இதுவும் மற்றுமொரு நாள்தான் எனும் தத்துவத்தையெல்லாம் நான் புதிய ஆண்டின் தொடக்கத்தில் சட்டை செய்வதே இல்லை. நான் இந்து புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு என எதையும் கொண்டாடுபவன் அல்ல. எந்த மத, இன பண்டிகைகளையும் விரும்புவதும் இல்லை. ஆனால் வருடத்தின் முதல் திகதியை ஒரு பண்டிகையைப்போல அவ்வளவு மெல்ல ரசித்து நகர்த்துவேன். எல்லாவற்றையும் முதலில் இருந்து தொடங்கலாம் என்றும் எல்லா கவலைகளும் தீர்ந்துவிட்டது என்றும் இனி எல்லாம் நலமாக நடக்கும் என்றும் நானே எனக்குள் சொல்லிக்கொள்வேன். புதிய சட்டை போட்டுக்கொள்வேன். அது தோலை நீக்கி புதுத்தோலை போர்த்திக்கொண்டதுபோல தோன்றும். புதிய வருடத்தின் மற்றுமொரு உற்சாகம் கடந்து சென்ற வருடத்தை முழுக்க அலசிப்பார்ப்பதில் தொடங்கும். அநேகமாக அந்த நாள் முழுவதும் அவ்வாறு கடந்தவற்றை எண்ணி அவற்றை ஒரு கனவுபோல கடப்பதிலேயே முடியும். அக்கனவு புதிய வருடத்தை கொஞ்சம் கவனமாக நகர்த்திச் செல்ல உதவக்கூடியதாக மாறும்.
மனசலாயோ : கடிதங்கள் 4
கேரளாவிற்கு மூன்று முறை பயணம் செய்திருக்கிறேன். நீண்ட கால இடைவெளிகளில். சட்டென்று பார்ப்பதற்கு மாற்றம் இல்லாததுபோலிருக்கும். ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த கேரளாவிற்கும் சில மாதங்களுக்கு முன்னர் நான் பார்த்த கேரளாவிற்கும் பெரும் மாற்றம். நவீனின் மனசிலாயோ தொடரைப் படித்த பின்னர் நான் அறிந்த சில விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் எனத் தோன்றியது.
முதலாவது, பூமி முழுக்க பருவநிலை மாறிவிட்டது. குளிர்காலத்து காலை நேரக் குளிர்ச்சியை கேரளாவில் இப்போது எல்லா இடங்களிலும் அனுபவிக்க முடியவில்லை. மலைப் பகுதிகளில்தான் நடுங்க வைக்கும் காலைக் குளிரை உணரமுடிகிறது. மற்றது வேகமாக நடைபெற்று வரும் நகரமயமாக்கலில் கேரளத்தின் பசுமைச் சூழல் மெல்ல மெல்ல கண்ணுக்குச் சட்டென்று தெரியாமல் குறைந்து வருகிறது.
மனசலாயோ : கடிதங்கள் 3
திரு.நவீனின் பயணக்கட்டுரை மிகவும் உயிரோட்டமாக இருக்கும். அலங்காரச்சொற்கள் கிடையாது. ஜிகினா தூவல் கிடையாது. உள்ளதை உள்ளபடியே ஒரு திரைப்படமாக சலிப்புத்தட்டாமல் வாசகரின் முன் வைத்து எழுதும் முறை மிகவும் வியக்கத்தக்கது. ஒரு வாசகரைப் கைப்பிடித்து அழைத்துச்சென்று ஒவ்வொரு காட்சியை நேரடியாக பார்த்த அனுபவம் கிடைக்கும். அவரின் எழுத்துக்கள் ஓவ்வொன்றும் வாகனின் கண்கள் எனலாம். நாமே சென்று நேரடியாகப்பார்த்தாலும் இவ்வளவு கூர்மையாக் கவனிப்போமா என்பது சந்தேகமே. சிகிச்சைச்சென்றும் அடங்கமாட்டாரா இந்த சார்? காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும் நடனமணியை போல கையில் கட்டிக்கொண்டே ஆடுகிறாரே எனக் குழப்பம் வந்தது. ஆனால் கட்டுரைப்படிக்கப்படிக்க நான் சுயநலவாதியாக மாறிவிட்டேன். அவரின் எழுத்தைப் பார்வையாககொண்டு நானும் எல்லாக்காட்சிகளையும் இரசிக்க ஆரம்பித்தேன் .
