Category: சிறுகதை

ஆக்காட்டி

திருமணம் செய்த தம்பதிகளுக்கும் காதலர்களுக்கும் இனிமையாக இருந்துவந்த தொலைபேசி நான் புலம் பெயர்ந்த நாட்களில் இருந்து எனக்கு ஒவ்வாமையாகவே இருந்து வந்திருக்கின்றது. அன்பு பாசம் என்பதை தவிர்த்து இழப்புகளையும் சோகங்களையும் காசுப்பிரச்சனைகளையும் அமிலமாக அது என் நெஞ்சில் இறக்கியிருக்கின்றது. எப்பொழுதும் நான் என்னை மறந்த ஆழ்ந்த நித்திரையின் அதிகாலைப் பொழுதுகளிலேயே அது என் அறையின் வாசல்…

காதுகள்

2016ஆம் வருடம், கோடைவெயில் அக்னி நட்சத்திரமாகப் பொரிந்துகொண்டிருந்த மே மாதத்தின் ஒருநாளில், மதுரை, சிம்மக்கல், தைக்கால் தெருவைச் சேர்ந்த விசுவாசியான தன் மாமாவின் வீட்டில் வைத்துதான் குமார் என்கிற ஜெபக்குமாரன் தன்னை கிறித்துவுக்குள் மரிக்கச் செய்து கொண்டான். ஆரம்பத்தில் சற்று விசுவாசமாக இருந்து பின்னாட்களில் தாமசைப்போல எல்லாவற்றுக்கும் சந்தேகம் கொள்கிறவனாகி கிறித்துவின் மீதான நம்பிக்கையை இழந்ததால்தான்…

வலி

அவள் அம்மோயைப் பார்த்தாள். அம்மோயின் முகம் இருண்டிருந்தது. “அம்மாவால உங் கையைப் பிடிச்சிட்டு நடக்க ஏலும் அம்மோய்” என்று அவள் தன் வலது கையை நீட்டினாள். அந்த சின்ன அறையைப் பாதி நிறைத்திருந்த இருக்கைகளைத் தாண்டி, முழங்கால் மேல் வரை நீளமாக இருந்த சாயம் போன ஊதா நிற நீளச் சட்டையின் ஓரத்தை இடது கையில்…

ஜின்ஜாஹோ

ஜின்ஜாஹோ என்பது அவனது பெயரல்ல. கூப்பிடும் பெயர். அவனது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. அவனை நிற்கவைத்து உண்மையான பெயரைக் கேட்டால்கூட ஜின்ஜாஹோ என்றுதான் பதில் வரும். அடையாளக் கார்டு இல்லை. அது அவனுக்கு எந்தவிதத்திலும் தேவைப்படவில்லை. ஜின்ஜாஹோ தலைநகர் குடிவாசி அல்ல. எப்போது இங்கு வந்து சேர்ந்தான் என்றுகூட துல்லியமாய்ச் சொல்ல இயலாது. ஆனால்…

விடுபடுதல்

மனதை ஒருநிலைக்குள் கொண்டு வருவதற்குள் தாமதம் ஏற்பட்டுவிட்டது. கைவிரல்களின் பதற்றம் போகவில்லை. நேரம் போகப்போக பதற்றம் இன்னும் அதிகரித்தது. கடந்த இரு தினங்களாய் கண்காணித்து வந்ததில் அப்படியொன்றும் கஷ்டப்படத் தேவையில்லை என்று தெரிந்தும் செயல்படவேண்டிய நேரத்தில் பதற்றம் வந்துதொலைக்கிறது. மென்தாள் ஒன்றை உருவி நெற்றி வியர்வையைத் துடைத்து வீசினேன். பார்வையைப் பரவலாகப் படரவிட்டேன். சாலையில் வாகனங்களும்…

இரை

இரண்டாவது தடவை அந்தத் தண்ணீரை எடுத்துக் குடித்திருக்கக் கூடாது. அதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாகி விட்டது. முதல் தடவை எந்தப் பிரச்சினையும் இல்லை. தாகம் அடங்கவில்லை போலிருந்தது. இரண்டாவது தடவை படுத்துக் கொண்டே, இருட்டில் போத்தலை வாயில் சரித்தபோது அளவுக்கதிகமான தண்ணீர் வாய்க்குள் புகுந்து உடனடியாக விழுங்கிக் கொள்ளமுடியாமல் புரையேறி விட்டது. தொண்டை வழியே உள்ளே…

மேகங்களுக்கு அப்பால் நீல வானம்

ஹரி பார்த்திக்கு சொன்னது : “இன்று காலை தில்லியிலிருந்து கிளம்பிய போது சுசிதாவும் அதே விமானத்தில் வருகிறாள் என்று எனக்கு தெரியாது. இருவரும் சேர்ந்து ஒரே தொழிற் கண்காட்சிக்கு செல்கிறோம் என்றாலும் சுசிதா என்னுடன் பயணம் செய்ய மாட்டாள் என்று தெரியும். நானும் என் பயண விவரங்களை அவளுக்கு தெரிவிக்கவில்லை. கண்காட்சித் திடலுக்கு வந்த பின்னர்…

அம்ரிதா

  1 மீண்டும் ஒருமுறை தன்னைத் தானே நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். அகன்ற நெற்றியில் சிவப்பு நிற குங்குமம். நெற்றி வகிட்டிலும் சிறிதளவு குங்குமம். அழகாய்தான் தெரிந்தாள். நாற்பது வயது ஆகிவிட்ட உடல் தன் அகவையைப் புறத்தோலின் மூலம் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. அவளது கண்கள் கண்ணாடியில் தெரியும் குங்குமத்தின் மீதே இருந்தது. பார்த்தது போதும் என…

