
தான் ஒருவனுக்கே என்றல்லாமல் பிறரோடு பகிர்ந்து வாழும் உயர்ந்த பொதுவுடைமைச் சிந்தனைக்கு வேராக இருந்தது தொல்தமிழர் வாழ்ந்த சங்ககாலம் என்றால் அது மிகையாகது. குறிப்பாக இனக்குழு அடையாளங்களோடு வாழ்ந்த திணைசார் அடித்தட்டு மக்களிடம் பங்கிட்டு உண்ணும் வழக்கமும், கொண்டும் கொடுத்தும் வாழ்ந்த வாழ்வியலும் காணப்பட்டன. இனக்குழுச் சமூகப் பண்புகளுள் பொதுவில் வைத்து உண்ணுதல் என்பது மரபான…














