போதாமை

ஒரு சில வருடங்களுக்குப் பிறகு என்னுடைய எழுத்துக்களை மறுவாசிப்பு செய்தபோது இனம் புரியாத மன ஓட்டங்கள், அது இயலாமையா, போதாமையா என்று வழி தெரியாமல் தடம் புரண்டு ஓடியது. எழுத்து என்பது சமுதாயத்தை நோக்கிய வீர ஆவேச உபதேசங்கள் என்று நம்பியிருந்த எனக்கு வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் நவீன இலக்கியத்தில் காலடி எடுத்து வைத்ததும்…

பகிர் உரிமம் – ஓர் அறிமுகம்

இணையத்தின்வழி கல்வி, கலாச்சாரம், பண்பாடு போன்று இன்னும் இதர பல துறைசார்ந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் என அனைத்தும் உலகளாவிய அளவில் பொதுமைபடுத்தப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற சாத்தியத்தை அனைவரும் எதிர்பார்க்கவே செய்கின்றனர். ஆனால், தற்போதுள்ள நமது சட்டங்களும் சமூக அமைப்பும் இதனை சற்றும் அனுமதிக்காதபடி இருப்பதுதான் தற்போதைய நிதர்சனமாகும். தொடக்கத்தில் பதிப்புரிமை சட்டத்தில் (Copyright) அதிக…

ஊர்க்காரர்களும் உள்ளூர்க்காரர்களும்

‘பிறக்க ஓர் ஊர் பிழைக்க ஓர் ஊர்’ என்ற வசனம் இன்னமும் அதே பிரபலத்துடன் பழக்கத்தில் இருக்கிறது. அதற்கான காரணம் ஒன்றுதான். அச்செயல் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பணத்திற்காகத்தான் இப்படி ஊரை விட்டு ஊர் வருகிறார்கள் என சட்டென கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் மனதினுள்ளே ஒரு சந்தேகம். இங்கு வேலைக்கு வந்திருப்பவர்கள், சாக்கடை அள்ளுகிறவர்கள்,…

ச. விஷ்ணுதாசன் கவிதைகள்

புழுக்கம்   வெளிகள் பலதாய் சமுக வெளிகள் பண்மியமாய் வேண்டும்.   வெளிகளை உருவாக்கிட இருப்பை உணர்த்தும் போதெல்லாம் முற்ற முழுதாக முள்வேலிச் சிறை அடைப்புக் கூடாய் அதிகாரத்தோடு …   சிறை முகாம் முழுவதுமாய் பாசி படர்ந்த இருட்டு இருட்டு கக்கிய விஷக் காய்ச்சல்.   வெளிச்சக் கீற்றை நாடும் அகவெளியும் புறவெளியும் அழுத்தப்பட்ட…

“தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை”

இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடக்கில் உள்ள வருத்தலைவிளான் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருமாவளவன் இப்போதிருப்பதும் இலக்கியத்தில் இயங்குவதும் கனடாவில். அரசியலும் அரங்கும் கவிதையும் திருமாவளவனின் ஈடுபாடுகள். என்றாலும் அரசியல்வாதியல்ல. கவிஞர். அரங்காடி. ஒத்தோடியல்ல. மறுத்தோடி. இதனால் வாழ்வின் பெரும்பகுதியும் சவால்களோடுதான் திருமாவளவனுக்குக் கழிந்திருக்கிறது. இந்த நேர்காணலும் அந்தக் குணத்தையே கொண்டிருக்கிறது. பெரும்போக்கு, பொது இயல்பு போன்றவற்றை…

எங்கே போகிறது மஇகா? இந்தியர்கள் என்பவர்கள் யார்?

அரசியல் கட்சிகள் நடத்துவோர் யாரும் தங்களுக்குள் நடைபெறும் சண்டையென்றும் பிணக்கு என்றும் மோதல் என்றும் ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு சுழன்று வர முடியாது. காரணம், பொதுத் தேர்தலில் பல்லின மக்களின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை ஒருபுறம் இருந்தாலும் அதிலும் குறிப்பாக இந்திய சமுதாயத்தின் வாக்குகளைப் பெற வேண்டிய அவசியத்திற்கு இயல்பாக முன் தள்ளப்பட்டிருப்பதால்,…

மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா? (பகுதி 2)

இரண்டாம் பாகம் தமிழ்த் தேசியம் தமிழ் தேசியம் என்னும் முழுமை இல்லாத கருத்தாக்கத்தை அவ்வளவு சுலபமாக விளக்கி விடவும் முடியாது. காரணம் அடிப்படையில் தமிழ் தேசியம் வேறொரு சமூக நீதியை பேசுவதாகவும் நடைமுறையில் வேறு ஒரு சமூகநீதியை கடைபிடிப்பதாகவும் உள்ளது. உலக தமிழர்களுக்கு தோதான மேடையை அமைக்கும் பேரியக்கமாக அது தன்னை அடையாளப்படுத்தினாலும் நடைமுறையில் அது…

