Category: கட்டுரை

புல்லின் விதைகள்

ஒருதுளி ஈரம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் காற்றில் பறந்து வருகின்ற புல்லின் விதைகள் ஈரத்தைக் கவ்விப் பிடித்துத் துளிர்த்து விடுகிறது. அப்படிக் காற்றில் அலைந்து வரும் விதைகள் சிமிண்டு பாவிய தரையின் உடைவிடுக்கில் கூட பற்றிக்கொள்வதைக் கண்டிருக்கின்றேன். வரலாற்றுத் தருணங்களும் அவ்வாறானதுதான். அதன் கதையாடல்களுக்கு நடுவில் உயிர்ப்புள்ள நுண்மையான பகுதிகள் புனைவுக்கான சாரமாக எழுத்தாளர்களால் விதைக்கப்படுகிறது.…

‘ரிங்கிட்’ – மதிப்பு வீழாத நாணயம்

மரணத் தருவாயில் இருக்கும் ஒருவருடைய மரணம் நிகழ போவது அவருக்கு மட்டுமே தெரியும். அது எப்படி இருக்கும் என்பது யாராலும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் செத்து மீண்டும் பிழைத்து வந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அப்படியொரு நிகழ்வு நடக்கப்போவது இல்லை. பிறகு எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? ஒரு நல்ல எழுத்தாளனால் மட்டுமே சொல்ல…

ரிங்கிட் நாவல் விமர்சனம்: நிகழ்த்திக் காட்டும் வரலாறு

வரலாற்றுநாவல் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் இப்படிக் கூறுகிறார். ”வரலாற்றுநாவல் என்பது திருப்பிச்சொல்லப்பட்ட வரலாறேதான். அந்தத் திருப்பிச்சொல்லும் முறையில் நிகழ்ச்சிகளைத் தொடுக்கும் ஒழுங்கு, நிகழ்ச்சிகளைக் குறியீடுகளாக ஆக்கும் நுட்பம் போன்றவற்றினூடாக ஆசிரியன் உருவாக்கும் மையநோக்குதான் அதைக் கலைப்படைப்பாக ஆக்குகிறது”. இப்படியான ஒரு முயற்சியிலிருந்து சற்று விலகிப் போயிருக்கிறது ஆசிரியர் அ.பாண்டியனின் ‘ரிங்கிட்’ நாவல். வல்லினம் நடத்திய குறுநாவல்…

மிச்சமிருப்பவர்கள் : ஒடுக்கப்பட்டக் கூடுகளின் ஓங்கல்

ஒரு சமுதாயம் குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் எதிர்க்கொண்ட நிகழ்வுகளின் விவரிப்பாகத்தான் பெரும்பான்மையான மலேசியத் தமிழ் நாவல்கள் எழுதப்படுகின்றன. சுதந்திரத்திற்குப்பின், வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு வெளிகளில் வெவ்வேறு சமூக அடுக்குகளில் உள்ள இந்தியர்களால் எதிர்கொள்ளப்பட்ட உயிர் உருக்கும் சம்பவங்களை ஒரு புறநகரின் பின்னணியில் தொகுத்து கிட்டத்தட்ட 50 கால அவல நிலையை மிகத்துல்லியமாய் காட்சிப்படுத்திச் செல்வதே மிச்சமிருப்பவர்கள்…

மிஞ்சியிருப்பவர்களின் கதை

எழுத்தாளர் செல்வன் காசிலிங்கம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. அவர் எழுதிய படைப்புகள் எதையும் வாசித்ததில்லை. அவரின் புனைவில் முதன் முதலாய் படித்த எழுத்துப்படிமம் இந்த ‘மிச்சமிருப்பவர்கள்’ நாவல் மட்டுமே. என்னுடைய முதல் அனுமானம், இவ்வளவு சிறிய நாவல், கண்டிப்பாக அவ்வளவு சுவாரசியமாக இருக்காது என்பதுதான். ஆனால் இந்நாவல் இண்ட்ராப் (HINDRAF) பற்றியது என முகவுரையில் வாசித்ததும்…

