Category: கட்டுரை

பெயர் புரட்சி

மலேசியாவில் 80-ம் ஆண்டுகளில் இந்திய சமூகத்தில் ஒரு ‘புரட்சி’ சத்தமில்லாமல் நடந்தது.  ஆனால் அது சற்று விநோதமான மாற்றம் என்பதால் யாரும் புரட்சி பட்டியலில் இணைத்துக் கொள்வதில்லை. இப்போது மீட்டுணர்ந்து பார்க்கையில், அந்த விநோத புரட்சிக்கு மூலமாக ஒரு புத்தகம் இருந்திருப்பதையும் அந்தப் புரட்சியில் என் அப்பாவும் ‘களமிறங்கிப் போராடியிருப்பதையும்’ என் அண்ணனும் நானும் அதற்கு…

அந்தக் கப்பல் வந்துகொண்டே இருக்கிறது

சமகால தமிழ் சினிமாக்களில் அல்லது வெப்சீரீஸ்களில் பொறுப்புத்துறப்பு என்று (disclaimer என்பதை மிக மோசமான மொழிபெயர்ப்பில்) தொடக்கத்தில் ஓர் அறிவிப்பு காட்டப்படும். நானும் அப்படியான பொறுப்புத்துறப்போடு கட்டுரையை ஆரம்பிக்க விரும்புகிறேன். மலேசிய கவிதைகளை பற்றியான இந்தக் கட்டுரை பத்தொன்பது கவிதை தொகுப்புகளை அடிப்படையாக கொண்டது. எனது கருத்துக்களும் விமர்சனங்களும் இந்தத் தொகுப்புகளின்பாற்பட்டதே. இந்த பத்தொன்பது தொகுப்பை…

தமிழ் எங்கள் உயிர் (நிதி வழங்கியோர் விபரம்)

1.பினாங்குவாழ் மக்கள் தமிழ் எங்கள் உயிர் பட்டியலில் பினாங்கு முதன்மை இடம் வகிப்பதாக 17.03.1955-இல் தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி வெளியாகியது. இந்நிலை தொடர பினாங்கு மக்களும் பினாங்கு தொழில் நிலையங்களும் தங்கள் தமிழ் உணர்வை எடுத்துக் காட்டும் வகையில் பட்டியலில் பெயர் போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். மேலும், சிங்கப்பூர், பினாங்கு, ஈப்போ ஆகிய…

தமிழ்ச் சிற்றிதழ் மரபின் காவிய நாயகன் சி.சு.செல்லப்பா

செல்லப்பாவிற்கு ஒரு கனவு இருந்தது. வேதநாயகம் பிள்ளை, ராஜமய்யர், மாதவையா காலத்தில் ஏற்பட்ட ஒரு படைப்புத் திருப்பம்; பாரதி, வ.வே.சு.ஐயர், உ.வே.சா. உண்டாக்கிய எழுச்சிக்காலகட்டம்; வ.ரா.கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி ந.பிச்சமூர்த்தி முதலானோர் உருவாக்கிய புரட்சிகாலகட்டம் போல ஏன் மற்றொரு இலக்கிய காலகட்டம் கடந்த 20 ஆண்டுகளாக எழவில்லை? அதைப்போன்ற காலகட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற…

புருனோ மன்சர் : காட்டில் கரைந்த காந்தியம்

உலகின் மூன்றாவது பெரிய தீவு போர்னியோ தீவு. கடும் காடு அடர்ந்த போர்னியோ தீவை, தெற்கே 73 விழுக்காடு இந்தோனேசியாவும், மத்தியில் 26 விழுக்காடு மலேசியாவும் (சபா, சரவாக் மாநிலங்கள்), வடக்கே 1 விழுக்காடு புருணையும் பங்குபோட்டுக் கொண்டுள்ளன. இப்பிரிவுகளுக்கு உட்பட்டு போர்னியோ காடு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களும் டச்சு ஆட்சியாளர்களும் அத்தீவுக்கு…

