Category: கட்டுரை

வெண்முரசு முன் ஒலிக்கும் மூன்று கேள்விகள்

வெண்முரசு படைப்பு குறித்த உரையாடலின்போது நண்பர் ஒருவர் இக்கேள்வியை முன்வைத்தார் – இன்றைய காலத்தில் இப்படைப்பின் அவசியம் என்ன? நான் இந்தக் கேள்வியை அப்படைப்பு உருவான நாள்முதல் வெவ்வேறு விதங்களில் சந்தித்து வருகிறேன். ஆகவே இம்முறை நண்பரிடம் நிதானத்துடன் அணுக முயன்றேன். “சரி, இந்தப் படைப்பு இன்றைய காலத்திற்குப்  பொருந்தாது எனில் எந்தக்காலத்திற்குப் பொருந்தும் என…

வரலாற்றுடன் உரையாடுதல்

(1) இதிகாசங்கள் என்பவை பொதுவாக உரையாடல்தான். முன்னர் நிகழ்ந்ததைச் சொல்பவை. இவ்வாறு வியாசர் வினாயகரிடம் சொல்லி அவர் எழுதிய ஜயகதையைச் சொல்கிறேன் என்று வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் அவையில் சொல்லும்போது அதைக் கேட்ட செளதி (சூததேவர்) பிற்காலத்தில் செளனகரிடம் உரைப்பதுதான் மஹாபாரதமாக நமக்குக் கிடைப்பது.  அந்த இதிகாசம் இலக்கியத்துக்குள் வரும்போது அதுவும் ஒரு உரையாடலாகத்தான் நிகழ்கிறது. அது…

வெண்முரசு: ஒரு தன்னுரை

2013 இறுதி. ஒருநாள் ஆசிரியர் ஜெயமோகன் அழைத்திருந்தார். வியாச பாரதத்தை, அந்தக் களத்தைத் தனது தேடல் வெளியாகக் கொண்டு, வெண்முரசு எனும் தலைப்பில் பெரும்புனைவாக எழுதப் போவதாகக் கூறினார். எனக்கு அது ஆச்சரியம் அளிக்கும் விஷயம் இல்லை. காரணம் வெளியே அறிவிக்கும் முன்பே வேறொரு நிகழ்வின் பொருட்டு அவர் மகாபாரதத்தை எழுதத் துவங்கிவிட்டார். துரியோதனன் பிறப்பு…

குருபூர்ணிமா: கலையும் வாழ்வும்

கலைக்குள்ளிருக்கும் நுட்பத்தை உரையாடுவது இலக்கியச் சந்திப்புகளில் பிரதானமான அம்சம். அதைக்காட்டிலும் அதன்  அடிக்கல்லாய், வேராய்ப் படிந்து கிடக்கும் கலைஞனின்  கைரேகைகளை  அறிவதும் சுவாரசியமானது. அது இளம் படைப்பாளிகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று எனலாம். குரு பூர்ணிமா ஒரு கலைநிறைவின் கொண்டாட்டமாகி 5 ஜூலை 2020 அன்று நடந்தபோது எழுத்தாளர் ஜெயமோகனுடனான உரையாடலை யூடியூப் வழி கண்டேன்.…

ஜெயமோகனின் நூறு சிறுகதைகள்

1 ஒரு புதிய இலக்கியப் படைப்பென்பது சீட்டாட்டத்தில் வரும் புதிய சீட்டைப் போல, கையிலிருக்கும் சீட்டுகளைப் புதியதோடு சேர்த்து மறுவரிசைப்படுத்துவது. (உண்மையிலேயே) புதிதாக வரும் படைப்புகள், ஒழுங்காகச் சீரமைந்திருக்கும் கடந்தகால படைப்புகளோடு தன்னை இணைத்துக் கொண்டு மேற்சொன்ன மறுவரிசையைக் கோருவதே. இதனையே டி.எஸ்.எலியட், கடந்த படைப்பிற்கும், புதிய வரவிற்குமான ஒத்திசைவு (confirmity between the old…

