அபத்தங்களைப் பேசுதல் கூடாதா..?

பத்திரிகைகளில் எனது படைப்புகள் வரத்தொடங்கிய காலம். பெரும்பாலும் நகைச்சுவை துணுக்குகள்தான் எனக்கு சுலபமாகக்  கை கொடுத்தன. நண்பர்களுடனான உரையாடலில் இருந்தும் வீட்டிலும் உறவினரிடத்திலும் கிடைத்த நகைச்சுவை உரையாடல்களையும் கொஞ்சம் மாற்றி எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். பள்ளியில் பிரசுரமான படைப்புகளை காட்டி, பள்ளிக்கு வெளியிலாவது நான் கெட்டிக்காரனாக இருக்க வேண்டியிருந்தது. இப்படி வளர்ந்த என் எழுத்து…

இல்லாத திசைகள் 6 – நெருப்பு ஆசிரியர்

நெருப்பு ஆசிரியர் பொறுப்பெடுத்த பின் அப்பத்திரிக்கையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. சிறிய அறைக்குள் இருந்த வாரப் பத்திரிகை அலுவலகத்தைப் பக்கத்தில் இருந்த கட்டடத்திற்கு மாற்றினார்கள். பெரிய இடத்தில் வசதியாக இருந்தது. அதுதான் நெருப்பு ஆசிரியரின் குணம். யாரோடும் ஒட்டாமல் தனித்தீவு அமைக்கும் குணம். மலேசிய நண்பன்  நாளிதழில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் நெருப்பு ஆசிரியர்.…

இருள் எனும் நிழல்

தமிழ் மகத்தான செவ்வியல் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி. செவ்வியல் என்பது என்ன என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படலாம். பண்பாட்டு மரபின் அடிப்படைகளை உருவாக்கும் தொடக்ககாலப் படைப்புகளைக் கொண்டிருக்கும் மொழியைச் செவ்வியல் என்கிறோம். அவ்வகையில் சங்க இலக்கியம் நமக்குச் செவ்வியல். மொழியின் மிக உச்சமான சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. அத்தகைய மொழி…

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 4

கடந்த தொடரில் பெண்ணும் அவநம்பிக்கையும் எப்படி ஒன்றோடு ஒன்று செர்த்து பிணைக்கப்படிருக்கின்றன என்பதை பற்றி பார்த்தோம். இத்தொடரும் பெண்ணைப் பற்றியதுதான். ஆனால் பெண்ணுக்கு மட்டுமே ஏற்படும் இயற்கை உபாதை எப்படி சில நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளது என்பதை பார்ப்போம். உலகை ஒரு பெண் தாய்மை அடைய வேண்டுமாயின் அவளுக்கு மாதவிடாய் கண்டிப்பாக எற்பட்டிருக்க வேண்டும். தாய்மையுடைய முதல்…

Turnitin: மிரட்டலும் மீட்பும்

கட்டற்ற தகவல் பயன்பாட்டில் தவிர்க்க முடியாத இணைப்புகளாக அறிவுத்திருட்டு (plagiarism) மற்றும் முறையான மேற்கோள் (proper citation) ஆகியவை திகழ்கின்றன. இவை இரண்டையும் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவும், கைவரப்பெறவும் உருவாக்கப்பட்ட மென்பொருளே Turnitin. ஆனால் ஆய்வாளர்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக ஆய்வு மாணவர்களின் மத்தியில் Turnitin வெறுக்கத்தக்கதாக இருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்கு…

காக்கா முட்டை: கலையும் அரசியலும்

மிக அண்மையில் தமிழகம் சென்றிருந்தபோது ‘காக்கா முட்டை’ திரைப்படம் எடுத்தப் பகுதிக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று நண்பர்களிடம் கேட்டிருந்தேன். அழைத்துச்சென்றனர். ஒருவகையில் இந்தப்பயணம் எனக்கு முக்கியமானது. ஒரு கலைப்படைப்பு எதை மக்களுக்குக் காட்ட விளைகிறது என்பதும் அதன் தேர்வு எதுவாக இருக்கிறது என்பதும் இந்தப்பயணம் சன்னஞ்சன்னமாக உணர்த்தியது. கலை என்ற பெயரில் அதன் உன்னதங்களை…

ஆய்வுகள்

மனித இனத்தின் பண்பாடுகளும் நாகரீகங்களும் இதர அனைத்தும்கூட மனிதனுடைய தேடல் வெட்கையிலிருந்தே உருவாகியிருக்கின்றன. புதியதாக ஒன்றை உருவாக்குவதாயினும் அல்லது ஒன்றின் மெய்த்தன்மையை கண்டடைவதாயினும்; அறியாத ஒன்றிலிருந்து அறிந்த ஒன்றை நோக்கி நகர்த்துவதே அறிவின் தேடலாக அறியப்படுகின்றது. இதன் பரிணாம வளர்ச்சியாக ‘ஆய்வு’ எனும் சொல்லை கொள்ளலாம். அறிவைத் தேடுதலே ஆய்வாகின்றது. ஒன்றை அறிய அறிய அறியாமையின்…

இளம் பருவத்துத் தோழி – முகமது பஷீர்

பல காதல் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால், வைக்கம் முகமது பஷீரின் இளம் பருவத்துத் தோழி (பால்ய கால சகி) நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எந்த நாவலும் ஏற்படுத்தவில்லை. நாவலில், காதல், அன்பு, ஏக்கம், கவலை, வறுமை என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் நெஞ்சைப் பிழியும் வலியும், துயரமும், வறுமையும் கதை முழுவதும் இருக்கிறது. மஜித்,…

இரை

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பென்று என்னைக்கேட்டால் தயங்காமல் கூறுவேன் துப்பாக்கிதான் என்று. ஏனெனில் அது எவரையும் நம்காலில் விழச்செய்யும் சக்திவாய்ந்தது. அச்சத்ததின் விளிம்பில் ரத்தம்சுண்டி முகம்வெளுத்து முன்னால் உயிருக்காக மன்றாடும் ஒரு இரையினைப் பார்க்கும் பரவசம் அலாதியானது. இப்போது இவன் அப்படித்தான் கிடக்கிறான். ஆனால் இவனைப் பார்த்தால் அந்த பரவசம் தோன்றவில்லை எனக்கு. சவரம் செய்யப்படாத தாடிமீசைகள்…

அலிசா

தண்ணீருக்கு அடியிலிருந்த மண்ணை இப்போது அலிசாவால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்த மண்ணுக்குள் மாட்டிக்கொண்டிருந்த பல வடிவங்களிலான கருங் கற்களையும்; ஓடுகள் – சிற்பிகளையும் அவற்றை மறைத்து வளர்ந்திருந்த தாவரங்களையும் அலிசா மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். அந்தக் குளத்துத் தண்ணீரைப் போலவே தாத்தாவும் அசைவற்று இருந்தார். இடது முழங்காலில் முட்டுக் கொடுத்து வைத்திருந்த இடது கையும்…

அண்மைக்காலச் சிறுகதைகள்

மொழி என்ற தொடர்புச் சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. கதை சொல்லும் முறை கற்பனையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா என்றால் இரண்டும் ஒரே சமயத்தில் உருவாகியிருக்க வேண்டும்.…