21 நாட்கள் சிகிச்சைக்காக ஒதுக்கியிருந்தேன். முதல் வாரம் கடந்ததுமே கழுத்து வலி குறையத்தொடங்கியது. எனவே 14வது நாளுடன் புறப்பட்டுவிடலாம் எனத்தோன்றிக்கொண்டே இருந்தது.
சிகிச்சை காலத்தில் காலை 6.30 மணிக்கு எழ வேண்டும். சில ஆயுர்வேத மருந்துகளை உண்டுவிட்டு, ஒன்றரை மணி நேரம் எளிய யோகா செய்வேன். ஏழு நாட்கள் கடந்தபோது ஜிம்னாஸ்டிக் நாடாபோல உடல் சிக்கல் இல்லாத வளைவுகளுக்கு ஒத்துழைத்தது. 30 நிமிட ஓய்வுக்குப்பின் கசாயம் கொடுப்பார்கள். அதன் கசப்பு அடங்கியதும் காலை பசியாறை. 9.30க்கு மசாஜ் தொடங்கி 11.30 க்கு முடியும்.








