மனசலாயோ 7: தன்செயலெண்ணிய தவிப்பு

ma.navin21 நாட்கள் சிகிச்சைக்காக ஒதுக்கியிருந்தேன். முதல் வாரம் கடந்ததுமே கழுத்து வலி குறையத்தொடங்கியது. எனவே 14வது நாளுடன் புறப்பட்டுவிடலாம் எனத்தோன்றிக்கொண்டே இருந்தது.

சிகிச்சை காலத்தில் காலை 6.30 மணிக்கு எழ வேண்டும். சில ஆயுர்வேத மருந்துகளை உண்டுவிட்டு, ஒன்றரை மணி நேரம் எளிய யோகா செய்வேன். ஏழு நாட்கள் கடந்தபோது ஜிம்னாஸ்டிக் நாடாபோல உடல் சிக்கல் இல்லாத வளைவுகளுக்கு ஒத்துழைத்தது. 30 நிமிட ஓய்வுக்குப்பின் கசாயம் கொடுப்பார்கள். அதன் கசப்பு அடங்கியதும் காலை பசியாறை. 9.30க்கு மசாஜ் தொடங்கி 11.30 க்கு முடியும்.

Continue reading

மனசலாயோ 6: சாரா

index 03பெரியதும் சிறியதுமாக 12 யானைகள் உள்ள சரணாலயம் அது. இன்னும் அதிகம் இருக்கலாம். நாங்கள் அவ்வளவுதான் பார்த்தோம். சரியாக நான்கு மணிக்கு அவற்றை நெய்யாறு அணையில் குளிப்பாட்டுகிறார்கள். யானைப்பாகன் அதன் மேலேறி ஓட்டி வரும் காட்சி அபாரமானது. ஒரு மேட்டு நிலத்திலிருந்து சரசரவென இறங்கி வந்துவிடுகிறது யானை. என்னை மிக அருகாமையில் அந்த யானை கடந்து சென்றது. நான் நகரவில்லை. மிக அருகில் அதன் தோல் சுருக்கங்களைப் பார்க்க ஆவல் மிகுந்தது. ஹரி அது பெண் யானையென்றார்.

Continue reading

மனசலாயோ 5: சேமமுற வேண்டுமெனில்

yogaகாலையில் ஆறரைக்கெல்லாம் தனக்கு யோகா சொல்லித்தரவேண்டும் என்பதும் மாலையில் ஒருதரம் யோகா சொல்லித்தர வேண்டும் என்பதும் சாராவின் வாதமாக இருந்தது. காலை ஆறரை என்றதும் என் வயிற்றில் புளி மூட்டையையே கரைத்தது போல உணர்ந்தேன். அன்று மாலை சுயமாகவே யோகா செய்திருக்கிறாள் என அவர்கள் உரையாடலில் புரிந்தது. அந்நேரத்தில் நான் பார்வதிபுரத்தில் கோழிக்குழம்பு சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கலாம் என ஊகித்துக்கொண்டேன். மருத்துவர் சுலபமான யோகாவை சுயமாகவே செய்யலாம் என்பதாக விளக்கப்படுத்திக்கொண்டிருந்தார். “சுயமாகச் செய்ய வேண்டியதென்றால் நான் மெக்ஸிகோவிலேயே செய்துகொள்வேனே ஏன் இங்கு வர வேண்டும்?” என்றாள். கொஞ்ச நேரம் யோசித்த மருத்துவர், என்னைப் பார்த்து “இருவரும் நாளை காலை ஆறரைக்குத் தயாராகி விடுங்கள்” எனக்கூறி அறைக்குச் சென்றார். சாரா வெற்றிக்களிப்பில் சிரித்தாள். எனக்கு ஏதோ நன்மை செய்துவிட்டதாக நினைப்பு.

Continue reading

மனசலாயோ 4: பிரதமன்

Ada-Pradhaman-Creativity (படைப்பாற்றல்) மற்றும் Crafting skills (கைவினை திறன்) ஆகியவற்றுக்கான வித்தியாசம் என்ன?

இதன் வித்தியாசம் தெரியாமல்தான் நமது கல்விக்கூடங்கள் படைப்பாற்றலை வளர்ப்பதாகச் சொல்லி இயங்குகின்றன. இந்த வித்தியாசம் தெரியாமல்தான் நமது கலை இலக்கிய உலகமும் படைப்புத்திறன் எனச் சொல்லிக்கொண்டு இயங்குகிறது. பயன்படுத்தாத பாட்டில்களைக் கொண்டு சிறிய பூச்சாடிகளை உருவாக்குவது, மணிகளைக் கொண்டு ஓவியத்தை அலங்கரிப்பது, அலுமினிய டின்களில் குருவிகள் செய்வது எனப் பள்ளிகளில் போதிக்கப்படுவதையும் அதை திறமையாகச் செய்யும் மாணவனையும் படைப்பாளன் எனச் சொல்ல முடியாது. அவர்கள் கைவினைத்திறன் பெற்றவர்கள் எனலாம்.

