Category: கட்டுரை

தே-ஓ கோசோங்

நேற்றிரவு படுக்கப்போகும்போது இருந்த தலைவலி இன்று காலையில் எழுந்திருக்கும்போதும் தொடர்ந்தது. இரவில் மூன்று-நான்கு முறை எழுந்து சிறுநீர் கழிக்கச்சென்றதில் சரியான உறக்கமில்லை. உறக்கத்தில் மூழ்கத்தொடங்கும் வேளையில் அல்லது உறக்கம் பிடித்த சிலநிமிடங்களில் மீண்டும் உந்துதல் தோன்ற எழுந்து கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே படுக்கையிலிருந்து எழும்போதே உறக்கச்சடவும் உடன் சேர்ந்துகொண்டது. வலப்புறப் பாதவிரல் நுனிகளில் லேசான…

ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 2

மலாய், சீன இலக்கியங்களின் எழுச்சியும் தனித்து வளர்ந்த தமிழ் இலக்கியமும் இக்காலகட்டத்தில்தான், (1950களில்) மலாய், சீன இலக்கியங்களிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. சீன இலக்கியத்தில் சமூகம், கலாசாரம் சார்ந்து இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன என்கிறார் டாக்டர் டான் சீ லே (Chee Lay, Tan, 2015). முதலாவது மலாயா சீன இலக்கியத்தின் தனித்தன்மையை வளர்க்கும் நன்யாங்…

மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள் (பகுதி 2)

ஆதி குமணன் மறைவுக்குப் பிறகே மலேசிய பத்திரிகைச் சூழலில் கணிசமான மாற்றங்கள் உருவாயின. அந்த மாற்றங்களை அறிவதன் மூலமே இன்றைய பத்திரிகைச் சூழலையும் அறியமுடியும். 28 மார்ச் 2005-இல் ஆதி குமணன் மரணமுற்றார். இவரின் மரணத்திற்குப் பிறகு மலேசிய நண்பனில் நிர்வாகப் பிரச்சினை தலைதூக்கியது. Penerbitan Sahabat Malaysia-வின் கே.டி.என். உரிமத்தை சிக்கந்தர் பாட்ஷா வைத்திருந்தார்.…

ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 1

சிங்கப்பூரை வணிக மையமாக நிறுவி தமது பணியை முடித்துக்கொண்டு 1824ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி லண்டனுக்குப் புறப்பட்டார் சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ். அவரையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பணியாளர்கள் மற்றும் மூன்று பெரிய பெட்டிகள் நிறைய இந்த மண்ணின் இலக்கியங்களையும் சுமந்துகொண்டு சுமாத்திராவிலிருந்து கிளம்பிய ஃபேம் என்ற கப்பல் அன்று இரவே தீப்பிடித்து எரிந்துபோனது.…

மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள்-1

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் நாளிதழ்களின் பங்களிப்பு முக்கியமானது. சிறுபான்மை இனமான இந்தியர்களின் எழுச்சிக்கும் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் நாளிதழ்களே ஒவ்வொரு காலத்திலும் பெரும் பங்காற்றியுள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக தமிழ்ப்பத்திரிகையை இயக்கியவர்கள் தமிழ் நாட்டிலிருந்து மலாயாவுக்கு வந்திருந்த படித்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இந்தியாவில் இருக்கும்போது பத்திரிகைத் துறையிலும் அரசியல் இயக்கங்களிலும் அனுபவம் பெற்றவர்களாக இருந்ததால்…

குண்டர் கும்பல் கலாச்சாரமும் தமிழ்ச் சமூக மெளனமும்

முன்னுரை மலேசியத் தமிழ்ச்சமூகம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் அவலங்களையும் சீர்கேடுகளையும், அதனால் ஏற்படும் வீழ்ச்சியையும் இந்த இயற்பியல்  விதியைச்சார்ந்தே ஒப்பிட முடிகிறது. அறிவியல், பொருளாதாரம், கல்வி, இலக்கியம் என எல்லாவற்றிலும் முன்னணி வகித்த தமிழர்களின் நிலையை இன்று  ஒரு வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாகத்தான் கணிக்க முடிகிறது. இந்த மாற்றத்தைச் சங்கத்தமிழ் மரபிலிருந்தெல்லாம் கணக்கெடுக்க வேண்டியதில்லை. கடந்த 200…

கா.பாக்கியம் முத்து: புனித பிம்பங்களின் முன் மண்டியிடும் பெண்ணியம்

வடக்கில் இருந்து மிகத் தீவிரமாக எழுதியதோடல்லாமல் இலக்கிய இயக்கங்களிலும் அதிக கவனம் செலுத்தியவர் க.பாக்கியம் முத்து. பெண்ணியக் கருத்துக்களை கதைகளில் மட்டும் முன்வைக்காமல் கலந்துரையாடல்களிலும் பேச்சுகளிலும் துணிச்சலாக முன்வைத்து அவ்வப்போது பல தரப்பு விமர்சனங்களை எதிர்கொண்டவர் இவர். தன் படைப்புகள் பற்றி இவர் “என்னுடைய கதைகள் பெரும்பாலும் பெண்ணியம் சார்ந்தே எழுதப்பட்டது. பெண்களின் அவலநிலை என்…

சரவாக் : கதைகளால் நிரம்பிய காற்றின் நிலம்

சரவாக். என்னை எனக்கு அறிமுகப்படுத்திய மாநிலம். இதை நான் மாநிலம் என குறிப்பிடுவதை விட இனம், மொழி, மதம், சீதோசன சூழல் என மாறுப்பட்ட இந்த நிலத்தை நாடு என்று சொல்வதுதான் சரியாகப் பொருந்தும். படிக்கும் காலங்களில் பாடப்புத்தகத்தில் சரவாக் பற்றி படித்ததோடு சரி. பின்னர் அதைப்பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. பல்கலைக்கழகத்தில் என்னோடு வேதியல் வகுப்பில்…

சீ.முத்துசாமி : ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்.

