கடிதம்/எதிர்வினை

கீலாக்காரன் (கடிதங்கள் 2)

கீலாக்காரன் சிறுகதை

ஒவ்வொரு மனிதனுக்குள் நிகழும் மனப்பிறழ்வுகளைக் காட்டியது ‘கீலாக்காரன்’ சிறுகதை. கதையில் சீத்தாராமன் அவன் தோற்றத்தினாலும் பேச்சினாலும் ஊரார் மத்தியில் கீலாக்காரன் என்றழைக்கப்படுகிறான். ஆனால், கதையை வாசித்த முடித்த பிறகு ஒருவரின் தோற்றமும் பேச்சும் மட்டும்தான் ஒருவனை மனப்பிறழ்ந்தவன் என்று கூறுவதற்கு வழிவகுக்கின்றதா என்ற கேள்வியே எழுகின்றது. இக்கதையில் நிராகரிக்கப்படும் கேலிக்குள்ளாக்கப்படும் உயிர்களின் பிரதிபலிப்பாகச் சீத்தாராமனும், தமது பலத்தைப் பலவீனமற்றவர்களிடம் காட்டி மகிழ்ச்சியடைபவர்களின் பிம்பமாக வேலுவும், தமது சுயநலமும் இயலாமையும் ஒன்றுசேர ஏதும் செய்ய முடியாமல் குற்றவுணர்வுடன் சிக்கித் தவிக்கும் சக மனிதனின் பிரதிபலிப்பாகக் கோபியும் திகழ்கின்றனர். 

Continue reading

கீலாக்காரன் (கடிதங்கள் 1)

கீலாக்காரன் சிறுகதை

60களில் பீடோங் அருகிலில் நான் வாழ்ந்த தோட்டதில் கூட ஆண் புணர்ச்சிக்காரர்கள் இருந்ததை ஒரு சிறுவனாக (4-5 வயதாக இருந்த இளம் பிரயாயத்தில்) என் கண்களால் பார்த்திருக்கிறேன். ஒரு முறை அப்படிப்பட்ட ‘காமுகனிடமிருந்து’ தப்பித்துமிருக்கிறேன்.

Continue reading

மிருகம்: கடிதங்கள் 5

தீவிர இலக்கிய செயல்பாடுகள், முகாம்கள், இலக்கிய பத்திரிக்கை நடத்துதல்,  இலக்கிய விழாக்களுக்கு நாடு விட்டு நாடு பயணித்தல், போட்டிகள், நடுவர் வேலை, பரிசளித்தல், நாவல்கள், விமர்சனம், கட்டுரை, புத்தக வெளியீடு, இலக்கிய அமர்வுகள் இவை யாவற்றுக்கும் நடுவில் நேரம் அமைத்து சிறுகதை எழுதுகின்ற ம.நவீன் அவர்களுக்கு முதலில் பெரிய சலாம்.

Continue reading

மிருகம்: கடிதங்கள் 4

‘மிருகம்’ படித்தேன். மனிதநேயம் அருகிவரும் காலத்தில் மெருகேற்றிய மிருகநேயம் பற்றி சொல்லப்பட்ட கதை.
மனங்களின் முரண்களை பற்றிய அழகான எதார்த்தமான சித்தரிப்பு.
முடிவு மனதை உண்மையலேயே தொட்டது.

Continue reading

மிருகம்: கடிதங்கள் 3

ம. நவீன் சார் அவர்களுக்கு,

‘மிருகம்’ சிறுகதையைப் படித்து முடிக்கும் பொழுது இடதுபுற கண்களில் கொஞ்சமாய் துளிக் கண்ணீர் தேங்கியிருந்ததைத் துடைத்துக் கொண்டேன். மிக மிகக் கொஞ்சமாய் தேங்கியிருந்தது.

Continue reading

மிருகம்: கடிதங்கள் 2

மிருகம்

கச்சிதமாக எழுதப்பட்டுள்ள கதை. நவீனின் சிறந்த கதைகளில் ஒன்று.