Continue reading

மனசலாயோ 3: ரயிலில்

train2திரும்பும்போது ஜெயமோகனின் மூன்று கதைகள் குறித்தும் நினைத்துக்கொண்டேன். கதை குறித்து உரையாடியவற்றைத் தொகுத்துப்பார்த்தேன். விடுபட்டவற்றை இணைத்துக்கொண்டேன். மீண்டும் அவற்றைப் படித்துப்பார்க்க தோன்றியது. தொலைபேசியில் இணைய இணைப்பில்லை. சில இடங்களை சில வரிகளை மட்டும் நினைவில் இருந்து மீட்டுப்பார்த்தேன்.

Continue reading

மனசலாயோ 2: செருக்கழித்தல்

000இவ்வருடம் வழக்கத்தைவிட முன்னதாகவே கலை இலக்கிய விழாவுக்கான பணிகள் தொடங்கியிருந்தன. மலேசியா மட்டும் அல்லாமல் தமிழகத்திலும் கலை இலக்கிய விழாவில் வெளியீடு காணும் நூல்கள் அறிமுகமாக வேண்டும் எனும் நோக்கில் சென்னை மற்றும் மதுரையில் நூல்களை வெளியீடு செய்திருந்தோம். நூல்களைப் பற்றி பேசியவர்கள் அனைவரும் தமிழின் முக்கியப்படைப்பாளிகள். ஒரு நூலின் உள்ளடகத்தின் தரத்தை அளவிடுவதில் நிபுணத்துவம் மிக்கவர்கள். அவர்கள் வழியே நூல் கவனம் பெற வேண்டும் என திட்டமிட்டிருந்தோம்.

Continue reading

மனசலாயோ 1: தென்னங்கடல்

20181202_175332திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கியதும் கார் காத்திருந்தது. காரில் அமர்ந்தவுடன், பார்வதிபுரம் இங்கிருந்து பக்கமா? எனக் கேட்டேன். வாகனமோட்டி அருகில்தான் எனச் சொன்னார். ஆனால் எவ்வளவு அருகில் எனக் கொஞ்சம் தமிழ் கலந்த மலையாளத்தில் சொல்ல நெடுநேரம் முயன்றுக்கொண்டிருந்தார். சிகிச்சைக்கு கேரளா வந்ததும் வராததுமாக ஏன் தமிழகத்தில் உள்ள ஊரைப்பற்றி விசாரிக்கிறான் என அவர் யோசித்திருக்கக் கூடும்.  ஆயுர்வேத சிகிச்சை நிலையம் விமான நிலையத்திலிருந்து தள்ளி ஒரு மேட்டுப்பகுதியில் பசுமைக்கு நடுவில் இருந்தது. தனித்த இருமாடிக் கட்டடம். மொட்டை மாடியில் நின்று பார்த்தால் சுற்றிலும் பச்சையாகத் தெரியலாம் என நினைத்துக்கொண்டேன்.  இரவாகிவிட்டிருந்தது. மருத்துவர் காத்திருந்து தங்கும் வசதிகளைக் காட்டினார்.

Continue reading

வாசிப்பும் ரசனையும்: சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை கதைகளை முன்வைத்து.

மயாழ் சிறுகதை பட்டறையில் பங்கெடுக்க உள்ள ஆசிரியரிமிருந்து ஒரு கேள்வி.

புலனக்குழுவில் நீங்கள் குறிப்பிடும் படைப்புகள் அனைத்தும் சிறப்பானவையாக உள்ளன. இவ்விரு படைப்பாளிகளின் எல்லா படைப்புகளும் சிறந்தவைதானா? ஒரு படைப்பாளியின் அனைத்துப் படைப்புகளும் சிறந்தவையாக இருக்குமா?

புனிதவதி, ஜொகூர்

Continue reading

சு.வேணுகோபாலின் புனைவுலகம்: இன்னொரு பசியின் – 4

venugopal118.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.

சு.வேணுகோபாலின் புனைவை உள்வாங்க கவனம் சிதறாத வாசிப்பு தேவை. பின்னர்  அதற்கு முன் இருந்த வாழ்வு குறித்தான நம்பிக்கைகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும்  மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் துணிவு வேண்டும். இல்லாத பட்சத்தில் அவை வெறும்  குழப்பத்தையும் ஒழுக்க அதிச்சியையும் மட்டுமே ஏற்படுத்தும். பொழுது போக்கு வாசகர்களுக்கு சு.வேணுகோபாலின் கதைகளின் நுட்பம் அகப்படுவதே இல்லை.

Continue reading

பவா செல்லதுரையின் புனைவுலகம்: கலையின் இறுதியாத்திரை – 3

index18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  ‘ஏழுமலை ஜமா’ சிறுகதை வாசிக்க : ஏழுமலை ஜமா

Continue reading