The Platform: மானுடத்தின் இறுதி நம்பிக்கை

சமூக வாழ்வியல் சிக்கல்களைப் பேசுமிடமெல்லாம் பொதுவாகவே உயரடுக்கு சமூகம், அதனுடன் நெருங்கியத் தொடர்புடைய முதலாளியத்துவம் சார்ந்தும் அச்சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டப் பிரிதொரு சமூகத்தைச் சார்ந்தும் கவனம் குவிமயமாவது இயல்பு. முதலாளியத்துவத்தை எதிர்த்துச் செயல்பாட்டு ரீதியிலும் கருத்தியல் பதிவாகவும் அழுத்தமான எதிர்ப்பை முன்வைத்த கார்ல் மார்ஸ் தொடங்கி இன்று அதன் நீட்சியில் முழுக்கவே சமூகவியல் சிக்கலாக உருமாற்றம் பெற்று…

மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்

மலாயாவில் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர்) மொழிசார் வேர்களை ஆராயும்போது தவறாமல் உச்சரிக்கப்படும் இரு விடயங்கள்; (1) மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை; (2) மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை நூலகம். மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பிரிவும் அதன் நூலகமும் உருவாவதில் பலரும் பலவகைகளில் செயல்பட்டிருந்தாலும்கூட அக்காலப்பகுதியில் முதன்மை ஊடகமாக…

நீர்ச்சுழலின் பாதை

இலக்கியத்தின் மகத்தான பணியாக வாழ்க்கைக்குத் தேவையான தன்னறத்தைப் போதித்தலை ஜெயமோகன் மீள மீளக் குறிப்பிட்டிருக்கின்றார். உலகின் சரிபாதி மக்கள் தத்தம் இல்லங்களில் உறைந்து இயல்பு வாழ்வு கெட்டு இருக்கும் கொரோனா காலத்துச் சூழலில் வாழ்வு மீதான நம்பிக்கையையும் அறத்தையும் வலியுறுத்துவது இலக்கியம் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பணியாக இருக்கிறது. அத்தகைய சூழலில் ஜெயமோகன் நாள்தோறும்…

அந்திமழை சிறுகதை சிறப்பிதழ்: ஒரு வாசக பார்வை

கொரோனா காலத்திலும் எந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளுமின்றி இலக்கிய வாசகர்ளுக்கான பயணங்கள் மட்டும் இன்னும் திறந்தே கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதிய நிலத்தில், புதிய மனிதர்களோடு, பல்வேறு அனுபவங்களை, கண்டடைதல்களை வெவ்வேறு திசைகளில் இருந்து இலக்கியங்கள் வழங்குகின்றன. இலக்கிய வாசகர்கள் பூட்டிய அறைக்குள்ளிருந்தே உலகை தரிசிக்கக்கூடியவர்கள். அப்படி என் வாசிப்பை அர்த்தப்படுத்திய படைப்புகளில் மே மாத அந்திமழை…

யாவரும்.கோம்: கொரோனா காலத்துக் கதைகள்

உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது கொரோனா. நச்சில் `தாக்குண்டப் பெரும்பான்மையான நாடுகளில் இயல்நிலை முடக்கமோ, ஊரடங்கு சட்டமோ அமலில் இருக்கும் காலம். ஆறுதலுக்கு எங்கே போவது என எண்ணியபோதுதான், ‘யாவரும்.காமில்’ கொரோனா காலத்துக் கதைகள் என்ற விவரத்துணுக்கின் கீழ் தொடர்ச்சியாக 44 சிறுகதைகள் நாளுக்கு ஒன்றாய் பதிவேற்றம் காணுவதை அறிந்தேன். அவை ஆறுதலாக இருந்தனவா என்பதையும் தாண்டி,…