ஆவணப்படம்: சை.பீர்முகம்மதுவின் இலக்கியப் பங்களிப்பு

மலேசிய இலக்கியத்தின் வளர்ச்சியை ஊடாடிப் பார்க்கையில் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் பங்களிப்பு அதற்கு அச்சாணியாக இருந்ததை அறியமுடிகிறது. மொழியை முதலில் நேசிக்க ஆரம்பித்த அவர்களின் ஆளுமையின் முதல்படி பின்னர் விரிந்து தழைத்துப் பலர் போற்றும் இலக்கிய படைப்புகளைப் பிரசவித்துள்ளது. அவ்வாறான இலக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை அனுபவங்களையும் அவர்கள் கடந்து வந்த பாதைகளையும் அறிந்து கொள்வது இலக்கியச் சூழலில்…

சை.பீர்முகம்மதுவின் அ-புனைவுலகம்

இந்த உலகத்தை சாமானியன் காண்பதற்கும், இலக்கிய மனம் கொண்ட படைப்பாளி காண்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ரசனையும் நுண்ணுணர்வும் கொண்ட படைப்பாளி வெறும் புறவயக் காட்சிகளை மட்டும் காண்பதில்லை. அக்காட்சிகளின் ஊடே அகத்தையும் ஊடுருவியே அவனது அவதானிப்பு அமைகிறது. தான் காணும் காட்சிகளை எதிர்காலவியலோடு நுணுகிப் பார்க்கும் சிந்தனையும் வரமென பெற்றவன் உண்மையான படைப்பாளி. ‘கைதிகள்…

சை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்

சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது வழங்க வேண்டும் என முடிவெடுத்தது மே 12 ஆம் திகதி. அ.பாண்டியன்தான் அவர் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார். சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது கொடுப்பதின் அவசியங்களை கொஞ்சம் அலசினோம். குழுவில் மறுப்பெதுவும் எழவில்லை. எழ வாய்ப்பும் இல்லை. வல்லினம் தொடங்கப்பட்டது முதலே சை.பீர்முகம்மது அவர்களுடன் இணக்கமும் பிணக்கமும் தோன்றித்தோன்றி மறைந்துள்ளன.…

ஜாவி-காட்- வனப்பெழுத்தும் வாய்ச்சண்டையும்

கடந்த சில வாரங்களாக மலேசியர்களின் கவனம் முழுக்க கல்வி அமைச்சு அறிவித்த ஜாவி-காட் எழுத்தின் மீது குவிந்துள்ளது. தாய்மொழி பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் நான்காம் வகுப்பில் மலாய் மொழி பாடத்தில் ஜாவி காட் எழுத்து ஒரு பகுதியாக இணைக்கப்படும் என்ற தகவல் வெளியானது முதல் சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. இதன் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்பது…

எதையும் மிச்சம் வைக்காதவர்கள்

மனித இனத்தின் வாழ்வியல் இருத்தல் தடங்கள்தான் வரலாறு ஆகிறது. அவ்வரலாறுகளைப் பதிவு செய்து ஆவணப்படுத்தும் செயல்பாடுளில் மிக முக்கியமானது வரலாற்று இலக்கியப் புனைவுகள். எல்லாப் புனைவுகளும் ஏதோ ஒருவகையில் ஏதாவதொன்றின் வாழ்வியலைப் பதிவு செய்துகொண்டுதான் வருகின்றன. அவை கலைநுட்பமாகக் காட்சிப்படுத்தப்படும்போது இலக்கியம் எனும் தகுதியைப் பெற்று மிளிர்வதைக் காணமுடிகிறது. 1970கள் தொட்டே கவிதை, நாவல், சிறுகதைகள்…

