அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 2

Magic mirror on the wall, who is the fairest one of all? ஒரு நாள் வீட்டின் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அந்த அறையில் இரண்டு அலமாரிகள் உள்ளன. ஒன்றில் முழு கண்ணாடி பதிக்க பட்டிருந்தது. இரண்டு அலமாரிகளிலும் சேலைகள்தான் மடித்து வைக்க பட்டிருந்தன. எப்போதும் விடுமுறைக்கு வீட்டுக்கு போனாலும் நான்தான்…

சங்ககாலப் பண்பாடு – ‘பாதீடு’

தான் ஒருவனுக்கே என்றல்லாமல் பிறரோடு பகிர்ந்து வாழும் உயர்ந்த பொதுவுடைமைச் சிந்தனைக்கு வேராக இருந்தது தொல்தமிழர் வாழ்ந்த சங்ககாலம் என்றால் அது மிகையாகது. குறிப்பாக இனக்குழு அடையாளங்களோடு வாழ்ந்த திணைசார் அடித்தட்டு மக்களிடம் பங்கிட்டு உண்ணும் வழக்கமும், கொண்டும் கொடுத்தும் வாழ்ந்த வாழ்வியலும் காணப்பட்டன. இனக்குழுச் சமூகப் பண்புகளுள் பொதுவில் வைத்து உண்ணுதல் என்பது மரபான…

பொய்யால் விளைகிற வன்முறைகள்

என் மனதுக்குப் பட்டதைப்பேசுகிறேன் என்று பொய்ச்சான்று வழங்க விரும்பவில்லை. அதற்காக, நான் சொல்வதெல்லாம் உண்மையும் அல்ல பொய்யும் அல்ல. அவை இரண்டுமே என்னிடம் அடிக்கடி உரசிக்கொள்ளவே செய்கிறது. இருப்பினும், இந்த இரண்டும் எப்படியோ பல வேளைகளில் ஒரே நேர்கோட்டில் சங்கமித்தும் விடுகின்றன. மனம் என்று ஒன்று இருப்பதை நான் எப்போதும் ஏற்பதில்லை. மூளைதான் மனிதனுக்கு இருக்கிறதே…

அந்நியன்: வாழ்வெனும் அபத்தமும் விடுதலையும்

உலக இலக்கியங்களை வாசிக்க ஆர்வம் துளிர்த்தபோது நான் முதலில் தேர்வு செய்தது ‘அந்நியன்’ நாவல்தான். சிறிய நாவல். எளிமையான அட்டைப்படம். பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் The Outsider என மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல். வெ. ஶ்ரீராம் பிரஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்திருந்தார். அப்போது எனக்கு இருபத்து ஐந்து வயதிருக்கும். மிக உற்சாகமாக அந்த நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். தொடங்கியபோதே ஆல்பர்…

நிழலின் சொகுசு

பிரதான சாலையோடு சங்கமிக்கும் தடம் வழியே வரும் சொகுசுக் கார் முனையில் நின்று மூக்கு நீட்டி எட்டிப் பார்க்கும் தூர்தர்ஷனின் மகாபாரத வில் தொடுத்த கணைச் சரங்களாய் விசையுற்று ஏகும் வாகனங்கள் ஒருகண சிறுவெளி கிடைத்ததும் அதில் உடம்பை நுழைத்து வெறிவேக வேங்கைகள் ஸ்தம்பிக்க ஒய்யாரமாய் வளைத்து சல்லென்று முந்திச் செல்லும் நரியின் மீது உறுமும்…

ஆதிசேடன்

ஸ்ரீவைகுண்டத்துப் பாற்கடலில் தனது உடலாலேயே ஆதிசேடன் மூன்றடுக்கு மஞ்சத்தை எழுப்பி தனது ஐந்து படங்களையும் விரித்து மூவுலக காப்பகமான திருமாலுக்குக் குடைப்பிடித்தான். சுதர்சனன், சங்கு முதலிய ஆயுதங்களும் கருடனும் திருமாலைச் சேவித்து நின்றனர். திருமகள் நாதனின் அருகில் அடக்கமாய் வீற்றிருந்தாள். எல்லாம் வல்ல திருமால் யோக நித்திரையில் ஆழ்ந்த வண்ணமே ஆதிசேடன் மேல் சயனித்திருந்தார். எல்லாமே…

