கடிதம்/எதிர்வினை

மிருகம்: கடிதங்கள் 1

சிறுகதை மிருகம்

அன்பு நவீன். நான் உங்களின் வாசகனென தைரியமாகச் சொல்லிக்கொள்ள தகுதி படைத்துள்ளதாகவே நம்புகிறேன். உங்களின் அத்தனை சிறுகதைகளையும் வாசித்துவிட்டேன் எனும் துணிவில் இதைச் சொல்வேன். (மண்டை ஓடியை மறுபதிப்பு போட்டால் என்ன?)

Continue reading

மேன்மையின் பிரதிநிதி அந்தரா – ஜெயராம்

அன்புள்ள நவீன்,

ஜெயராம்

உங்களது ‘தாரா’ நாவலை வாசித்தேன். அண்மையில் என்னை தொந்தரவு செய்த  படைப்பு தாரா. மலேசியாவில் பூழியனின் தலைமையில் வேலைக்கு வந்து அங்கேயே வேர்விட்ட தமிழ் வம்சாவளியினருக்கும் மிக அண்மையில் வேலைக்காக குடிபெயர்ந்த நேபாள நாட்டவர்களுக்கும் இடையில் நடக்கும் உரசல்களினூடாக நாவல் சொல்லப்பட்டிருந்தாலும் தங்கி வாழ எப்போதும் மனிதர்களுக்கிடையில் அல்லது மனித கூட்டங்களுக்கு இடையில் நடக்கும் பூசல்களில் உள்ள பல பரிணாமங்களை நாவல் தொட்டு செல்கிறதாக வாசிக்க முடிந்தது.

Continue reading

சண்முகப்பிரியா கடிதங்கள் -2

சண்முகப்பிரியா சிறுகதை

The short story “Shanmugapriya” by M. Navin revolves around the storyteller’s memories of a person named Shanmugapriya, whom they met during their school years at Wellesley Tamil School. The author reflects on how he had forgotten about Shanmugapriya until a visit to the beach with his three-year-old daughter triggered a memory of her.

Continue reading

நினைவில் நிற்கும் தாரா – பா.கங்கா

பா. கங்கா

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பல நூல்களை வாங்கினேன், அவற்றுள் ஒன்று தாரா. வாங்கியப் பிறகு ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் சித்ரா ரமேஷ் ‘சிங்கப்பூர் வாசகர் வட்டம்’ வழியாக ம. நவீன் எழுதிய ‘தாரா’, அ. பாண்டியன் அவர்கள் எழுதிய ‘கரிப்புத் துளிகள்’ ஆகிய நாவல்கள் குறித்தக் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ‘தாரா’ நாவல் கையிலிருந்தும் படிக்காமல் எப்படிச் செல்வது என்று ஒரு தயக்கம். ஏன்றாலும் நவீன் முகநூலில் தாராவுடனான பயணத்தைக் குறித்து எழுதியிருந்த பதிவுகளைப் படித்திருந்ததால் போக முடிவு செய்தேன். கலந்துரையாடலுக்கு ஒருநாள் முன்பு தாரா நாவலை எடுத்துச் சில அத்தியாயங்கள் மட்டுமே படித்தேன். கிச்சி, லிங்கம், கோகிலாவின் அறிமுகம், அஞ்சலையின் சொலவடை, கந்தாரம்மன், லஷ்மி சிலை, குளம், குகனின் மரணம், மருதுவின் செயற்பாடு என நாவல் என்னைத் தன்னுள் ஈர்த்துக்கொள்ள தொடங்கியது.

Continue reading

அந்தரா தாராவானக் கதை – ஜி.எஸ்.தேவகுமார்

தாராவை ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு பாணியில் அணுக இயலும். ஒவ்வொரு நாவல்களும் அதை அணுகுபவரின் தனிப்பட்டப் புரிதல்களை வைத்தே அளக்கப்படும். நவீனப் படைப்புகளை வாசகன் தனிமையில் தன் உளம் சார்ந்தே அணுகுகின்றான்.

அந்நியத் தொழிலாளர்கள் வருகையின் தொடக்கத்தில் கதை நடக்கும் காலகட்டம். ஆனாலும் காட்சிகள் முன்னும் பின்னுமாகக் காலப்பயணம் செய்ய வைத்ததில் தான் நாவலின் சுவாரசியமே அடங்கியுள்ளது. கிச்சி தாராவை தேடிப் போகும் காட்சிகளில் எதிர்ப்பாராத திருப்பம் வியக்க வைத்தது. தற்காலத்தோடு கடந்த காலத்தையும் அதே பாத்திரத்தைக் கொண்டு பிணைத்து பிரித்த விதம் சிறப்பு. மிக கவனமாக கையால வேண்டிய யுக்திகள் அவை.

Continue reading

வெறுப்பின் தொடக்கங்கள்

சகோதரர் நவீன் அவர்களுக்கு,

ஜூலை மாத வல்லினம் வாசித்து முடித்தேன். மூன்று சிறுகதைகள் எனக்குப் பிடித்திருந்தன. அதில் எஸ்.ராவின் சிறுகதை அடக்கம் என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள். நான் ஏற்கெனவே அனுப்பிய சிறுகதைகளை நீங்கள் வல்லினத்தில் பிரசுரிக்காமல் நிராகரித்ததுண்டு. நீங்கள் நிராகரித்தவற்றை மற்ற இணைய இதழ்கள் பிரசுரித்ததும் உண்டு. அதனால் எனக்கு சங்கடம் இல்லை. நான் ஆச்சரியப்படுவது இவ்விதழ் 142ஆவது இதழ் என உங்கள் முக நூலில் அறிவித்திருந்தீர்கள். இத்தனை இதழ்களையும் இதே தீவிரத்துடன்தான் செய்கிறீர்களா? இத்தனை ஆண்டுகள் இந்தத் தீவிரம் குடிகொண்டிருக்க எது காரணமாக உள்ளது? அப்படி தீவிரமாகத் தோன்றிய சில இதழ்கள் ஏன் நின்றுவிடுகின்றன? வாசகர்களின் எண்ணிக்கையா? இணைய இதழ்களில் பணமும் வருவதில்லையே. எது உங்களை இயக்குகிறது?

