Category: கட்டுரை

தாயகம் பெயர்தல் : வாழ்வும் வலியும்

(மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அதன் பதிவுகள்) 20,21,22 தாயகம் கடந்த தமிழ் அனைத்துலக கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை   ‘இடப் பெயர்வு’ என்பது பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவானதாக இருந்த போதிலும்கூட அதில் பறவைகளுக்குச் சுதந்திரம் இருந்தது. ஏனெனில் வானம் பறவைகளுக்குப் பொதுவானதாக இருந்தது. ஆனால், நிலம் மனிதர்களுக்குப் பொதுவானதாக இருந்ததில்லை. இருந்திருந்தால் அவர்கள் ஏன் கடல்…

யஸ்மின் அமாட் : அழகியலும் தீவிரமும் (1958 – 2009)

யஸ்மின் அமாட் மலேசிய இஸ்லாமிய அமைப்புகளுக்குப் பெரும் சவாலாக இருந்து, அவர்களின் மனத்தில் வெறுப்பையும் அதே சமயம் புதிய இரசனையையும் கொண்டு சேர்த்த திரைப்பட இயக்குனர். ‘தீவிர மதச் சார்புடைய மக்களால் அவர் வெறுக்கப்பட்டாலும் மலேசிய மக்களின் மனத்தை ஆழமாகத் தொட்டவர்’ என ஸ்டார் நாளிதழ் ஒருமுறை செய்தி வெளியிட்டிருந்தது. மத அடிப்படைவாதிகள் யஸ்மின் அமாட்டுக்கு…

கருவில் வளரும் அணு ஆயுதம்

மலேசிய மலாய் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் அனுவார் ரிட்வான் ( Anwar Ridhwan). 1949 ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்த இவர், 1970 களில் இருந்து சிறுகதை இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சிறுகதை தவிர சில நாவல்கள், கட்டுரை நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் நவீன மேடை நாடகங்களில் இவரது பணி…

பிடிக்கலைன்னா மூடிட்டு போங்க…

பார்த்து, படித்து பிடித்த புகைப்படங்களையும் கருத்துகளையும் முகநூலில் பகிர்வது வழக்கம். பலருக்கு இது பழக்கம். அப்படி பகிர்வது எல்லோருக்கும் பிடிக்கும் என சொல்வதற்கில்லை. பிடிக்காதவர்களைன் நாம் பொருட்படுத்துவதும் பொருட்படுத்தாமல் போவதும் அவர் செய்யும் பின்னூட்டத்தில்தான் இருக்கிறது. சமீபத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்திருந்தேன். ‘நீங்கள் யாரோடும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லையென்றால்; நீங்கள் எல்லோருக்கும் ஜால்ரா அடிக்கிறீர்கள் என்று…

போலி அறிவுவாதமும் மலேசிய கலை உலகமும்!

மலேசிய கலை இலக்கிய வெளிபாட்டின் மீது எனக்கு எப்போதும் எதிர்பார்ப்பும் அதைவிட அதிக ஏமாற்றமும் உண்டு. ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு சில கலை ஆக்கங்களைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கும்போது அவற்றை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் போலி அறிவுஜீவித்தனங்களாகவே  (Pseudo Intellectuals) உள்ளன.  இந்தப் போலி அறிவுஜீவிகளை அடையாளம் காட்டுவது மிகக் கடினம். காரணம், அவர்கள் சமூகத்தால்…

சுந்தர ராமசாமியின் ‘ரத்னபாயின் ஆங்கிலம்’

1886 ஆம் ஆண்டு மேற்கத்திய மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ஆனந்தி கோபால் ஜோஷி. மார்ச் 31ம் நாள் 1865ஆம் ஆண்டு மும்பைக்கு அருகிலுள்ள கல்யாண் எனும் சிறு பட்டணத்தில் பிறந்தவரான இவர், ஒன்பது வயதில் அஞ்சல் குமாஸ்தாவாக பணியாற்றிய கோபால் ஜோஷிக்கு மணமுடிக்கப்பட்டார். முற்போக்குவாதியான கோபால் ஜோஷி பெண் கல்வியை ஆதரிப்பவராக…

லியோ டால்ஸ்டாயின் ‘Three Questions’

தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்ட அநபாயன் என்ற மன்னனுக்கு மூன்று கேள்விகள் பிறந்தன. அவனது கேள்விகள்: உலகை விட பெரியது எது? கடலை விடப் பெரியது எது? மலையை விடப் பெரியது எது? அவனால் இக்கேள்விகளுக்கு விடைகளைக் காணமுடியாததால் ஓர் ஓலையில் எழுதி அதைத் தொண்டை நாட்டு மன்னனுக்கு அனுப்பி பதிலைத் தெரிவிக்கும்…

தொப்பையைக் குறைப்பது எப்படி?

