Category: கட்டுரை

தறுதலை புத்தி என்பது யாதெனில்

இது கதை என்று நான் முன்னெச்சரிக்கையாக சொல்கிறேன். படித்து முடித்ததும் முதல் வாக்கியத்தின் சத்தியமின்மையை நீங்கள் கண்டுக்கொள்வீர்கள். ஏனெனில் நீங்கள் பாதிக்கப்பட்டவரில் ஒருவர் அல்லது பாதிப்பை கொடுப்பதில் ஒருவர். இதனை எழுதுவதால் எனக்கு ஏற்படப்போகும் பிரச்சனைக்கு நான் மட்டும் பொறுப்பல்ல. என்னுடன் சுந்தர ராமசாமியும்தான் பொறுப்பு. அவரின் கட்டுரை ஒன்றில் புதுமை பித்தனை இப்படி குறிப்பிடுகின்றார்; “சுற்றிவரக்…

கழிவறைக் குறிப்புகள்

தலைப்பைப் பார்த்ததும் மூக்கைப் பிடித்துக்கொள்ளாதீர்கள். அருவருத்து முகஞ்சுழிக்கும்படி அப்படியொன்றும் இக்கட்டுரையில் எழுதப்போவதில்லை. எல்லாம் நம் இயற்கை உபாதையைப் பற்றித்தான் கொஞ்சம் சிந்திக்கப்போகிறேன். மனிதக் கழிவுகளைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள அரசியலைக் கொஞ்சம் அலச எண்ணுகிறேன். நீங்கள் வேண்டுமானால் செண்டு அல்லது வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு என்னோடு வாருங்கள். கழிவறைகளை நோக்கித் துணிவோடு பயணப்படுவோம். என் பால்யத்தின் நினைவுப்…

கோயில் ஓட்டமும், கோவக்கார குருவியும்

இன்னைக்கும் மீட்டிங்கா… கடவுளே… என்னாலா பேசப்போறாங்க… பேச்சு பேச்சு பேச்சு..அவர் பேசுவார், பேசுவார், இன்னும் பேசுவார்… அப்புறம், அப்புறமும் பேசுவார் !!! பேசியதையேப் பேசுவார், பேச்சைக் குறைக்க வேண்டியதைப் பற்றியும் நிறையப் பேசுவார். நாம் பேசவே வேண்டியதில்லை… பேசவும் ஒன்றும் இருக்காது; பேசினாலும் யாரும் கேட்கப்போவதில்லை..பேசித்தான் பாருங்களேன்… அப்புறம்… நீங்கள் பேசியதை நிராகரித்தோ அல்லது ஏற்பதுபோல்…

கந்தர்வனின் ‘பூவுக்கு கீழே’

முந்தைய நாள் பேருந்து பயணத்தின்போது கண்ணில் கண்ட பூச்செடியைத் தேடி விரைகின்றான். அச்செடியை வீட்டுக்கு எடுத்து வந்து நட்டு வைத்து அதன் ஒவ்வொரு நொடி நேர வளர்ச்சியையும் கண்டு பூரிக்கின்றான். இவனை நன்கு அறிந்து வைத்திருப்பவளாய் மனைவி, ‘அடுத்த விருந்தாளி வந்தாச்சாக்கும்?’ என கேலி பேசுகின்றாள். இவனது செய்கையைக் கண்டு வியப்பவர்களுக்குப் பின்வரும் குறிப்புகள் உதவி…

ஐந்தடிக்கரனின் செய்தி

தமிழ்ப் பத்திரிகை நிருபரை ஐந்தடிக்காரன் என்று அழைப்பதில் மலாக்கா மாநில ம.இகா தலைவர் டத்தோ இரா பெருமாளுக்கு ( முன்னாள் மாண்புமிகு மற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர்) ஆனந்தம் தருகிறதென்றால் அவர் அப்படியே அழைப்பதில் எனக்கு வருத்தமும் கோபமும் கிடையாது. ஐந்தடிக்காரன் ( அஞ்சடிக்காரன்), கொடுக்கும் செய்தி எல்லாவற்றையும் பத்திரிகையில் எழுதி விடுவாயா? என்று ஒருமுறை அவர்…

