Category: கட்டுரை

What Your Teacher Didn’t Tell You: மெய்ப்பொருள் காண்பதறிவு

ஒரு பொருள் அல்லது கருத்தியலை நம் ஆய்வுக்குரியதாக ஏற்று அதுபற்றிய முந்தைய கருத்து மற்றும் முடிபுகளை தொகுத்தெடுத்து, இனியும் ஏற்க கூடியதை ஏற்று, தகர்க்கக் கூடியதை தகர்த்து, தொகுத்த தகவல்களைக் கட்டுரையாக வகை தொகைப்படுத்தி படைக்கும்போது அது ஆய்வுக்கட்டுரையாக உருப்பெறுகிறது என்கிறார் முனைவர் ந.ரெங்கநாதன் இ.செ.ப (தகவல் தொடர்பியல் துறை பற்றிய ஆய்வு அனுபவம், தமிழில்…

பேசும் முன் யோசி!

மனித வாழ்வின் ஒவ்வொரு தருணமும் படைப்புக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உட்பட்டதாகவே அமைகின்றது. வாழ்வை கூர்ந்து கவனித்தால் நம் கருத்துப் பகிர்வின் திறன் அடிப்படையிலேயே நம் வாழ்க்கை நிலையும் இருப்பதைக் காண முடியும். வேலை, பதவி உயர்வு, வியாபார அனுகூலங்கள், பல்கலைக்கழக தேர்வின் மதிப்பீடுகள், தேர்தலில் வெற்றி தோல்வி எனத் தொடங்கி சிலரின் பிழைப்புக்கும் படைப்புத் திறன்…

காரட்டுக்கு பழகிய கழுதைகள்

மனித மனம் குறித்து பேசுவதென்றால் என்னவெல்லாம் பேசலாம் என்று மனதிற்கும் தெரிந்திருக்காது. மனம் என்பதின் இருப்பிடம் எதுவாக இருக்கலாம் என ஆளுக்கு ஆள் ஓரிடத்தை சொல்லிக் கொண்டிருக்கிறோம். அறிவில்தான் மனம் இருக்கிறது. இதயத்தில்தான் மனம் இருக்கிறது. அறிவுக்கும் மூளைக்கும் தொடர்பு இல்லை. இதயத்துக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனம் என்ற ஒன்று இல்லவேயில்லை. எண்ணங்களைத்தான்…

டோட்டோ சானும் நமது கல்வி முறையும்

கனடாவில் உள்ள ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். மூன்று குழந்தைகளுக்குத் தாய். கொஞ்சம் சோர்வு அவர் குரலில் இருந்தது. காரணம் வினவியபோது குழந்தைகளால் பிரச்னை என்றார். “ஏன் பள்ளிக்குப் போக அடம் பிடிக்கிறார்களா?” எனக் கேட்டேன். “இல்லை… எவ்வளவு கெஞ்சியும் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்” என மீண்டும் சோகமானார். எனக்குத் தோழியின் பதில் ஆச்சரியமாக…

அ.ரெங்கசாமி: வரலாற்றைப் புனைவாக்கும் கலைஞன்

ஆஸ்ட்ரோ நாவல் பரிசளிப்புப் போட்டியில்தான் அ.ரெங்கசாமியை முதன் முதலாய் பார்த்தேன். அவரது ‘லங்காட் நதிக்கரை’ நாவலுக்கு 10000 ரிங்கிட் சிறப்பு பரிசு கிடைத்திருந்தது. அதுநாள்வரை அப்படி ஓர் எழுத்தாளர் இருப்பதுகூட எனக்குத் தெரியாது. அல்லது மலேசிய இலக்கியத்தை நான் அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சீ.முத்துசாமியின் சிறுகதைகளை ஓரளவு வாசித்திருந்ததாலும் , நவீன இலக்கியத்தில் அவர்…

2015 வரவு செலவு அறிக்கை – ஒரு சாமானியனின் பார்வை

மலேசிய மக்களுக்கு பொருளாதாரம் குறித்த சிந்தனைகளும் விழிப்புணர்வுகளும் துளிர்விட்டு கிளம்பும் மாதம் அக்டோபர் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அக்டோபர் மாதத்தில் தான் நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கை வெளியிடப்படுகிறது. ஆண்டுதோரும் அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் முதல் வாசிப்பே ‘வரவு செலவு வாசிப்பு’ என்றும் பட்ஜெட் என்றும்…

கே. பாலமுருகனின் ‘மர்ம குகையும் ஓநாய் மனிதர்களும்’ : சிறார் இலக்கியமும் அதன் தேவையும்

கடந்த 20.9.2014 அன்று சுங்கை பட்டாணி நகரின் சிந்தா சாயாங் கிளப் (Cinta Sayang Club) மண்டபத்தில் எழுத்தாளர் கே. பாலமுருகனின் ‘‘மர்ம குகையும் ஓநாய் மனிதர்களும்’ சிறுவர் நாவல் வெளியீடு கண்டது. அந்நிகழ்வு மலேசிய தமிழ் இலக்கிய பரப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் தனிச்சிறப்பு மிக்கதாககவும் அமைந்தது. வழக்கமாக நாட்டில் வெளியிடப்படும் தமிழ் நாவல்களை…

பேய் வீடு

அண்மையில் வல்லினம் குழுவினர் ஏற்பாட்டில் ‘பேய் வீடு’ ஒன்று மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 7 பேய்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அந்த வீட்டில் நுழைந்த பலரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவிதமான பேய் வீடுகளுக்குள் நுழைந்துள்ள அனுபவத்தில் அதன் பலவீனங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பேய் வீட்டை நண்பர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின்…

