சில எழுத்தாளர்களின் நாவல்களைத்தான் வெளியனாவுடன் வாசித்துவிட வேண்டுமென்று தோன்றும். எனக்கு அப்படி தோன்றும் எழுத்தாளர்களில் நவீனும் ஒருவர். நவீனின் நான்காவது நாவலான லீகாட்டை சிங்கையில் வெளியாவதற்கு முன்பே வாசித்துவிட்டேன்.
தனது முன்னுரையில் லீகாட் நாவல்தான் முதல் நாவலாக வெளிவந்திருக்க வேண்டும் என்று நவீன் குறிப்பிட்டுள்ளார். எனக்கும் அப்படியே நிகழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. Coming off age நாவலான லீகாட் நாவலின் கதைநாயகன் தீபனையும் அவனது அக இருளையும் ஏற்கனவே சிகண்டியில் வாசித்திருப்பதால் அது என்னுள் பெரிதான பாதிப்பு எதையும் நிகழ்த்தவில்லை.
Continue reading









