சிற்றிதழ்களின் அரசியலும் ஆய்விதழின் தேவையும்

தமிழில் உருவான சிற்றிதழ் சூழல் முயற்சியோடுதான் மலேசிய சிற்றிதழ் சூழலை பொருத்திப்பார்க்க வேண்டியுள்ளது. இலக்கியம், கலை, இதழியல் என தமிழகத்தை எப்போதும் முன்னோடியாகக் கொண்டிருக்கின்ற மலேசியத் தமிழ் கலை இலக்கிய உலகத்தை அறிய இந்த ஒப்பீடு அவசியமாகிறது. முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் ஆய்வு நூலான மலேசியத் தமிழரும் தமிழும் எனும் நூலின் வழி, மலேசியாவில்…

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 1

‘உடைந்த கண்ணாடியை ஏன் பார்க்க கூடாது’ ‘இரவானதும் நகம் ஏன் வெட்ட கூடாது’ ‘ஒற்றைக் காலில் ஏன் நிற்க கூடாது’ ‘இரவில் விசில் ஏன் அடிக்க கூடாது’ ‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் ஏன் நடக்கக்கூடாது’ ‘இரவில் உப்பை ஏன் வாங்க கூடாது’ ‘கர்ப்ப காலத்தில் கூந்தல் ஏன் வெட்டக்கூடாது’ என் முதல் கட்ட ஆராய்ச்சியை எனது அம்மாவிடமே ஆரம்பித்தேன். அடுத்து நண்பர்கள்…

ஹருகி முராகமி சிறுகதை: கினோ

அந்த மனிதன் எப்போதும் அதே இருக்கையிலேயே உட்கார்ந்தான். அந்த இருக்கை உயரமான பரிமாறும் மேடைக்குப் பக்கத்தில் இருந்தது. அது காலியாக இருந்தது. ஆனால் அது எப்போதும் காலியாகத்தான் இருக்கும். மதுபான விடுதியில் எப்போதாவதுதான் கூட்டம் நிரம்பி வழியும், அந்த இருக்கை கவனத்திற்கு வராமலும் வசதியற்றும் இருக்கும். அதற்குப் பின்னாலுள்ள படிக்கட்டு வளைந்து இறங்கியிருக்கும். அந்த இடத்தில்…

இல்லாத திசைகள் 4 – பழிவாங்கும் படலம்

என் 21-ஆவது வயதில் அந்த வாரப்பத்திரிகையில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். ஆனால் அதற்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அது தானாக நடந்தது. அரசாங்கம் நடத்திய ஒரு மாத தமிழ்ப்பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நான் வேலை செய்த வாரப்பத்திரிகை அலுவலகத்திற்கு வந்தார். அவர் இப்போதிருக்கும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கெல்லாம்…

போதாமை

ஒரு சில வருடங்களுக்குப் பிறகு என்னுடைய எழுத்துக்களை மறுவாசிப்பு செய்தபோது இனம் புரியாத மன ஓட்டங்கள், அது இயலாமையா, போதாமையா என்று வழி தெரியாமல் தடம் புரண்டு ஓடியது. எழுத்து என்பது சமுதாயத்தை நோக்கிய வீர ஆவேச உபதேசங்கள் என்று நம்பியிருந்த எனக்கு வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் நவீன இலக்கியத்தில் காலடி எடுத்து வைத்ததும்…

பகிர் உரிமம் – ஓர் அறிமுகம்

இணையத்தின்வழி கல்வி, கலாச்சாரம், பண்பாடு போன்று இன்னும் இதர பல துறைசார்ந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் என அனைத்தும் உலகளாவிய அளவில் பொதுமைபடுத்தப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற சாத்தியத்தை அனைவரும் எதிர்பார்க்கவே செய்கின்றனர். ஆனால், தற்போதுள்ள நமது சட்டங்களும் சமூக அமைப்பும் இதனை சற்றும் அனுமதிக்காதபடி இருப்பதுதான் தற்போதைய நிதர்சனமாகும். தொடக்கத்தில் பதிப்புரிமை சட்டத்தில் (Copyright) அதிக…

