மாலதி மைத்ரி பதில்கள் – பகுதி 4

பகுதி 4 கேள்வி : நீங்கள் ஏன் நாவல் எழுதவில்லை? சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை குறித்து உங்கள் பார்வை என்ன? சிலர் அதை இலக்கியப் பிரதியே இல்லை என விமர்சிக்கிறார்களே. – வளவன், ஆதி & மகிழ்னன், சிங்கை நாவல் எழுதத் தொடங்கி அதற்கான குறிப்புகளில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். தற்போது சில பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது, சில…

மாலதி மைத்ரி தன்னெஞ்சறிய பொய்யுரைக்கிறார்!

நவம்பர் மாத வல்லினம் கேள்வி – பதில் பகுதியில் கவிஞர் மாலதி மைத்ரி அவர்கள் தனது பதிலொன்றில் இவ்வாறு கூறியிருந்தார்: “ஷோபாசக்தி அடிப்படையில் ஈழ விடுதலைக்கு எதிரானவர். இலங்கையில் புலிகளால் தான் ஆயுதக் கலாச்சார வன்முறை உருவானதாக வரலாற்றை திரித்துக் கொண்டிருப்பவர். புஷ்பராஜா, புஷ்பராணியின் நூல்களே இவர்களின் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லுகின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும்…

மாலதி மைத்ரிக்கு லீனா மணிமேகலையின் எதிர்வினை

நவம்பர் மாத வல்லினம் கேள்வி – பதில் பகுதியில் கவிஞர் மாலதி மைத்ரி அவர்கள் தனது  கேள்வி பதில் பகுதியில் இவ்வாறு கூறியிருந்தார்: கேள்வி :சக படைப்பாளியான லீனா மணிமேகலை கவிதைகள் தனித்து இருக்கின்றன என்பது என் வாசிப்பின் முடிவு. நீங்கள் ஒரு பெண் கவிஞராக என்ன நினைக்கிறீர்கள்? – கவிதாயினி, தமிழ்நாடு

தெளிவத்தை ஜோசப்புக்கு இவ்வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது

தெளிவத்தை ஜோசப்புக்கு இவ்வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும். இம்முறை விருதுத்தொகையாக ரூபாய் ஒருலட்சமும் நினைவுச்சிற்பமும் வழங்கப்படும். தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி விருதை வழங்கி கௌரவிப்பார். மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை…

தினகரன் கவிதைகள்

தனிமையில் எழுதி முடித்ததும் எழுதி கொண்டிருப்பதும் இனி எழுத போவதும் இன்னொரு தனிமையை பற்றி தான். • ஒருவர் கனவை மற்றொருவர் மற்றொருவர் கனவை இனொருவர் திருடித்தான் வாழ வேண்டியிள்ளது நாளை உங்கள் கனவை நானும் என் கனவை நீங்களும் திருட வேண்டிய நிர்பந்தத்தில் தான் வாழ்க்கை இருப்பு கொள்கிறது. • வலிமை இழந்த வார்த்தைகளோடும்…

எம்.ராஜா கவிதைகள்

அப்புக்குட்டியும் குட்டித்தங்கமும் புதுமணத் தம்பதி கதை தலைமுனை இழுத்தால் காலைக் கடிக்கிறது. காலைக் காப்பாற்றினால் கடிபடுது என்காது. கொசுக்கள் களவாடிய தூக்கம் தொலைந்துபோன நடுநிசியில் குட்டைப்போர்வையை சுருட்டியெறிந்து சுறுசுறுப்பாய் உட்கார்ந்தபடி புதுமணத் தம்பதிபற்றி சுடச்சுடக் கதைசொல்கிறேன். கவனமாய்க் கேளுங்கள் கனவான்களே கனவாட்டிகளே! கடவுள் வாழ்த்து வீதிநடுவே கொலு வைத்தார்களா கோவிலில் வைத்தபின்னே சுற்றிலும் வீதிசமைத்தார்களா எனக்…

“மனித விடுதலை போல் கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று”

டாக்டர் மா.சண்முகசிவா கெடா மாநிலத்தில் உள்ள அலோஸ்டார் நகரில் பிறந்தவர். தமிழகத்தில் மானாமதுரையில் (சிவகங்கை மாவட்டம்) பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தை கெடாவில் ‘ஜெய் ஹிந்த் ஸ்டோர்’ எனும் மளிகை கடை நடத்துவதிலிருந்து தன் வாழ்வை தொடங்கியுள்ளார். ஆரம்பக்கல்வியை ஆங்கிலப்பள்ளியில் கற்றாலும் இராமசாமி செட்டியார் எனும் தமிழ் ஆசிரியர் வீட்டில் வந்து சண்முகசிவாவுக்குத் தமிழ் போதித்தார்.…