அடுத்த முறையாவது…

ஆளும் அரசாங்கத்தின் மீது நமக்கிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்த நமக்கே நமக்கென கிடைத்த ஒரு சிறந்த களம் தேர்தலாகும். நம்மைப் பகடைக் காய்களாக்கி ஆட்டமாய் ஆடிய அரசியல்வாதிகளை இந்தக் களத்தில்தான் வேரறுக்க முடியும்… நமது ஓட்டுகளை அரிவாளாகக் கொண்டு இரத்தம் சிந்தாமல் இங்குதான் வெட்டி வீழ்த்துகின்ற பணியியை செய்ய வேண்டும். மீண்டும் முளைக்க விடாமல் வேரோடு களையெடுக்க…

13-வது பொது தேர்தல் : ஒரு பார்வை

உலகின் ஏனைய நாடுகளில் நடக்கும் தேர்தலோடு மலேசியாவில் நடந்து முடிந்த 13-ஆவது பொது தேர்தலை ஒப்பிட முடியாது. சுதந்திரம் அடைந்தது முதல், 56 ஆண்டுகள் இந்நாட்டை ஒரே கட்சி ஆண்டதன் விளைவாக இறுகிவிட்ட ஜனநாயகத்தை மீட்கும் ஒரு தொடக்க போராட்டமாகவே அது வர்ணிக்கப்பட்டது. தேசிய இலக்கியவாதியும் பெர்சே தலைவருமான சமாட் சைட் சொன்னது போல எந்தக்…

பாலாவின் மனைவி :ஒரு மறைக்கப்பட்ட உண்மை…

அல்தாந்துயா விவகாரத்தில் பதினைந்து மாதங்கள் காணாமல் போன தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியம் மீண்டும் வெளிவந்து பல உண்மைகளை வெளியிடத்தொடங்கினார் என்பது நாம் அறிந்தது.. அண்மையில் தனது முன்னாள் வழக்குரைஞர் அமெரிக் சிங் மூலம் நேர்காணல் ஒன்றை நடத்தியதன் மூலம் 15 மாதங்கள் பேசப்படாமல் இருந்த பாலாவின் கதை மீண்டும் ஆரம்பமானது. ஆனால், மரணம் அவர் சொல்ல…

13 ஆவது பொது தேர்தல் – நம் கோழைத்தனத்தை வரலாறு மன்னிக்காது

எனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை ஆகையால் எனக்கு அது தொடர்பாகக் கருத்தில்லை எனச் சொல்பவர்களைக் கண்டித்தே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நம் வாழ்க்கையை, நம் நிலத்தை, நம் மூளையை ஆண்டு கொண்டிருப்பதே இந்த அரசியலாக இருக்கும்போது எப்படி தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என ஒருவர் கூற முடியும்? அரசியலில் களம் இறங்கி தனக்கொரு அடையாளத்தை உருவாக்கிக்…

மே 5 வாழ்கையில் கிடைக்கும் ஒரே வாய்ப்பு!

ஒரு தலை ராகமாக ஊடகங்களில் செய்திகள் .உயரத்திலிருந்து கோழிக்குஞ்சு நடமாட்டத்தை கூர்மையாக கவனிக்கும் பருந்துபோல  வெளிநாடுகள் மலேசியாவை பார்த்துக் கொண்டிருகின்றன. ஜாதகக் காரர்கள், என் கணித நிபுணர்கள், கேரளா நம்பூர்தி, இந்தோனேசியா போமோ ஆகியோர்களை இரவு விருந்தோம்பலில் கவனிக்கும்  படுபிசியில் அரசியல்வாதிகள். ஹோட்டல் ரூம்பில் நடக்கும் உள்ளரங்கு விளையாட்டு பொது மைதானம் வரை பார்வைக்கு வைக்கும்…

