
அன்புள்ள நவீன் அவர்களுக்கு
இருளில் மட்டுமே மின்னும் அந்த கருப்பு வைரம் மனிதன் தன்னிடம் மீதம் வைத்திருக்கும் நல்லவைகளின் படிமமோ? நானும் பார்த்திருக்கிறேன் உச்சகட்ட நெருக்கடியே பேரன்பையோ பெரும் குணத்தையோ வெளி கொணர்கிறது, ஏனோ பெரும் ஆற்றலின் மரம் சிறிய கசப்பிலேயே விதை ஊன்றுகிறது, விதி விலக்குகள் உண்டு, ஏனோ நல்லத்தனத்திற்கு அவ்ளோ மதிப்பில்லை என்பதை மக்கள் விரைவில் கண்டு கொள்கின்றனர் , மீண்டும் அவற்றை புதைப்பதில் முனைப்பு காட்டாவிடினும் அவ்வாறு அவை புதைகையில் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.