மனசலாயோ : கடிதங்கள் 2
எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு வணக்கம், நல்ல படைப்புகளை வாசிக்கும்போது நானுமே என்னை நல்ல வாசகனாக நினைத்துக்கொள்ளுமபடியான ஒரு உணர்வு என்னுள் ஏற்படுகிறது. அதன் மீதான புரிதல் நமக்குள் ஒரே இடத்தில் நிலையாய் நின்று விடுவதில்லை. அது ஒரு கொடியைப் போல படர்ந்து பரவிக் கொண்டே செல்லும். அப்படி ஒரு ஆழமான புரிதல் நம்மில் நின்று வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு படைப்பாகத்தான் உங்களின் இந்த பயணக் கட்டுரையை நான் பார்க்கிறேன். பொதுவாக நான் யாருடைய படைப்புகளையும் வாசித்து விமர்சித்ததும், கருத்துரைத்ததும் இல்லை. காரணம் அந்த அளவிற்கு நான் ஒரு தீவிர வாசகரல்ல.
மனசலாயோ 12: மின்னல் பொழுதே தூரம்
கொச்சியில் ஒரு இரவு மட்டும் தங்கிவிட்டு மறுநாள் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று மலேசியா திரும்பலாம் என்றே திட்டம். ஆனால் கொச்சிக்கு ஏற்றிச்சென்ற காரோட்டி சொல்லியே அங்கும் ஒரு விமான நிலையம் இருப்பதும் அங்கிருந்தும் மலிண்டோ விமானம் கோலாலம்பூர் வருவதும் புத்திக்கு உரைத்தது. அது முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம். ஒரு கணினி மையத்தில் இறங்கி டிக்கெட்டை திருவனந்தபுரத்திலிருந்து கொச்சினுக்கு மாற்றினேன். ஆனால் பணத்தை தொலைபேசியின் வழியே அழைத்து பல விபரங்களை உறுதி செய்தபின்னரே செலுத்த முடியும்.
மனசலாயோ 11: ஞாயிறு போற்றுதும்
மறுநாள் மந்தமாக விடிந்தது. திகதி, நேரம் மறந்திருந்தேன். மெதுவாக எழுந்து வெளியே சென்ற போது படகுகள் காயலில் மிதந்துகொண்டிருந்தன. பிள்ளைகள் புத்தகப் பைகளுடன் படகில் சென்றுகொண்டிருந்தனர். கொண்டு வந்திருந்த டீ சட்டைகளை துவைக்கவில்லை என்பதால் புதிதாக சில வாங்கியிருந்தேன். குளித்துவிட்டு அணிந்தபோது உற்சாகம் தொற்றிக்கொண்டது. காற்றில் இன்னும் அதிகாலையின் குளிர்ச்சி இருந்தது. பிளாக்கி (நாய்க்குட்டி) யாரோ புதியவர் ஒருவரிடம் கொஞ்சிக்கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் “தொ வரேன்” என்பதுபோல வாலை ஆட்டியது.
மனசலாயோ 10: தாயார் பாதம்
சுற்றுலாவில் இரண்டு வகை உண்டு. முதலாவது மனமகிழ்ச்சிக்காகச் சுற்றுலா செல்வது. மற்றது அனுபவத்திற்காகச் செல்வது. ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்றெல்லாம் இல்லை. வட்டமிடும் கருடனை இங்கிருந்து ரசிப்பது ஒரு ரகம் என்றால் அதனுடன் சேர்ந்து அது என்னவாக இருந்து உலகைப் பார்க்கிறது என அறிய முயல்வது மற்றுமொரு வகை. நான் தனியாகச் செல்கையில் இரண்டாவது ரகத்தையே தேர்ந்தெடுக்கிறேன். அதில் ஒரு வசதி உண்டு. எந்த வசதியின்மை ஏற்பட்டாலும் யாரிடமிருந்தும் முகச்சுளிப்புடன் அசூசையின் குரல் ஒலிக்காது. அவ்வகை முணுமுணுப்பு மொத்தப் பயணத்தையும் கெடுக்கும் ஒலி. அதைவிடக் கொடுமை சகித்துக்கொள்வதாகக் காட்டப்படும் சாந்தமுகம். பயணம் என்பது பயணம்தான். அங்கு எதுவும் நடக்கும். அப்படி நடக்கும் ஒவ்வொன்றுமே பயணம் கொடுக்கும் அனுபவம்தான். புகார்கள் இன்றி நிகழ்வதை கவனிப்பதே பயணம் நம்முள் உருவாக்கும் இன்னொரு மாயவழியை அனுமதிக்கும் சூத்திரம்.
