
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நவீன இலக்கிய முகாமில் கலந்து கொண்டேன். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ‘இன்றைய உலக இலக்கியம் அறிமுகம்’ எனும் தலைப்பில் உரை ஆற்றினார். உலக இலக்கியப் படைப்புகளைச் சில கட்டமைப்புக்குள் வகைப்படுத்திக் கூறினார். அந்த வகையில், டிராகன் சிறுகதை இடப்பெயர்ச்சி சார்ந்த புனைவா (exodus writing) அல்லது புலம்பெயர்தலைச் சார்ந்த புனைவா (diaspora writing) ஒழுக்கச் சிக்கலை மையப் படுத்தும் புனைவா என கதையை வாசித்தவுடன் என்னை யோசிக்க வைத்தது.
Continue reading

