Category: புத்தகப்பார்வை

வாழ்க வாழ்க: கோஷமிடுபவர்களின் கதை

மௌனி 1938ல் மணிக்கொடியில் ‘மாறாட்டம்’ என்றொரு கதை எழுதி இருக்கிறார். மௌனியின் பல கதைகளில் வருவதுபோல ஒரு ‘அவன்’ தான் இக்கதையிலும் நாயகன். ஒரு மதியத் தூக்கத்துக்கு பின் நகரில் உலாத்திவரக் கிளம்புகிறான். அவனை ஒரு கிராமத்து ஆள் பின் தொடர்கிறான். அந்த ஆளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இவன் எங்கெல்லாமோ சுற்றுகிறான். அந்த ஆள் விடுவதாக…

உபாதைகள் மொய்க்கும் தீம்புனல் உலகம்

(1) சுதந்திரத்திற்குப் பிறகு மிகக் குறுகிய காலத்தில்  சமூகம், அரசியல்  மற்றும் சித்தாந்தம் என பலதரப்பட்ட வகையில் மாறுதல்களைக் கண்டவற்றில் தமிழகம் மிகவும் முக்கியமான மாநிலம்தான். மாறி  மாறி வரும் தமிழ் சமூக சூழலில் இன்னும் ஒரு யதார்த்த நாவலுக்கான களம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  தான் பாடுபட்டு ஒன்றை உருவாக்கி தன் தலைமுறைக்கு வைத்துச் செல்வோம்,…

மரயானை: எஞ்சும் படிமம்

இலக்கியத்தில் நிலைபெற்றிருக்கும் சில படிமங்கள் காலாதீதமான கனவுகளை விதைக்கச் செய்கின்றன. அத்தகைய கனவுகளை விரியச் செய்யும் படிமம்தான் ‘மரத்தில் மறைந்தது மாமத யானை’ எனும் திருமந்திர வரி. மரத்தில் ஒளிந்துகொண்டது மாபெரும் யானை எனும் பொருள் தரும் திருமந்திர வரி படைப்பாளர்களுக்குள் இருக்கும் படைப்பு மனத்தைத் தூண்டும் மகத்தான வரி. மரம் நிலைகொள்ளுதலின் குறியீடு. வேரை…

கங்காபுரம்: வரலாற்றின் கலை

வரலாற்றை நாவலாகப் புனைவதில் ஒரு வசதியுள்ளது போலவே சிக்கலுமுள்ளது. இதில் வசதியென குறிப்பிடுவது நாவலுக்கான தகவல்கள். வரலாறு நமக்கு தகவல்களை நம் முன் அறுதியிட்டு தருகிறது. திரண்டு கிடக்கும் அந்த தகவல்களை நம் புனைவு யுக்தியின் மூலம் கேள்விகளை எழுப்பி மேல் சென்றால் போதுமானது. அந்த தகவல்களைப் புனைவாக்கும் தருணங்கள்தான் அதில் ஆசிரியன் எதிர்க்கொள்ளக்கூடிய சிக்கல்.…

விலங்குகள் திரியும் கதைகள்

சமகால மலேசிய புனைவிலக்கிய வெளியில் ம.நவீனின் எழுத்துகள், எண்ணிக்கையாலும் அது அடைந்திருக்கும் வாசகப் பரப்பாலும் கவனம் கொள்ள வைக்கின்றன. ஆழமற்ற நேர்கோட்டுக்கதைகளை அதிகம் வாசித்துப் பழக்கியிருக்கும் மலேசிய வாசக சூழலில் ம.நவீனின் புனைவுகள் மாறுபட்ட வாசிப்பனுபவத்தைத் தருபவை. வாசகனின் உழைப்பைக் கோருபவை. காலத்தால் நிகழக்கூடிய அத்தனை மாற்றங்களையும் உள்வாங்கியே இலக்கியம் பரிணமிக்கிறது. மொழி, சொல் முறை,…