கே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல்

பரந்த இவ்வுலகத்தில் பலவிதமான மக்கள் மொழி, இனம், மதம், கலாச்சாரம், பழக்கவழக்கம் என்று பிளவுப்பட்டுள்ளனர். இவையனைத்தும் ஆதியிலிருந்து உருவாகியவை அல்ல. தொடக்கத்தில் மனிதன், மிருகம், இயற்கை இம்மூன்றைக் கொண்டு இவ்வுலகம் இயங்கியது. நாளடைவில் மனிதன் பரிணாம வளர்ச்சியை நோக்கி செல்லும்போது தனக்கான தேவைகள் என்னவென்று உணரத் தொடங்குகிறான். அதன்பின், மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்டதுதான் மொழி,…

அறியப்படாத வரலாற்றில் அறிந்த மனிதர்கள்

மலேசிய வரலாற்றில் சுதந்திர காலப்போராட்டங்களையும்,அதற்குப் பிந்திய வாழ்க்கையையும் பலர் நாவலாக புனைந்துள்ளார்கள். அவ்வகை புனைவுகள் பெரும்பாலும் இந்தியர்களை மையப்படுத்திய கதைகளாகவும், கற்பனை அதிகம் கலக்கப்பட்ட மேலோட்டமான கதைகளாகவும் மட்டுமே அமைந்திருக்கின்றன. மலேசிய மக்களின் வாழ்வு என்றால் ஜப்பானிய, ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நடந்த கொடுமைகள், தோட்டப்பாட்டாளிகளின் கதைகள் என்ற கதைக்களத்திலேயே நான் வாசித்த பெரும்பான்மை நூல்கள் இருந்தன.…

அறிந்த வரலாற்றில் அறியப்படாத இடைவெளி

மலேசிய இலக்கிய வரலாற்றின் வழித்தடத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் மா.இராமையா, ரெ.கார்த்திகேசு, வா.முனியன், சை.பீர்முகம்மது, முனைவர் கிருஷ்ணன், முனைவர் சபாபதி, பாலபாஸ்கரன் என பல்வேறு தரப்பினர் எழுதியுள்ளனர். இது அவர்களுக்கு அந்தந்த காலக்கட்டத்தில் கிடைத்த தரவுகள், ஆவணங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட  வரலாற்றுக்குறிப்புகள் எனலாம். இத்தகவல்களை அவர்கள் முந்தைய ஆய்வாளர்களிடமிருந்தும் அச்சு ஊடகங்களிடமிருந்தும் எடுத்து தொகுத்திருப்பதோடு,…

சொல்லிய கதையும் சொல்லாத கலையும்

மலேசிய இலக்கியத்தின் புதிய திசைகளைக் கண்டடைய, அதன் புதிய எல்லைகளைத் தொட்டுவிட பெரும் அடர்காட்டை அழித்துக் கொண்டு புதிய பாதைகளைத் திறந்து வைக்கும் ம.நவீனை ‘சாளரங்களைத் திறந்து வைக்கும் கலைஞன்’ என சு.வேணுகோபால் அவரது முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவரின் எழுத்துகளே அவரை அறிவதற்கான மிகப் பெரிய சாளரமுமாகிறது. சமூகத்தின் பார்வைக்கு ஏற்ப தனது பிம்பத்தை நிறுவ…

மனிதனும் மிருகமுமான கடவுள்

தேர்ந்தெடுத்த நூல்களினை வாசிக்கும் பழக்கமுள்ளோருக்கு மா.சண்முகசிவா சிறுகதைத் தொகுப்பினை உள்வாங்கி கொள்ள ஏதுவாக இருக்கும். அதற்கு அவரின் எளிய உரைநடை சொல்லாடலே காரணமாகும். மா.சண்முகசிவா சிறுகதைத் தொகுப்பை வாசிக்கையில் இத்தொகுப்பில் தற்கால சமூகப் பிரச்சனைகளின் ஊடே வாழ்வாதார சிக்கலை எதிர்நோக்கிய விளிம்புநிலை மக்களின் அவலநிலையினை மையமாகக் கொண்டுள்ளது எனப் புரிந்துகொள்ளமுடியும். கதையில் வரும் மையக் கதாபாத்திரங்கள்…