மாப்பஸானின் குதிரை

சிறுகதை என்றவுடன் நம் மனதில் அது ஒரு சம்பவத்தைச் சொல்லும் படைப்பு முறை என தோன்றலாம். அதாவது ஒரு சம்பவம் நடக்கிறது, அந்தச் சம்பவத்தின் இறுதியில் ஒரு திருப்பம் இருக்கும். அந்தத் திருப்பமே கதையை வாசிப்பவருக்குச் சுவாரசியத்தையும் இதுவரை வாசித்ததற்கான மொத்த அனுபவத்தையும் கொடுக்கும் என பொதுவான ஒரு கருத்து இன்றும் உண்டு. சில சமயம்…

இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை

ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சிபற்றிச் சிந்திக்கும்போது அடிப்படையில், அவை நான்காகப் பகுக்கப்பட்டு விவாதிக்கப்படுவது காணக்கூடியதாக இருக்கிறது: 1. மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்திற்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு மரபு வழிப்பட்ட நிலை ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும்…

இலங்கையின் தமிழ் இலக்கியம்

இலங்கை, சிறிலங்கா, சிலோன், தாமிரபரணி என்றெல்லாம் சொல்லப்படும் ஈழத்தின் தமிழிலக்கியம் 14ஆம் நூற்றாண்டுடன் தொடங்குகின்றது என்கிறார் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை. ஆனால், ஈழத்தின் வரலாறு அதற்கும் அப்பால் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஈழ வரலாறு நீண்டதாக இருந்தாலும் அந்த அளவுக்கு இலக்கிய ரீதியாக அதனுடைய அடையாளத்தைக் காண முடியவில்லை. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கூட அது…

முரண் உண்மைகளைச் சொல்வோம்

ஈழ சிறப்பிதழாக வெளிவந்துள்ள ஜனவரி-மார்ச் 2015 பறை இதழுக்கு எழுத்தாளர் ஷோபா சக்தியின் தலையங்கம் ‘கலைக்கு கறாரான கோட்பாடுகளோ சித்தாந்தங்களோ வரைவிலக்கணமோ எல்லையோ கிடையாது. ஆனால் ஒரு நிபந்தனையுண்டு; அது உண்மையை மட்டுமே பேசவேண்டும்’ என்ற லியோன் த்ரொட்ஸ்கியின் நிபந்தனை எளிமையான ஒன்றைப்போல தோன்றினாலும் அந்த எளிமையைக் கடைப்பிடிக்க அனைத்துலகிலும் இலக்கியவாதிகள் கடுமையாகச் சிரமப்படுகிறார்கள் என்பதுவே…

வாய் தவறிச் செல்லும் வார்த்தைகள்

கவிஞர் காசியானந்தனை தெரியாத தமிழர்கள் இந்தப் பூமிப்பந்தில் எத்தனை பேர் இருப்பார்கள்? அவரது பாடல்கள் மிக நீண்டகாலத்திற்கு ஈழத்தமிழர்களிடத்தில் செல்வாக்கு செலுத்தும். அவரது பாடல்களினால் உணர்வு நரம்புகள் முறுக்கேறியபடி குளிர்தேசங்களில் எண்ணற்ற இளரத்தங்கள் இன்றும் கொதித்துக்கொண்டுமிருக்கலாம். காசியானந்தன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என ஆரம்பத்தில் நான் மிகத் தீவிரமாக நம்பியிருந்தேன். ஒரு கையில் துப்பாக்கியும், மறு…

முற்போக்கு இலக்கிய முன்னோடி கே. கணேஷ்: சில சிந்தனைகள்

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் முக்கியமானவர்களில் ஒருவர் கே. கணேஷ் (1920-2004). முற்போக்கு எழுத்தாளர்களுள் சிரேஸ்டர் என வழங்கத்தக்க தனிச் சிறப்பு வாய்ந்தவர். பல்துறை சார்ந்த ஆற்றலும் பயிற்சியும், சிருஸ்டிகர ஆற்றலும் பெற்றவர்கள் வெகு சிலரே உள்ளனர். அவர்களுள் கணேஷ்க்குத் தனியிடமுண்டு. இருப்பினும் அன்னாரின் பல்துறைச் சார்ந்த ஆளுமைகளை வெளிக் கொணரும் வகையிலான ஆய்வுகள் மதிப்பீடுகள் மிகவும்…