ஓந்தி : புதிரான நனவிலியும் ஃபூகு மீனின் நஞ்சும்

சிங்கப்பூர் எழுத்தாளர் எம்.கே.குமார் அவர்களின் ‘ஓந்தி’ சிறுகதைத் தொகுப்பு ‘யாவரும்’ பதிப்பகத்தாரால்  2019ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. இத்தொகுப்பில் எட்டு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் சு.வேணுகோபாலின் விரிவான முன்னுரையைக் கொண்டிருக்கிற இத்தொகுப்பு ‘சிங்கப்பூர் இலக்கிய  விருது 2020’ தகுதிச் சுற்றில் தேர்வாகி உள்ளது. 2017ஆம் ஆண்டு எழுத்தாளர் மாலன் அவர்கள் தேசிய…

அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ ஒரு பார்வை

‘ஆறஞ்சு’ (2015), என்ற  சிறுகதைத் தொகுப்பையும் “சிறுகாட்டுச் சுனை” (2018) என்ற சிங்கப்பூர் மரபுடைமை பற்றிய கட்டுரைத் தொகுதியையும் எழுதி வெளியிட்டுள்ளவர் எழுத்தாளர் அழகுநிலா. ‘கொண்டாம்மா கெண்டாமா’ (2016), ‘மெலிஸாவும் மெலயனும்’ (2016), ‘மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும்’ (2018), ‘பா அங் பாவ்’ (2019) என குழந்தைகளுக்காக நான்கு படப் புத்தகங்களையும் அழகுநிலா எழுதியுள்ளார்: சிங்கப்பூர்…

பேய்ச்சி: அன்னையின் பேய்மையும் அதீதத்தின் திரிபும்

‘பேய்ச்சி’ நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை எழுதுவதற்கு முன்பு பேச்சியைப் பற்றிய எனது அறிதல்களையும் அனுபவங்களையும் முதலில் எழுத விரும்புகிறேன். என்னுடைய சிறுவயதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அந்தச் சம்பவத்தைப் பார்த்தேன். அம்மாச்சி வீட்டிலிருந்த நாய் ஒன்று குட்டிகள் ஈனுவதைச் சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென்று நாங்கள் எதிர்பார்க்காத வகையில் நாய் தனது குட்டி ஒன்றைச் சாப்பிட…

இன்றில் நிலைக்காதவை

சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாவின் இரண்டாம் நாளில் நாங்கள் சென்ற வாகனம்   பழுதாகி  நின்று விட்டது. இருமருங்கும் மரங்கள் அடர்ந்திருந்த ஆளற்ற சாலையில் எங்களது சில மல்லுக்கட்டல்களுக்குப் பின்னும் அதன் பிடிவாதம் தளரவில்லை. சோர்ந்து போன நண்பர் அப்படியே நடந்து சென்று திரும்பி மரத்தில் எழுதிக் கட்டப்பட்ட அட்டையில் உள்ள எண்ணைக் குறித்துக் கொண்டு வந்தார்.…

உள்மடிப்புகளால் உயிர்க்கும் பேய்ச்சி

காலத்தைக் கிழித்துக் கொண்டு வரும் இயற்கையின் பூதாகரமான கரங்களால் இந்த நாவல் தன்னைத் தானே வடித்துக் கொண்டதாகதான் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இந்த நாவலுக்குள் வந்து போன ஒவ்வொரு வாழ்க்கைக்குமான துயரம் ஓர் இரும்பு பிடி போல நம்மை உலுக்குபவை. இறுதியில் இந்த வாழ்க்கை, துயரத்தைப் போர்த்திக்கொண்ட வெறும் தூசுபடலம்தானோ என்ற வெறுமையின் உச்சத்தைக்…

வேரறிதல்: ம.நவீனின் ‘பேய்ச்சி’