யு.பி தோட்டத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் பெரியாற்றின் மேல் பரப்பில் விரிந்திருக்கும் மரக்கிளையில் இருந்து குதித்து, எல்லா சிறுவர்களும் ‘சொரப்பான்’ பாய்ந்துகொண்டிருக்க கரை ஓரமாக நீந்தியபடியே பாய்ந்த வேகத்தில் தன் நண்பர்கள் ஆற்றின் ஆழம் சென்று மீள்வதை  ரசித்துக்கொண்டிருந்த சிறுவன்தான் முத்துசாமி. ஆற்றில் ஆழ நீந்துவதில் பயம் இருந்தாலும் அதில் கால்களை நனைக்காமல் அவரால் இருக்க முடிவதில்லை.…

தழலின் சமரசத்தில் தணிந்திருக்கும் காடு

மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் ‘கறாரான இலக்கிய விமர்சனம்’, ‘தீவிர இலக்கியம்’ ஒரு எல்லைக்கு மேல் வளராமல் போனதற்கு இதுவரையில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் ‘இந்நாட்டில் எங்களுக்கு எழுத்து சுதந்திரம் இல்லை,’ என்று எழும் குரல்களே அவற்றில் மேலதிகமானவை. இலக்கியம் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக எழுத்து துறைகள், கலைத்துறைகள், ஊடகத்துறை என கருத்து வெளிபாட்டை முன்வைக்கும்…

தோங் ஜியாவ் ஸோங் : மலேசிய சீனர்களின் வரலாற்றின் ஊடே ஓர் அறிமுகம்

மலேசியாவில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வரும் ‘தோங் ஜியாவ் ஸோங்’ என்பது மலேசிய சீனக் கல்வி இயக்கமாகும். இன்றும் இந்நாட்டில் நாம் தொடர்ந்து தாய்மொழிக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை நிலைநிறுத்திய அமைப்பு இதுவாகும். மலேசிய அரசியல் வரலாற்றில் மட்டுமின்றி மலேசியக் கல்வி வரலாற்றிலும் மிக முக்கியமானதோர் இயக்கமாக தோங் ஜியாவ் ஸோங் இயக்கம்…

மலேசியாவும் பழங்குடி கதைகளும்

“இந்தக் கதைகள்தான் எம்மக்களின் நூலகம் ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு முக்கியமான அல்லது ஈர்பான நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனதில் வளப்பமாகிய வரலாற்றை இலைகளின்மீது நினைவகமாக்கியுள்ளது. கதைகள் எங்கள் வாழ்க்கை, அவை இன்னும் வாழ்கின்றன.”   கதைக்கூறல் எனும் வாய்வழி மரபை உணர்த்தும் இவ்வாசகம், உலகில் வாழும் ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தின் ஒற்றைக் குரலாக வெளிபடுகிறது.…

கதைபோடுகிறாள் கனிப்பெண்

ஒரு சிறுகதையை எழுதி முடித்தவுடன் ஈராயிரம் ஆண்டுகளாய் தொலைந்து வரும் கதை இழையைக் கண்டுபிடித்துவிடுகிறது. புராதனக் கதை இழைகள் மறதியில் காணாமல் போய்த்தான் இருக்கும். ஒரு நகரம் பாழடைந்து ஜனங்கள் வெளியேறிச் செல்கிற கதைகள் உண்டு. எல்லா ஊரிலும் பஞ்சம் ஏற்பட்டு மாடுகளும் மனிதர்களைப்போல் எலும்பு துருத்திய காலத்தில் இந்தியாவைவிட்டு தமிழக கிராமங்களைவிட்டு வெளியேறிய ஜனங்களின்…

‘வல்லினம்’ தமிழ்ச் சொல்லினம்

எனது முதல் வெளிநாட்டுப் பயணமும் மலேசியச் செலவும் 2010 ஜனவரி  இருபத்தெட்டாம் நாள் அதிகாலை 12.05க்குச் சென்னையில் துவங்கியது. ஜெட் ஏர்வேஸ். திரும்பி நான் சென்னையில் இறங்கியது பிப்ரவரி  எட்டாம் நாள் காலை ஆறு மணிக்கு. இத்தனை துல்லியமாக ஏழாண்டுக்குப் பிறகும் நினைவிருக்குமா என்று கேட்பீர்களேயானால், எல்லாம் கடவுசீட்டில் இடப்பட்ட முத்திரிகைகள் காரணம். மொத்தம் பன்னிரெண்டு…

சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!

 மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் தனக்கான ஓர் அடையாளத்தைத் தேடி பயணித்தத் தொடக்கப்புள்ளியாக ‘இலக்கிய வட்டம்'(1970) முயற்சியையே என்னால் சுட்ட முடிகிறது. ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் சிற்றிதழ் வெளியிடப்பட்டதும், அதில் உள்ள படைப்புகள் விவாதிக்கப்பட்டதும், அவ்விவாவதங்களை மீண்டும் ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மூலமாகவே பதிவு செய்ததும் அக்குழுவினர்…