இரை

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பென்று என்னைக்கேட்டால் தயங்காமல் கூறுவேன் துப்பாக்கிதான் என்று. ஏனெனில் அது எவரையும் நம்காலில் விழச்செய்யும் சக்திவாய்ந்தது. அச்சத்ததின் விளிம்பில் ரத்தம்சுண்டி முகம்வெளுத்து முன்னால் உயிருக்காக மன்றாடும் ஒரு இரையினைப் பார்க்கும் பரவசம் அலாதியானது. இப்போது இவன் அப்படித்தான் கிடக்கிறான். ஆனால் இவனைப் பார்த்தால் அந்த பரவசம் தோன்றவில்லை எனக்கு. சவரம் செய்யப்படாத தாடிமீசைகள்…

அலிசா

தண்ணீருக்கு அடியிலிருந்த மண்ணை இப்போது அலிசாவால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்த மண்ணுக்குள் மாட்டிக்கொண்டிருந்த பல வடிவங்களிலான கருங் கற்களையும்; ஓடுகள் – சிற்பிகளையும் அவற்றை மறைத்து வளர்ந்திருந்த தாவரங்களையும் அலிசா மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். அந்தக் குளத்துத் தண்ணீரைப் போலவே தாத்தாவும் அசைவற்று இருந்தார். இடது முழங்காலில் முட்டுக் கொடுத்து வைத்திருந்த இடது கையும்…

பருப்பு

குரங்கு அப்பம் பிரித்த கதையாக சமாதானம் பேசவந்தோம் என்று அந்நியப்படைகள் ஈழ மண்ணில் மூலை முடுக்கெல்லாம் பரவியிருந்த காலத்தில் எல்லரோரையும் போல பருப்பின் வாழ்கையிலும் இரண்டு பெரிய சூறாவளிகள் அடித்து பருப்பின் வாழ்கையையே புரட்டிப்போட்டன. கோண்டாவிலிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெடியளுக்கு கதிரவேலர் ஓர் கடவுளாகவே இருந்தார். அந்த நேரத்தில் அமைதிப்படைகள் நடத்தும் சுற்றிவளைப்பில்…

ஆதிசேடன்

ஸ்ரீவைகுண்டத்துப் பாற்கடலில் தனது உடலாலேயே ஆதிசேடன் மூன்றடுக்கு மஞ்சத்தை எழுப்பி தனது ஐந்து படங்களையும் விரித்து மூவுலக காப்பகமான திருமாலுக்குக் குடைப்பிடித்தான். சுதர்சனன், சங்கு முதலிய ஆயுதங்களும் கருடனும் திருமாலைச் சேவித்து நின்றனர். திருமகள் நாதனின் அருகில் அடக்கமாய் வீற்றிருந்தாள். எல்லாம் வல்ல திருமால் யோக நித்திரையில் ஆழ்ந்த வண்ணமே ஆதிசேடன் மேல் சயனித்திருந்தார். எல்லாமே…

ஹருகி முராகமி சிறுகதை: கினோ

அந்த மனிதன் எப்போதும் அதே இருக்கையிலேயே உட்கார்ந்தான். அந்த இருக்கை உயரமான பரிமாறும் மேடைக்குப் பக்கத்தில் இருந்தது. அது காலியாக இருந்தது. ஆனால் அது எப்போதும் காலியாகத்தான் இருக்கும். மதுபான விடுதியில் எப்போதாவதுதான் கூட்டம் நிரம்பி வழியும், அந்த இருக்கை கவனத்திற்கு வராமலும் வசதியற்றும் இருக்கும். அதற்குப் பின்னாலுள்ள படிக்கட்டு வளைந்து இறங்கியிருக்கும். அந்த இடத்தில்…

மோர்கன் என்றொரு ஆசான்

மோர்கன் த/பெ பெருமாளுக்கு ஏற்பட்ட எரிச்சலில் எதிரில் இருக்கும் கணினித்திரையை காலால் எத்தவேண்டும் போலிருந்தது. அசைவின்றி நிற்கின்ற அத்திரை ஏற்படுத்திய கோபத்தைவிட, செந்திலைக் கூப்பிட்டல்லவா அதைச் சரி செய்யவேண்டும் என்றபோது கடுப்பு எகிற, கதவை எத்திவிட்டு வெளியில் வந்து ஒரு சிகரெட்டை எடுத்தார். மோர்கன் தமிழர்தான். பிறந்தது செம்பவாங் நேவி குடியிருப்பில். அப்பா பிரிட்டிஷ் நேவியில்…

மண்டை ஓடி

சதா சண்டித்தனம் செய்யும் ஒருவனை வீட்டில் பூட்டி வைக்கலாம். நான்கு அடி கொடுத்து அடக்கப் பார்க்கலாம். பேசாமல் முறைத்துக்கொண்டு மௌன வதை செய்யலாம். அதிக பட்சம் சோறு போடாமல் கூட இருக்கலாம். யாராவது உணவகத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவார்களா? என் அம்மாவுக்கு இதுபோன்ற திட்டமெல்லாம் எங்கிருந்துதான் வருமோ. சபா மாமாதான் இனி உன்னை மேய்க்க லாயக்கு…