மனசலாயோ 9: புள்ளினங்காள்
பதினான்காவது நாள் சிகிச்சையை நானே முடித்துக்கொண்டேன். ஆனால் விமான டிக்கெட்டை திகதி மாற்ற அதிக தொகை வந்ததால் கேரளாவில் சில இடங்களைப் பார்க்கலாம் என முடிவு செய்தேன். ஹரி ‘வலி இல்லையா?’ என பலமுறை கேட்டார். கழுத்து நரம்புகள் சத்தம் போடுவதைச் சொல்லவில்லை. சூட்டை அதிகமாக்கி ஒத்தடம் கொடுக்கிறேன் என மீண்டும் கழுத்தைக் கொப்புளிக்க வைத்துவிடக்கூடும். டாக்டர் தனது அன்பின் நிமித்தமாக 2.0 திரைப்படத்துக்கு அழைத்துச் சென்றார். அதற்கு அவர் கொதிக்கும் எண்ணெயிலேயே தள்ளிவிட்டிருக்கலாம். எப்போது திரையரங்கைவிட்டு வெளிவருவேன் என இருந்தது. ஆனால் ‘புள்ளினங்காள்’ பாடல் காட்சி கவர்ந்தது. அதுவே அப்படத்தின் ஆன்மா. ஆழப்புழா செல்லலாம் எனத் திட்டமிட்டிருந்த எனது முடிவைப் புள்ளினங்காள் மாற்றியது. கோட்டையம் செல்லலாம் என முடிவெடுத்தேன். கோட்டையத்தில்தான் குமரகம் எனும் சுற்றுலா கிராமமும் பிரசித்திபெற்ற பறவைகள் சரணாலயமும் இருக்கிறது.
மனசலாயோ 8: திருமுகப்பில்
ஏறக்குறைய பத்தாவது நாளில் நான் மருத்துவரிடம் ஊருக்குப் புறப்படப்போகும் மனநிலையைச் சொன்னேன். கழுத்து வலி குணமாகியுள்ளதையும் நரம்புகளின் சத்தம் மட்டும் மிச்சம் இருப்பதையும் கூறினேன். டாக்டர் இன்னும் முடிக்கவேண்டிய சில வைத்தியங்களைத் துரிதப்படுத்தலாம் என்றார். நான் ஊர் திரும்புவதற்குள் எனது ஆசை ஒன்றைக் கூறினேன். அது பத்மநாப சுவாமி கோயில் செல்வது. 2011-இல் அதன் பாதாள அறைகளில் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் மூலமே எனக்கு இக்கோயிலின் பெயர் அறிமுகம்.
மனசலாயோ : கடிதங்கள் 1
படைப்பாளி வாழ்வின் அனுபவத்திலிருந்து அரூபமாகத் திரண்டு உருவெடுக்கும் தான் பெற்ற தனக்கான தனி உண்மையை/ கேள்வியை/ சந்தேகத்தை சத்தம், ஒளி, வண்ணம், மொழி போன்ற மூலங்களைப் பயன்படுத்தி வாசகனுக்கு / ரசிகனுக்கு அவ்வரூபத்தைக் கடத்துகிறான். கைவினைக் கலைஞன் இந்த மூலங்களைக் கொண்டு அனைவருக்கும் பரிட்சயமான பொது உண்மையை/ பொது ரசனையை/ அறுதியிட்ட நீதியை/ திட்டவட்டமான கட்டமைப்பை வேறு வகையில் மறுநிர்மாணிப்பு செய்துபார்க்கிறான்.
அருமையான விளக்கம்… மனசலாயோ தொடர்ந்து வாசிக்கிறேன். அருமையாக இருக்கிறது. இனிமேல் சாராவைப் பற்றி எழுத இடம் இருக்காதே என எண்ணும்போது வருத்தம் மேலிடுகிறது. ‘மனசலாயோ’ ஒரு புத்தகமாகவே தாங்கள் போடலாம்
முனியாண்டி ராஜ்