
நவீன், பூனியான் கதையில் புனைவின் சாகசம் நிகழ்ந்திருக்கிறது. தாமதமாக படிக்கிறேனே என்ற வருத்தமும் ஏற்படுகிறது. பூனியான் உலகை ரீத்தா மனக்கற்பனைக்கும் நிஜத்திற்குமான மெல்லிய கோட்டின் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் விளையாடி இருக்கிறாள். குறிப்பாக ஒவ்வொரு தற்கொலை முயற்சியிலும் காப்பாற்றப்படுவதற்கான சாத்தியங்களை உண்டாக்கிக் கொண்ட நுட்பம் கண்டுபிடிக்க முடியாதவிதத்தில் இருக்கிறது. கதையில் நிதானமும் மனச்சிக்கலும் ஒரு சாகசத்துடன் உருவாகி உள்ளது. திறமையான எழுத்தாற்றல் அது. சபாஷ் நவீன்.
சு.வேணுகோபால்
Continue reading