2000-க்கு பிந்தைய தமிழ் நாவல்களின் உலகம்

“எல்லாமே நிரந்தரமாய் மாறிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம். வாழ்க்கை என்பது தொடர்ந்து செல்லும்”-*1 ‘லீவ் உல்மன்’. மொழியின் வரலாறு என்பது மொழியில் உண்டான இலக்கியப் படைப்புகளின் வரலாறுதான். அந்த வகையில் நாவல் என்ற கலை வடிவம் தமிழ் மொழிக்கு அறிமுகமாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. முதல் நாவல் எழுதப்பட்ட காலத்திலிருந்து 2014ல் எழுதப்பட்ட…

பன்முகநோக்கில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் புதினங்கள் – ஓர் ஆய்வு

இலக்கியச்சூழல் ஓர் அறிமுகம் எழுத்தாளர்களில் ஆண் பெண் என்ற பிரிவினை அர்த்தமற்றது என்றாலும்   தமிழ் இலக்கியச் சூழலும், தமிழ்க்குடும்பச் சூழலும் ஆண் பெண் என்ற பேதத்தை உரமிட்டு வளர்த்து வந்திருக்கின்றன. இதன் நீட்சியைத் தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் கண்கூடாகக் காண்கிறோம். ஓர் எழுத்தாளன் சுயவிருப்பின் பேரில் உருவாகிறான் . சில சமயங்களில்…

இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், காந்தி: சில குறிப்புகள்

ஒன்று இந்தியாவின் முக்கிய வலதுசாரி மதவாத அமைப்பான ‘ஆர்.எஸ்.எஸ்’ எனப்படும் “ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்” விவேகாநந்தரின் 150ம் ஆண்டை (2013) இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கி இயக்கப்படும் பல நிறுவனங்களில் ஒன்றான ‘விவேகாநந்த கேந்திரா’ இதில் முன்னணியில் இருந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இன்றைய வடிவத்திலும் நோக்கிலும் கட்டமைத்த குருஜி…

“தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை” – பகுதி 2

பகுதி 2 இதே காலத்தில் தமிழ்நாட்டிலும் இதே மாற்றம் ஏற்படுகிறது. இன்று தமிழ்நாடு. இலங்கை மலேசியா, தமிழர்கள்வாழ் புலம்பெயர் நாடு என்ற வேடுபாறின்றி ‘தமிழ்கவிதை’ பொதுத் தளத்தை வந்தடைந்திருக்கிறது. இதில் எங்கு தேக்கம் வந்ததெனக் கருதுகிறீர்கள்? நான் அப்படி எண்ணவில்லை. நான் எப்போதும் அதைத் துரத்துபவனாகவே இருக்கிறேன். அப்படி தேக்கமிருந்தாலும் ஏதோ ஒரு திசையில் உடைத்துப்…

சிற்றிதழ்களின் அரசியலும் ஆய்விதழின் தேவையும்

தமிழில் உருவான சிற்றிதழ் சூழல் முயற்சியோடுதான் மலேசிய சிற்றிதழ் சூழலை பொருத்திப்பார்க்க வேண்டியுள்ளது. இலக்கியம், கலை, இதழியல் என தமிழகத்தை எப்போதும் முன்னோடியாகக் கொண்டிருக்கின்ற மலேசியத் தமிழ் கலை இலக்கிய உலகத்தை அறிய இந்த ஒப்பீடு அவசியமாகிறது. முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் ஆய்வு நூலான மலேசியத் தமிழரும் தமிழும் எனும் நூலின் வழி, மலேசியாவில்…

