று எல்லா நிலையிலுமான தலைவர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். எனவே, மிக எளிதாக மலாய்/ ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். இதைக் குறித்து யாரும் கேள்வி கேட்டால், ‘தமிழ் எல்லாருக்கும் புரியாது’, என்ற அலட்சியமான பதிலைச் சொல்வார்கள். என்னைப் போன்றவர்கள் கேட்டால், ‘வெள்ளைக்கார பெயரைக் கொண்ட உனக்கு தமிழ் மீது என்ன அக்கறை?’ என்று கேட்பார்கள்.

Continue reading

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்

001தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ்மொழிப் பேச்சுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் வட்டார ரீதியில் போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்பர். அதில் தேர்வு பெறுபவர் மாநிலத்தைப் பிரதிநிதித்து தேசிய அளவில் நடக்கும் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்வார்கள். இப்படி நடக்கும் போட்டியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து அடங்குவதுமுண்டு. அதில் அடிப்படையான சர்ச்சைகள் இரண்டு.

Continue reading

கடிதம்: மீண்டும் கேரளம்

13நண்பர் நவீனுக்கு,

தங்களின் மீண்டும் கேரளம் பயணக்கட்டுரையை வாசித்தேன். தொடக்கத்திலேயே கன்னங்களில் வலிக்க தொடங்கியது. முகம் விட்டு சிரித்து பல நாட்கள் ஆகிவிட்டதை உணர்ந்தேன். விமானத்தில் இடம் மாற்றிக்கொள்ளாமல் கறார் செய்த முதியவர் தொடங்கி, கரப்பான் பூச்சி கலவரம் மற்றும் கடல் உணவு கடையில் நடந்த ‘ருசி’ ஏமாற்றம் என  தங்களுக்கே உரிய நகைச்சுவை கலாட்டாக்களோடு  எழுதியுள்ளீர்கள் கட்டுரையை.

Continue reading

கடிதம்: வெள்ளைப் பாப்பாத்தி

indexநிஜத்தில் ஒரு பாப்பாத்தி என் மீது  சில கனங்கள் வந்து அமர்ந்துவிட்டுச் சென்றது போல இந்தக் கதையை வாசித்த நிமிடங்கள் முழுக்க  தோன்றியது. ஒரு பாப்பத்தியோடு கதைப் பேசிய உணர்வுதான் அது. ஒரு குழந்தையின் வெண்மையான மனப்போக்கிற்கும், கரை படியாத சிந்தனைக்கும் நீங்கள் தெரிவு செய்த அந்தப் பாப்பத்தியின் வெள்ளை நிறம் எத்தனைப் பொருத்தம். பொதுவாக வண்ணம் நிறைந்த பாப்பத்திகளையே விரும்பும் என்னைப் போல பல வாசகர்களிடம் ஒரு வெள்ளைப் பாப்பாத்தியின் அழகைப் பேசிய இந்தக் கதை ஒரு தேவதைக்கான கதை.

Continue reading

மனசலாயோ : கடிதங்கள் 4

indexகேரளாவிற்கு மூன்று முறை பயணம் செய்திருக்கிறேன். நீண்ட கால இடைவெளிகளில். சட்டென்று பார்ப்பதற்கு மாற்றம் இல்லாததுபோலிருக்கும். ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த கேரளாவிற்கும் சில மாதங்களுக்கு முன்னர் நான் பார்த்த கேரளாவிற்கும் பெரும் மாற்றம். நவீனின் மனசிலாயோ தொடரைப் படித்த பின்னர் நான் அறிந்த சில விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் எனத் தோன்றியது.

முதலாவது, பூமி முழுக்க பருவநிலை மாறிவிட்டது. குளிர்காலத்து காலை நேரக் குளிர்ச்சியை கேரளாவில் இப்போது எல்லா இடங்களிலும் அனுபவிக்க முடியவில்லை. மலைப் பகுதிகளில்தான் நடுங்க வைக்கும் காலைக் குளிரை உணரமுடிகிறது. மற்றது வேகமாக நடைபெற்று வரும் நகரமயமாக்கலில் கேரளத்தின் பசுமைச் சூழல் மெல்ல மெல்ல கண்ணுக்குச் சட்டென்று தெரியாமல் குறைந்து வருகிறது.

Continue reading

மனசலாயோ : கடிதங்கள் 3

புனிதாதிரு.நவீனின் பயணக்கட்டுரை  மிகவும் உயிரோட்டமாக இருக்கும். அலங்காரச்சொற்கள் கிடையாது. ஜிகினா தூவல் கிடையாது. உள்ளதை உள்ளபடியே ஒரு திரைப்படமாக சலிப்புத்தட்டாமல்  வாசகரின் முன் வைத்து எழுதும் முறை மிகவும் வியக்கத்தக்கது. ஒரு வாசகரைப் கைப்பிடித்து  அழைத்துச்சென்று ஒவ்வொரு காட்சியை நேரடியாக பார்த்த அனுபவம் கிடைக்கும். அவரின் எழுத்துக்கள் ஓவ்வொன்றும் வாகனின் கண்கள் எனலாம். நாமே சென்று நேரடியாகப்பார்த்தாலும் இவ்வளவு  கூர்மையாக் கவனிப்போமா என்பது சந்தேகமே. சிகிச்சைச்சென்றும் அடங்கமாட்டாரா  இந்த சார்? காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும் நடனமணியை போல கையில் கட்டிக்கொண்டே ஆடுகிறாரே எனக் குழப்பம் வந்தது.   ஆனால் கட்டுரைப்படிக்கப்படிக்க நான் சுயநலவாதியாக மாறிவிட்டேன். அவரின் எழுத்தைப் பார்வையாககொண்டு நானும் எல்லாக்காட்சிகளையும்  இரசிக்க ஆரம்பித்தேன் .

Continue reading