Category: கட்டுரை

நீயின்றி அமையாது உலகு

இந்த எழுத்துகள் மூலம் உங்கள் வாழ்வின் சில பக்கங்களை புரட்டிக்கொடுத்தவர்களை நீங்கள் நினைவுகூர்ந்தால் அதுவே தற்போதைய நமது இருப்புக்கான அர்த்தத்தை கொடுக்கும். ஒருவகையில் அது என் நினைவுகளில் சுற்றித்திரியும் பெண்களுக்கு நான் செய்யும் நன்றியும் கூட. பெண்கள் இல்லாமல் வாழ்வில் உச்சம் என்பதன் தரிசனம் கிடைக்காது என்றே நம்புகிறேன். அப்படிக் கொடுப்பவர்கள் நம்முடனேயே வாழ்கின்றவர்களாக இருக்கவேண்டிய…

மாய யதார்த்தத்தின் வலிமை

(சிறுகதை குறித்த திறனாய்வுக் கட்டுரை) வாசிப்பிலும் படைப்பிலும் சிறுகதையின் இடமே முதன்மையானது. இருப்பினும் படைப்பாளிகளால் சிறுகதை என்னும் உருவம், உள்ளடக்கத்தை ஒட்டியே தேர்ந்தெடுக்கப் படுகிறது. நவீனத்துவத்தில் சிறுகதையின் வீச்சு மேம்பட்டு, ஆகச்சிறந்த வடிவம் இதுதானோ என்று அதிசயிக்க வைக்கிறது. ஆனால் சிறுகதை வடிவத்துக்கு வரம்புகள் உண்டா? என்ன வரம்புகள்? படைப்பாளிக்கு மட்டும் சில இடத்தில் முட்டி…

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் தேவையா?

மலேசியாவில் தமிழ்ப்பள்ளியின் இருப்பு குறித்து பேசுவதன் நீட்சி எப்போதுமே சர்ச்சையான ஒரு மையத்தில்தான் சென்று முடியும். சிறுபான்மை இனமான மலேசிய தமிழர்களுக்கென்று இருக்கும் அடையாளங்களில் ஒன்று கோவில் என்றால் மற்றது தமிழ்ப்பள்ளியாகவே எப்போதுமே பொதுபுத்தியால் நம்பப்பட்டு வருகிறது. இவை இரண்டுமே தொடக்கம் முதலே மொழியை வளர்க்கவும் சமுதாய போராட்டங்களை முன்னெடுக்கவும் ஒரு தளமாகவே இருந்துவந்துள்ளன. அதேபோல…

தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள்

“வாழ்வின் துயரங்கள் வாழச் சொல்கின்றன” போர், அரசியல் காரணங்கள், கல்வி, வணிகம், வேலை, உயிர் பிழைக்க என்று பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு காலங்களில் புலம்பெயர்தல் நடந்திருக்கிறது. இன்றும் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக்கட்டுரை புலம்பெயர்தலுக்கான காரணங்களையோ, புலம்பெயர்ந்தவர்கள், புகலிடத்தில் சந்தித்த கொடூரங்களையோ ஆராயாது. புலம்பெயர்ந்தவர்கள் – புகலிடத்திலிருந்து எழுதிய சிறுகதைகளில் – பன்னாட்டு வாழ்வை, பண்பாட்டை, கலாச்சாரத்தை,…

எல்லைகளைக் கடந்த மொழியும் கவிதையும்: மொழிபெயர்ப்புக் கவிதைகள்

தமிழ்க்கவிதை இயக்கத்தில் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வரவு புதிய பாணியிலான கவிதை உருவாக்கத்திற்கு வழி வகுத்தது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் மொழிபெயர்ப்புகளோடு தமிழோடு தொடர்பற்ற சீன, ஆப்பிரிக்க, ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கக் கவிதைகள் தமிழில் பரவலாக மொழிபெயர்க்கப்படுவதன் வழி புதிய வாழ்பவனுங்களைத் தமிழ்க் கவிதை உள்வாங்கிக் கொள்வதோடு, பாசாங்கற்ற அக்கவிதை மொழியினைத் தமிழ்க்கவிதைகளும் தன்னுள்…

நீயின்றி அமையாது உலகு

அந்தப் பெண்ணை நினைவில் வைத்துக்கொள்ள அவளின் முகமோ அவளின் பெயரோ என்னிடம் இல்லை. காலியாய் கிடக்கும் வீடொன்றே போதுமானதாக இருந்தது. உண்மையில் எனக்கும் பெண்களுக்குமான மனத்தொடர்பும் அவர்கள் மீதான ஈர்ப்பும் ஏற்பட அந்த பெண் காரணமாக இருக்கலாம். இத்தனைக்கும் அவள் குறித்து நான் அறிந்தது உண்மைதானா என்கிற சந்தேகம் கொள்ளக்கூடிய வயதெல்லாம் அப்போது இல்லை. இன்றும்…

கலை இலக்கிய விழா 7 : ஒரு பார்வை

வல்லினம் கலை இலக்கிய விழா 7, இம்முறை மலாயா பல்கலைக்கழகத்தில் நவம்பர் முதல் நாள் நடைபெற்றது.  இவ்வாண்டு கலை இலக்கிய விழாவில் நான்கு இளம் படைப்பாளர்களின் நூல்கள் வெளியீடு கண்டன. அவை முறையே ம.நவீனின் சிறுகதை தொகுப்பான ‘மண்டை ஓடி’, அ.பாண்டியன் எழுதிய ‘அவர்கள் பேனாவின் இருந்து கொஞ்சம் மை’ எனும் மலாய் இலக்கியம் குறித்த கட்டுரைத்தொகுப்பு,…