ஊர்க்காரர்களும் உள்ளூர்க்காரர்களும்

‘பிறக்க ஓர் ஊர் பிழைக்க ஓர் ஊர்’ என்ற வசனம் இன்னமும் அதே பிரபலத்துடன் பழக்கத்தில் இருக்கிறது. அதற்கான காரணம் ஒன்றுதான். அச்செயல் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பணத்திற்காகத்தான் இப்படி ஊரை விட்டு ஊர் வருகிறார்கள் என சட்டென கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் மனதினுள்ளே ஒரு சந்தேகம். இங்கு வேலைக்கு வந்திருப்பவர்கள், சாக்கடை அள்ளுகிறவர்கள்,…

ச. விஷ்ணுதாசன் கவிதைகள்

புழுக்கம்   வெளிகள் பலதாய் சமுக வெளிகள் பண்மியமாய் வேண்டும்.   வெளிகளை உருவாக்கிட இருப்பை உணர்த்தும் போதெல்லாம் முற்ற முழுதாக முள்வேலிச் சிறை அடைப்புக் கூடாய் அதிகாரத்தோடு …   சிறை முகாம் முழுவதுமாய் பாசி படர்ந்த இருட்டு இருட்டு கக்கிய விஷக் காய்ச்சல்.   வெளிச்சக் கீற்றை நாடும் அகவெளியும் புறவெளியும் அழுத்தப்பட்ட…

“தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை”

இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடக்கில் உள்ள வருத்தலைவிளான் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருமாவளவன் இப்போதிருப்பதும் இலக்கியத்தில் இயங்குவதும் கனடாவில். அரசியலும் அரங்கும் கவிதையும் திருமாவளவனின் ஈடுபாடுகள். என்றாலும் அரசியல்வாதியல்ல. கவிஞர். அரங்காடி. ஒத்தோடியல்ல. மறுத்தோடி. இதனால் வாழ்வின் பெரும்பகுதியும் சவால்களோடுதான் திருமாவளவனுக்குக் கழிந்திருக்கிறது. இந்த நேர்காணலும் அந்தக் குணத்தையே கொண்டிருக்கிறது. பெரும்போக்கு, பொது இயல்பு போன்றவற்றை…

எங்கே போகிறது மஇகா? இந்தியர்கள் என்பவர்கள் யார்?

அரசியல் கட்சிகள் நடத்துவோர் யாரும் தங்களுக்குள் நடைபெறும் சண்டையென்றும் பிணக்கு என்றும் மோதல் என்றும் ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு சுழன்று வர முடியாது. காரணம், பொதுத் தேர்தலில் பல்லின மக்களின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை ஒருபுறம் இருந்தாலும் அதிலும் குறிப்பாக இந்திய சமுதாயத்தின் வாக்குகளைப் பெற வேண்டிய அவசியத்திற்கு இயல்பாக முன் தள்ளப்பட்டிருப்பதால்,…

மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா? (பகுதி 2)

இரண்டாம் பாகம் தமிழ்த் தேசியம் தமிழ் தேசியம் என்னும் முழுமை இல்லாத கருத்தாக்கத்தை அவ்வளவு சுலபமாக விளக்கி விடவும் முடியாது. காரணம் அடிப்படையில் தமிழ் தேசியம் வேறொரு சமூக நீதியை பேசுவதாகவும் நடைமுறையில் வேறு ஒரு சமூகநீதியை கடைபிடிப்பதாகவும் உள்ளது. உலக தமிழர்களுக்கு தோதான மேடையை அமைக்கும் பேரியக்கமாக அது தன்னை அடையாளப்படுத்தினாலும் நடைமுறையில் அது…

மாப்பஸானின் குதிரை

சிறுகதை என்றவுடன் நம் மனதில் அது ஒரு சம்பவத்தைச் சொல்லும் படைப்பு முறை என தோன்றலாம். அதாவது ஒரு சம்பவம் நடக்கிறது, அந்தச் சம்பவத்தின் இறுதியில் ஒரு திருப்பம் இருக்கும். அந்தத் திருப்பமே கதையை வாசிப்பவருக்குச் சுவாரசியத்தையும் இதுவரை வாசித்ததற்கான மொத்த அனுபவத்தையும் கொடுக்கும் என பொதுவான ஒரு கருத்து இன்றும் உண்டு. சில சமயம்…

இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை

ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சிபற்றிச் சிந்திக்கும்போது அடிப்படையில், அவை நான்காகப் பகுக்கப்பட்டு விவாதிக்கப்படுவது காணக்கூடியதாக இருக்கிறது: 1. மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்திற்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு மரபு வழிப்பட்ட நிலை ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும்…