மலைக்காடு: இழப்பும் நிராகரிப்பும் இணைந்த வாழ்க்கை

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், சஞ்சிக்கூலிகளாக மலேசியாவிற்கு வந்திறங்கிய இந்தியர்களின் வாழ்வியலையும் உளவியலையும் அலசும் இந்நாவல் அதனூடே பல்வேறு அரசியலையும் பேசுகிறது. தர்மபுரி பக்கத்தில் இருக்கும் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. பஞ்சத்தில் வாடிய கிராமத்திலிருந்து தன் 15 வயது மகன் உண்ணாமலையுடன் மலாயா புறப்படுகிறார். வளமான வாழ்வாதாரத்திற்காக அயலகம் புறப்படும் மாரிமுத்துவின் வாழ்க்கை என்னவானது? மூன்று…

மலைக்காடு: மலைமேட்டு முனியின் கனவுகாடு

இரு நூற்றாண்டுகளுக்கு முன், ஒரு  குமுகாயத்தின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் பறித்துக் கொண்டு கொத்தடிமைகளாய், வாய்ப்பொத்திக் கைக்கட்டி ஏவிய வேலைகளைச் செய்ய உலகம் முழுதும் தேடித் திரிந்து வெள்ளையர்கள் அள்ளிக் கொண்டு வந்த பேரினம்தான் தென்னிந்தியத் தமிழர்கள். கப்பல்களில் அடித்தட்டு மக்கள் பயணிக்கக் கூடிய அந்தப் பகுதியில், மனித மலமும் மூத்திரமும் ஒருங்கே காய்ந்து நாறும்…

வனத்தின் குரல்

ஆதியிலிருந்து இன்றுவரை மனிதனுடைய வாழ்க்கை இயற்கையோடு இணைந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் இயற்கையைக் கொண்டே வாழ கற்றுக் கொண்டுள்ளான். இயற்கையில் இருந்தே மனிதன் தன் அடிப்படைத் தேவைகளாகிய நிலம், காற்று, நீர், உணவு, உடை என அனைத்தையும் பெற்றுக்கொள்கிறான். இது மற்ற உயிரினங்களுக்கும் பொருந்தும். இப்படியாக எல்லா இடங்களிலும் உயிர்கள் அனைத்தையும் இயற்கை ஒன்றிணைக்கிறது. இரத்தமும்…

பெயர் புரட்சி

மலேசியாவில் 80-ம் ஆண்டுகளில் இந்திய சமூகத்தில் ஒரு ‘புரட்சி’ சத்தமில்லாமல் நடந்தது.  ஆனால் அது சற்று விநோதமான மாற்றம் என்பதால் யாரும் புரட்சி பட்டியலில் இணைத்துக் கொள்வதில்லை. இப்போது மீட்டுணர்ந்து பார்க்கையில், அந்த விநோத புரட்சிக்கு மூலமாக ஒரு புத்தகம் இருந்திருப்பதையும் அந்தப் புரட்சியில் என் அப்பாவும் ‘களமிறங்கிப் போராடியிருப்பதையும்’ என் அண்ணனும் நானும் அதற்கு…

அந்தக் கப்பல் வந்துகொண்டே இருக்கிறது

சமகால தமிழ் சினிமாக்களில் அல்லது வெப்சீரீஸ்களில் பொறுப்புத்துறப்பு என்று (disclaimer என்பதை மிக மோசமான மொழிபெயர்ப்பில்) தொடக்கத்தில் ஓர் அறிவிப்பு காட்டப்படும். நானும் அப்படியான பொறுப்புத்துறப்போடு கட்டுரையை ஆரம்பிக்க விரும்புகிறேன். மலேசிய கவிதைகளை பற்றியான இந்தக் கட்டுரை பத்தொன்பது கவிதை தொகுப்புகளை அடிப்படையாக கொண்டது. எனது கருத்துக்களும் விமர்சனங்களும் இந்தத் தொகுப்புகளின்பாற்பட்டதே. இந்த பத்தொன்பது தொகுப்பை…

