கடிதம்/எதிர்வினை

லீகாட் : தீபனின் இருள் – அழகுநிலா

அழகுநிலா

சில எழுத்தாளர்களின் நாவல்களைத்தான் வெளியனாவுடன் வாசித்துவிட வேண்டுமென்று தோன்றும். எனக்கு அப்படி தோன்றும் எழுத்தாளர்களில் நவீனும் ஒருவர். நவீனின் நான்காவது நாவலான லீகாட்டை சிங்கையில் வெளியாவதற்கு முன்பே வாசித்துவிட்டேன்.

தனது முன்னுரையில் லீகாட் நாவல்தான் முதல் நாவலாக வெளிவந்திருக்க வேண்டும் என்று நவீன் குறிப்பிட்டுள்ளார். எனக்கும் அப்படியே நிகழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. Coming off age நாவலான லீகாட் நாவலின் கதைநாயகன் தீபனையும் அவனது அக இருளையும் ஏற்கனவே சிகண்டியில் வாசித்திருப்பதால் அது என்னுள் பெரிதான பாதிப்பு எதையும் நிகழ்த்தவில்லை.

Continue reading

லீகாட்: 90களின் வாழ்க்கை – ராமசாமி நடேசன்

மிகவும் எளிமையான நடையிலும், வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் ‘லீகாட்’ நாவலைப் படைத்திருப்பது சிறப்புக்குரியது. கம்பத்து சூழல், இடைநிலைப் பள்ளிச் சூழல், பட்டணச் சூழல் என மூன்று வெவ்வேறு தளங்களில் கதையை நகர்த்தியிருப்பது நாவலுக்குச் சிறப்பான உயிரோட்டத்தை அளிக்கிறது.

Continue reading

லீகாட்: நன்றியுணர்வு – ஜி.எஸ்.தேவகுமார்

பொதுவாக பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வந்தப் பிறகு பள்ளிக்கு விடுப்பு எடுத்து கொள்வார்கள். சடங்கு சம்பிரதாயம் எல்லாவற்றையும் விடுப்போடு முடித்துக் கொண்டு பள்ளிக்கு வருபவர்களின் முகம் பொழிவுடன் காணப்படும். அவள் அச்சுறுத்தப்பட்டுமிருப்பாள். ஆண்களோடு பேசுவது தொடங்கி உடைகள் வரை  வீட்டுப் பெரியவர்கள் எச்சரித்து அனுப்பி வைப்பார்கள். ஆண்களுக்கு ஏன் அவ்வாறான சடங்கு சம்பிரதாயங்கள் நடத்தப்படவில்லை என்ற கேள்வி ஆண்களின் மனதில் எழாமல் இருக்காது. அந்த ஆழ்மனத்தின் அடக்கப்பட்ட உணர்வுகள் பேசுவது லீகாட் நாவல்.

Continue reading

லீகாட்: வாசகர்களின் சில கருத்துரைகள்

வணக்கம்.

லீகாட்டை செப்பாட்டாக (cepat) வாசித்து முடித்துவிட்டேன். மூன்று நாள்களுக்குள் வாசித்து முடிக்க உற்சாகமும் உத்வேகமும் அளித்தது ஆசிரியரின் நடை. என்னுடைய தோட்ட வாழ்க்கையையும் பள்ளிப் பட்டறிவையும் (சூழல்) ஒத்திருந்ததாலோ என்னவோ… மேலும் ஆவலைத் தூண்டி வாசிக்க வைத்தது.

Continue reading

கடிதங்கள் (அற்புதம்)

அற்புதம் என்றே தலைப்பு வைத்துவிட்டதால், வேறு எதுவும் சொல்லமுடியாது 😁 புனைவு எழுத்தாளரை அமெரிக்கா அழைத்துவந்தால் இப்படித்தான் நம்மையே பாத்திரங்களாக மாற்றி அழகு பார்ப்பார்கள் போலும். மானுடத்தின் சிறப்பைச் சொல்லும் இக்கதை அற்புதம்!

