கடிதம்/எதிர்வினை

இலங்கையில் இருந்து ஒரு கடிதம்

வணக்கம் நவீன்,

எனது முகநூல் நண்பர் மனோஜ் உங்களின் ‘பட்சி‘ கதையின் இணையச் சுட்டியினை அனுப்பியிருந்தார். அதை வாசித்ததன் ஊடாக உங்களது எழுத்துக்களின் மீதான அபிமானியாக மாறியிருந்ததை உணர்ந்தேன். அதன் தொடர்ச்சியாக ‘நகம்‘ சிறுகதையை வாசித்தேன் என்று சொல்வதை விட கதையில் வாழ்ந்தேன் என்று திடமாக என்னால் சொல்ல முடியும்.

Continue reading

அப்சரா: கடிதம் 5

சிறுகதை : அப்சரா

அன்புள்ள நவீன்,  வரலாற்றுக்குள் இருக்கும் வரலாறு இயல்பாகவே சுவாரசியத்தையும் மர்மத்தையும் கொண்டுள்ளது. அது புனைவு வடிவில் எழுதப்படுகையில்அதன் மர்மம் இன்னும் கூடுகிறது. அவ்வகையில் அப்சரா சிறுகதையை சுவாரசியமான புனைவாக வாசிக்க முடிந்தது.

Continue reading

PENGIRL ROCK: சில மறைக்கப்பட்ட உண்மைகள்

மூன்று நாட்களுக்கு முன் ஆஸ்ட்ரோ அறிவிப்பாளர் ரேவதி மாரியப்பன் அவர்கள் தனது சமூக வளைத்தளத்தில் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட பதிவொன்று வெளியாகியிருந்தது. அவர் கண்களில் அழுகையின் மிச்சமிருந்தது. பலகாலமாக விழுதுகளில் பார்த்த முகமல்ல அது.

Continue reading

அப்சரா: கடிதம் 4

சிறுகதை: அப்சரா

அன்புள்ள நவீனுக்கு,
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

சாமானிய வருகையாளர்களுக்கு, தாங்கள் அறிந்த தொல்கதைகளை மேலோட்டமாக  உறுதிப்படுத்துகிறது  இந்த அங்கோர்வார்ட் கோயில். ஆனால்  அப்சராக்களின் உலகத்தை நம்பும்  நடன மங்கை சந்தவி(அருமையான பெயர்), வழிகாட்டி மரியா, பத்திரிக்கையாளர் ஷாமா மற்றும் நாவலாசியர் அபிராமிக்கோ அது ஆழ்ந்த உலகம்.

Continue reading

world of the Apsaras – Kogilavani Krishnamorty

அப்சரா சிறுகதை

Apsara, the most important name of my life. Even the name has to keep ensuing me for the rest of my life. I like to pronounce this name every day. I always pronounce it full of my feelings as a dancer and apprehend the meaning in it.

Apsara is a type of female spirit of the clouds and waters in Hindu and Buddhist culture. In Indian mythology, apsaras are beautiful, supernatural female beings. They are youthful and elegant, and superb in the art of dancing. They are wives of the Gandharvas, the court musicians of Indra. They dance to the music made by the Gandharvas, usually in the palaces of the gods, entertain and sometimes seduce gods and men.

Continue reading

அப்சரா: கடிதங்கள் 1

அப்சரா சிறுகதை

நவீன்,

அப்சரா வாசித்து விட்டேன். ஒரு வண்ணமிக்க கனவை இன்னொருவருக்கு அளிக்கும் கதை. வரலாறு ஒரு நினைவை நமக்கு அளிக்கும் அது பகல் போல. தொன்மம் ஒரு கனவை நமக்கு அளிக்கும் அது இரவின் இருள் போல. தொன்மம் நம்மிடம் கோருவது நிபந்தனையற்ற முழுதளிப்பை. அப்போது தான் அது கண் திறக்கும்.

Continue reading

வைரம் விவாதம்: வி.ஜி.சூர்யா

அன்பு நவீன்,

வணக்கம்.

உங்களின் நலம் விழைகிறேன்.

உங்கள் தனி தளத்தில் தோழி நிரஞ்சனா தேவி எழுதிய வைரம் – ஒரு விவாதம் கட்டுரையை கண்டேன். தமிழில் இலக்கியத்தில் ஒரு சிறுகதை சார்ந்து விவாதம் தொடங்குவது மகிழ்ச்சி. அந்த விவாதங்கள் மூலமே வாசிப்புக்கான புதிய திறப்புகள் நம்மிடம் திறக்கும். அந்த வகையில் அக்கட்டுரை முக்கியமானதே. ஆனால் அதில் சில போதாமைகள் தெரிகின்றன. அதனை ஒட்டி நான் பேசலாமென நினைக்கிறேன். அவர் போல் நானும் இதனை ஒரு விவாதமாகவே எழுப்ப விரும்புகிறேன்.

Continue reading

வைரம்: பாவண்ணன்

வைரம் சிறுகதை

அன்புள்ள நவீன், வணக்கம். நலம்தானே? உங்கள் சமீபத்திய கதைகளில் நேற்று படித்த வைரம் சிறுகதை மிகவும் பிடித்திருந்தது. இயல்பாக வளர்ச்சியுற்று உச்சத்தைத் தொடும் கதை.

Continue reading

வைரம்: கடிதம் 3

சிறுகதை வைரம்

அன்புள்ள நவீன் அவர்களுக்கு


இருளில் மட்டுமே மின்னும் அந்த கருப்பு வைரம் மனிதன் தன்னிடம் மீதம் வைத்திருக்கும் நல்லவைகளின் படிமமோ? நானும் பார்த்திருக்கிறேன் உச்சகட்ட நெருக்கடியே பேரன்பையோ பெரும் குணத்தையோ வெளி கொணர்கிறது,  ஏனோ பெரும் ஆற்றலின் மரம் சிறிய கசப்பிலேயே விதை ஊன்றுகிறது, விதி விலக்குகள் உண்டு, ஏனோ நல்லத்தனத்திற்கு அவ்ளோ மதிப்பில்லை என்பதை மக்கள் விரைவில் கண்டு கொள்கின்றனர் , மீண்டும் அவற்றை புதைப்பதில் முனைப்பு காட்டாவிடினும் அவ்வாறு அவை புதைகையில் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

Continue reading

வைரம்: ஒரு விவாதம்

அன்புள்ள நவீன்,

உங்கள் வைரம் கதை படித்தேன். நல்ல சிறுகதை, ஆனால் இது எனக்கான சிறுகதை அல்ல. இங்க கொஞ்சம் அழுத்தம் கூட்ட விரும்புகிறேன், இல்லையென்றால் இது தப்பான அர்த்தத்தில் புரிந்துக் கொள்ளப்படும். மேலும் இந்த கடிதம் வைரம் கதைக்கான வாசிப்பு அனுபவமாக எழுதாமல், ஒரு விவாத கட்டுரையாக எழுதலாம் என தோன்றியது. காரணம் அடுத்தடுத்த நீங்கள் எழுதிய இரண்டு சிறுகதைகள் (நகம், வைரம்) அதனை ஒட்டி வந்த கடிதங்கள். இந்த இரண்டு கதைகளுக்கான வாசிப்பை கூறி அதிலிருந்து இப்போது சிறுகதைக்கான டிரெண்ட் என்ன என்பதை சொல்லலாமென நினைக்கிறேன்.

Continue reading