தூமகேது

சுந்தரம் சைக்கிளை வேகமாக மிதித்தான்.  நான் பின்னால்,  ஒரே பக்கமாக இரண்டு கால்களையும் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். வலது  கையால் சுந்தரத்தின் தோளை இறுகப்பிடித்துக் கொண்டேன்.  மருத்துவமனை மேடு தெரிந்ததுமே தலையைச் சாய்த்து ஜப்பான் கல்லில்  சுருட்டுத்தாத்தா உட்கார்ந்திருக்கிறாரா என்று பார்த்தேன்.  அவர் எப்போதும் போல அங்கேதான் உட்கார்ந்திருந்தார். வாயில் துண்டு சுருட்டு நெருப்பு  இல்லாமல் துருத்திக்கொண்டிருந்தது.…

தேக்காவில் ஒரு பாலம் இருந்தது

இந்தப் பொழுதில் இங்கே தனியாகநிற்கிறோம். உடலெங்கும் மின்சாரம் பாய்ந்து நரம்புகள் வெலவெலத்தன. உய்யென்று காற்று சத்தத்ததோடு கடந்து செல்லவும் பயந்து கண்களை மூடிக்கொண்டேன். அக்காவும் நானும் நான்கு நாட்களுக்கு முன்னர்தான் கேம்பிலிருந்து தப்பித்து வந்திருந்தோம். எங்களைப் பார்த்த இடத்தில் ஐஎன்ஏகாரர்கள் சுட்டுவிடலாம். ஜப்பான்காரன் கழுத்தை வெட்டி இந்த தேக்கா பாலத்தில் கண்காட்சி வைப்பான். “ஐஞ்சாம் படைக்கு…

ஓர் அழகியின் கதை

பெயர்: ஜூலி முகவரி: 16, ஜாலான் மலாக்கா அ.அட்டை எண்: (கிறுக்கலான எழுத்தை வாசிக்க முடியவில்லை.)  வயது: 35 திகதி : மார்ச் 25 அறையின் உள்ளே நுழைந்து என் எதிரில் உள்ள நாற்காலியில் அமரும் முன் ஒரு கணம் என்னை ஏற இறங்கப் பார்த்தாள். என்னை கணிப்பது போல் இருந்தது அவளது பார்வை. மெல்லிய…

முடிவின்மையின் வடிவம்

நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். வெளியே என்றால் ரொம்பவும் வெளியே. நான் நிற்கும் இடத்தில் இருந்து மகிழ்ச்சியின் மையக்கூடத்திற்குச் செல்வதற்கு இறுகி நெருங்கி நின்றிருக்கும் எண்ணற்ற மனிதர்களைக் கடக்க வேண்டியிருக்கும். ஒரு நாளோ ஒரு வருடமோ ஒரு யுகமோ கூட ஆகலாம். ஆனால் இப்போது நான் நிற்கும் இடத்தில் அவ்வளவு நெருக்கடி இல்லை. இடர்பாடுகள் இல்லை.

பசித்திரு தனித்திரு விழித்திரு

1  வெள்ளைச் சட்டையும் கருப்பு காற்சட்டையும் அணிந்த மாரிமுத்து நாற்காலியில் அமர்ந்து வாசல்கதவையே பார்த்திருந்தான். கைபேசியில் நேரத்தைப் பார்த்தான். மூன்று இருபது. “இந்தா வந்துருவார்… உக்காருங்க” எனச் சொல்லி பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இருப்பு கொள்ளவில்லை. அவன் முன் இருந்த முக்காலியில் வைக்கப்பட்டிருந்த பில்டர் காபி சூடிறங்கி ஆடை கட்டியிருந்தது.  எதிர் சுவற்றில் மூன்றுக்கு இரண்டடி அளவிலான பெரிய…

சிண்டாய்

“நான்கைந்து நாட்களாக இருள் மூண்டிருந்த பெங்கூலு வீட்டு வளைவைக் கடக்கும்போதுதான் கருப்பு நிற மேகம் போன்ற திரள் ஒன்றைப் பார்த்தோம். அப்போது சஹாக் சித்தி நூர்ஹாலிசாவின் சிண்டாய்லா பாடலைப் பாடிக் கொண்டிருந்தான். ‘என் தலையணை தங்கத்தாலானது, ரத்தின உறை கொண்டது,  கைமுட்டியைத் தலையணைத்து உறங்குகிறேன்’ என்ற வரிகளை அவன் பாடும் போது  எனக்கு ஒருவித எரிச்சலாக…