அக்காலத்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குலசேகரத் தம்புரான் என்ற சிற்றரசர் இருந்தார். அரசராக அவர் இருந்தபோதிலும் உண்மையான அதிகாரம் ஏழு நாயர் தரவாட்டு குடும்பங்களிடம் இருந்தது. இவர் ஒருமுறை சமஸ்தானத்தை விட்டு வெளியில் சென்றபோது ரேணுகா என்ற தெலுங்குப் பெண்ணிடம் காதல் கொண்டார். அவளை மணமுடித்து இங்கு அழைத்து வந்தார். தெலுங்கு பெண்ணென்பதால் அவளை வடுகச்சி என்றழைத்து…

வல்லினம் பரிசுக் கதைகள்: என் பார்வையில்

திரைப்படங்கள், சீரியல்கள், ஜனரஞ்சக நாவல்கள் என முன்பு ஆர்வம் கொண்டிருந்தாலும் அவ்வார்வமென்பது தற்பொழுது மாறி நல்ல இலக்கியங்களை வாசிப்பதன் மீதிலான ஈடுபாட்டினை மிகைப்படுத்தியுள்ளது. குறிப்பாகச் சிறுகதைகள். சிறுகதையினை வாசித்து முடிக்கையில் எண்ணக்கிடங்கில் கணக்கற்ற எண்ண அலைகளினை என்னுள் உண்டாக்கி மீள்வாசிப்பிற்குள் என்னை மூழ்கடித்து மிதக்க வைப்பதால் கூட இருக்கலாம். வல்லினம் நடத்திய போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி…

பெண் குதிரை: வாசிப்பு அனுபவம்

எண்பதுகளில் தமிழ் இலக்கியம் பல்வேறு நவீன தாக்கங்களால் கவரப்பட்டு மாற்றங்களையும் தீவிரத்தையும் பெற்றபோதும் மலேசிய படைப்புகள் அதிகமும் மதியுரை கதைகளாகவே படைக்கப்பட்டன. எளிய குடும்பக் கதைகளாக அவை இருந்தன. வெகு சில எழுத்தாளர்கள் மட்டுமே எதார்த்தவியல் தாக்கங்களையும் முற்போக்கு இலக்கியப் பாதிப்புகளையும் தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தினர். தீவிர இலக்கிய உந்துசக்தியாக அவர்கள் இருந்தனர்.  அவர்களில் சை.பீர்முகமது…

சை.பீர்முகம்மது சிறுகதைகள்: கட்டுமானத்திற்குள் சிக்கிய கலை

ஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் மூலமாக உந்தப்பட்டு உருவாகி, அவர் வழி மலேசியப் புனைவிலக்கியங்களை நகர்த்திச் சென்றவர்களின் வரிசை என சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் அவ்வாறு உருவாகி ஆழமாகத் தடம் பதித்தவர்கள். சீ.முத்துசாமி மிக விரைவிலேயே மொழியாலும் அகவயப்பார்வையாலும் தனக்கான தனி பாணியை அடையாளம் கண்டார். அரு.சு.ஜீவானந்தன் பெரும்பாலும் பண்பாட்டுடன் முரண்படும் மையக் கதாபாத்திரங்களை…

மண்ணும் மனிதர்களும்: வரலாற்றில் பயணம்

ஒரு கலைஞனுக்கான உலகம் நிச்சயம் சராசரியர்களிடமிருந்து மாறுபட்டவை. தான் கடந்து போகும் ஒவ்வொன்றையும் வரலாறாக்க தெரிந்தவர்கள் அவர்கள். நமக்கு முன் வாழ்ந்த பல தலைமுறைகளின் வரலாற்றை படைப்பாக்கவும் அறிந்தவர். ஓர் இனத்தை, ஒரு மதத்தை, ஓர் ஆட்சியை, ஒரு மண்ணை அதன் மக்களை, அவர்களின் பின்புலத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன் சென்று அறிய மட்டுமே வரலாறு…