மலேசிய அரசியலும் பணமுடிப்புகளும்

“புலவர்கள் யாரேனும் நம்மை புகழ்ந்து பாட வல்லீரேல் பொற்காசுகள் பரிசாகத் தரப்படும்” என்று அரசர்கள் அறிவிப்பதும் அந்த அறிவிப்பை கேட்ட புலவர்கள், அரசர்களை நாடிச் சென்று இனிய கவி பல பாடி (அரசனை வீரதீர சூரன் என்று புகழ்ந்து) பரிசில்கள் பெருவதும் நாம் சங்க இலக்கியச் சூழலில் பல காலம் அறிந்த ஒன்றுதான். ஆட்சியாளர்களை மகிழ்விக்கும்…

Ini Kalilah: தேர்தலுக்கு முன்பான இறுதி கேள்விகள்

தேர்தல் நெருங்கும் இந்தக் காலக்கட்டத்தில் நான் பல நண்பர்களிடம் தொடர்ந்து தேர்தல் குறித்தே உரையாடி வருகிறேன். எனது நோக்கம் யாரையும் வலிந்து குறிப்பிட்டு ஒரு கட்சிக்கு ஓட்டைப் போட வைப்பதல்ல. அவ்வாறு செய்வதும் ஒரு வன்முறைதான். பாரிசான் எப்படி மக்களைச் சிந்திக்க வேண்டாம்…சொல்லும் இடத்தில் ஓட்டைப் பதிவு செய் என அரசு ஊழியர்களை மிரட்டி வைத்துள்ளதோ…

தேர்தலில் யாருக்கு முதல் மதியாதை?

மலேசிய வரலாற்றில் இதுவரைக் காணக்கிடைக்காத அற்புத காட்சிகளோடு நாட்டின் 13-வது பொதுத்தேர்தல் களைக்கட்டியிருக்கிறது. நான் வாக்களிக்கப்போகும் இரண்டாவது தேர்தல் இது. எப்போதும் கட்டிக்கே (தேசிய முன்னணி) வாக்களிக்க வேண்டும் என்றிருந்த ஒரு தலைமுறையின் சத்தியத்தை உடைத்து நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முடிவை கையில் வைத்திருக்கும் இளைய சமுதாயத்தின் பிரதிநிதியாகவும் நான் இருக்கிறேன். மிக அண்மையில் நான்…

ஹிண்ட்ராப்… ஊழிக்கூத்துக்கு உடுக்கடித்தவர்கள்

பாயா பெசார் (கூலிம், கெடா) ஹிண்ட்ராப் இயக்கத்தின் முக்கிய தளமாகச் செயல்பட்டது. `வெட்டிப் போட்டாலும் ‘கட்டி’க்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்று வாழ்ந்த இந்தியர்கள் மொத்தமாக மாறிய தருணம் அது. எப்படி அந்த மனமாற்றம் சாத்தியமானது? அளவற்ற விரக்தியுடன் இருந்த ஒரு சமுதாயத்திற்கு விடிவெள்ளியாக, குரலற்று வாழ்ந்தவர்களுக்கு வலிமையான, ஒரு சிலுவைச் சுமப்பவர் அடையாளத்துடன் ஹிண்ட்ராப் இயக்கம்…

சரவாக் எதிர்க்கட்சி வசமாகுமா?

தேர்தல்…தேர்தல்..தேர்தல்… இப்போதைய மலேசியாவை அசைத்து பார்க்கும் இன்னொரு பேரலை. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைப்பெறும் நாட்டின் பொதுத்தேர்தல் இம்முறை 2008-ம் ஆண்டுக்கு பின்னர் நான்காண்டுகள் கடந்து ஐந்தாம் ஆண்டில் இடம்பெற்றுள்ளது. பன்னிரண்டு பொது தேர்தல்களை கடந்து விட்ட மலேசியாவுக்கு இது பதிமூன்றாவது தேர்தல். எனவே சென்டிமென்ட் காரணமாக பதிமூன்றாவது தேர்தல் 2013-ம் ஆண்டு தான்…