பவன்

Continue reading

கடிதம்: ஜி.எஸ்.தேவகுமார்

அன்புள்ள ம.நவீன்,

ஒரு முறை உங்கள் பேட்டி ஒன்றை வாசித்தேன்.  கேள்வி கேட்டவர் உங்களின் நேர நிர்வாகத்தைப் பற்றி கேட்டார். எப்படி இவ்வளவு வாசிக்க, எழுத முடிவதோடு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கிறீர்கள் என்ற வியப்பு அந்தக் கேள்வி கேட்கப்பட காரணம். அந்தக் கேள்விக்கு நீங்கள் கொடுத்த பதிலில் உங்களின் ஒட்டுமொத்த இலக்கிய வாழ்க்கையின் சாரமே அடங்கியுள்ளது. இதே கேள்விக்கு பிரையன் டிரேசி போன்ற சுய முன்னேற்ற நிபுணர்கள் மிக பெரிய விரிவுரை, திட்டம், பயிற்சி என்றெல்லாம் அடுக்கிச் செல்வார். ஆனால் நீங்கள் கொடுத்த, ‘‘நான் எப்போதுமே என்னை எழுத்தாளனாகக் கருதுகிறேன். தனியாக நேரம் என்று எதையும் ஒதுக்குவதில்லை…’ (உங்கள் பதில் என் நடையில்) என்ற உங்களின் பதிலே மற்ற எழுத்தாளர்களிடமிருந்த உங்களைத் தனித்து உயர்த்திக் காட்டியது. வேலை ஓய்வுபெற்ற பிறகு இந்த பதில் பலரிடமிருந்து வர வாய்ப்புள்ளது.

Continue reading

சிகண்டி: பேரன்னையாகும் திருநங்கைகள் – சண்முகா

சிகண்டியை வாசித்து முடித்தேன். போகவே முடியாத இடங்களுக்குச் சென்றும், பார்க்கவே முடியாத மனிதர்களைப் பார்த்தும், வாழவே முடியாத வாழ்க்கையை வாழ்ந்தும் பார்த்தேன். வாசிப்பனுபவம் எப்போதுமே மிகவும் அந்தரங்கமானது. கதைவழி நாம் நம் வாழ்க்கையில் உணர்ந்தவையெல்லாம் அல்லது கதையையே நம் வாழ்க்கையாக உணருவதெல்லாம் நிறைய இடங்களில் சொல்லாக வெளிக்கொணர முடிவதில்லை. சிகண்டி அவ்வனுபவத்தைச் சொற்களால் கடத்தியுள்ளது.

Continue reading

சிகண்டி: குற்றமும் விடுதலையும் -சிவமணியன்

உயிர்வளி ஏற்றுபவைகள்,  செறிவூட்டப்பட்ட அரிக்கும் அமிலங்கள்,  வினையூக்கிகள்,  காற்றேறி எரிபவைகள்,  பூச்சுக்குள் மறைந்திருக்கும் நச்சுகள், காரகாடி பொருட்கள், நீர்மக் கரைப்பான்  போன்ற நேரெதிர் வேதியல் இயல்புள்ள பல்வேறு பாத்திரங்களாலும், அவைகள் அருகருகே உரசியதால்  வெடிக்கும் கதைத்தருணங்களால் நிரம்பியவைகள் பெரிய நாவல்கள்.  பாத்திரங்களால் சம்பவங்களால்  படிமங்களால்  விரிந்த பெரிய நாவல்களை  தொடர்ச்சியாக வாசிக்க அதிக சிரத்தை தேவைப்படுகிறது.  குவிந்தும் விரிந்தும்  சிதறியும் செல்லும்  வடிவில் இருக்கும் நாவலை உள்வாங்குவது வாசிப்பை விட அதிக மன உழைப்பினை கோருபவை. 

Continue reading

சிகண்டியின் நவயுகம் – கோ. புண்ணியவான்

என் அறியாப் பருவத்தில் நானும் திருநங்கைகளைக் கேலிப் பொருளாகவே எதிர்கொண்டேன். அவர்கள் பார்வையாளர்களைக் கவர பெண்வேடம் போட்டுக்கொள்கிறார்கள் என்று எண்ணினேன். அவ்வாறு எண்ணுவதற்கு ஒரு காரணம் இருந்தது. சின்னக் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் சுயமாக அம்மாவுடைய பாவாடையை அணிந்துகொள்வதும் செருப்பைப் போட்டுக்கொள்வதும்  முகப்பூச்சிகளை பூசிக்கொள்வதையும் பார்த்திருக்கிறேன். உளவியல் ரீதியாக, அவர்கள் தன் தாயை தனக்குள்ளே தகவமைத்துக்கொள்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். அதையே சில விடலைப்பையன்களும் செய்துகொள்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றியது. ஆனால் தொடர் வாசிப்பு அந்த எண்ணம் குறுகலானது என்று சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தது.

Continue reading