
இன்று (18.11.2021) வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் அவர்களுக்குப் பிறந்தநாள். கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவர் எழுதத் தொடங்கிய ‘ஒளிர் நிழல்‘ எனும் தொடர் 30 ஆவது பாகத்தை அடைந்துள்ளது. இந்த முப்பது பாகங்களுக்கும் நானே முதல் வாசகன்.
Continue reading
இன்று (18.11.2021) வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் அவர்களுக்குப் பிறந்தநாள். கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவர் எழுதத் தொடங்கிய ‘ஒளிர் நிழல்‘ எனும் தொடர் 30 ஆவது பாகத்தை அடைந்துள்ளது. இந்த முப்பது பாகங்களுக்கும் நானே முதல் வாசகன்.
Continue reading
‘தமிழ்ச்சீலர்’ மா.செ.மாயதேவன் அவர்களை நான் முதன்முறையாக 2004இல் சந்தித்தேன். அப்போது நான் ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். மூன்று மாத பயிற்றுப்பணிக்காகப் பள்ளிகளைத் தேர்வு செய்யச் சொன்னபோது கல்லூரியைவிட்டு மிக அதிக தொலைவுள்ள மாவட்டமாக விண்ணப்பித்தேன். பொதுவாக விடுதிக்கு எளிதாகத் திரும்பக்கூடிய தொலைவுகளில் உள்ள பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதையே பயிற்சி ஆசிரியர்கள் விரும்புவர். எனக்கு புதிய சூழல் தேவையாக இருந்தது. அதன்படி எனக்கு தைப்பிங் மாநிலத்தில் பயிற்றுப்பணிக்கான இடம் வழங்கப்பட்டது.
Continue reading
(இக்கட்டுரை மலேசிய ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் புரிதலுக்காக எளிமையான வடிவில் எழுதப்பட்டது)
நவீனத்துவம் (Modernism)
1890 முதல் 1930 வரையிலான கால கட்டத்தை நவீனத்துவ காலகட்டமாக மால்கம் பிராட்பரி, ஜேம்ஸ் மக்ஃபர்லேன் போன்ற கலை இலக்கிய ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்கள். நவீனத்துவம் என்றால் புதுமை ஒன்று உருவாவது அல்ல. அதை ‘நவீனத்தன்மை’ என்று சொல்லலாம். அது எப்போதுமே நடப்பதுதான். மனிதனுக்கு சக்கரம் அறிமுகமான காலத்தில் இருந்து இன்றைக்குத் திறன்பேசி பயன்பாடு வரை இவ்வாறு புதுமைகள் (நவீனத்தன்மை) அறிமுகமாகி வருகின்றன. ‘நவீனத்துவம்’ என்பது 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சிந்தனைகளிலும், சமூக அமைப்புகளிலும், பண்பாட்டிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிக்கிறது. இது ஒரு சிந்தனை முறை அல்ல. ஒரு கால கட்ட மனநிலை. அகில உலகத்தையும் ஆக்கிரமித்த மனநிலை.
Continue reading
கேள்வி: பேய்ச்சிக்கான முதல் விதை விழுந்த நிகழ்வென்று ஏதாவது உள்ளதா? அதை எத்தனை காலம் மனதிற்குள் காத்து வைத்திருந்தீர்கள்?
ம.நவீன்: பேய்ச்சிக்கு முன்பே அதில் பின்னிக்கிடக்கும் இரு சரடுகளை ஒட்டி நான் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். முதல் கதை ‘ஒலி’. 2014இல் எழுதப்பட்ட இக்கதை, 1981இல் லுனாஸில் நடந்த சாராயச் சாவு அடிப்படையிலானது. மற்றது 2018இல் எழுதப்பட்ட ‘பேச்சி’. குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகிவிட்டதாக நம்பும் இளைஞனின் கதை. இந்த இரண்டுமே எனக்கு நேரடி அனுபவம் இல்லாதவை. லுனாஸில் விஷ சாராயம் குடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்த காலத்தில் நான் பிறந்திருக்கவில்லை. அதுபோல என் குடும்பத்தில் குல தெய்வ வழிபாடு விடுபட்டு போனாதால் அதை ஒட்டிய வழிபாட்டு முறைகள் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் இவை இரண்டும் என்னை வெவ்வேறு வகையில் பின்தொடர்ந்து வந்தன.