அஞ்சலி : தந்தையைப் போன்ற வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு

ஆயுதபூஜை என்று கூறப்படும் சரஸ்வதி பூஜை அன்று திறனாய்வின் பிதாமகர் என்று பலரால் போற்றப்படும் திரு வெங்கட் சாமிநாதன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது எண்பத்திரண்டு. தம் வாழ்வின் இறுதி மூச்சு வரை கலை, இலக்கிய விமர்சகராக அற்புதமான பணி ஆற்றினார். தமிழகத்தில் பலர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பல இணையப்பக்கங்களில் எழுதிவருகின்றனர். சிங்கப்பூர்த்…

இலக்கியத்தின் வழி தேசிய அடையாளம்

இந்த மாதம் எதிர்ப்பாராவிதமாக ‘இலக்கிய மாதமாக’ அமைந்து விட்டது.  நவம்பர் 1, வல்லினம் கலை இலக்கிய விழாவும் அதைத் தொடர்ந்து 6,7-ல் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பங்கேற்பும் சிறப்பாக அமைந்தன. அனைத்துலக தரம் வாய்ந்த சிங்கப்பூர் இலக்கிய விழாவில் மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் மிக அறிதாகவே கிடைப்பதாக அறிகிறேன். ஆக கடைசியாக இருபத்து நான்கு…

ஓநாயிடம் மாட்டிக்கொள்ளும் ஆட்டுக்குட்டிகள்

‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ எனும் நண்பர் நவீன் அவர்களின் ஆசிரியப் பணி அநுபவப் பதிவுகளை வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள, கீழ்க்காணும் குறிப்புகளை உங்கள் முன் வைக்கிறேன். இந்தப் பதிவுகள் பல அடிப்படையான நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. அதனைச் சுருக்கமாக தொகுத்துச் கொள்ள முயல்கிறேன். தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்நிலையும்…

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை

இன்றைய அறிவியல் காலத்தில், உலகின் ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் ஒரு நவீனத் தொழில்நுட்பம் உடனே உலகம் முழுவதும் பரவிப் புகழ்பெற்று மக்கள் மனதில் நிலைபெறுகிறது. அடுத்த கட்டமாக, உலகநாடுகள் போட்டியிட்டுக் கொண்டு அதே தொழில்நுட்பத்தை மென்மேலும் ஆய்வு செய்யவும் செம்மைப்படுத்தவும் முனைகின்றன. அதோடு, மேலும் பல சிறப்பம்சங்களை இணைத்து அதிநவீன தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.…

யார் அந்தப் பண்டிதன்?

அங்கியை அணிந்துகொண்டு மாபெரும் மாணவர்கள் கூட்டத்திற்கும் அவர்களை உள்ளே வரவேற்றுக்கொண்டிருந்த மண்டபத்திற்கும் இடையில் விரிவுரையாளர்களின் அணிவகுப்பில் நின்றுக்கொண்டிருந்தேன். துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் பகுதி. புலங்களின் தலைவர்கள் பிரத்யேக அங்கிகளை அணிந்துகொண்டு விரிவுரையாளர்களுக்கு நேரெதிரில் அணிவகுத்து நின்றுக்கொண்டிருந்தனர். விழாவின் தொடக்கத்திற்கான அறிவிப்பைத் தொடர்ந்து பின்னணி இசை முழங்கியது. மாணவர்களும் பெற்றோர்களும் எழுந்து…

கவிதையும் பொருளும்

கவிதை வாசகனின் மூலமே தன்னை முழுமைப்படுத்திக்கொள்கிறது. சங்கப்பாடல்கள் தொடங்கி திருக்குறள் என வளரும் பழந்தமிழ் இலக்கியங்கள் எதற்குமே அதன் ஆசிரியர்கள் பொருள் எழுதி வைத்துச்செல்லவில்லை. பின்னால் வந்த பல தமிழ் அறிஞர்களே அவற்றை வாசித்துப் பொருள் கூறினர். தமிழில் மிக முக்கிய ஆய்வாளரான முனைவர் துளசி ராமசாமி சங்கப்பாடல்களில் வரும் திணை, துறை, பாடியோர், பாடப்பட்டோர்…

பாவனைச் சமுதாயம்

கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு 10 மணி அளவில் எனது புலனத்தில் தொடர்ந்து வரத்துவங்கிய தகவல்கள் என் கவனத்தைக் கோரின. இந்திய முன்னால் அதிபரும் உலக தமிழர்கள் பலவகையிலும் நன்கு அறிந்த பெரியவர் எ.பி.ஜே அப்துல் கலாம் மரணம் பற்றிய தகவல்கள் அவை என்பதால் அத்தகவல்களின் நம்பகத்தன்மையை முதலில் அறியவேண்டியிருந்தது. அது உண்மை தகவல்…

கே. எஸ். மணியம்: அடையாளம் காணப்படாத ஆளுமை

“நான் யார்?”, “எங்கிருந்து வந்தேன்?”, “இனி நான் செல்லபோகும் இடம் எது?” போன்ற அடிப்படையான ஆனால் அர்த்தம் பொதிந்த இக்கேள்விகளே மனிதன் தன்னைக் குறித்த அடையாளத்தை நிர்மாணித்துக்கொள்ளவும் தான் யாரெனத் தெளிவாக மீட்டுணரவும் செய்கின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் சுய அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவும் ஒருவர் இனம், மதம், தனது சமூக-பொருளாதார நிலை, அரசியல், குறைந்தபட்சம்…