மனித உணர்வுகள், அதன் ஆதி குணத்தைத் தீண்டும்போது, தான், தனது என்றே நினைக்கிறது. பாசாங்குகள் அறுபட்டுப் போகின்றன.
ஆதி குணத்திலேயே பாசாங்கற்று வாழும் மிருங்களின் தூய அன்பும் வேதனையும் தற்காப்பும் குற்றவுணர்வும் சமரசமற்றதாக உள்ளன. அவை சமாதானங்களைக் கோருவதில்லை. வினைக்கான எதிர்வினைகளை கேள்விகளற்று ஏற்றுக்கொள்கின்றன.

Continue reading

மிருகம்: கடிதங்கள் 1

சிறுகதை மிருகம்

அன்பு நவீன். நான் உங்களின் வாசகனென தைரியமாகச் சொல்லிக்கொள்ள தகுதி படைத்துள்ளதாகவே நம்புகிறேன். உங்களின் அத்தனை சிறுகதைகளையும் வாசித்துவிட்டேன் எனும் துணிவில் இதைச் சொல்வேன். (மண்டை ஓடியை மறுபதிப்பு போட்டால் என்ன?)

Continue reading

மேன்மையின் பிரதிநிதி அந்தரா – ஜெயராம்

அன்புள்ள நவீன்,

ஜெயராம்

உங்களது ‘தாரா’ நாவலை வாசித்தேன். அண்மையில் என்னை தொந்தரவு செய்த  படைப்பு தாரா. மலேசியாவில் பூழியனின் தலைமையில் வேலைக்கு வந்து அங்கேயே வேர்விட்ட தமிழ் வம்சாவளியினருக்கும் மிக அண்மையில் வேலைக்காக குடிபெயர்ந்த நேபாள நாட்டவர்களுக்கும் இடையில் நடக்கும் உரசல்களினூடாக நாவல் சொல்லப்பட்டிருந்தாலும் தங்கி வாழ எப்போதும் மனிதர்களுக்கிடையில் அல்லது மனித கூட்டங்களுக்கு இடையில் நடக்கும் பூசல்களில் உள்ள பல பரிணாமங்களை நாவல் தொட்டு செல்கிறதாக வாசிக்க முடிந்தது.

Continue reading

சண்முகப்பிரியா கடிதங்கள் -2

சண்முகப்பிரியா சிறுகதை

The short story “Shanmugapriya” by M. Navin revolves around the storyteller’s memories of a person named Shanmugapriya, whom they met during their school years at Wellesley Tamil School. The author reflects on how he had forgotten about Shanmugapriya until a visit to the beach with his three-year-old daughter triggered a memory of her.

Continue reading

நினைவில் நிற்கும் தாரா – பா.கங்கா

பா. கங்கா

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பல நூல்களை வாங்கினேன், அவற்றுள் ஒன்று தாரா. வாங்கியப் பிறகு ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் சித்ரா ரமேஷ் ‘சிங்கப்பூர் வாசகர் வட்டம்’ வழியாக ம. நவீன் எழுதிய ‘தாரா’, அ. பாண்டியன் அவர்கள் எழுதிய ‘கரிப்புத் துளிகள்’ ஆகிய நாவல்கள் குறித்தக் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ‘தாரா’ நாவல் கையிலிருந்தும் படிக்காமல் எப்படிச் செல்வது என்று ஒரு தயக்கம். ஏன்றாலும் நவீன் முகநூலில் தாராவுடனான பயணத்தைக் குறித்து எழுதியிருந்த பதிவுகளைப் படித்திருந்ததால் போக முடிவு செய்தேன். கலந்துரையாடலுக்கு ஒருநாள் முன்பு தாரா நாவலை எடுத்துச் சில அத்தியாயங்கள் மட்டுமே படித்தேன். கிச்சி, லிங்கம், கோகிலாவின் அறிமுகம், அஞ்சலையின் சொலவடை, கந்தாரம்மன், லஷ்மி சிலை, குளம், குகனின் மரணம், மருதுவின் செயற்பாடு என நாவல் என்னைத் தன்னுள் ஈர்த்துக்கொள்ள தொடங்கியது.

Continue reading