புனைவுகளில் புரண்டோடும் திருப்பங்கள்

சிறுகதை என்பது புத்திலக்கியத்தின் வடிவம். மரபிலக்கியம் சமூகத்தில் உள்ள நம்பிக்கைகளையும், விழுமியங்களையும் பற்றியே வலியுறுத்திக் கூறும். புத்திலக்கியவாதிகள் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை என்பது பலவிதமான முரண்பாடுகளால் ஆனது என்று எண்ணியமையால் வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளைச் சிறுகதையின் மூலமாகச் சொல்வர். புத்திலக்கியத்தின் சிறுகதை ஒரு தருணத்தையே கதையாக மாற்றும் வடிவம். கதை நிகழும் சூழலிலிருந்தே கற்பனையை வளர்த்துக் கொண்டு…

“குறைந்தபட்சம் பதற்றமாவது கொள்ளுங்கள் – கிரெட்டா”

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோவொரு சவாலை மனிதன் எதிர்கொண்டு, கடந்து வருவது எதார்த்தம். ஆரம்பத்தில் மிருகங்களிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் தன்னை தற்காத்து கொள்வது மனிதனுக்கு பெரும் சவாலாக இருந்தது, பின் ஒரு சமூகமாகவும் நாடாகவும் மாறியபோது போர், சுதந்திரம், ஏற்ற தாழ்வு, இன வேறுபாடு, வறுமை, அடக்குமுறை, தொழில்நுட்ப தேவை, மருத்துவத்தில் மேம்பாடு, வளங்களின் பற்றாக்குறை போன்ற பல…

எனவே அந்தப் புத்தகத்தைத் தடை செய்வீர்

நீங்கள் என் வாயை மூடலாம் என் மனதையல்ல  நீங்கள் என் கண்களை வெட்டி எறியலாம் ஆனால் நான் குருடனாக மறுக்கிறேன்  நீங்கள் என் உடலைக் கொல்லலாம் என் ஆற்றல் உங்கள் முடிவற்ற பொய்களுள் ஊடுருவி உங்களைப் பேயாய் துரத்தும் (மொழிபெயர்ப்பு கவிதை) ஒவ்வொரு கருத்தாக்கத்தையும் கலைவடிவத்தையும் மனிதன் தனது அனுபவம், கல்வி, சிந்தனை, சமூக மதிப்பீடுகளின்…

கங்காணிமார் பாடல்கள்

(Awak Cantik Macam Bunga Raya) தமிழ்த் திரைப்படங்களில் 1970ஆம் ஆண்டுகளில் நடந்த முக்கியமான மாற்றங்களில் ஒன்று, வெளி நாடுகளுக்குச் சென்று படபிடிப்பை நடத்துவதாகும். பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் வெளிநாட்டுக் காட்சி என்று சொல்லப்படுவது அந்நாட்டின் புறக்காட்சிகளை மட்டும்தான். அந்த நாடு ஓர் அரங்கு போன்றே பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆகவே அந்த நாட்டின் இடங்களும் மனிதர்களும்…

அக்கினி வளையங்கள்: புதைந்துபோன ஒரு கனவின் பாதை

1. மலேசிய மூத்த தமிழ்ப் படைப்பாளிகளில் சை.பீர்முகமதுவிற்குத் தனித்த இடம் உண்டு. ‘வேரும் விழுதுகளும்’ பெருந்தொகுப்பிற்காக அவர் ஆற்றியிருக்கும் பணி மதிக்கத்தக்கது. அவரது சிறுகதைகளில் சில உயர்தரத்தை எட்டியிருக்கின்றன. இப்போது ‘அக்கினி வளையங்கள்’ நாவலின் மூலம் தனது இலக்கியக் கடமையையும் வரலாற்றுக் கடமையையும் ஒருசேர நிகழ்த்தியிருக்கிறார். இந்நாவலை எழுதியதின் வழியாகத் தரமான படைப்பிலக்கியவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக்…