வணிக முத்திரை : தேவையும் நன்மையும்

அன்றாட வாழ்வில் நாம் பலவிதமான பொருட்களைப் பயன்படுத்துகின்றோம். நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களும் ஒரே வணிக குறி / வணிக முத்திரையைக் கொண்டிருப்பதில்லை. அவ்வகையில் பல பொருள்களின் பொதுபெயர்களும் மற்றும் பல பொருள்களின் வணிகக் குறியும் கலந்தே நமது மனதில் பதிவாகி விடுகின்றன. பல நேரங்களில் நமக்கு இதற்கான வேறுபாடுகளே தெரியாமல் போய்விடுகின்றது என்பதே ஆச்சரியம்.…

பழங்குடிகள்: மூடப்படவிருக்கும் முகங்கள்

பெரும்பாலோரின் பார்வையில் நாகரிகமற்றவர்களாகவும் அசுத்தப் போக்கைக் கொண்டவர்களாகவும் பழங்குடியினர் வரையறுக்கப்படுகின்றனர். இதனை சுட்டிக் காட்டியே நகர வாழ் மக்கள் இவர்களை வன்மையாக ஒதுக்குவதுண்டு. இடைப்பட்ட காலத்தில் மலேசிய பழங்குடியினரைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க முற்பட்டேன். அவர்களுடனான தொடர்பை மீட்டெடுக்கும் போக்கில் கேமரன் மலைப் பகுதியில் (பகாங்) வாழும் பழங்குடியினர் கிராமமான ‘கம்போங் பன்கான்’ வாழிடத்திற்கு செல்லும்…

எங்கள் நாட்டில் சாதி இல்லை!

மலேசியாவில் சாதி இல்லை என்று பலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். “செ…செ.. அதெல்லாம் கல்யாணத்தின்போது மட்டும்தாங்க…” என பல்லிளிக்கும் கூட்டம் இங்கு அதிகம். இன்னும் கொஞ்சம் முற்போக்காகப் பேசுகிறேன் பேர்வழிகள் “சாதியப் பற்றி பேசலைன்னா அது தன்னால ஒழிஞ்சுருங்க… நாம தமிழரா இணைஞ்சிருப்போம்” என ‘நாம் தமிழர்’ சீமான் போல சீன் போடுவதுண்டு. மற்ற அனைத்தையும்விட…

ஒளிப்புகா இடங்களின் ஒலி

2008-ல் வானொலி அறிவிப்பாளராகத் தொடங்கிய பணியில் 2013 வரை பலதரப்பட்ட அனுபவங்களைச் சந்திக்க நேர்ந்தது. அனுபவம் சார்ந்த அவை அனைத்தையும் எழுத்துகளாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. அப்போது நான் எழுதி வானொலியில் ஒலிபரப்பிய கண்ணாடித்துண்டுகள் என்ற நிகழ்ச்சி எனக்குச் சமூகத்தின் பல முகங்களை அறிமுகம் செய்தது. ‘மலேசியத் தமிழ்ச் சமுதாயம்’ என…

ஒழுங்கில்லா இளம் எழுத்தாளர் கூட்டமும் ஒருமையின்மையும்

‘பின் நவீனத்துவம்’ என்ற வார்த்தை தமிழில் நாசப்பட்ட நிகழ்வு போல வேறெந்த மொழிகளிலாவது நேர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அச்சொல்லை உச்சரிப்பதால் இலக்கியத்தின் மிக சமீபத்திய நகர்வுடன் சரி சமமாய் பயணிப்பது போல எப்படி பாவனை காட்டப்படுகிறதோ அதே அளவுக்கு அதை மறுப்பதாய் சொல்பவர்கள் மத்தியிலும் நிகழ்த்தப்படுகிறது. கொஞ்சம் கூட இலக்கிய அறிவு இல்லாத எழுத்தாளர் சங்க…

ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா – ம.மதிவண்ணன் கவிதைகள்

இருவருணாசிரமக் கோட்டையை நாய் போலக் காத்துக் கிடப்பதோடு பொச்சிக்காப்பு கொண்ட சாதிமானுக்கு அல்லக்கையாகவும் அன்னார் தம் இல்லத்தில் தாது புஷ்டி லேகியமாகவும் குல மகளிர் பொற்புக்குப் பூட்டருளியும் அருள் பாலிப்பான் எச்சிக்கலையும் எரப்பாளியுமான உன் கடவுள்…    – ம.மதிவண்ணன்   நான் அண்மையில் வாசித்த கவிதைத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க தொகுப்பு ம. மதிவண்ணனின் ஏதிலியைத் தொடர்ந்து…

Plagiarism: அறிவுத் திருட்டின் சில மேற்கோள்கள்

அறிவுத் திருட்டு (plagiarism) எனும் சொல் எழுத்துத் துறை சார்ந்த திருட்டுகளை சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இவ்வாறு சொன்னவுடன் எழுத்துக்களைத் திருட முடியுமா என்ற கேள்வி எழலாம். எழுத்து வடிவம்பெறும் ஒவ்வொன்றும் ஒருவரின் அனுபவம், கற்றல் பேறு, சிந்தனையாற்றல் ஆகியவற்றின் வழியாகத் தோன்றிய அறிவுசார்ந்த சொத்தாகும். அதனை பிறர் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தும்போது திருட்டாகவே கருதப்படுகிறது.…