நான்னா

இன்று எங்கள் நான்னாவிற்கு சாமி கும்பிட்டோம். என் மனைவி உயிரோடு இருந்தவரை, ‘உகாதிக்கு’ முதல் நாள் கொண்டாடப்படும் ‘நூக்கால்தல்லி’ திருநாளுக்கு வருஷம் தவறாமல் எனது பெற்றோருக்கு படையல் வைத்து சாமி கும்பிட்டாள். இவ்வளவுக்கும் அவள், என் பெற்றோரை பார்த்ததுகூட கிடையாது. ஆயினும், ஒரு நல்ல மருமகளாய் வருஷந்தவறாமல் அவர்களை வணங்கி வேண்டினாள். “ஒரு படம் கெடைச்சா…

ஞமலி

மோப்பம் பிடித்தபடி கண் முன்னே திரிந்து கொண்டிருந்தவன், எதிர்வீட்டு வாயிற் கதவோரம் எப்போது காலைத் தூக்கினான் என்றே தெரியவில்லை. காலணி ஒன்று பறந்து வந்து இரும்புக் கதவில் மோதி எழுப்பிய சத்தத்தில்  சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிட்டு ஓரடி பின் வாங்கி குரைத்தான். பின்னர் முன் கால்களை படுக்கவைத்து பிட்டத்தை தூக்கியபடி காலணியைப் பார்த்து வாலை ஆட்டத்தொடங்கினான்.…

கோணல் பிரார்த்தனை

சபா சித்தப்பாவிடம் கடிதத்தைக் கொடுத்தபோது, அவர் திடீரென, என் கண் முன்னே முதியவராக மாறி விட்டதைப் போலத் தோன்றினார். அவரது முகம் முழுமையாக மாறிப் போனதோடு, எனது தலைக்கு மேலாக தொலைவில் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘மஹ் மேரி’ (Mah Meri) பழங்குடி மக்கள்

பழங்குடியினரின் சிறப்பு அம்சமாக திகழ்வது அவர்கள் வாழும் சுற்றுச் சுழலே ஆகும். அவர்கள் வாழும் இடமானது எப்பொழுதும் பல்லுயிரியம் மிகுந்த வளமான ஒரு பகுதியாக இருக்கும். ஆனால், தற்காலத்தில் அவ்வாறான இடங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து கொண்டே வருகின்றன. பழங்குடி மக்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய வாழ்க்கை அமைப்புக்கு முற்றிலும் விரோதமான ஒரு சுற்றுச்சூழலை எதிர்…

இறுதி சாகசம்

என்னுடைய அப்பாவழித் தாத்தாக்கள், அப்பாவின் அப்பாவும் சித்தப்பாவும், பள்ளிப்படிப்போடு நிறுத்திக்கொண்டனர். இருவரும் சிறுவயதிலிருந்தே எந்த வேலையையும் சொந்தமாகக் கற்றுக்கொள்வதில் தேட்டையாக இருந்தனர். பதின்மவயதிலேயே எண்ணெய் வியாபாரத்தைத் தொடங்கினர். அதற்கு அதிக முதலீடு தேவையில்லை. ஒரு செக்குக் கட்டையும் ஒருஜோடி மாடும் போதும். குலத்தொழில்தான் என்றாலும் அவர்கள் தொழிலுக்குப் புதிது.