தொப்பையை குறைப்பது பற்றி இணையத்தில் தேடும்போது இங்கே வந்திருக்கலாம். நானும் எவ்வளவோ செய்து பார்த்தாச்சி இது வேறயா என வாய்விட்டு பேசி, யாருக்கும் தெரியாமல் இதனை நீங்கள் படிக்கத்தொடங்களாம். ஒவ்வொரு மாதமும் இந்த பக்கத்தில் எந்த சர்ச்சயை கண்டுக்கொள்ளலாம் என இங்கு வந்திருக்கலாம். நீங்கள் செய்துக்கொண்டிருக்கும் பயற்சியோ, செய்துக்கொண்டிருக்கும் முயற்சியோ இத்தலைப்பில் ஒத்துப்போகிறதா என பார்க்க…

மாற்றத்தை நோக்கியதே இலக்கியம்

மூலம் S.M. ஷாகீர்   மொழியாக்கம்: அ.பாண்டியன் கட்டுரையாளரைப் பற்றி: S.M. ஷாகீர்- இயற்பெயர்  ஷேட் முகமது ஷாகீர் பின் ஷேட் ஓத்துமான். 4.2.1969 கோத்தா பாருவில் பிறந்தவர். 1990 முதல் எழுதி வருகிறார். இதுவரை 22 இலக்கிய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது ‘மெரெங்குஹ் லாங்கீட்’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்கு (1994/1995) பெர்டான இலக்கிய…

ஏ.சாமாட் சைட் வாழ்க்கை குறிப்பு

ஏ.சாமாட் சைட் (இயற்பெயர்: அப்துல் சாமாட் முகமது சைட்) மலாய் இலக்கிய உலகில் பலராலும் நன்கு அறியப்பட்டவர். இதுவரை முப்பதுக்கும் மேல்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். நாவல், கவிதை, சிறுகதை, இலக்கிய கட்டுரை என்று பல்வேறு தளங்களில் இயங்கக்கூடிய இலக்கிய ஆளுமை.   1985 –ல் தேசிய இலக்கியவாதி அங்கீகாரம் பெற்றது உட்பட பல பட்டங்களைப் பெற்றுள்ளார். மலாக்கா…

தமிழக வாக்காளர்களுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்

இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ் செயலுக்குத் தலைமை தாங்கியது மட்டுமின்றி, அதற்காக…

தமிழர் அறிவியலும் சில சந்தேகங்களும்

Geocentric view: இவ்வரைப்படம் புவி மையக் கோட்பாடை குறிக்கிறது. அரிஸ்தோட்டல் ஊகித்த புவி மையக் கோட்பாடை இப்படமானது சித்தரிக்கிறது. மையப்பகுதியில் பூமியும், அதனைச் சுற்றியும் ஞாயிறும் இதர கோள்களும் வரையப்பட்டிருக்கின்றன. படத்தின் வெளிப்பகுதியில், தெய்வங்களின் வரைப்படம் இருப்பதையும் காணலாம்.

தொன்மங்களை (Myths) பொதுவாகக் கற்பனையின் உச்சத்தில் விரித்துரைக்கப்பட்ட கதைகள் என வரையறுத்துக் கூறுவர். காலங்களைக் கடந்து அவை எல்லா சமூகங்களிலும் தொடரப்பட்டு வருவது கண்கூடான ஒன்று. எச்சமயத்தைச் சார்ந்ததாக இருப்பினும் இக்கதைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகளானது விண்ணுலகம் மற்றும் மண்ணுலகைச் சார்ந்தவையாக பெரும்பாலும் இருக்கும். விண்ணுலக கதைகள் பெருவாறாக கற்பனைக் கதைகள் எனக் கொள்ளப்பட்டாலும், மண்ணுலகம் சார்ந்த…

மலேசிய சீன இலக்கியம்: எளிய அறிமுகம். – லீ சூ சீ

(சீனக் குடியேறிகள் முதல் மலேசிய சீனர்கள் வரையிலானவர்களின் படைப்புகள்.) முதலாவதாக, ‘சீனர் மலேசிய இலக்கியம்’ (Chinese Malaysian Literature) என்னும் சொல்லாடலே, தற்போது பரவலாக புழக்கத்தில் உள்ள ‘மலேசிய சீன இலக்கியம்’(Malaysian Chinese Literature) என்னும் சொல்லைவிட மிக பொருத்தமானது என்பது என் தனிப்பட்ட கருத்து. காரணம் சீன மலேசியர்களால் படைக்கப்படும் இலக்கியம் கருத்தாக்கங்களாலும், அடிப்படைக்…

நிலையாமையில் தினம் தினம்தான் ஏழை சாகிறான்

சுந்தர ராமசாமியின் எழுத்துகளை தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தேன். சு.ரா-வின் ‘நா.பிச்சமூர்த்தியின் கலை – மரபும் மனித நேயமும்’ என்ற புத்தககம் கிடைத்தது. சுந்தர ராமசாமியின் பெயருக்காகத்தான் அந்த புத்தகத்தை வாங்கினேன்.  புத்தகத்தைப் படித்த போதுதான் நா. பிச்சமூர்த்தி குறித்தும் அவரது எழுத்து குறித்தும் தெரிந்துக் கொண்டேன். ஆனால் அவரின் கவிதைகளோ, சிறுகதைகளோ இங்கே  கிடைப்பது அரிதாக இருந்தது.…