
இரும்பு வேலிக்குப் பின்னால் அடர்ந்து வளர்ந்திருக்கும் புதர்களுக்குள்ளிருந்தும், மரங்களில் ஊர்ந்தும் இந்தக் குடியிருப்புக்குள் ஏதும் வரக்கூடுமோ என்ற அச்சமூட்டும் பிரம்மையுடன் இந்த அமைதியான மலைப்பகுதியில் நான் உறங்கத் தொடங்கி சில இரவுகள் கடந்துவிட்டன. கூடவே, நான் வசிக்கும் இந்த வீட்டின் குடியிருப்பாளர் யார் என்ற என் சந்தேகம் என்னை மேலும் அயற்சியுற வைக்கிறது. இந்தச் சிறிய…