Continue reading
அன்புள்ள நவீன், வரலாற்றுக்குள் இருக்கும் வரலாறு இயல்பாகவே சுவாரசியத்தையும் மர்மத்தையும் கொண்டுள்ளது. அது புனைவு வடிவில் எழுதப்படுகையில்அதன் மர்மம் இன்னும் கூடுகிறது. அவ்வகையில் அப்சரா சிறுகதையை சுவாரசியமான புனைவாக வாசிக்க முடிந்தது.
Continue reading
முகநூலுக்குள் வரும்போதெல்லாம்
எல்லோரும்
ஏதோ ஒரு சாதனை செய்திருக்கிறார்கள்
எல்லோரும்
யாருக்கோ உதவி செய்திருக்கிறார்கள்
முன்னுரை

மலேசிய இலக்கியச் சூழலில் சிறுகதைக்கான முக்கியத்துவம் தொடர்ச்சியாகவே இருந்து வருகிறது. மலேசியாவைத் தாண்டி தமிழர்கள் வாழும் வேறு நாடுகளில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் கவனம் பெறுவதுடன் பரிசுகளையும் பெற்றுள்ளன. நாவல் மற்றும் நவீன கவிதைகளைவிட சிறுகதை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனையை மலேசியப் படைப்பாளிகள் செய்துள்ளனர். விமர்சன மரபு இல்லாத இந்நாட்டில் எழுதப்படும் அனைத்துமே படைப்புதான் எனும் மனநிலையில் எழுத்தாளர்கள் திளைத்திருக்கும் சூழலில், மலேசியச் சிறுகதை இலக்கியத்தின் வரலாற்றை ஒரு கழுகுப் பார்வையில் அறிவதும் அதில் எவ்வாறான ஏற்றத்தாழ்வுகள் நடந்துள்ளன என ஆராய்வதுமே அடுத்தகட்ட நகர்வுக்கு வழி சமைக்கும்.
Continue reading
இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட ஒரு புகைவண்டித் தடம், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கையில் அழுத்தமாகப் பதிந்துபோன ஒரு கறுப்பு வரலாறு. 415 கிலோ மீட்டர் தொலைவுக்கு தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்க ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி முழுக்கவும், மனித அழிவுகளையும் அவர்களின் அழுகுரல்களையும் தாங்கியவை. இந்தப் பேரழிவின் குரூரங்கள் குறித்து ஜப்பான் மொழியில் புனைவுகள் எதுவும் உருவாகவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் வசிக்கும் நண்பர், எழுத்தாளர் செந்தில்குமாரிடம் இதுகுறித்துப் பேசியபோது சில ஆவணங்கள் ஜப்பானிய தேசிய நூலகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பதாகவும் நூலக அனுமதி பெற்றே அவற்றைப் பெற முடியும் என்றும் சொன்னார். ஆனால் ஒருபோதும் ஒரு ஜப்பானியன் இந்த வரலாற்றை தனது இளம் தலைமுறைக்குக் கடத்துவதில்லை; வரலாற்றில் தங்களுக்கு இருக்கும் கோர முகத்தை அவர்கள் வெளிப்படுத்த விரும்புவதில்லை என அவர் வழியே அறிந்தேன்.
Continue reading
கடந்த 2007ஆம் ஆண்டு கால் அறுவை சிகிச்சை செய்து, மூன்று மாதங்கள் வீட்டில் இருந்தபோது உலகின் சிறந்த திரைப்படங்களை எடுத்து வந்தார் நண்பர் காளிதாஸ். அவரிடம் உலகத் திரைப்படங்கள் குறுவட்டுகளாகச் சேமிப்பில் இருந்தன. நகர முடியாமல் கிடந்த அந்த மூன்று மாதங்களில் உலகின் மிகச்சிறந்த சில திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வலியால் வாசிப்பில் நுழைய முடியாமல் கஷ்டப்பட்ட அந்தக் காலத்தில் மகத்தான படைப்புகளில் உழல்வதில் இருந்து மனம் விடுபட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் மட்டும் இருந்தது.
Continue reading
19.12.2020 அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தபோதுதான் ‘பேய்ச்சி’ நாவல் தடை செய்யப்பட்டதை அறிந்துகொண்டேன். சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரை பேய்ச்சி நாவல் தடை குறித்த எந்த அறிவிப்பும் உள்துறை அமைச்சிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எனக்கு கிடைக்கவில்லை. ஊடகச்செய்திகள் வாயிலாகத்தான் நானும் அறிந்துகொண்டிருக்கிறேன்.
Continue reading