சௌந்தர், ஆஸ்டின்

Continue reading

கடிதங்கள் (கொயோட்டி)

கொயோட்டி கதை அருமை. நாங்கள் வசித்த குடியிருப்புப் பகுதியில் ஸ்கங்க் மற்றும் ரக்கூன் நடமாட்டம் எப்போதும் உண்டு. வீட்டின் அருகே இருந்த மலையின் பெயரே கொயோட்டே ஹில்ஸ் தான். அடுத்தவர் பசிக்கு உணவிட்ட பழகிய தாய் மனதிற்கு அமெரிக்க வாழ்க்கை ஒரு பெரும் தடைச்சுவரென எழுந்து நிற்பதும், அதை மீறி கொயோடேவிற்கும் உணவிட்டு அன்னையென எழுந்து நிற்பதும் நெகிழ வைக்கிறது.

சாரதா

Continue reading

Sikandi Reading Experience – The magnificence of motherhood (Vasanth)

Dear Ma Naveen,

Myself Vasanth from Cuddalore. I completed reading Sikandi last night. I thought I could write about my reading experience.

My personal favourite is Leo Tolstoy, and Jeyamohan. I have almost read all fictional works of Je including Venmurasu. So, during this letter let me share how Sikandi impacted me relative to my favourite author’s works.

Continue reading

ஆகவே செயல் புரிக!

விஜயலட்சுமி

அண்ணே வணக்கம். சற்று முன்னர் முகநூலில் அண்ணன் எழுதிய பதிவை வாசித்தேன். எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் கோபப்படமாட்டீர்கள் என நம்புகிறேன். நமது தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காப்பாற்ற போராடும் சிலரை மனமுவந்து பாராட்டும் தாங்கள், ஏன் __________ போன்ற சிலரை ஏசுகிறீர்கள்? அவர்களும் தமிழ் வளரவும் செழித்தோங்கவும்தானே பாடுபடுகிறார்கள். ஏன் இந்த பாராபட்சம்? உங்கள் விமர்சனத்தால் ____________ போல சில மனமுடைய வாய்ப்புண்டு. அவர்கள் செயல்படாவிட்டாலும் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் இழப்புதானே. நான் ஏற்கனவே கேட்ட கேள்விக்கு தாங்கள் பதில் சொல்லவில்லை. வாய்ப்பிருந்தால் சொல்லவும். என் புலன எண்ணுக்கும் __________ அனுப்பலாம்.

குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

Continue reading

வேம்படியான் : கடிதங்கள் 4

வேம்படியான் சிறுகதை

நவீன்,


இரண்டு காரணங்களுக்காக இது குறிப்பிடத் தக்க சிறுகதை. ஒன்று பொருள் மயக்கம் வெளிப்பட்ட விதம், மற்றது திகில் அனுபவத்தை மீறி நிகழ்ந்த கண்டறிதல். நிஜம் கற்பனையும் எல்லைகளை அழித்துக் கொள்ளுதல் நம்முள் எங்கெங்கு நிகழ்கிறது எனப் பார்த்தால் ஆச்சரியப் படுவோம். 

Continue reading

வேம்படியான் : கடிதங்கள் 3

வேம்படையான் சிறுகதை

அன்புள்ள அண்ணன் நவீனுக்கு,

பேய்க்கதைகள் விரும்பி படித்த காலக்கட்டம் ஒன்றிருந்தது. ஜேம்ஸ் லீயின் மிஸ்டர்.மிட்நைட் அத்தியாய வரிசை அதில் பிரதானம். திகிலுக்காகவும் மர்மம் வேண்டியும் புரட்டிய ஏடுகள் பெரும்பாலும் எதிர்ப்பார்த்ததை ஏமாற்றியதில்லை. காட்சி ஊடக வரிசையும் இதில் விதிவிலக்கன்று. நண்பர்களுடனான இரவரட்டையின் போதும் இத்தலைப்பு வந்துவிடுவதுண்டு. பக்கங்களுக்குள்ளிருந்தும் திரையொளிக்குள்ளிருந்தும் பேச்சொலிக்குள்ளிருந்தும் நகர்ந்து இடைமனவெளியில் அவற்றின் அந்தரங்கத் தொடர்ச்சியை பார்த்த, படித்த, கேட்ட மட்டில் உணராத நாளும் இல்லை.

Continue reading