
நீ கிள்ளானில் வசிக்கும் ஒரு காகம். இன்றும் நீ நடுக்கத்துடன் தான் எழுகிறாய். என்னதான் சூரியன் மெல்ல உதித்துக்கொண்டிருந்தாலும், வானம் இன்னும் இருண்டவண்ணமே இருக்கிறது. குச்சிகளாலான உன் கூட்டிலிருந்து எதிரே இருக்கும் திரு.ங்-ஙின் வீட்டை நீ எட்டிப் பார்க்கிறாய். நீ உன் கறுத்த இறக்கைகளை அசைக்க, உன்னுடன் வசிக்கும் சகோதரர்கள், உறவினர்கள், அண்டை மரத்துக் காக்கைகள்…