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 1

‘உடைந்த கண்ணாடியை ஏன் பார்க்க கூடாது’ ‘இரவானதும் நகம் ஏன் வெட்ட கூடாது’ ‘ஒற்றைக் காலில் ஏன் நிற்க கூடாது’ ‘இரவில் விசில் ஏன் அடிக்க கூடாது’ ‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் ஏன் நடக்கக்கூடாது’ ‘இரவில் உப்பை ஏன் வாங்க கூடாது’ ‘கர்ப்ப காலத்தில் கூந்தல் ஏன் வெட்டக்கூடாது’ என் முதல் கட்ட ஆராய்ச்சியை எனது அம்மாவிடமே ஆரம்பித்தேன். அடுத்து நண்பர்கள்…

ஹருகி முராகமி சிறுகதை: கினோ

அந்த மனிதன் எப்போதும் அதே இருக்கையிலேயே உட்கார்ந்தான். அந்த இருக்கை உயரமான பரிமாறும் மேடைக்குப் பக்கத்தில் இருந்தது. அது காலியாக இருந்தது. ஆனால் அது எப்போதும் காலியாகத்தான் இருக்கும். மதுபான விடுதியில் எப்போதாவதுதான் கூட்டம் நிரம்பி வழியும், அந்த இருக்கை கவனத்திற்கு வராமலும் வசதியற்றும் இருக்கும். அதற்குப் பின்னாலுள்ள படிக்கட்டு வளைந்து இறங்கியிருக்கும். அந்த இடத்தில்…

இல்லாத திசைகள் 4 – பழிவாங்கும் படலம்

என் 21-ஆவது வயதில் அந்த வாரப்பத்திரிகையில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். ஆனால் அதற்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அது தானாக நடந்தது. அரசாங்கம் நடத்திய ஒரு மாத தமிழ்ப்பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நான் வேலை செய்த வாரப்பத்திரிகை அலுவலகத்திற்கு வந்தார். அவர் இப்போதிருக்கும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கெல்லாம்…

போதாமை

ஒரு சில வருடங்களுக்குப் பிறகு என்னுடைய எழுத்துக்களை மறுவாசிப்பு செய்தபோது இனம் புரியாத மன ஓட்டங்கள், அது இயலாமையா, போதாமையா என்று வழி தெரியாமல் தடம் புரண்டு ஓடியது. எழுத்து என்பது சமுதாயத்தை நோக்கிய வீர ஆவேச உபதேசங்கள் என்று நம்பியிருந்த எனக்கு வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் நவீன இலக்கியத்தில் காலடி எடுத்து வைத்ததும்…

பகிர் உரிமம் – ஓர் அறிமுகம்

இணையத்தின்வழி கல்வி, கலாச்சாரம், பண்பாடு போன்று இன்னும் இதர பல துறைசார்ந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் என அனைத்தும் உலகளாவிய அளவில் பொதுமைபடுத்தப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற சாத்தியத்தை அனைவரும் எதிர்பார்க்கவே செய்கின்றனர். ஆனால், தற்போதுள்ள நமது சட்டங்களும் சமூக அமைப்பும் இதனை சற்றும் அனுமதிக்காதபடி இருப்பதுதான் தற்போதைய நிதர்சனமாகும். தொடக்கத்தில் பதிப்புரிமை சட்டத்தில் (Copyright) அதிக…

ஊர்க்காரர்களும் உள்ளூர்க்காரர்களும்

‘பிறக்க ஓர் ஊர் பிழைக்க ஓர் ஊர்’ என்ற வசனம் இன்னமும் அதே பிரபலத்துடன் பழக்கத்தில் இருக்கிறது. அதற்கான காரணம் ஒன்றுதான். அச்செயல் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பணத்திற்காகத்தான் இப்படி ஊரை விட்டு ஊர் வருகிறார்கள் என சட்டென கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் மனதினுள்ளே ஒரு சந்தேகம். இங்கு வேலைக்கு வந்திருப்பவர்கள், சாக்கடை அள்ளுகிறவர்கள்,…