ரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்

1980-களின் இறுதியில் என்று நினைக்கிறேன். பினாங்கு அறிவியல்  பல்கலைக்கழகத்தின் ஏதோ ஒரு விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே சில நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் ‘வானத்து வேலிகள்’ நாவலும் இருந்தது. ரெ.கா பெயரைப் பார்த்தவுடன் அந்நாவலை வாங்கிக்கொண்டேன். விலை மூன்று ரிங்கிட். அதனை இரண்டு நாளில் படித்து முடித்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம்…

கரகம்

(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை) போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில்…

வாள்

(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை) அந்தக் கும்மிருட்டில் உயிரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி நடந்தான் சந்தனசாமி. மழை சிறுசிறு தூறல்களாகக் கருமேகத்திலிருந்து வழிந்து மண்ணை நசநசக்கச் செய்துகொண்டிருந்தது. அவன் நடந்த பாதை – அதைப் பாதை என்று சொல்ல முடியாது – அவனாக உண்டாக்கிக்கொண்ட வழியில் சேறும் சகதியும் களிமண்ணுமாகச் சேர்ந்து…

புள்ளிகள்

(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை) “டேய்… அறிவுகெட்ட முண்டம். எடுடா கல்ல!.’’ வெளியிலே இடி இடித்தது. ”அல்லூர் தண்ணி ஓடாம, கல்லப் போட்டுத் தடுக்கிறியே. நாத்தம் கொடலைப் புடுங்குது. எத்தன வாட்டி சொல்றது, எடுக்கப் போறயா? ரெண்டு சாத்தட்டுமா?” இடிகள் திசைகளில் எதிரொலித்தன. இந்த இரைச்சலில், அருகே இருந்த வேப்பமரத்திலிருந்த காக்கைகள் அச்சம் கொண்டு…

ஜெயமோகன், மாலன் மற்றும் மலேசிய – சிங்கை இலக்கியம்

வாசிக்கும் முன்பு:  இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் என்னை ஜெயமோகனின் அடிவருடி என்றும் அவருக்கு ‘ஜால்ரா’ அடிக்கும் நபர் என்றும் மிக எளிதாகக் கிண்டல் அடித்துச் செல்லப்போவதை முன்னமே அனுமானித்துக்கொள்கிறேன். நான் முன்வைக்கும் கருத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத கோழைகளுக்கும் சோம்பேறிகளுக்கும் அது மட்டுமே கையில் கிடைத்திருக்கும் இறுதி ஆயுதம். எனவே அவர்களை அடையாளம் காண அந்த…

“இலக்கியம் சொல்வதல்ல காட்டுவது” – ஜெயமோகன் பட்டறை அனுபவம்.

கடந்த 11.9.2016 – ஞாயிற்றுக்கிழமை வல்லினம் நடத்திய சிறுகதைக் கருத்தரங்கில் கலந்துகொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட சிலரே இதில் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டபோது, என்னையும் வருமாறு அழைத்து பங்குகொள்ளச் செய்தார்கள். இதில் கலந்துகொள்ள வல்லினம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பங்கெடுத்திருப்பது முக்கியத் தகுதி.  முதலில் ஒரு புலனக்குழுவை உருவாக்கி, போட்டியில் பங்குகொண்டவர்கள் இணைக்கப்பட்டனர். தொடர்ந்து அதில்…

நெருங்கப்பூத்த மோமதி மலர்களை முத்தமிட்டதுண்டு

மனப் பிணியாளர்களுக்கு காதில் மருந்திடும் சிகிச்சையை மேற்கொள்ளும் குடும்பத்தில் தனியாகப் பிறந்தேன் மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் இப்போது அந்த ஊர் இல்லையென எனக்குத் தெரியும் ஆரம்பக் கல்விச்சாலையில் உடனிருந்தவளோடு சேர்ந்து திருட்டைப் பழகினேன் பதிமூன்று வயதில் புகைப்படங்களுக்கு சட்டகமிடும் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டேன் விளையாட்டு மைதானத்தின் கண்களுக்கு நானொரு முடவன் வேலைகேட்டு அதற்கான கட்டடங்களின்முன் நின்றதில்லை இளம் அவயங்களின்…

பாவைக் கூத்து

அம்ம வாழிய தோழி, யார் அவன் என்று வினாக்குறியானாய் அறிந்திலையோடி?   வீட்டுக் காவல் மறந்து சந்து பொந்து மரங்களில் எல்லாம் காலைத் தூக்கி நின்றாடி பெட்டை நாய்களுக்கு மூத்திரக் குறுஞ்சேதி எழுதி அலையுமே அந்தச் சீமை நாயின் பேர் இல்லத்து வம்பனடி அவன். போயும் போயும் அவனையா கேட்டாய்?   பொம்மலாட்டப் பாவையைப்போல் ஒருவர்…

முஸ்தாங்: விடுதலையின் கலகக்குரல்

துருக்கியில் வாழும் பெண்கள் தங்களுக்கு உரிமைவேண்டி போராடிக் கொண்டிருக்கின்றனர்.  பெண்களின் மேல் செலுத்தப்படும் ஆதிக்கமும் வன்முறையும் அவர்களுக்கு இழைக்கப்படும் பாலுறவுக் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கான குரல் மறுக்கப்படுகிறது.  2012 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடையில் துருக்கியில் மட்டும் 90,483 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. வல்லுறவு, பாலியல் வன்கொடுமை, சிறுவயதுப் பெண்களிடம் பாலியல்…