மலேசியாவில் முதல் வீதி நாடகம் ‘பவுன் குஞ்சு’ : ஒரு பார்வை

மை ஸ்கீல் அறவாரியம் குறித்தும் அவ்வரவாறியம் மூலம் நடத்தப்படும் பிரிமூஸ் கல்லூரி குறித்தும் புதிதாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. இன்று மலேசியாவில் தமிழ்ச்சமுதாயத்துக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் உருப்படியானதாகவும் உயர்வானதாகவும் பலதரப்பினராலும் போற்றப்பட்டு வருகிறது. வழக்கறிஞர் பசுபதி மற்றும் மருத்துவர் சண்முகசிவா போன்றோர் முன்னெடுப்பில் இயங்கும் இக்கல்லூரி மாணவர்கள் பலரும் பள்ளியில் பாதியிலேயே தங்கள் கல்வியை நிறுத்தியவர்கள்.…

‘குவர்னிகா’வும் ஷோபாசக்தியுடனான கலந்துரையாடலும்

முதன் முறையாக மலேசியப் படைப்பாளர்களில் எழுத்துகளும் 41-வது இலக்கியச் சந்திப்பு தொகுப்பு நூலான ‘குவர்னிகாவில்’ சேர்க்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. குவர்னிகா தொகுப்பில் இடம்பெற்ற மலேசிய படைப்புகள் குறித்து பேசவும் இங்கே குவர்னிகா குறித்த அறிமுகத்தை செய்யவும் ஏற்பாடு செய்திருந்தோம். ‘புத்தகச்சிறகுகள்’ ஏற்பாட்டில் ‘வல்லினம்’ இணைய இதழ் ஆதரவில் ஷோபாசக்தியுடன் கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது. சில நாட்களுக்கு…

மலேசிய அனுபவம் : யாரும் திருத்தப்பட வேண்டியவர்களாய்ப் பிறப்பதில்லை

யாரும் திருத்தப்பட வேண்டியவர்களாய்ப் பிறப்பதில்லை. சமூகமே யாரையும் அப்படி ஆக்குகிறது. யாரொருவரும் அப்படி ஆவதற்கு இச்சமூக அமைப்பும் நாம் ஒவ்வொருவருமே காரணமாய் உள்ளோம். இன்றைய மலேசியத் தமிழ்ச் சமூகம் எதிர்க்கொண்டுள்ள மிகப் பெரிய சமூகச் சிக்கல்களில் ஒன்று இளைஞர் மத்தியில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள். மலேசிய மக்கள் தொகையில் 7 சதம் தமிழர்கள் என்றால்,…

கடன்

அமைதி நிலவியது. நீள் கல்லிருக்கையில் படுத்ததும் சட்டெனத் தூங்கிப் போனேன். அவ்வப்போது முகத்தை மூடிய சிறு துண்டு நழுவிக் கீழே விழும்போது தன்னிச்சையாக என் இடதுகை அதனை எடுத்து மறுபடியும் முகத்தை மூடிற்று. அசதியில் உடல் படுத்திருந்தாலும் மூளை மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. அதிகாலை நெருங்கியிருக்கும். விசும்பல் சத்தம் கிணற்றடியிலிருந்து கேட்பது போலிருந்தது. விழித்துக்கொண்டேன். கண்ணிமைகளை இலேசாய்த்…

மாலதி மைத்ரி பதில்கள் – பகுதி 3

பகுதி 3 கேள்வி : கவிஞர்கள் தொடர்பாக எனக்கு ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. “கவிஞர்கள் பிறக்கும்போதே கவிஞர்களாக பிறந்துவிடுகின்றார்களா அல்லது படிப்படியாக கற்று, பழகி கவிஞர்கள் ஆகின்றார்களா!” ஏன் இப்படி கேட்கிறேன் என்றால், கவிதைமீதான ஈர்ப்பின் காரணமாக அதன் அடிப்படையான விசயங்களை தேடியபோது அப்படி எதுவும் கண்ணில்படவில்லை, கவிஞர்களும் அப்படி ஒரு விசயத்தை கடந்து வந்தாகவே காட்டிக்கொள்வதில்லை.…

குவர்னிகா: அ.பாண்டியனின் மலாய் இலக்கியம் கட்டுரையை முன்னிட்டு ஒரு பார்வை… (பகுதி 2)

சென்ற மாதத்தின் தொடர்ச்சி… 1930-ஆம் ஆண்டு முதல் 1940-ஆம் ஆண்டு வரை இக்காலக்கட்டத்தில் நிறைய சிறுகதைகள் மேல்நாட்டுத் தாக்கத்தைக் கண்டித்து வந்தது எனலாம், வெள்ளையர்களால் பகடைக்காயாக உருவாக்கப்பட்டவர்களின் கதைகள், அடிமைகளாக வாழும் மலாய்க்காரர்களின் நிலை. மேல்நாட்டுப் பழக வழக்கங்களைப் பின்பற்றும் மலாய்க்காரர்களின் அவலநிலைப் முதலியன கருப்பொருளாக அச்சிறுகதைகள் கொண்டுள்ளன. 1930-ஆம் ஆண்டுகளின் சிறுகதை வளர்ச்சியில் ‘ராம்நாத்’…