
ஆஸ்ட்ரோ நாவல் பரிசளிப்புப் போட்டியில்தான் அ.ரெங்கசாமியை முதன் முதலாய் பார்த்தேன். அவரது ‘லங்காட் நதிக்கரை’ நாவலுக்கு 10000 ரிங்கிட் சிறப்பு பரிசு கிடைத்திருந்தது. அதுநாள்வரை அப்படி ஓர் எழுத்தாளர் இருப்பதுகூட எனக்குத் தெரியாது. அல்லது மலேசிய இலக்கியத்தை நான் அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சீ.முத்துசாமியின் சிறுகதைகளை ஓரளவு வாசித்திருந்ததாலும் , நவீன இலக்கியத்தில் அவர்…