தமிழ் எங்கள் உயிர் (நிதி வழங்கியோர் விபரம்)

1.பினாங்குவாழ் மக்கள் தமிழ் எங்கள் உயிர் பட்டியலில் பினாங்கு முதன்மை இடம் வகிப்பதாக 17.03.1955-இல் தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி வெளியாகியது. இந்நிலை தொடர பினாங்கு மக்களும் பினாங்கு தொழில் நிலையங்களும் தங்கள் தமிழ் உணர்வை எடுத்துக் காட்டும் வகையில் பட்டியலில் பெயர் போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். மேலும், சிங்கப்பூர், பினாங்கு, ஈப்போ ஆகிய…

தமிழ்ச் சிற்றிதழ் மரபின் காவிய நாயகன் சி.சு.செல்லப்பா

செல்லப்பாவிற்கு ஒரு கனவு இருந்தது. வேதநாயகம் பிள்ளை, ராஜமய்யர், மாதவையா காலத்தில் ஏற்பட்ட ஒரு படைப்புத் திருப்பம்; பாரதி, வ.வே.சு.ஐயர், உ.வே.சா. உண்டாக்கிய எழுச்சிக்காலகட்டம்; வ.ரா.கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி ந.பிச்சமூர்த்தி முதலானோர் உருவாக்கிய புரட்சிகாலகட்டம் போல ஏன் மற்றொரு இலக்கிய காலகட்டம் கடந்த 20 ஆண்டுகளாக எழவில்லை? அதைப்போன்ற காலகட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற…

புருனோ மன்சர் : காட்டில் கரைந்த காந்தியம்

உலகின் மூன்றாவது பெரிய தீவு போர்னியோ தீவு. கடும் காடு அடர்ந்த போர்னியோ தீவை, தெற்கே 73 விழுக்காடு இந்தோனேசியாவும், மத்தியில் 26 விழுக்காடு மலேசியாவும் (சபா, சரவாக் மாநிலங்கள்), வடக்கே 1 விழுக்காடு புருணையும் பங்குபோட்டுக் கொண்டுள்ளன. இப்பிரிவுகளுக்கு உட்பட்டு போர்னியோ காடு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களும் டச்சு ஆட்சியாளர்களும் அத்தீவுக்கு…

ஆவணப்படம்: சை.பீர்முகம்மதுவின் இலக்கியப் பங்களிப்பு

மலேசிய இலக்கியத்தின் வளர்ச்சியை ஊடாடிப் பார்க்கையில் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் பங்களிப்பு அதற்கு அச்சாணியாக இருந்ததை அறியமுடிகிறது. மொழியை முதலில் நேசிக்க ஆரம்பித்த அவர்களின் ஆளுமையின் முதல்படி பின்னர் விரிந்து தழைத்துப் பலர் போற்றும் இலக்கிய படைப்புகளைப் பிரசவித்துள்ளது. அவ்வாறான இலக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை அனுபவங்களையும் அவர்கள் கடந்து வந்த பாதைகளையும் அறிந்து கொள்வது இலக்கியச் சூழலில்…

சை.பீர்முகம்மதுவின் அ-புனைவுலகம்

இந்த உலகத்தை சாமானியன் காண்பதற்கும், இலக்கிய மனம் கொண்ட படைப்பாளி காண்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ரசனையும் நுண்ணுணர்வும் கொண்ட படைப்பாளி வெறும் புறவயக் காட்சிகளை மட்டும் காண்பதில்லை. அக்காட்சிகளின் ஊடே அகத்தையும் ஊடுருவியே அவனது அவதானிப்பு அமைகிறது. தான் காணும் காட்சிகளை எதிர்காலவியலோடு நுணுகிப் பார்க்கும் சிந்தனையும் வரமென பெற்றவன் உண்மையான படைப்பாளி. ‘கைதிகள்…