கடிதம்/எதிர்வினை

டிராகன்: கடிதம் 2

சிறுகதை: டிராகன்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நவீன இலக்கிய முகாமில் கலந்து கொண்டேன். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ‘இன்றைய உலக இலக்கியம் அறிமுகம்’ எனும் தலைப்பில் உரை ஆற்றினார். உலக இலக்கியப் படைப்புகளைச் சில கட்டமைப்புக்குள் வகைப்படுத்திக் கூறினார். அந்த வகையில், டிராகன் சிறுகதை இடப்பெயர்ச்சி சார்ந்த புனைவா (exodus writing) அல்லது புலம்பெயர்தலைச் சார்ந்த புனைவா (diaspora writing) ஒழுக்கச் சிக்கலை மையப் படுத்தும் புனைவா என கதையை வாசித்தவுடன் என்னை யோசிக்க வைத்தது. 

Continue reading

டிராகன்: கடிதம் 1

சிறுகதை: டிராகன்

டிரேகன் சிறுகதையை வாசித்தேன். இந்தக் கதையை இரு கோணத்திலிருந்து அணுகத் தோன்றுகிறது. உடற்குறையுள்ள மகனை ஈன்றதற்காக மனைவி மீது கோபம் கொள்வகிறார் இளங்கோவின் அப்பா. அந்தக் கோபத்தை அவன் தாயின் கற்பின் மீதான வெறுப்பாக ஐயமாக மாற்றிக் கொள்கிறார்.

Continue reading

பூனியான்: கடிதம் 4

பூனியான் சிறுகதை தொடக்க வரியைப் படித்ததும், என் நினைவிற்கு வந்தது, பேய்ச்சியில் இராமசாமியும், அப்போயும் காட்டிற்குச் செல்லும் பயணம்தான். அதில் பூனியான் பற்றிய எச்சரிக்கைகள் வழங்கப்படும் இருப்பினும் மிகப் பெரிய பாதிப்பைக் கொண்டு வரவில்லை.

Continue reading

பூனியான்: கடிதங்கள் 3

பூனியான்

அண்ணா, பூனியான் கதை வாசித்துவிட்டேன்.
பூனியான் அமானுஷ்யம் அறிவியல் என இரண்டு எதிரீடுகளின் நடுவில் நிற்கும் ஒரு சாம்பல் நிறத்தை தொடும் கதை. ரீத்தா, அருண் இருவரும் இந்த இரண்டு எதிரீட்டின் ஒன்றைப் பற்றிக் கொண்ட புள்ளிகள்.

Continue reading

பூனியான்: கடிதங்கள் 2

பூனியான் சிறுகதை

நவீன், பூனியான் கதையில் புனைவின் சாகசம் நிகழ்ந்திருக்கிறது. தாமதமாக படிக்கிறேனே என்ற வருத்தமும் ஏற்படுகிறது. பூனியான் உலகை ரீத்தா மனக்கற்பனைக்கும் நிஜத்திற்குமான மெல்லிய கோட்டின் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் விளையாடி இருக்கிறாள். குறிப்பாக ஒவ்வொரு தற்கொலை முயற்சியிலும் காப்பாற்றப்படுவதற்கான சாத்தியங்களை உண்டாக்கிக் கொண்ட நுட்பம் கண்டுபிடிக்க முடியாதவிதத்தில் இருக்கிறது. கதையில் நிதானமும் மனச்சிக்கலும் ஒரு சாகசத்துடன் உருவாகி உள்ளது. திறமையான எழுத்தாற்றல் அது. சபாஷ் நவீன்.

சு.வேணுகோபால்

Continue reading

பூனியான்: கடிதங்கள்

சிறுகதை: பூனியான்

பூனியான் பிரமாதமான கதை. முற்றிலும் தர்க்க உலகில் வாழும் ஒருவன். அமானுஷ்ய அதர்க்க உலகம் ஒன்றில் வாழும் ஒருவள். இருவருக்கும் இடையே கயிறு இழுக்கும் போட்டி. இந்த உலகுக்கு அவளை இழுக்கும் லாவகத்தை அவன் ப்ரயோகிக்கிறான். அந்த உலகை சோதித்துப் பார்க்க இவனை தூண்டில் புழு ஆக்குகிறாள் அவள். முதல் உணர்வாக திகில் கடந்து அவன் விழுந்தடித்து ஓடி வரும் தருணம் சிரித்து விட்டேன்.

சீனு, கடலூர்

Continue reading

கன்னி: கடிதங்கள் 4

கன்னி சிறுகதை

ம.நவீனின் கன்னி சுவாரசியமான ஒரு கதை. இதை நான் ஒரு கதைப்போர் என்றுதான் வாசிக்கிறேன். கதைசொல்லி ஒரு கதைசொல்லியை சந்திக்கிறான். அந்த கதைசொல்லி ஒரு பேய்க்கதையைச் சொல்கிறான். இவன் அதன் ஓட்டைகள் வழியாக கிரைமை கண்டுபிடிக்க முயல்கிறான். இருவரும் கதைகளால் மோதிக்கொள்கிறார்கள்.

Continue reading

கன்னி: கடிதங்கள் 3

சிறுகதை: கன்னி

அன்புள்ள நவீன்
ஒரு நாட்டின் வரலாற்றை இப்படியும் எழுதலாம் என கோடிட்டு காட்டியிருக்கும் கதை கன்னி.

புதர் மண்டி கிடக்கும் வரலாற்று பாதையில் சரண் போன்ற பத்திரிக்கையாளர்கள் கையில் வரலாறு என்று சொல்லப்படுவது மீட்டரு வாக்கம் செய்யப்படுகிறது .

Continue reading

கன்னி: கடிதங்கள் 2

சிறுகதை கன்னி

அன்பான நவின், கன்னி சிறுகதையை வாசித்தேன். இன்றைய எழுத்துகளில் நிலமே இல்லையா என ஏங்கி போயிருக்கும் என் போன்றவர்களுக்கு இதுபோன்ற சிறுகதைகள் வாசிப்பு சுவையை கொடுக்க கூடும்.

Continue reading

கடிதம்: கன்னி

சிறுகதை:கன்னி

நவீன், கன்னி சிறுகதையை வாசித்தவுடன் எனக்கு திருப்பரங்குன்றத்தின் பின்புறம் உள்ள ஞாயிறுக்கிழமை கோயில் நினைவுக்கு வந்தது. சோழர்காலம் முதலே இருக்கும் சப்த கன்னியர் கோயில் தமிழகம் முழுவதுமே இருப்பதுதான். மாமல்லபுரத்திற்கு நீங்கள் வந்தாலும் பார்க்கலாம்.

Continue reading