2020இன் இறுதியில்…

இவ்வாண்டின் இறுதி இதழ் இது. வல்லினத்தின் 126ஆவது இதழ். சமகால நாவல்களின் சிறப்பிதழாக வெளிவருவது அதன் கூடுதல் சிறப்பு. இணையம் வழி இலக்கிய இதழை வழி நடத்துவதில் இரண்டு விதமான சிக்கல்கள் உள்ளன. முதலாவது, படைப்பாளர்களின் மனநிலை சார்ந்தது. ‘இணைய இதழ்தானே…’ எனும் எளிமைப்படுத்திக்கொள்ளும் மனப்போக்கு. அடுத்ததாக இதழாசிரியர்களின் மனநிலை. கிடைத்ததை கொண்டு நிரப்பி வெளியிட்டால்…

மலேசிய நவீன கவிஞர்கள் (2) : ஏ.தேவராஜன் கவிதைகள்

[1] கவிதை கவிதை பற்றிய வரையறைகள் நூற்றாண்டுகளாக விவாதப் பொருளாகவே இருந்து வருகின்றன. கவிதையின் பயன்பாடு சார்ந்து மட்டுமில்லை; கவிதை என்றால் என்ன என்பதுகூட துல்லியமாகப் பதில் சொல்ல முடியாத கேள்வியாகவே இருக்கிறது. அல்லது அதன் எல்லா பதில்களிலும் எப்படியோ ஒரு விடுபடல் வந்துவிடுகிறது. பொதுவாக இலக்கியத்திற்கே அந்தக் குணம் உண்டு எனும்போதும் பிற எந்த…

வரலாற்றின் கைவிளக்கு – ‘சுளுந்தீ’ நாவலை முன்வைத்து.

‘வரலாற்றுப் புனைவு’ என்பது வரலாறும் புனைவும் முயங்கி உருகொள்வது. வரலாற்றுப் புனைவு இரு விதங்களில் செயல்பட முடியும். அறியப்பட்ட வரலாற்றின் இடைவெளிகளை நிரப்ப முடியும். வரலாற்று நாயகர்களின் செயலுக்குப் பின் இயங்கும் விசைகள் மற்றும் மனவோட்டத்தை அடையாளப்படுத்த முடியும். 2018 ஆம் ஆண்டு இறுதியில் ஆதி பதிப்பக வெளியீடாக வெளிவந்து, பல்வேறு விருதுகளைப் பெற்று, வாசகப்பரப்பிலும்…

இச்சா: குரூரங்களில் வெளிப்படும் இச்சை

பெற்றோர், சமூகம், கல்வி, அறிவு என தன்னைச் சூழ்ந்துள்ள எதுவுமே தனக்குப் பாதுகாப்பு தரப்போவதில்லை என்பதை கள்ளமற்றவளாக வளரும் ஒரு சிறுமி அறியும் தருணம் அவளுக்கு இந்த வாழ்க்கை என்னவாக அர்த்தப்படும்? அதுவரை அவளுக்குச் சொல்லப்பட்ட விழுமியங்களும் மானுட உச்சங்களும் என்ன பதிலை அவளுக்குக் கொடுக்கும்? பதில்களற்ற திக்குகளில் அர்த்தமற்ற கேள்விகளைச் சுமந்து திரியும் ஆலா…

அன்னை ஆடும் கூத்து

அறுவாள் வகைமைகள் பல. தென் தமிழக அடியாட்கள்  வசம் புழக்கத்தில் இருப்பது இரண்டு. ஒன்று வீச்சறுவாள் மற்றது வெட்டறுவாள். வீச்சறுவாளுக்கு படை மிரட்டி என்றொரு பட்டப் பெயரும் உண்டு. குறிப்பிட்ட வகையில் வீச்சறுவாள் கொண்டு வீசி எதிரியை ரத்தம் தெறிக்க (உயிருக்கு ஆபத்து இன்றி) விட்டு, அப்படித் தெறிக்கும் ரத்தம் கொண்டு, அந்த எதிரிக்கு பின்னால்…

நீலகண்டம் : பிரியத்தின் திரிபு

இந்திய நவீன மனதில் இன விருத்தி என்பதற்கான இடம் தொல் மரபிலிருந்து அதிகம் விலகிச் செல்லவில்லை. மனதளவில் அதற்கான இறுக்கம் அதே மரபான தன்மையுடன் இருக்கிறது. சந்ததி விருத்தியின் ஒரு கண்ணி அறுந்துவிடும்போது ஏற்படும் சங்கடமானது, வாழ்கையின் பொருளியல், பாதுகாப்பு என்பவற்றோடு நிறைவான வாழ்க்கை உணர்வு எல்லாவற்றையும் நெருக்கடி கொள்ளச் செய்கிறது. நவீன வாழ்க்கையில் குழந்தைப்…