பத்தினிக் கோட்டம் (சில தடங்களும் தொன்மங்களும்)

பள்ளிப் பருவத்தினின்றே தமிழ்ப்பாடம் என்றால் அலாதிப் பிரியம்தான் எனக்கு. அதிலும் சிலப்பதிகாரம் குறித்த ஆர்வம் எனக்குள் அதிகரித்தது கல்லூரிப்பருவத்தில் தான். அதற்குக் காரணம், சிலப்பதிகாரக் காப்பியத்திற்கும் எங்கள் பகுதிக்கும் உள்ள தொடர்பைக் கேள்விப்பட்டதுதான்.  மேலும், பேராசிரியர் சி.கோவிந்தராசனார்  எழுதிய ‘கண்ணகி அடிச்சுவட்டில்’ என்ற நூலும், கண்ணகிக்கோட்டம் கண்டறியப்பட்டபோது அங்கு மண்டிக்கிடந்த புதர்களை அகற்றும் குழுவில் வேலைக்குச்…

அன்புவேந்தன் கவிதைகள்

அன்பின் வழி அது   நமது அன்பின் பெரும்பொழுது எல்லையற்று விரியும் இப்பெருநிலத்தின் உயிர்க்கூட்டங்களின் மேல் பிரபைகளைப் பொழிந்தபடி நட்சத்திரங்களில் சிமிட்டிக்கொண்டிருக்க நாம் அப்போதுதான் ஒரு முத்தம் பகிரத் தொடங்கியிருந்தோம்.   தடங்களைத் தளர்த்தியபடி நெகிழ்ந்த புலன்கள் பாவி சிகரங்களையும் சமவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் சுழித்துத் திளைக்கும் நமது அன்பின் நீர்மத்தில் மிதந்தபடி ஒரு புணர்தலைத் தொடங்கியிருந்தோம்…

நீயின்றி அமையாது உலகு – 7

உதடுகள் இரண்டும் ஒட்டிக்கொண்டன. கண்களைத் திறக்கத் தேவையான விசை எதுவென பிடிபடவில்லை. புருவங்கள் துடித்தன. கண்கள் மூடியபடியே இருந்தன. அந்த நொடி வாழ்வின் எல்லையில் நின்று எல்லையற்ற எதையோ பார்ப்பதாகப் பட்டது. கருமேகங்களின் மேல் நான் மிதப்பதாகவும், நானே மழையாகப் பொழிவது போலவும். நானே கடலாக, நானே நீராவியாக, அருவமானதாக, நானே அண்டம் முழுதும் நிறைந்துவிட்ட…

நிர்வாணம்

ஏழு வருஷப் பழக்கம். ஒத்த நூல் பிரிஞ்சி கெட்டித் துணி பரபரன்னு கிழிஞ்சமாறி சட்ன்னு அறுந்து போச்சு. வருஷக் கடைசியில கலியாணம். மண்டபம் புக் பண்ணி, துணி எடுத்து, மால, சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்து…. எல்லாமே செஞ்சாச்சு. பத்திரிகதான் இன்னும் கொடுக்கத் தொடங்கல. தொண்டைக்குழிக்குள்ள இறுகி மூச்சை, பேச்சை எல்லாத்தையும் அடைச்சிகிட்டு தண்ணிகூட இறங்கல. அப்பதான்…

விமர்சனங்களை விமர்சித்தல்

இலக்கிய விமர்சனம் என்று ஆரம்பித்தாலே அது சர்ச்சையிலும் சண்டையிலும் மனக்கசப்பிலும்தான் சென்று முடிகிறது. தேசம், மொழி போன்ற எல்லைகளைக் கடந்து இந்தநிலை கலை இலக்கியச் சூழலில் பொதுவானதாகவே இருக்கிறது. ஆனாலும் விமர்சனம் இல்லாத கலையும் இலக்கியமும் உயிர்ப்பற்றதாகிவிடும் என்பதனால் தொடர்ந்து விமர்சனங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. விமர்சனம் என்பது என்ன? அதை யார் செய்யவேண்டும்?…

என் பார்வையில் ‘தங்க ஒரு . . . ’

வல்லினம் குழுவின் சிறுகதை கலந்துரையாடல் என்ற புலனக்குழுவில்    பகிரப்பட்ட கதைகளில் என் மனத்தை வெகுவாய் கவர்ந்த கதையாய் அமைந்தது ‘கிருஷ்ணன் நம்பி’ எனும் எழுத்தாளர் எழுதிய ‘தங்க ஒரு’ எனும் கதை. மாய எதார்த்த வடிவில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. கதைசொல்லி தன் மனைவிக்கு எழுதும் கடிதம் மூலம் தொடங்குகிறது. நகரத்தில் தங்குவதற்கு ஒரு நல்லவீடு தேடி…

புதிய முயற்சி : புலனக்குழு இலக்கிய உரையாடல் – 1

‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ எனும் கருப்பொருளின்கீழ் இவ்வாண்டு நடைபெறவுள்ள வல்லினம் கலை இலக்கிய விழா 7, மூத்த படைப்பாளர்களை ஆவணப்படுத்துதல்; இளம் படைப்பாளர்களை அடையாளம் காணுதல் எனும் இரு முக்கிய நோக்கங்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படுகின்றது. அதையொட்டி வல்லினம் சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்புகள் ஜூன்மாதம் தொடங்கி அச்சு, மின் ஊடகங்களில் தொடர்ச்சியாக வந்தது அனைவரும் அறிந்ததே. வெறும் போட்டிகள்…